Breaking
June 6, 2026

deccanwebtv

இயக்குனர் விஜய் – இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’

மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் ( Mali & Manvi Movie Makers) – டி ஸ்டுடியோஸ் ( D Studios) -டென்வி புரொடக்ஷன் ( Denvi Production) – ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில் முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் , அர்ஜுன் அசோகன், எம். எஸ். பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்க கலை இயக்கத்தை சரவணன் வசந்த் மேற்கொண்டிருக்கிறார். மனோகர் வர்மா சண்டை பயிற்சியையும், ருச்சி வினோத் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இந்த திரைப்படத்தை தமிழகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

திரையிசையுலகில் 25வது ஆண்டாக வெள்ளிவிழா காணும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காதல் ரீசெட் ரிப்பீட் படக்குழுவினருடன் இயக்குநர் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் நடிகர் அர்ஜுன் அசோகன் பேசுகையில்,
” நான் நடிக்கும் முதல் தமிழ் படம் இது. இந்தப் படத்தில் நல்லதொரு கேரக்டரை கொடுத்ததற்காக இயக்குநர் விஜய்க்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய தமிழ் உச்சரிப்புக்கு சக நடிகர் மதும்கேஷ் உதவி செய்தார். அவருக்கு நன்றி. இணைந்து நடித்த சக கலைஞர்களுக்கு நன்றி. தமிழில் இப்படி ஒரு அறிமுகம் கிடைத்ததற்கு மிகப்பெரும் நன்றி. இந்த கதாபாத்திரம் சுவாரசியமான திருப்பங்களை கொண்டது தான். என்னால் முடிந்த அளவுக்கு நன்றாக செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். இந்த கேரக்டர் ரொமாண்டிக்காகவும் இருக்கும் ,காமெடியும் இருக்கும், சில நேரங்களில் வில்லனாகவும் இருக்கலாம். கதாபாத்திரத்தை முழுமையாக பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்கத்திற்கு வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு திரைப்படமும் திரையரங்கத்திற்கான திரைப்படங்கள்தான். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடலுக்கு நான் முதல் முதலாக உதட்டை அசைத்திருக்கிறேன். இதுவே எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்” என்றார்.

நடிகர் எம். எஸ். பாஸ்கர் பேசுகையில்,
” இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் என்னவென்று சொல்ல வேண்டியதில்லை. தம்பி விஜயின் எல்லா படத்திலும் எனக்கு பெயர் வாங்கிக் கொடுப்பது போன்ற நல்ல கேரக்டராகத்தான் கொடுப்பார். ஒரு துளியும் கர்வம் இல்லாமல் தான் செய்யக்கூடிய வேலையை ரசித்து பணியாற்றுபவர் தம்பி விஜய்.

இந்தப் படம் என் வாழ்க்கையில் கடைசி நிமிடம் வரை மறக்க முடியாத ஒரு படம். நான் வீடு கட்டிக் கொண்டிருக்கும் போது இந்தப் படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தை ஒப்பந்தம் செய்வதற்கும் முன்னரே கொடுத்து உதவினார் தம்பி விஜய்.

இந்தப் படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது ‘தந்தை’ என்ற ஸ்தானத்தில் இருந்து ‘தாத்தா’ என்ற ஸ்தானத்திற்கு உயர்ந்தேன். அப்படி இந்த படத்தில் நடித்த பிறகு என் வாழ்க்கையில் மறக்க முடியாத சுபமான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கிறது. இதற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் இந்த படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.

இயக்குநர் கணேஷ் கே பாபு பேசுகையில்,
” இந்தப் படத்தில் என் மனதிற்கு நெருக்கமான விருப்பத்திற்குரிய விஜய், ஹாரிஸ் ஜெயராஜ், மதும்கேஷ் என பலர் இருக்கிறார்கள். இப்படத்தின் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். அதில் நடிகர் மதும்கேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. படத்தில் நடித்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்” என்றார்.‌

நடிகை விஜி சந்திரசேகர் பேசுகையில்,
” இந்தப் படத்தின் கதை எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. இயக்குநர் விஜய் படம் என்றவுடன் நடிக்க சம்மதித்தேன். இந்தப் படத்தில் குட்டியான ‘கேமியோ’ ரோலில் நடித்திருக்கிறேன். இப்படத்தின் டைட்டில் டிரெண்டியாக இருக்கிறது. டைட்டிலே கதையை சொல்கிறது. விஜய் இயக்கும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பணியாற்றிய அனுபவம் வித்தியாசமானது. ”என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில்,
” விஜய் – ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருடன் இணைந்து மீண்டும் இந்த படத்தில் பணியற்றிருக்கிறேன். இதில் பணியாற்றும்போது கிடைக்கும் மகிழ்ச்சி என்னவென்றால் நல்ல கவித்துவமான பாடல் வரிகளை எழுத வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான். விஜய் நல்லதொரு தமிழ் ரசிகர். பாடலில் கவித்துவம் இருந்தால் கொண்டாடுவார். அவருடன் இணைந்து பணியாற்றும்போது நல்லதொரு சௌகரியமான சூழலை உருவாக்கித் தருவார். இந்தப் படத்தில் நாலேகால் பாடல் எழுதி இருக்கிறேன். இந்தப் படத்தின் பாடலில் ‘உன் பார்வை..’ எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

மறதியை முன்வைத்து தமிழில் இதற்கு முன் சில படங்கள் வெளியாகி இருக்கிறது. மறதியை மையப்படுத்தி ஒரு அழகான காதல் படத்தை உருவாக்க முடியுமா..! மறதியை நகைச்சுவையாக எப்படி பார்க்கலாம்… மறதியை எமோஷனலாக எப்படி பார்க்கலாம்… பல தருணங்களில் நாம் நினைத்திருப்போம். மறதி இருந்தால் நன்றாக இருக்கும் என்று… இது போன்ற சூழலில் நம்மை மனிதர்களாக வைத்திருப்பது இதுபோன்ற கலை.. இது போன்ற படங்கள்.. இதுபோன்ற பாடல்கள்… தமிழ் மொழி… கவிதைகள்..இது தான். இதைத்தான் நாம் அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு போக வேண்டும். இந்த துறையையும் கணினிகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில் சர்வதேச தரத்தில் ஒரு பிரபல பாடகரின் குரலில்.. நல்ல கவிஞர்கள் எழுதியது போன்ற பாடல்வரிகளுடன் ஒரு பாடலை உருவாக்குவதற்கு இன்று மூன்று முதல் ஐந்து நொடிகள் போதுமானதாக இருக்கிறது. அதுபோன்ற பாடல்களை நாம் பயன்படுத்த தொடங்கலாம் அதனை விற்பனையும் செய்யலாம் இதுபோன்ற காலகட்டத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பாடலை உருவாக்குவதற்காக எடுத்துக் கொள்ளும் காலகட்டம் இருக்கிறதே.. அவருடைய உழைப்பு.. வியக்க வைக்கும்.

‘உன் பார்வை..’ பாடலை பாடகர் வினித் பாடுவதற்காக அரங்கத்திற்கு வந்தார். அவரை தொடர்ந்து பாடுமாறு ஹாரிஸ் கேட்டுக்கொண்டார். அவர் பாடப் பாட அவரது குரலை இவர் டியூன் செய்து கொண்டிருந்தார். எந்த தருணத்தில் அவருடைய குரல் சிறப்பாக இருக்கிறது என்பதற்காக காத்திருக்கிறார். அந்தக் குரல் சரியான அளவில் பொருந்துவதற்காக காத்திருந்து அதை சிறிது சிறிதாக சேகரிக்கிறார். ‘காலம் கொஞ்சம் ஓய்வெடுக்க நானும் நீயும் அங்கே இறக்கை கொண்டு பறக்க வானம் பூமி எங்கே..’ என்ற வரிகள் வரும் இடத்தில் எல்லாம் ஒவ்வொரு வரியாக ரசித்து ரசித்து நுட்பமாக அதைப்பற்றி விவரித்து.. உருவாக்குவார். அப்படி ஒரு பாடலை ரசிப்பார். கொண்டாடுவார்.‌ பாடலை நாங்கள் பதிவு செய்வதற்கு எட்டு மணி நேரமானது.‌ இது ஆண் குரலுக்கு மட்டும். பிறகு மீண்டும் பெண் குரலுக்கு… கடினமாக இதே போல் உழைப்பார். அதன் பிறகு மீண்டும் பாடலை செதுக்குவார். இப்படி ஒரு பாடலுக்காக மாதக்கணக்கில் மனித உழைப்பை வழங்கி உருவாக்குவார். அதனால் தான் இது போன்ற பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்படுகிறது வேகமாக கிடைக்கும் ஃபாஸ்ட்ஃபுட்டை விட அம்மா சமைக்கும் உணவில் இருக்கும் சுவை நம்முடைய உடலில் தங்கி ஆரோக்கியத்தை பாதுகாப்பது போல்.. இது போன்ற மனிதர்கள் உருவாக்கும் கலை …காலத்தை கடந்து நிற்கும்.

சத்தங்கள் இரைச்சல்களாக இருப்பது தான் பாடல் என்ற சூழலில் மிகவும் மென்மையாக ஒரு குரல்… மென்மையான இசை… ஒரு பாடலை உருவாக்குவது என்பது சிறப்பு. அந்த அளவிற்கு இந்த படத்தில் பாடல்கள் இடம் பிடித்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜுக்கு என்னுடைய நன்றி. இயக்குநர் விஜய் மற்றும் தயாரிப்பாளருக்கும் நன்றி. ” என்றார்.

நடிகை ஜியா சங்கர் பேசுகையில்,
” உணர்வுகளை வெளிப்படுத்த மொழி தடையாக இருக்காது என்பதை நம்புகிறேன். நான் இதயத்தின் அடியாழத்திலிருந்து பேசுவதால் ஆங்கிலத்தில் பேசுகிறேன். இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. வாழ்க்கையில் வாய்ப்பிற்காக காத்திருந்தேன். இயக்குநர் விஜயை சந்தித்தேன். அவர் என் மீது முழுமையான நம்பிக்கையை வைத்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு கிடைத்த மிக சிறந்த மறக்க முடியாத அனுபவம். இது என்னுடைய கனவு. தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்ற வேண்டும் என்பதும் என்னுடைய கனவு. அதை தமிழில் இருந்து தொடங்கி இருக்கிறேன்.

இயக்குநர் விஜய் மிகச் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல சிறந்த மனிதர். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு கலைஞர்களையும் அவர்களுக்கு ஏற்ற வகையில் சௌகரியமான சூழலை உருவாக்கி தருவார். அனைவர் மீதும் அக்கறை செலுத்துவார். என் வாழ்க்கையில் முதல் வழிகாட்டி என் அம்மா தான். அவருக்கு அடுத்த வழிகாட்டி இயக்குநர் விஜய் தான்.

இது என்னுடைய முதல் தமிழ் படம். இயக்குநர் விஜய்- ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து அறிமுகமாகிறேன். இந்தப் படத்தில் நானும் பணியாற்றி இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாகவும், கனவு நனவானது போலும் இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரையரங்கத்தை விட்டு வெளியேறும்போது ரசிகர்களின் மனதில் நாங்கள் இடம் பிடித்திருப்போம் என நம்புகிறேன். ” என்றார்.

நடிகர் மதும்கேஷ் பேசுகையில்,
” இங்கு கூடியிருக்கும் அனைவரது முன்னிலையிலும் நான் இந்த மேடையில் நிற்பது மறக்க முடியாத தருணங்கள். என்னுடைய எல்லா மறக்க முடியாத தருணங்களுக்கும் காரணமாக திகழும் என் பெற்றோர்களுக்கு முதலில் நன்றி .

காதல் ரீசெட் ரிப்பீட் இது ஒரு படம் மட்டுமல்ல.. எனக்கு மிகப்பெரிய பாடம். இந்த பாடத்தை எனக்கு கற்பித்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. இந்தப் படத்தில் சித்தார்த் எனும் கேரக்டரை என்னை நம்பி கொடுத்தீர்கள். நான் அதற்கு நான் 100 சதவீதம் நியாயம் செய்திருப்பதாக நம்புகிறேன். அதற்கு நன்றி.

இந்தப் படத்தை இதுவரை பார்த்த அனைவரும் படத்தின் விஷுவல் அனைத்தும் பெயிண்டிங் போல் இருக்கிறது என பாராட்டினார்கள். இந்தப் பாராட்டு அனைத்தும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவைத்தான் சேரும் அவர் எங்களை திரையில் அழகாக காண்பித்திருக்கிறார்.

புதுமுக நடிகர்களாக இருந்தாலும் இந்த கதையை நம்பி.. இயக்குநர் விஜயை நம்பி.. ஹாரிஸ் ஜெயராஜை நம்பி இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.

இந்தப் படத்தின் மெயின் ஹீரோ ஹாரிஸ் ஜெயராஜ். நான் அவருடைய இசையை கேட்டு வளர்ந்த பையன். அவருடைய தீவிர ரசிகன். அவருடைய இசையில் இந்த படத்தில் நான் நடித்திருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இந்தப் படத்தை ரசிகர்களை சென்றடையச் செய்வதற்காக ப்ரமோஷன் பணிகளையும் நீங்கள் ( ஹாரிஸ் ஜெயராஜ்) செய்திருக்கிறீர்கள். அதில் உங்களுடன் நடிப்பதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் பெருமிதமாக நினைக்கிறேன்.

படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் ரெகுலரான ரோம் காம் படமாக இல்லாமல் நீண்ட நாள் கழித்து ஒரு மிக்ஸ்ட் எமோஷன்- ட்ராமா – ஆக்சன் – லவ் – காமெடி – என எல்லாம் கலந்த கதையாக இருக்கும். திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்த பிறகு நல்லதொரு படத்தை பார்த்தோம் என்ற திருப்தியுடன் வீடு திரும்புவீர்கள். அனைவரும் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்கத்திற்கு வந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில்,
” 1999 ஆம் ஆண்டில் இளம் இயக்குநராக இருந்த கௌதம் மேனனை சந்தித்தேன். கேமரா மேன் ஆர் டி ராஜசேகர் மூலமாக விளம்பர படத்திற்காக அவர் என்னை சந்தித்தார். அதன் பிறகு 2000 ஆண்டில் ‘மின்னலே’ படத்தின் பணிகள் தொடங்கியது. அப்போது அந்தப் படத்தில் கதாநாயகன் மாதவன் புதிது. அப்போது ‘அலைபாயுதே’ படம் வெளியாகவில்லை. ரீமா சென் புது கதாநாயகி. அந்தப் படத்தில் டைரக்டர் புதுசு …கேமரா மேன் புதுசு… நானும் புதுசு… அந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் முரளி மனோகர் தான் ஸ்டார். அவர் ‘ஜீன்ஸ்’ படத்தை தயாரித்திருந்தார்.

அந்தப் படத்தில் பணியாற்றும்போது பாடலாசிரியர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. அப்போது தாமரை என்ற புதிய பாடலாசிரியரையும் சேர்த்துக் கொண்டோம். இதன் பிறகு அந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்து படம் வெளியானது.‌ ‘மின்னலே’ திரைப்படம் தற்போது ரீ ரிலீசும் ஆனது.

இதை நான் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் கதை களம் என்று ஒன்று அமைந்து விட்டால்… அதற்கு எந்த ஸ்டாரும் தேவையில்லை. அது எல்லோரிடமிருந்தும் நல்ல வேலையை வாங்கி விடும். அது எல்லாரையும் பெரிய டெக்னீஷியன் ஆக்கிவிடும். சாதாரண நடிகர்களை பெரிய நடிகராக காண்பித்து விடும்.

பெரிய ஆர்டிஸ்ட்.. பெரிய டெக்னீசியன்ஸ்.. இணைந்து ஒரு மொக்கை கதையில் பணியாற்றினால்.. எல்லாம் காணாமல் போய்விடும். கதை என்பது ஒரு அமைப்பு.‌ ஒவ்வொரு படத்திற்கும் அந்த அமைப்பு மாறுகிறது. இதை நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் பிரம்மாண்டமான கலைஞர்களாக இருப்பார்கள். ஆனால் அதில் ஒரு அமைப்பு இல்லை என்றால்.. உட்காராது. இதை நான் தொடர்ந்து பார்ப்பேன் அதன் பிறகு இதனை எது வழி நடத்துகிறது என்று ஆராய்வேன். தைரியமான நம்பிக்கைதான் இதை வழிநடத்துகிறது என உணர்ந்தேன்.‌

இது ஜெயிக்கும் என நம்பி ஒரு விசயத்தை தொடங்குகிறோம் அல்லவா… அது..அனைவரையும் ஒன்றிணைத்து ரசிகர்களையும் திரையரங்கத்திற்குள் இழுத்து வந்துவிடும். இதை ஆங்கிலத்தில் பாசிட்டிவிட்டி என சொல்வார்கள்.

‘மின்னலே’ படத்தில் புதிய பாடகர்களையும் அறிமுகப்படுத்தினேன். நான் இதுவரை 64 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். 65 ஆவது பாடகி தான் காயத்ரி ராஜா. அனைவரும் நன்றாக இருப்பதில் எனக்கு சந்தோஷம்.‌

12 புதிய கதாநாயகர்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவர்கள் பிரபலமடைவதற்கு இசை உதவி செய்து இருக்கிறது.

ஒரு கதையும், இசையும், நல்ல வரிகளும் சேரும்போது மிகப்பெரிய அளவில் சிவப்பு கம்பளத்தை விரிக்கிறது.

இயக்குநர் விஜய் இசையை மனதில் வைத்து தான் இந்த கதையை எழுதி இருக்கிறார். அதற்கேற்ப மதன் கார்க்கியும் கடினமாக உழைத்து இருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கும் பல மாதங்களை செலவழித்திருக்கிறோம்.

இந்தப் படத்தில் மலையாள இயக்குநர் வினீத்தை பாடகராக அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

தரமான பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு சித்திரமாக இருக்கும். அதையும் கடந்து நாங்கள் அனைவரும் மனப்பூர்வமாக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு தளம் அமைத்துக் கொடுத்த இயக்குநர் விஜய்க்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி ” என்றார்.

இயக்குநர் பாலா பேசுகையில்,
” இயக்குநர் விஜய் தான் எனக்கு குரு. ஜூனியராக இருக்கலாம். இருந்தாலும் எந்த டெக்னீஷனாக இருந்தாலும் எப்படி கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்து குரு இயக்குநர் விஜய் தான்.‌ ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அவர் எனக்கு தாயுமானவன்.

என்னுடைய நல்லது கெட்டது என அனைத்திற்கும் முதல் ஆளாக நின்று பங்கெடுப்பது அவன் தான். தாயும் தகப்பனுமாக இருந்து என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ஹாரிஸ் ஜெயராஜ் தயாரிப்பாளர்கள் புதுமுக நடிகர்கள் என அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

‘மதயானை கூட்டம்’ படத்தில் நடித்த விஜி சந்திரசேகரின் மிகப்பெரிய ரசிகன் நான். அந்தப் படத்தில் ஒரு காட்சியில் மனதில் நினைத்ததை கண்களிலேயே காட்டி இருப்பார். அதுபோன்ற திறமை நூற்றில் ஒருவருக்கு தான் வரும். எனக்குப் பிடித்த நடிகை ராதிகா தான். அதற்கடுத்து நீங்கள் தான்( விஜி சந்திரசேகர்) . உங்களை நான் இந்த விழாவில் நேரில் சந்தித்ததற்கு நன்றி.” என்றார்.

இயக்குநர் விஜய் பேசுகையில்,
” முதலில் இயக்குநர் பாலாவிற்கு நன்றி சொல்கிறேன். நீங்கள் சொன்னது மிகப்பெரிய வார்த்தை. அப்படி எல்லாம் இல்லை. உங்களுடைய படங்களை பார்த்து, அந்த பாதிப்பில் தான் நாங்கள் வந்திருக்கிறோம்.‌ உங்களுடைய படத்தின் மூலம் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு கலைஞரிடம் இருந்து எப்படி நடிப்பை வாங்க வேண்டும் என்பதை உங்கள் படத்தை பார்த்துதான் கற்றுக் கொண்டோம். நீங்கள் இங்கு வந்து படக் குழுவினரை வாழ்த்தியதற்கு நன்றி. உங்களுடன் தொடர்பில் இருப்பதையே நான் பாக்கியமாக கருதுகிறேன்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் அறிமுகம் கிடைத்து, அவர்களை சந்தித்த பிறகு பணியாற்றலாம் என்று சொன்னேன். அதன் பிறகு இந்த கதையை சொன்னவுடன் அதை நம்பி எனக்கு வாய்ப்பளித்தற்கும் நன்றி.

மாலி அண்ட் மான்வி புரொடக்ஷன்ஸ் போன்ற பட தயாரிப்பு நிறுவனங்கள் இன்றைக்கு தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை. நான் ஏன் அதை குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால்.. என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பிற்காக ஸ்காட்லாந்துக்கு சென்று இருக்கிறோம். ஜியா சங்கருக்கு விசா கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த படக்குழுவும் அங்கு சென்று விட்டோம். ஜியா மட்டும் இல்லை. வேறு யாரையாவது தேர்வு செய்து நடிக்க வைக்கலாமா..! என்ற சலனமும் ஏற்பட்டது. அப்போது தயாரிப்பாளரிடம் நாங்கள் இதுபோன்றதொரு நெருக்கடியான சூழலில் இருக்கிறோம். என்ன செய்யலாம்? என ஆலோசனை கேட்டேன். அப்போது அவர்,’ உங்களுக்கு எது நல்லது என்று மனதில் தோன்றுகிறதோ.. அதை செய்யுங்கள்’ என சொன்னார். அவர் அன்று சொன்ன ஒரு வார்த்தை தான் இந்தப் படம் இன்று இந்த அளவிற்கு மிக நேர்த்தியாக உருவாகி இருப்பதற்கு காரணம்.

இது போன்றதொரு கன்டென்ட்டை.. புது முகங்களை வைத்து ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற ஒரு லெஜெண்டுடன் பணியாற்றும் போது நல்லதொரு தயாரிப்பாளர் தேவை.‌

அதன் பிறகும் இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சில சிக்கல்கள் எழுந்தது. அப்போதும் தயாரிப்பாளர்கள் என்னுடன் இருந்து ஆதரவு அளித்தனர். நான் அவர்களுக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.

நடிகர் மதும்கேஷ்- கடும் உழைப்பாளி. சித்தார்த் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து தன்னை அந்த கதாபாத்திரத்தில் பொருத்திக் கொண்டார். இதற்காக ஆபரேஷன் செய்து… உடல் எடையை குறைத்து…என பல முயற்சிகளை மேற்கொண்டார். அவருடைய உழைப்பிற்கு இந்த படம் நல்லதொரு பலனை வழங்கும் என நான் நம்புகிறேன்.

அர்ஜுன் அசோகன்- தமிழுக்குத்தான் அறிமுகமே தவிர இந்திய சினிமாவுக்கு அல்ல. இந்த படத்திற்கு அவரும் ஒரு பில்லர். அற்புதமாக நடித்திருக்கிறார்.

ஜியா சங்கர் – மதராசபட்டினம் படத்தில் எமி ஜாக்சனை அறிமுகப்படுத்தும் போது எதை உணர்ந்தேனோ.. அதேபோல்தான் ஜியா சங்கரை அறிமுகப்படுத்தும் போதும் இருந்தது. அவரை வைத்து முதல் காட்சியை படமாக்கும் போது அவரிடம் நீங்கள் தமிழ் சினிமாவில் நெடுநாள் பணியாற்றுவீர்கள் என சொன்னேன்.‌ இப்போது சொல்கிறேன். அவர் இந்திய சினிமாவில் பணியாற்றி நல்ல இடத்தை தொடுவார். ஜியா – மராட்டிய பெண் கடும் உழைப்பாளி. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை நான் சிங்கிள் ஷாட்டில் எடுத்தேன். அந்த காட்சியில் நடிப்பதற்காக ஆறு முதல் ஏழு நாட்கள் வரை பயிற்சியில் ஈடுபட்டார்.

விஜி சந்திரசேகர்- நீங்கள் இந்தப் படத்தில் ‘கேமியோ’ கிடையாது. நல்லதொரு கதாபாத்திரம் தான். படத்தை பாருங்கள்.

எம் எஸ் பாஸ்கர் – இந்தக் கதையில் ஹீரோவுக்கும் அர்ஜுன் அசோகனுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு எம் எஸ் பாஸ்கர் கேரக்டருக்கும் இருக்கிறது. பாஸ்கர் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் என்பதை கடந்து.. அவர் இந்திய சினிமாவின் பெருமிதம். இந்தப் படத்திற்காக அவர் 40 நாட்கள் பணியாற்றினார் அதற்காக அவருக்கும் நன்றி.

இந்தப் படத்தின் கதையை என்னுடன் இயக்குநர் ராஜமௌலியின் உதவியாளரான ஆர். மகாதேவ் இணைந்து எழுதினார். அவர்தான் திரைக்கதை எழுதியிருக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையை முழுவதுமாக எழுதி முடித்த பின் இந்த கதை ஒரு மியூசிக்கல் கதை. இதை ஹாரிஸ் ஜெயராஜ் இல்லாமல் உருவாக்க முடியாது . இதனால் முதலில் தயாரிப்பாளரிடம் ஹாரிஸ் சார் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்றேன். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். அவருடன் நாங்கள் பணியாற்றுவதை பெரிய பாக்கியமாக நினைக்கிறோம். அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகப்பெரிய பாடம்.‌

அவர் ஒவ்வொரு பாடலையும் ஒரு படமாக பார்க்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாடலுக்கும் அவர் ஒரு மாதம் எடுத்துக் கொண்டார். ஒரு மாதத்தில் தினமும் 12 மணி நேரம் உழைக்கிறார். அனைத்தையும் அவரே தீர்மானிக்கிறார். இந்தப் படத்திற்கு அவரும் மிகப்பெரிய பில்லர். படத்தின் பின்னணி இசைக்காக பல மாதங்கள் உழைத்திருக்கிறார் ஒவ்வொரு காட்சிக்கும் கவனம் செலுத்தி செதுக்கியிருக்கிறார்.

ஒவ்வொரு திரைப்படத்தின் பணிகளை பற்றி எழுத தொடங்கும் போது இது சூப்பர் ஹிட் என எழுத முடியாது ஆனால் அதை நம்ப வைப்பது படத்தின் பணிகள் நடைபெறும் தருணங்கள் தான். இந்த தருணங்களை நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், நேர்மையாகவும் செய்து இருக்கிறோம். இதற்கான பலனை மக்கள் வழங்குவார்கள் என நம்புகிறேன். ஹாரிஸ் ஜெயராஜின் 25 ஆவது ஆண்டில் அவருடன் இணைந்து நாங்களும் பயணித்திருக்கிறோம் என்பதுதான் எங்களுக்கு பெருமை. இதற்கு அவருக்கு நன்றி.

பாடலாசிரியர் மதன் கார்க்கி இந்தப் படத்தில் பாடல்களை தாண்டி அவருடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது. நா முத்துக்குமாருக்கு பிறகு இவருடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற… பயணப்பட… விரும்புகிறேன்.‌

இன்றைக்கு ஒரு படத்திற்கு பிரமோஷன் என்பது மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.

நான் வாழ்க்கையில் இரண்டு விசயங்களை செய்வேன். ஒன்று வழி நடத்துவேன். இல்லையென்றால் பின்பற்றுவேன்.‌ இந்தப் படத்தின் பிரமோஷன் குழுவினரை நான் பின்பற்றினேன். அவர்கள் அற்புதமாக உழைத்திருக்கிறார்கள்.

இந்த பிரமோஷனில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு நடிகராகவும் மாறி இருக்கிறார்.‌ அதை நான் மிகவும் ரசித்தேன். அவரை இயக்க முடியவில்லையே..! என்ற இன்ப அதிர்ச்சியும் எனக்கு இருந்தது.

நாம் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறோம். சில படங்கள் மட்டும் தான் ஸ்பெஷலாக இருக்கும் அந்த வகையில் இந்த காதல் ரீசெட் ரிப்பீட் திரைப்படம் எனக்கு ஸ்பெஷல் ஆனது. ஏனெனில் அதற்காக அமைந்த குழு.

இந்தப் படத்திற்காக இந்த படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி

இது ஒரு சாதாரண மனிதனின் கதை. ஹீரோ என்பது யார்? உங்களுக்கு நீங்கள்தான் ஹீரோ. அதை நாம் முதலில் நம்ப வேண்டும். ஒருவருடைய தோற்றத்தை பார்த்தோ.. அழகை பார்த்தோ.. ஏற்கப்படுவதில்லை. ஒருவருடைய மனதை பார்த்து தான் ரசிக்கிறோம். அதுதான் ஹீரோ என நினைக்கிறேன். அப்படி ஒரு நல்ல மனம் கொண்டவனின் கதை தான் இது. இது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். ” என்றார்.

தயாரிப்பாளர் பிரேம்குமார் பேசுகையில்,
” இந்தப் படத்தின் கதையை இயக்குநர் விஜய் என்னிடம் சொல்லும் போது.. நான் கதையை கேட்கவில்லை. அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவரைப் பற்றி அவருடைய படங்கள் பேசியது. அவர் இயக்கத்தில் வெளியான ‘தெய்வ திருமகள்’ படத்தில் இடம்பெறும் ஜோக் என்னால் மறக்க முடியாது என சொன்னேன். அதன் பிறகு ஒப்பந்தத்தில் கையெழுத்து விட்டு படத்தின் பணிகளை தொடங்குமாறு சொல்லிவிட்டேன்.

நான் ஸ்காட்லாந்தில் படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்த்தேன். நான் இதுவரை நான்கு படங்களை தயாரித்திருக்கிறேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த அனுபவத்தை விட இவருடைய படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. காட்சிகளை விரைவாக படமாக்கிக் கொண்டிருந்தார்.

இந்தப் படத்தை காலையில் மீனவர் ஒருவர் பார்த்தார். அவர் பார்த்துவிட்டு இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருக்கிறது என்றார். உண்மையில் இயக்குநர் விஜய் ஒரு லெஜண்ட் தான்.

இயக்குநர் பாலாவின் ‘சேது’ படம் வெளியான போது வட சென்னையில் உள்ள ஒடியன் மணி தியேட்டரில் பார்த்தேன். யார்ரா இந்த டைரக்டர்? என ஆச்சரியப்பட்டேன். அந்தப் படத்தை பார்த்து நான் அரை மணி நேரம் அழுதேன். அவர் இந்த விழாவில் கலந்துகொண்டு அவருக்கு நான் கை கூப்பி வரவேற்றபோது அந்த நினைவுகள் எனக்குள் வந்தது. அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை சொல்கிறேன்.

இப்படி காலத்தால் அழிக்க முடியாத படங்களை இயக்கிய இயக்குநர்களை பிரம்மா என்று சொல்லலாம். இப்படி திறமை வாய்ந்த படைப்பாளிகள் நம் தமிழ் திரை உலகில் இருக்கிறார்கள். இடைப்பட்ட காலங்களில் இது போன்ற படைப்புகள் வெளியாகவில்லை என்ற வருத்தத்தையும் இங்கு பதிவு செய்கிறேன். அந்த வருத்தத்தை இந்த படம் போக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ் படங்கள் வளர்வதற்கும், வாழ்வதற்கும் இந்த எளியவனால் செய்ய முடிந்த உதவியை தொடர்ந்து செய்வேன். இந்த படக்குழுவிற்கு முழுமையான மனதுடன் நன்றி தெரிவிக்கிறேன். வெற்றி மட்டுமே நோக்கமல்ல. சமுதாயத்திற்கு நல்ல படைப்பை கொடுக்கும் படைப்பாளிகளை வாழ வைப்பதும் ஒரு சிறந்த பணி என நினைத்து… உங்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்கிறேன்”என்றார்.

மார்ச் 6 முதல் ZEE5-ல் ‘காந்தி டாக்ஸ்’

ZEE5, ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் உலக டிஜிட்டல் வெளியீட்டை மார்ச் 6 முதல் அறிவித்தது!

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்த திரைப்படம், மார்ச் 6 முதல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ZEE5-ல் வெளியாகிறது

திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற திரைப்படமான ‘காந்தி டாக்ஸ்’, தற்போது அதன் உலக டிஜிட்டல் வெளியீட்டை மார்ச் 6 முதல் ZEE5-ல் கொண்டாடவுள்ளது. இந்த படம் அதன் சக்திவாய்ந்த மற்றும் உலகளாவிய கதையம்சத்தை அதிகமான பார்வையாளர்கள் அனுபவிக்கவும் வகையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஒளிபரப்பாகிறது.

லிங்க் – https://www.youtube.com/watch?v=FRTJ8TWC78g

Zee Studios, Moviemill மற்றும் Kyoorius நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், அதன் துணிச்சலான கதை சொல்லல், வலுவான நடிப்பு மற்றும் மொழியைத் தாண்டிய தனித்துவமான திரைப்பட அணுகுமுறைக்காக பரவலாக பாராட்டப்பட்டது. கிஷோர் பாண்டுரங்க் பெலகர் எழுதி இயக்கியுள்ள ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். சமகாலத்தில் அரிதாக உருவாகும் மௌன திரைப்படமாக இது திகழ்கிறது. முழுவதும் காட்சிகள் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள் மூலம் கதை சொல்லப்பட்டுள்ள இந்தப் படம், ஏ.ஆர். ரஹ்மான் அமைத்துள்ள ஆன்மாவை வருடும் இசையால் மேலும் வலுப்பெறுகிறது.

‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம், தனிப்பட்ட இழப்புகள், பொருளாதார சிரமங்கள் போன்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டுள்ள சில மனிதர்களின் வாழ்க்கைப் பயணங்களை இணைத்து சொல்கிறது. எதிர்பாராத விதமாக அவர்கள் பாதைகள் ஒன்றாக மோதும் போது, அது உயிர்வாழ்வுக்கான போராட்டமாக, மனித உறவுகளின் தீவிரமான கதையாக மாறுகிறது. உரையாடல்கள் இல்லாமல், நடிப்பு, காட்சிகள் மற்றும் இசை மூலமாகவே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்தப் படம், பார்வையாளர்களுக்கு முழுமையான மற்றும் மனதை நெகிழ்விக்கும் அனுபவத்தை வழங்குகிறது.

நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது:
“ஒரு சொல் கூட பேசாமல் இவ்வளவு விஷயங்களை வெளிப்படுத்தும் திரைப்படம் என்பதால் ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம். உணர்ச்சிகளை முழுக்க நடிப்பின் மூலம் வெளிப்படுத்துவது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு மிகவும் உற்சாகமாக இருந்தது. இப்போது ZEE5 வழியாக மேலும் பலர் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தின் கருத்துடன் பார்வையாளர்கள் இணைந்து, தங்கள் சொந்த அனுபவமாக இந்த கதையை உணர்வார்கள் என்று நம்புகிறேன்.”

அதிதி ராவ் ஹைதரி கூறியதாவது:
“‘காந்தி டாக்ஸ்’ படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது, அமைதியான காட்சிப் பதிவு முறை மூலம் ஒரு முழுமையான உணர்ச்சி உலகை உருவாக்கும் அதன் திறன். படத்தின் ஒவ்வொரு தருணமும் நெருக்கமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவமாக உள்ளது. திரையரங்குகளில் கிடைத்த அனுபவம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. இப்போது ZEE5 மூலம் பல மொழிகளில் மேலும் பரந்த பார்வையாளர்களை இந்த படம் சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பார்வையாளர்களை கவனிக்கவும், சிந்திக்கவும் வைப்பதோடு, தங்கள் பார்வையில் வாழ்க்கையின் பொருளை கண்டுபிடிக்கவும் அழைக்கும் ஒரு கதை.”

இயக்குநர் கிஷோர் பாண்டுரங்க் பெலகர் கூறியதாவது:
“‘காந்தி டாக்ஸ்’ எனக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் சவாலான முயற்சி. உரையாடல்கள் இன்றி ஒரு கதையை சொல்ல வேண்டியிருந்ததால், காட்சிகள், நடிப்பு மற்றும் இசையின் சக்தியை முழுமையாக நம்ப வேண்டியிருந்தது. திரையரங்குகளில் கிடைத்த அன்பும் பாராட்டும் எங்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. இப்போது ZEE5 இந்த படத்தை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்வது மிகுந்த மகிழ்ச்சி.”

‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் மார்ச் 6 முதல் ZEE5-ல் தவறாமல் காணுங்கள்!

Kauvery Group Launches Dedicated GI Bleed Centres Across Tamil Nadu

Chennai, March 2, 2026: Kauvery Group of Hospitals has launched dedicated GI Bleed Centres across all its hospitals in Tamil Nadu to provide timely evaluation, coordinated care, and comprehensive management of Gastrointestinal (GI) bleeding, a common medical emergency marked by internal bleeding within the digestive tract.

These centres will also be operational in the group’s hospitals in Karnataka. With 12 units across the two states, the initiative ensures patients have access to specialised, multidisciplinary care closer to home.

These centres bring together emergency physicians, gastroenterologists, intensivists, interventional radiologists, and surgeons under a coordinated care model. From arrival in the emergency department through risk assessment, ICU or ward admission, endoscopic or radiological intervention, and structured discharge planning, patients are managed along a clearly defined clinical pathway.

The centres are equipped with 24/7 emergency endoscopy services and advanced therapeutic endoscopic techniques, including injection therapy, band ligation, glue therapy, and coil embolisation. Interventional radiology support for angiographic embolisation, along with surgical expertise for complex cases, is available whenever required.

Speaking at the launch, Dr. P. Basumani, Director, Kauvery Institute of Digestive Sciences, said: “GI bleeding can result from ulcers, gastric erosions, or variceal bleeds linked to liver disease. Effective management depends on early assessment, stabilisation, accurate diagnosis, and timely intervention, as delays can be life-threatening. It requires a systematic, well-coordinated approach. At the Kauvery GI Bleed Centre, we have streamlined evidence-based protocols to ensure timely care at every stage. What truly makes a difference is teamwork – with multiple departments working seamlessly to deliver coordinated, patient-centred care.”

Highlighting the vision behind the initiative, Dr. Aravindan Selvaraj, Co-Founder and Executive Director of Kauvery Group of Hospitals, said: “Access to timely, specialised care is critical in managing medical emergencies. With Kauvery Hospitals across Tamil Nadu and Karnataka, we are bringing advanced GI bleed management closer to the communities we serve. Our goal is to standardise protocols across all units to ensure consistent quality, safety, and patient outcomes, regardless of location. This initiative underscores our ongoing commitment to strengthening emergency and critical care services.”

‘L. ஜெகதம்மா 7B: ஸ்டேட் பர்ஸ்ட்’ திரைப்பட விமர்சனம்

ஊர்வசி, வி.கே. பைஜு,ராஜேஷ் ஷர்மா , ஜெயன் சேர்த்தலா, நோபி மார்கோஸ், அஞ்சலி சத்யநாத்,கலேஷ் ராமானந்த், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, ஜிபின் கோபிநாத், ரேஷ்மி அனில், ஷைலஜா அம்பு, பி.ஆர். பிரதீப் நடித்துள்ளார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார் ஷிவாஸ்.

ஒளிப்பதிவு அனில் நாயர், இசை கைலாஷ் மேனன்,பாடல்கள் பி. கே .ஹரி நாராயணன், படத்தொகுப்பு ஷாய்ஜால் பி.வி,கலை இயக்கம் ராஜேஷ் மேனன்.
எவர் ஸ்டார் இந்தியன் வழங்கும் இந்தப் படத்தைப் பாசில் ஹோல்டிங்ஸ் உடன் இணைந்து ஊர்வசி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் கதை என்ன?

திருமணம் ஆகாத 40 வயதைத் தாண்டிய ஜெகதம்மா பாரத்தூர் என்கிற முன்னேற்றம் எட்டிப் பார்க்காத சிறிய ஊரில் வசித்து வருகிறார்.
அங்கே உள்ளவர்களுக்குக் குறிப்பாக உழைக்கும் பெண்களிடம் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்கிறார்.
அத்துடன் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்டாகவும் இருக்கிறார். படப்பிடிப்புகளுக்கு துணை நடிகர்கள் சப்ளை செய்கிறார்.
அவருக்கு நம்பிக்கைக்குரிய தம்பியைப் போல் அன்வர் என்பவர் கூடவே இருக்கிறார்.
இப்படிப்பட்ட ஜெகதம்மா சொன்னபடி கேட்பதற்கு அங்கே ஒரு பெண்கள் கூட்டம் இருக்கிறது. அதிகாரிகளின் சட்ட திட்டங்களெல்லாம் அங்கே செல்லுபடி ஆகாது .அப்பகுதிப் பெண்கள் இவர் சொல்வதையே வேதவாக்காக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது அந்தப் பெண்களின் கணவர்களுக்குப் பிடிப்பதில்லை. இருந்தாலும் இவர் சொல்வதைத்தான் மனைவிகள் நம்புவார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் அந்த ஊர்ப் பஞ்சாயத்து தலைவர் இறந்து விடுகிறார். அந்த 11 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஜெகதம்மா போட்டியிடும் படி ஒரு சூழல் வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு அவர் தேர்தலில் நிற்கிறார். அவரை எதிர்த்து தேசிய கட்சியும் பொதுவுடமை கட்சியும் என இரண்டு பிரதான கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்துகின்றன.அனுதாப ஓட்டுகளை வைத்து வெற்றி பெறலாம் என்று
இறந்த பஞ்சாயத்து தலைவர் மகளை நிறுத்தி ஒரு கட்சியினர் தேர்தல் பணியாற்றுகிறார்கள்.
இன்னொரு கட்சியான பொதுவுடமைக் கட்சியில் ஒரு பெரிய பணக்காரரை வேட்பாளராக நிறுத்துகிறார்கள்.அவருக்கு வாய்ப்பு கொடுத்ததில் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முணுமுணுப்புகள் எதிர்ப்புகள் கிளம்புகின்றன. அப்போது அந்த உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் ஐம்பதாயிரம் ரூபாய் வந்தவுடன் அவர்கள் எல்லோரும் மனம் மாறி ஒப்புக்கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட இரு பெரிய மலைகள் இடையே ஜெகதம்மா மோதுகிறார்.
இவரை எதிர்த்து பல்வேறு பிரச்சாரங்கள் செய்கிறார்கள். இந்த அரசியல் விளையாட்டில் தனி ஒரு நபராக ஜெகதம்மா எப்படி ஜெயிப்பார் ? அந்தப் பகுதி மக்களைக் கவர மூன்று வேட்பாளர்களும் விவாதம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சித்தாந்தங்கள் சட்டதிட்டங்கள் பேசும் அவர்கள் மத்தியில் ஜெகதம்மா சில எளிமையான கேள்விகள் கேட்டு அவர்களை மடக்குகிறார் .அது பொதுமக்களிடம் பிரபலமாகிறது. அது மட்டுமல்லாமல் இவர் எளிமையாக ஜோடனை இல்லாமல் பேசுவது வைரலாகிறது.
ஜெகதம்மாவுக்கு தான் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது .அப்போது அவரே மக்களிடம் அனுதாபம் பெறுவதற்கு ஒரு வேலையைச் செய்கிறார். அத்துடன் இடைவேளை வருகிறது.

அவர் செய்த வேலையால் மக்களிடம் அனுதாப அலையடிக்கிறது.11 வது வார்டு தேர்தலில் ஒரு வழியாக வெற்றி பெற்று விடுகிறார்.எதிர்க்கட்சிகள் வாயடைத்துப் போயிருக்கின்றன .பஞ்சாயத்து தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இரு பக்கமும் சம பலத்துடன் இருப்பதால் ஒரு சிக்கல் வருகிறது.ஜெகதம்மாவின் ஒற்றை வாக்கு முக்கியமானதாகிறது.இவரைத் துணைப் பஞ்சாயத்து தலைவராக முயற்சி செய்கிறார்கள். தான் தலைவராகத்தான் ஆவேன் என்று பிடிவாதம் பிடித்து அதிலும் வெற்றி பெறுகிறார். இவரைத் தலைவராக்கி தாங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளலாம் என்று நம்பிய அரசியல்வாதிகளுக்கு அவர்கள் எண்ணத்திற்கு எதிராகச் செயல்பட்டு பேரிடியாக மாறுகிறார்.

ஒரு காலத்தில் வட்டி வசூல் செய்யும் ராணியாக ஜெகதம்மா இருந்திருந்தாலும் அந்தப் பதவிக்கு வரும் போது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அங்குள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு உருப்படியாக செய்ய நினைக்கிறார். அங்கே கழிவு மேலாண்மை இல்லாமல் ஊரை அசுத்தப்படுத்துவதைக் தடுக்க நினைக்கிறார். இதற்காக கலெக்டரிடம் மனு கொடுக்கிறார். இது எதிர்க்கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை .அவருக்கு எதிராகச் சதி செய்கிறார்கள்.
ஜெகதம்மா எதார்த்தமாக பேசிய பேச்சை வைத்து, கலவரம் செய்கிறார்கள்.கலவரத்தைத் தூண்டினார் என்று பழி போடுகிறார்கள். சிறை செல்கிறார். பிறகு குற்றமற்றவராக விடுதலையாகிறார்.ஜெகதம்மா எதார்த்தமாக பேசிய பல பேச்சுகள் மக்களிடம் தீயாகப் பரவுகிறது. தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களைப் பார்த்து இவர் ’நங்கு பழி’க்கிறார் .அது அவர்களை அவமானப்படுத்தியதாகப் பிரச்சாரம் செய்தாலும் மக்களிடம் அது பிரபலமாகிறது.இப்படி அவருக்கு எதிரான அம்புகள் அனைத்தும் பூ மாலையாக மாறியது போல் அவருக்கு விளம்பரமாகவும் அமைகிறது.செல்வாக்கும் உயர்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் ஜெகதம்மா ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கிறார்.’நோட்டா’ தெரியாமல் வெள்ளந்தியாக இருக்கும் ஜெகதம்மா,பஞ்சாயத்து தலைவர் ஆன பிறகு தெருவில் பொறுப்பில்லாமல் குப்பை போடுபவர் வீட்டுக்கு அதை பார்சல் செய்து கொடுத்து விட்டு அபராதத் தொகை செலுத்த பில்லை நீட்டும் போது பொறுப்புள்ள ஊர்த் தலைவராக மாறி இருப்பார்.
அங்கே முறைசாரா தொழில் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு மத்திய அரசு 100 கோடி ரூபாய் வழங்குகிறது.
அதன் பிறகு அவர் தடையை உடைத்து முன்னேறிய ஒரு தலைவராக உருவெடுக்கிறார். அவரை இழுப்பதற்குப் பல்வேறு கட்சிகள் போட்டி போடுகின்றன. இன்னொரு பக்கம் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இத்தனை கட்சிகள் இத்தனை கொடிகள் இருக்கும் போது இன்னொரு கட்சியா? இன்னொரு கொடியா? நமக்கு இருக்கும் ஒரு கொடி போதும் என்று அவர் தேசியக் கொடியைக் காட்டுகிறார் அத்துடன் படம் முடிகிறது.

இந்தப் படத்தில் ஊர்வசி ஜெகதம்மா என்கிற டைட்டில் ரோல் ஏற்றுள்ளார். ஜெகதம்மாவாக ஊர்வசி படம் முழுக்க ஆக்கிரமித்து அனைத்து காட்சிகளிலும் அவரே மேலோங்கி நிற்கிறார்.

அந்த பாத்திரத்தை தக்க வைத்துக் கொண்டு கம்பீரமாக படத்தைத் தூக்கிச் சுமந்து இருக்கிறார். பல்வேறு பாத்திரங்கள் இடையில் ஊடாடி வந்தாலும் எல்லாவற்றையும் விட அவர்தான் மேலோங்கி வெளிப்பட்டுள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில்,விதவிதமான முகபாவனைகள் என்று நடிப்பாற்றல் காட்டுவதற்கான வாய்ப்புகளும் படத்தில் உள்ளன . அதை அவரும் சரியாகப் பயன்படுத்தி உள்ளார்.
அந்தக் கிராமத்து மனுஷியாகச் சரியாக உடல் மொழி காட்டி உள்ளார்.
எனவே படம் பார்த்துவிட்டு வெளியே வருகிறபோது ஜெகதம்மா மட்டுமே நினைவில் நிற்கும்படியாக அவர் நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் பொதுவுடைமை கட்சி வேட்பாளர், தேசியக் கட்சித் தலைவர்கள்,ஊர்வசியுடன் எப்போதும் துணை நிற்கும் அன்வர் என்கிற வாலிபன்,தொலைக்காட்சி நேர்காணல் செய்பவர், லோக்கல் யூடியூப் சேனல் காரர் என்று பல்வேறு முகங்கள் மனதில் பதிகிறார்கள்.

எப்போதுமே ஏதாவது ஒரு ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டு இருக்கும் ஒரு பாத்திரம் நினைவில் இருக்கும்.
எளிமையான காட்சிகள் மூலம் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்த்தும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.அதற்கேற்ற வகையில் ஒளிப்பதிவாளர் அனில் நாயரின் ஒளிப்பதிவு அமைந்துள்ளது. இசையமைப்பாளர் கைலாஷ்மேனனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளன.

அரசியல் கட்சிகள் செய்யும் அன்றாடச் செயல்பாடுகளை எல்லாம் காட்சிகள் ஆக்கி விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்கள்.
அரசியல் விளையாட்டில் எதுவும் சகஜம் என்று இருக்கும் கட்சிகளின் போக்கையும் காட்சிகள் ஆக்கியிருக்கிறார்கள்.

ஏழாம் வகுப்பு படித்த ஒரு பெண்,ஸ்டேட் ஃபர்ஸ்ட் என்று கூறும் அளவிற்கு எப்படி மாநிலத்தில் முதலாவதாகப் பார்க்கக்கூடிய பெண்ணாக உயர்கிறாள் என்பதுதான் இந்தக் கதை.

ஓர் எளிமையான கதையை எடுத்துக் கொண்டு கலகலப்பான காட்சிகளைக் கொண்டு வலிமையான கருத்தை சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பில் வெற்றிகரமான படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.இப்படம் மலையாளத்தில் வந்திருந்தாலும் காட்சிகள் மொழித் தடைகளை தாண்டி ரசிக்க வைக்கின்றன.

“ஆழி” திரைவிமர்சனம்

கன்னியாகுமரி பகுதியில் வசிக்கும் சரத்குமார் வெளியில் படகு மெக்கானிக் ஆகவும் முழு நேர தொழிலாக போதை கடத்தல் ஆயுத கடத்தலில் ஈடுபடும் ஒரு மிகப்பெரிய தாதாவாகவும் இருக்கிறார் அவருக்கு ஒரு மகள் இன்னொருஇன்னொரு பக்கம் ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் இந்திரஜித் அவருக்கும் சரத்குமாரின் மகள் தேவிகாவுக்கும் காதல்.இதை அறிந்த சரத்குமார் அந்தப் பையனை ஒரு படகில் கட்டி நடுக்கடலில் தூக்கிக்கொண்டு சித்தரவதை செய்து கொலை செய்ய முயற்சிக்கிறார் இந்த சம்பவத்தில் சரத்குமார் அந்த பையனை கொலை செய்கிறாரா?சரத்குமாரை கொலை செய்கிறானா ?அல்லது இருவருக்கும் ஏதாவது ஏற்பட்டு மூவர் இருவரும் தப்பித்தார்களா என்பது தான் இந்த படத்தின் திரைக்கதை.
இந்தப் படத்தில் இந்த இரண்டு கதாபாத்திரங்கள் தவிர வேறு எதுவும் இல்லாததால் கதை அந்த ஒரு இடத்தில் மட்டுமே அந்த படகில் மட்டுமே நடைபெறுகிறது.இந்த திரைப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் ஆஸ்கார் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியர்ரசூல் பூக்கூட்டி இந்த படத்திற்கு சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி இருக்கிறார் அது மட்டுமே இந்த திரைப்படத்தின் ஸ்பெஷல்
சரத்குமார் வரும் முரட்டுத்தனமாக நடிப்பிற்கு அந்த ஒட்டு தாடி ஏனோ ஒட்டாமலே இருக்கிறது அது இல்லாமலே அவர் வெள்ளத்தனம் காட்டி இருக்கலாம் ரசிக்கும் படியாக இருந்திருக்கும்.
அவர் வில்லன் கடத்தல் மணி என்று காட்டுவதற்காக ஒரே ஒரு சீன் மட்டும் வைத்திருக்கிறார்கள் அதுவும் அவர் வெளிநாடு தனத்தை காட்டவில்லை ஏதோ வந்தோம் போனோம் என்று தான் இருக்கிறது.
அறிமுக நாயகனாக இந்திரஜித் தேவிகா சதீஷ் இருவரும் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள் இந்திரஜித் நடிப்பு சரத்குமாரின் அடி வாங்கும் போது மிகவும் நன்றாக நடித்திருக்கிறார்.
மாத ராமதாசன் எழுதி இயக்கியுள்ள ஆழி இந்த திரைப்படம் கடலின் ஆழத்தை காட்டி நம்மை பயமுறுத்தும் என்று நினைத்தால் நினைத்தால் தான்

“போர்த் ஃப்ளோர்” திரை விமர்சனம்

மும்பையில் வசிக்கும் ஆரிக்கு சென்னையில் இருக்கும் அவரது முன்னாள் காதலியிடம் இருந்து ஒரு போன் வருகிறது அதில் தான் ஒரு பிரச்சனையில் இருப்பதாகவும் நீ சென்னைக்கு உடனடியாக வரவேண்டும் நீ வந்த பிறகு நானே உனக்கு போன் செய்கிறேன் என்று சொல்லி அழைக்கிறாள்.
சென்னை வரும் ஆரி அங்கு உள்ள ஒரு தனிமையில் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டில் தங்குகிறார்.அந்த வீட்டின் மூன்று மாடியில் மட்டுமே புழக்கத்தில் இருக்கும்போது இவருக்கு தவறுதலாக நான்காவது மாடியில்உள்ள அறைக்கு சாவி வழங்கி அங்கே தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.நேரத்தில் அந்த அப்பார்ட்மெண்டில் ஒரே ஒரு பெண்ணும் வேறு ஒரு பிளாக்கில் ஷார்ட் பிலிம் எடுக்கின்ற பேர்வழிகள் என்று ஒரு சில இளைஞர்களும் இளைஞர்களும் தங்கி இருக்கிறார்கள்.
நிலையில் அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு சிலர் ஆரிய இடம் சில விஷயங்கள் பேசுகிறார்கள்.திடீரென ஏதேதோ மர்மமான கனவுகள் வருகிறது தனது காதலியை நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்க அவரையும் தேடுகிறார் இந்த சூழலில் அந்த மர்ம பங்கு அப்பார்ட்மெண்டில் என்ன நடக்கிறது என்பதை இந்த திரைக்கதை 4th ப்ளோர் என்னும் திரைப்படம் கூறுகிறது.
இந்த போர்த் பார் திரைப்படம் ஆனது ஹாரர் மூவியா பழிவாங்கும் திரைப்படமா க்ரைம் திருவிழா என பல்வேறு குழப்பங்களுக்கிடையில் இயக்கியிருக்கிறார் இயக்குனர்.
காதலியை தேடும் பாரிக்கு காதல் என்னவானால் என்று தெரியவில்லை ஆனால் அதே பங்களாவில் ஒரு அறையில் ஆரியன் மகள் அவருக்கே தெரியாமல் இருக்கும் மகள் ஒரு அறையில் அடைபட்டு இருப்பது அவரை மீட்பது ,மேலும் ரியல் எஸ்டேட் பிசினஸில் ஈடுபடும் ரவுடிசம் என பல்வேறு விஷயங்களை இந்த ஹாரர் மூவிக்குள் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர்.
இந்த படத்தில் ஹீரோவாக ஆரி அவருக்கு நடிப்பு மிகவும் சுமாராகத்தான் வருகிறது அவர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்க வேண்டும்,இல்லனாக இயக்குனர் சுப்பிரமணியன் சிவா இவர் முழுநேர நடிகராக மாறிக் கொண்டிருக்கிறார்.
பவித்ரா நாயகி யாவும் அவரின் மாமாவாக தலைவாசல் விஜயம் தங்களது தரப்பட்ட கதாபாத்திரங்களை செய்து இருக்கிறார்கள்.

இசை தரண் குமார் திகில் படத்திற்கான இசையில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம் அதே போல் ஒளிப்பதிவும்.
இயக்குனர் எல் ஆர் சுந்தரபாண்டி திரைக்கதையில் இன்னும் மெனக்கட்டு இருந்தால் நிச்சயம் இந்த ஹாரர் மூவி நமக்கு பயம் கொடுத்திருக்கும்

“தடயம்” வெப் தொடர் விமர்சனம்

1995 1999 இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் உள்ள கிராமங்களில் நடந்த தொடர் கொலைகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் தொடர் தான் தடயம்
ஆந்திரா எல்லை வர தமிழக கிராமங்களில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக இரட்டை கொலைகள் கணவன் மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டு அவர்களது தாலி மற்றும் அருணா கயிறு அதை மட்டும் மறுத்துக் கொண்டு செல்கிறார்கள்.இது தொடர்ந்து நடக்க மக்கள் வீதி அடைய இதை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக சமுத்திரகனி.அவரது அதிகாரியாக சிவா தான் இன்ஸ்பெக்டராக வருகிறார்.இருவரும் இணைந்து இந்த தொடர் கொலைகளை செய்தவர்களை தேட அது ஆந்திர பிரதேசம் வரை செல்கிறது.அதே நேரத்தில் வழக்கமாக உயர் அதிகாரிகளின் ஒத்துழையாமை போன்றவையும் இந்த வழக்கை சுணக்கப்படுத்துகிறது.இந்த நிலையில் இருவரும் இணைந்து எப்படி இந்த கொலைகளை கண்டுபிடிக்கிறார்கள் அந்த கொலைகளுக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் திரைக்கதை தான் தடயம்.
இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக சமுத்திரகனி ஒரு வித்தியாசமான நடிப்பாகவும் தன்னுடைய பாடி லாங்குவேஜ் மாற்றி புதிதாக ஏதோ தர முயற்சி செய்திருக்கிறார் அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்.அவரது முதிர்ச்சியான நடிவம் கூர்நோக்கு பார்வையும் இந்த கொலை வழக்கை எளிமையாக கையாள வைக்கிறது அவருக்கு.
இன்ஸ்பெக்டர் கேரக்டரில் ஷிவதாநடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ள கதாபாத்திரம் அதில் அவர் தன்னை நிரூபித்தும் இருக்கிறார்.
திரைக்கதையில் வரும் பல்வேறு கதாபாத்திரங்கள் மிகவும் அழுத்தமாகவும் தேவையான இடத்திலும் பயன்பட்டு இருக்கிறார்கள்.
முக்கியமாக வில்லன் கதாபாத்திரம் புஷ்பா ஒன்று படத்தில் வில்லனாக வந்த ராஜ் இந்த வெப் சீரிஸில் கொடூரமான சைக்கோ இல்லனாக மிரட்டுகிறார்.
இந்த படத்திற்கான ஒளிப்பதிவும் அந்த காலகட்டமும் ,இசையும் சிறப்பாக பொருந்தி வருகிறது.
இந்தப் படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் திரைக்கதை விறுவிறுப்பாக செல்வதால் தொய்வில்லாமல் செல்கிறது.
ஒரு இரட்டைக் கொலையும் அந்த வீட்டில் உள்ள ஒரு கேள்விக்குறி மார்க்கும் அதை தொடர்ந்து செல்லும் 72 கொலைகளும் என இந்த திரை கதையை சிறப்பாக எழுதி இயக்கி இருக்கிறார்நவீன் குமார் பழனிவேல்
தடயம் zee5 ott தளத்திற்கு ஒரு விறுவிறுப்பான க்ரைம் தொடர்

Green Milk Concepts, the Herbal Division of Apex Laboratories, Launches “Green Cuddle” Baby Care Range

Chennai, February 2026: Green Milk Concepts (GMC), the herbal division of Apex Laboratories, is set to launch Green Milk’s Green Cuddle Baby Care range on 26th February 2026 at 3:00 PM at Hotel Green Park, Chennai. The range is thoughtfully developed with a blend of traditional wisdom and modern scientific principles to gently care for a baby’s soft and sensitive skin.

The launch will be graced by distinguished personalities including Ms. S.V. Subashini, Executive Director – GMC; Dr. G. Sivaraman; Dr. Vijeyapall; and Dr. A.V. Ravishankar, Mr. R. Sridhar, VP – Sales & Marketing; Mr. V.P. Raghavan, DGM; Dr. M. Vijayakumar, AGM (Head – R&D); who will preside over the event and share insights on this innovative baby care range.

The Green Cuddle Baby Care range is crafted with natural actives that help nourish, soothe, refresh, and comfort delicate baby skin. All products are dermatologically tested and paediatrician tested, ensuring safety and gentleness for daily use. The range is free from synthetic colours, parabens, synthetic fragrance, mineral oil, and sulphates, and is cruelty-free. The products are manufactured in a GMP-certified facility, ensuring high standards of quality, consistency, and safety.

The daily care range includes: Gentle Baby Wash, Baby Massage Oil, Moisturising Baby Lotion, Baby Rub, Baby Cream

The Green Cuddle range will be available on leading e-commerce platforms, greenmilkconcepts.in Amazon, Flipkart, Myntra, Meesho, Jiomart.

Green Cuddle Baby Care products are priced at Gentle baby wash ₹449, Baby massage oil ₹649, Moisturising baby lotion ₹449, Baby rub ₹349, and Nappy cream ₹399, while the bundle pack is priced at ₹2,295.( with free diaper bag)

Speaking on the occasion, Ms. S.V. Subashini, Executive Director – GMC, said “We are delighted to launch Green Milk’s Green Cuddle Baby Care range. This marks an important milestone in our journey to offer safe, gentle, and effective baby care solutions rooted in nature and backed by science.”

கவிஞருக்குப் பெண் பார்க்கும் கஞ்சா கருப்பு

திரைப்படங்களில் நாம் சிரிப்பதற்காகப் பார்க்கும் கஞ்சா கருப்பு நிஜ வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த நண்பராகத் திகழ்கிறார். அவர் தனது நண்பர் கவிஞர் கிச்சன் மீது வைத்துள்ள பாசம் அளப்பரியது .

கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர். கவிஞர் கிச்சன் பல பாடல்களை எழுதிய திறமையான கவிஞர்.”இலக்கிய காதலில் இலக்கண சுருதி “எனும் கவிதை தொகுப்பை தனது தாய் கிராமத்தில் வெளியிட்டுள்ளார். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாகத் திரையுலகில் இணைபிரியாத நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.கஞ்சா கருப்பு எங்கு சென்றாலும் தனது நண்பர் கிச்சனை உடன் அழைத்துச் செல்வார். நண்பனின் வளர்ச்சியில் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

கவிஞர் கிச்சன் ஒரு எளிய பின்புலத்திலிருந்து வந்தவர். மிகவும் திறமைசாலி.ஆனால் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது நண்பன் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பது கஞ்சா கருப்பின் நீண்ட கால ஆசை. தனது நண்பன் கிச்சனுக்கு ஒரு நல்ல பெண்ணைத் தேடித் திருமணம் செய்து வைக்க கஞ்சா கருப்பு மிகத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

தனது சொந்தத் தம்பிக்கு எப்படிப் பெண் பார்ப்பாரோ அதே அக்கறையுடன் ஊர் ஊராகச் சென்று கிச்சனுக்குப் பெண் பார்த்து வருகிறார்.என் நண்பன் ஒரு கவிஞன். அவன் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதே கஞ்சா கருப்பின் ஒரே நோக்கம்.கஞ்சா கருப்பு ஒரு சாதிய வட்டத்தில் சுருங்காமல் சாதித்த பெண்ணை தேடுகிறார் ஆணின் தகுதிக்கு பெண் தகுதி… ஆண் பெண் பொருத்தம் மட்டும்தான்….தொழிலை வைத்து தான் சாதி பிறந்தது. சாதி மத பேதமின்றி பெண் தேடுகிறார்

யாஷின் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’

யாஷின் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக வர்த்தகம் மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக விநியோகம் கமிஷன் அடிப்படையில் 63 கோடி ரூபாய் முன் பணமாக பெறப்பட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் தமிழக திரைப்பட வணிகத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இதன் மூலம் இந்த படத்தை பற்றி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் வெளியாகும் மிகப்பெரிய திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாக இது இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.

அதிகபட்சமான அணுகுமுறை மற்றும் பிராந்திய வலிமையை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இப்படத்தின் வெளியீடு- சக்தி வாய்ந்த பல விநியோகஸ்தர்களுடனான உத்தி மூலம் செயல்படுத்தப்படும்.

அந்த வகையில் சென்னை மாநகரத்தை ஸ்வரூப் ரெட்டியின் கீழ் இயங்கும் திங்க் ஸ்டுடியோஸ் கையாளுகிறது. செங்கல்பட்டு பகுதியை டிரைடண்ட் ரவி தலைமையிலான ஒயிட் நைட்ஸ் விநியோகிக்கும். கோயம்புத்தூர், வடக்கு மற்றும் தென் ஆற்காடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளை எஸ் பிக்சர்ஸ் சீனிவாசன் மேற்பார்வையிடுவார். அதனைத் தொடர்ந்து மதுரை- ராமநாதபுரம்- திருச்சி- தஞ்சாவூர் -சேலம் ஆகிய முக்கிய பகுதிகளை ஃபைவ் ஸ்டார் செந்தில் நிர்வகிப்பார். இது போன்று கட்டமைக்கப்பட்ட பிராந்திய விநியோக முறை- மாநிலம் முழுவதும் உள்ள சிங்கிள் ஸ்கிரீன் மற்றும் மல்டிஃபிளக்ஸ் ஸ்கிரீன்ஸ் ஆகிய இரண்டிலும் வலுவான திரையிடலை பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒத்துழைப்பு குறித்து தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்திய தமிழ்நாடு விநியோகஸ்தர்கள்,

” டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic: A Fairy Tale for Grown Ups) சமீபத்திய காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்திய அளவிலான படங்களில் ஒன்றாகும். மேலும் தமிழ்நாட்டில் ஏற்கனவே யாஷ் மீது இருக்கும் அன்பும் , ஆதரவும் சிறப்பானது. இங்குள்ள பார்வையாளர்கள் யாஷை ஏற்றுக்கொண்ட விதம் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. இந்த அளவிலான லட்சியம் கொண்ட ஒரு படத்திற்கான விநியோகத்தில் நாங்கள் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்களுக்கு ஒரு பெரிய வெளியீடு மட்டுமல்ல.. இன்று இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றுடன் இணைந்திருப்பதும் உற்சாகமான ஒன்றாகும் ” என்றனர்.

‘கே ஜி எஃப் :பார்ட் 2 ‘ படத்தின் அற்புதமான வெற்றி மற்றும் தமிழ்நாட்டில் யாஷ் மீதான பரவலான புகழ் மற்றும் வரவேற்பு ஆகியவையே இந்த ஒப்பந்தத்தின் அளவிற்கான காரணம் என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழ் பார்வையாளர்கள் யாஷ் மீது மிகுந்த அன்பைப் பொழிந்து.. அவரது திரை ஆதிக்கத்தையும், தனித்துவமான புகழையும் கொண்டாடி, அவரை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இது எல்லையைத் தாண்டிய அரிய பிணைப்பு. அதனால் இந்த ஒப்பந்தம் வலுவான நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

63 கோடி ரூபாய் முன் பண ஒப்பந்தம் மற்றும் வலுவான பிராந்திய நெட்வொர்க்குடன் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic :A Fairy Tale for Grown Ups) தமிழ்நாட்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கிறது. அத்துடன் மாநிலம் முழுவதும் பிரம்மாண்டமான மற்றும் விரிவான வெளியீட்டிற்கும் தயாராக உள்ளது.

யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் எழுதி, கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள ‘ டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic: A Fairy Tale for Grown Ups) திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே தருணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் ,தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் இதன் டப்பிங் பதிப்புகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன. கே வி என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் (Monster Mind Creations) தயாரித்த ‘டாக்ஸிக்’ திரைப்படம் மார்ச் 19 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி , ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.‌