Chennai, 26 Oct. 2023 First of its kind in South India, DAC Developers Pvt. Ltd., one of the Chennai’s most trusted housing development companies, has launched Home Experience Centres at Medavakkam and Tambaram, comprising fully furnished houses that showcase everything from floors to roofs in cross-section so that buyers can visually inspect and physically touch and feel the materials that go into making their dream homes. Honourable Shri V. Ramasubramanian, former judge of the Supreme Court of India, inaugurated the innovative centres: a 1050 sq-ft, experience centre, and an 800 sq.ft one, modelled on the real housing units of DAC Developers’ two newly announced residential projects, DAC Medallion, Medavakkam and DAC Marshall, Tambaram respectively. Talking about the Home Experience Centres, Mr. S. Sathish Kumar, Managing Director, DAC Developers Pvt. Ltd., said, “Our core principles revolve around the 3Es: ENGINEERING-focused innovation, Customer EDUCATION, and Customer EXPERIENCE. The newly unveiled Home Experience Centres embody these principles. We take pride in introducing it first time in South India. The introduction of our Home Experience Centers represents a new layer of transparency, reinforcing the trust our customers place in us.” On the benefits of Home Experience Centres for the buyers, he said, “While buyers can always compare prices, select locations, and even visit model homes, up until now, they haven’t had the opportunity to understand the materials and elements used in the construction of their home components. They had to rely solely on the assurances given by developers. However, our Home Experience Centers provide them with first-hand knowledge about the quality and specifications of every component and item in their dream homes. They no longer need to purchase homes blindly. Now, they can visually examine and physically experience them before making a decision.” The Home Experience Centers proudly feature eleven bays where visitors can examine the cross-sections of various elements, including shear walls, columns, beams, doors, windows, floors, switch boxes, plumbing shafts, as well as exterior components like hand-rails and balcony floors. DAC Medallion is a residential complex in Medavakkam that comprises 125 apartments. Situated in the heart of Tambaram, DAC Marshall comprises a diverse range of 114 unit configurations.
பள்ளி மாணவனின் வாழ்வினை எளிமையான கதையில் அழகாகச் சொல்லிய “ரங்கோலி” திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது.
Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படமாக வெளியான திரைப்படம் “ரங்கோலி”.
திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் 24 அக்டோபர் 2023 அன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. அனைவரின் பள்ளி ஞாபகங்களைக் கிளறும் இப்படம் குடும்ப பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருவதுடன், அதிக எண்ணிக்கையிலான பார்வைகளைப் பெற்று வருகிறது.
குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியிலிருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதை. பள்ளி மாணவர்களின் வாழ்வை மட்டுமல்லாது ஒரு எளிமையான குடும்பத்தின் வாழ்வியலையும் அழகாக இந்தப்படம் சொல்கிறது.
மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். பிரார்த்தனா சந்தீப், சாய் ஶ்ரீ, அக்ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார்.
Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரித்துள்ள இப்படத்தினை அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி KS இசையமைத்துள்ளார். I.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். G.சத்யநாராயணன் எடிட்டிங் செய்துள்ளார். ஆனந்த் மணி கலை இயக்கம் செய்துள்ளார்.
பள்ளிக்கால வாழ்க்கையை அற்புதமாகச் சொல்லும் இந்த அழகான டிராமா திரைப்படத்தினை அமேசான் ப்ரைம் தளத்தில் கண்டுகளியுங்கள்
ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா (Goat) திரைப்படத்தின் டிரெய்லர் இணைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் இப்படம் தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கிடா திரைப்படம் உலகளவில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாரட்டுக்களை குவித்துள்ளது. இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. மேலும் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட்டப்பட்டது குறிப்பிடதக்கது.
கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு தீபாவளி திருநாளில் நடைபெறும் இந்தக்கதை, தீபாவளி நன்நாளில் வெளியாவதில் படக்குழு பெரும் உற்சாகமாக உள்ளது.
உலகளவில் பாராட்டுக்களை குவித்த இப்படம் இறுதியாக, நம் தமிழக ரசிகர்களை தீபாவளி திருநாளில் மகிழ்விக்கவுள்ளது.
பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக தொடர்ந்து வன்முறைக்களமாக இருக்கும் தமிழ் சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையான உணர்வுகளை, அழகாக சொல்லும் அற்புதமான வாழ்வியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு மாறுபட்ட சினிமா அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது.
தொழில் நுட்ப குழு விபரம் ஆடியோகிராஃபி – தபஸ் நாயக் கலை இயக்கம் : K.B.நந்து பாடல்கள் : ஏகாதசி எடிட்டர் : ஆனந்த் ஜெரால்டின் இசை : தீசன் ஒளிப்பதிவு : M.ஜெயப்பிரகாஷ் தயாரிப்பு : ஸ்ரவந்தி ரவி கிஷோர் இயக்கம் : ரா. வெங்கட்
வெற்றிக்கூட்டணியான மாஸ் மகாராஜா ரவி தேஜா மற்றும் மாஸ் மேக்கர் கோபிசந்த் மலினேனி நான்காவது முறையாக இணைந்துள்ளனர், இப்படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் #RT4GM படத்தை, பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. திரையில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரவி தேஜா இப்படத்தில் நடிக்கிறார்.
மாஸ் மஹாராஜா ரவி தேஜா, செல்வராகவன், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் இதர படக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில், இன்று பூஜையுடன் படம் பிரம்மாண்டமாக துவங்கியது. இப்படத்தின் ஸ்கிரிப்டை அல்லு அரவிந்த் தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தார். படத்தின் முதல் காட்சிக்காக ஆன்மோல் சர்மா கேமராவை இயக்க, VV விநாயக் கிளாப்போர்டு அடித்தார். K ராகவேந்திரா ராவ் முதல் காட்சிக்கு இயக்கம் செய்து கௌரவித்தார்.
நடிகரும் திரைப்படத் இயக்குநருமான செல்வராகவன், தெலுங்கு மொழியில் இப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதாநாயகி பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
RT4GM திரைப்படம் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த திரைக்கதையுடன் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர் ஆகியோர் மிகப்பெரிய பட்ஜெட்டில் திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர், மேலும் திரைத்துறையின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களின் கைவண்ணத்தில் உயர்தரமான படைப்பாக இப்படம் உருவாகவுள்ளது.
முன்னணி இசையமைப்பாளர் S தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ரவி தேஜாவுடன் தமனுக்கு இது 12வது படம், கோபிசந்த் மலினேனியுடன் 7வது படமாகவும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூலம் 4வது படமென்பதும் குறிப்பிடத்தக்கது.
பிகில், மெர்சல் போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும், சமீபத்தில் இந்தியாவெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய ஜவான் படத்தினை காட்சிப்படுத்திய திறமை மிகு ஒளிப்பதிவாளரான GK விஷ்ணு, #RT4GM இன் மாபெரும் உலகத்தை காட்சிப்படுத்தவுள்ளார்.
தேசிய விருது பெற்ற டெக்னீஷியன் நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, AS பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். வசனங்களைச் சாய் மாதவ் புர்ரா எழுதியுள்ளார், மயூக் ஆதித்யா, ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, M விவேக் ஆனந்த் மற்றும் ஸ்ரீகாந்த் நிம்மகத்தா ஆகியோர் மற்ற எழுத்தாளர்களாக பணியாற்றுகின்றனர்.
நடிகர்கள்: ரவி தேஜா, செல்வராகவன், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் பலர்
தொழில்நுட்பக் குழு: கதை மற்றும் இயக்கம்: கோபிசந்த் மலினேனி தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர் பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் CEO: செர்ரி நிர்வாக தயாரிப்பாளர்: தினேஷ் நரசிம்மன் இசை: S தமன் ஒளிப்பதிவு : GK விஷ்ணு எடிட்டர்: நவீன் நூலி வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா தயாரிப்பு வடிவமைப்பாளர்: AS.பிரகாஷ் ஆடை வடிவமைப்பாளர்: அனிருத்/தீபிகா எழுத்தாளர்கள்: மயூக் ஆதித்யா, ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, M விவேக் ஆனந்த் மற்றும் ஸ்ரீகாந்த் நிம்மகத்தா விளம்பர வடிவமைப்பாளர்: கபிலன் மக்கள் தொடர்பு – யுவராஜ் மார்க்கெட்டிங்க் : ஃபர்ஸ்ட் ஷோ பப்ளிசிட்டி : பாபா சாய் (மேக்ஸ் மீடியா)
திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் காயத்ரி மற்றும் புஷ்கர் மற்றும் இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் சுதா கொங்கரா ஓ வுமெனியா! அறிக்கை 2023-யின் பின்னணியில் இந்திய பொழுது போக்கில் பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கு அவர்களுடைய ஆதரவு அளிப்பதாக உறுதி மொழி அளித்தனர்
ஆலியா பட், தகுபட்டி சுரேஷ் பாபு, சுப்ரியா மேனன், சுப்ரியா யார்லாகாட்டா, ஷோபு யார்லாகாட்டா, விக்ரமாதித்யா மோட்வானே, மற்றும் அதிகமான பொழுதுபோக்கு ஆளுமைகள் இந்த துறையில் பன்முகத்தன்மைக்கான அவர்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்
ஆர்மேக்ஸ் மீடியா மற்றும் ஃபிலிம் கம்பானியன் தலைமை வகிக்க , மற்றும் ப்ரைம் வீடியோ ஆதரவளிக்கும் ஓ வுமேனியா! இந்திய பொழுதுபோக்கில் பெண் பிரதிநிதித்துவம் குறித்த இந்தியாவின் மிக முழுமையான அறிக்கை ஆகும்
முழு அறிக்கையை இங்கே படிக்கலாம் www.owomaniya.org
சென்னை- அக்டோபர் 26,2023 – இந்தியாவின் மிகவும் நேசிக்கப்படும் பொழுதுபோக்கு இடமான ப்ரைம் வீடியோ, இந்திய பொழுதுபோக்கில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த மிக முழுமையான அறிக்கையான இன்று ஓ வுமெனியா! அறிக்கையின் சமீபத்திய பதிப்பை வெளியிட்டது. மீடியா ஆலோசனை நிறுவனமான, ஆர்மேக்ஸ் மீடியா, இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு ப்ளாட்ஃபார்ம் ஆன , ஃபிலிம் கம்பேனியானால் ஆய்வு செய்யப்பட்டு மற்றும் உருவாக்கப்பட்டு மற்றும் ப்ரைம் வீடியோவின் ஆதரவு பெற்ற இந்த ஆய்வு இந்தியாவின் பொழுதுபோக்கு தொழிலுக்குள் உள்ளடக்க தயாரிப்பு, மார்கெட்டிங் மற்றும் கார்பரெட் தலைமையின் வெவ்வேறு முகங்களில் பெண்களின் பயணம் குறித்த புள்ளி விவரங்களை மதிப்பிடுகிறது.
இந்த அறிக்கையின் பின்னணியில், இந்த துறையைச் சேர்ந்த வெவ்வேறு தலைவர்கள் அவர்களுடைய ஆதரவை தெரிவித்தனர் மற்றும் பொழுதுபோக்கில் பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கான உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டர். திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் காயத்ரி மற்றும் புஷ்கர் கூறினர், “எங்களுடைய செயல் திட்டங்களில் பன்முகத்தன்மையை தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு, எழுத்தாளர் அறைகளில் பெண்களை தொடர்ந்து சேர்ப்பதற்கு மற்றும் அரசாங்கம் கட்டாயமாக்கிய பிஓஎஸ்ஹெச் வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றுவதற்கு மற்றும் நிறுவனத்திற்குள் ஒரு ஐசிசி கொண்டிருப்பதற்கு நாங்கள் உறுதி மொழி எடுக்கிறோம்.” அவருடைய ஆதரவிற்கான உறுதி அளிக்கையில், இயக்குனர் மற்றும் திரை எழுத்தாளரான சுதா கொங்காரா கூறினார்,” என்னுடைய தயாரிப்பாளர்கள் அரசாங்கம் கட்டாயமாக்கியிருக்கும் பிஓஎஸ்ஹெச் வழிகாட்டுதல்களுடன் இணங்குவதை மற்றும் அவர்களுடைய இடத்தில் ஒரு ஐசிசி கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கு நான் உறுதி மொழி ஏற்கிறேன்.”
பெண்-முன்னணி வகித்த திரைப்படமான கங்குபாய் காத்தியாவாடிக்காக சமீபத்தில் தேசிய திரைப்பட விருதை வென்ற மற்றும் மற்றொரு பெண்களை –முன்னே வைக்கும் கதை அமைப்பான டார்லிங்குடன் தயாரிப்பாளர் ஆகவும் மாறியிருக்கும் ஆலியா பட் கூறினார், “என்னுடைய தயாரிப்பு திட்டங்களில் பன்முகத்தன்மையை தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு நான் உறுதி அளிக்கிறேன். அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் மற்றும் எக்சிக்யூட்டிவ் டைரக்டர் சுப்ரியா யார்லாகாட்டா கூறினார், “தெலுங்கு திரைப்பட துறையில் ஒரு ஐசிசி-ஐ நிறுவிய முதல் ஸ்டூடியோ மற்றும் தயாரிப்பு நிறுவனம் அன்னபூர்ணா ஆகும். எங்களுடைய தயாரிப்புகளில் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கு மற்றும் எழுத்தாளர் அறைகளில் பெண்களை சேர்ப்பதற்கான எங்களுடைய முயற்சியை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம். எங்களுடைய சூழல், பணியிடத்தில் அதிகமான பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தொடர்ச்சியாக முன்னேறி வருகிறது”. அபர்ணா புரோஹித், ஒரிஜினல்ஸ் தலைவர், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா , ப்ரைம் வீடியோ, உறுதி எடுத்துக் கொண்டார், “எழுத்தாளர் அறையில் பெண்களை சேர்ப்பதற்கு மற்றும் எங்களுடைய தயாரிப்புகள் அனைத்திலும் துறைத் தலைவர்களாக குறைந்தபட்சம் 30% பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நோக்கி பணியாற்றுவதற்கு நான் உறுதி அளிக்கிறேன் .”
அனைத்து உறுதி மொழிகளையும் இங்கே பார்க்கலாம்: https://drive.google.com/drive/folders/1l9S6ENy3KWnZcxfRuyuBmmaEEiG1zbPQ
2021 -லிருந்து இந்த தொழில் பார்த்திருக்கும் மாற்றம் குறித்த முழுமையான ஒரு கண்ணோட்டத்தை அடைவதற்கு, இந்த வருடம், 2022 ல் 8 இந்திய மொழிகளில் (ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, பெங்காலி மற்றும் குஜராத்தி) ஸ்ட்ரீம் செய்யப்பட்ட மற்றும் தியேட்டரில் வெளியிடப்பட்ட 156 திரைப்படங்கள் மற்றும் தொடர்களை இந்த அறிக்கை ஆய்வு செய்தது,
ப்ரைம் வீடியோவுடன், க்ளீன் ஸ்லேட் ஃபில்ம்ஸ், எம்மே என்டர்டெய்ன்மென்ட், எக்செல் என்டர்டெய்ன்மென்ட், ஜியோ ஸ்டூடியோ, ப்ரொட்யூசர்ஸ் கில்டு இண்டியா, ஆர்எஸ்விபி , சோனிலைவ், டைகர் பேபி மற்றும் ஸீ5 உட்பட இந்த தொழிலைச் சேர்ந்த மற்ற பார்ட்னர்களால் இந்த அறிக்கைக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது .
இந்த அறிக்கையின் முக்கிய கண்டு பிடிப்புகளில் பின்வருபவை உள்ளடங்கும்:
• படைப்பாற்றல் திறன் – இயக்கம், ஒளிப்பதிவு, எழுத்து மற்றும் உற்பத்தி டிசைனின் முக்கிய துறைகளில் 780 ஹெச்ஓடி பதவிகளில் 12% மட்டுமே பெண்கள் பதவி வகித்தனர் .
• உள்ளடக்க விஷயம் – 2021-ல் , ஆய்வு செய்யப்பட்ட பொருட்களில் (திரைப்படங்கள், தொடர்களில்) 55% பெக்டெல் டெஸ்டை பாஸ் செய்தது, இப்போது அந்த எண்ணிக்கை பாதி அளவிற்கு கீழே 47% -க்கு சென்று விட்டது, மற்றவைகள் இடையே கில்ட்டி மைன்ட்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்! சீசன் 3, டெல்லி க்ரைம் சீசன் 2, மாஜா மா, கங்குபாய் காத்தியாவாடி பெக்டெல் டெஸ்டை பாஸ் செய்வதற்கு அதிகபட்ச சீன்கள் கொண்ட பொருட்களாக (திரைப்படங்கள், தொடர்களாக) வெளி வந்தன.
• மார்கெட்டிங் – ட்ரெய்லர்களில் 27% டாக் டைம் மட்டுமே இன்னமும் பெண்களுக்கு கிடைக்கிறது, இந்த எண்ணிக்கை ஸ்ட்ரீம் செய்யப்படும் திரைப்படங்களுக்கு மிக அதிகமாக உள்ளது, இதில் ட்ரெய்லர்களில் 33% டாக் டைம் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மற்றவைகள் இடையே, ஹஷ் ஹஷ், கெஹராயியான், த ஃபேம் கேம், அம்மு, அ தர்ஸ்டே, சீத்தா ராமம், டிரெய்லர்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு குறைந்தபட்சம் 50% டாக் டைமுடன் சிறந்த செயல்திறன் கொண்டிருந்தது
• நிறுவன திறமை – இந்தியாவில் 25 முதன்மையான எம்அண்டுஇ நிறுவனங்களில் உள்ள 135 டைரக்டர் / சிஎக்ஸ்ஓ பதவிகள் ஆய்வு செய்யப்பட்ட போது, 13% பெண்கள் மட்டுமே அந்த பதவியை வகித்தனர்.
ஓ வுமெனியா!-வின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் குறித்த அவருடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்கையில், ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனர் மற்றும் சிஇஓ ஷைலேஷ் கபூர், கூறினார் “சில முக்கிய அம்சங்களில் மெதுவான ஆனால் நிலையான முன்னேற்றம் இருந்திருந்தாலும், அனைவரையும் உள்ளடக்குவதை ஒரு தீவிர கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கான தேவையை இந்த அறிக்கை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது. இந்த அறிக்கையின் முந்தைய பதிப்பை போல, ஸ்ட்ரீமிங் தொடர்ந்து பெண் பிரதிநிதித்துவத்திற்கான பாதையை வகுத்து வருகையில், சற்று குறைவான செயல்திறன் கொண்ட நாடகம் போன்ற திரைப்படங்கள் இந்த தொழிலில் உள்ளவர்களை எழுப்புவதற்கான அழைப்பாக திகழ வேண்டும். சாதகமான ஒரு மாற்றத்தை பார்ப்பதற்கான உண்மையான விருப்பதிற்கு முக்கியத்துவம் அளித்து, இந்த துறை இந்த டேட்டாவை கவனத்தில் கொள்வதை மற்றும் சிறப்பான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு ஒன்றாக வருவதைப் பார்ப்பதற்கு நான் மிகழ்ச்சி அடைகிறேன் .
இந்த அறிக்கை பற்றி பேசுகையில், ஃபிலிம் கம்பானியன் நிறுவனர் மற்றும் எடிட்டர் அனுபமா சோப்ரா கூறினார், “பொழுதுபோக்கு சக்தி வாய்ந்த ஒரு மீடியம் , இது அனைவரையும் உள்ளடக்குவது மற்றும் பன்முகத்தன்மையை முன்நிலைப்படுத்த வேண்டும். ஓ வுமெனியா! முன்னை விட வேகமாக நகரச் செய்வதற்கான எங்களுடைய முயற்சி ஆகும். இந்த உரையாடலை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முக்கிய தனிநபர்கள் குறிப்பிட்ட இலக்குகளை ஏற்று வேலை செய்வது மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் இந்த துறையிலிருந்து அற்புதமான பங்கேற்பை பார்ப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்ட படிகள் சிறியதாக தோன்றலாம் ஆனால் ஒவ்வொரு படியும், ஒவ்வொரு நடவடிக்கையும் முக்கியமானது, மற்றும் ஓ வுமெனியா! அறிக்கையின் ஒவ்வொரு பதிப்புடனும், அதிக சமநிலையான ஒரு சூழலுக்கு ஒரு அடி நெருக்கமாக நாங்கள் நகர்வதாக நாங்கள் நம்புகிறோம். இந்த தனித்தன்மையான முயற்சிக்காக எங்களுடன் இணைவதற்காக ப்ரைம் வீடியோ மற்றும் ஆர் மேக்ஸ் மீடியாவிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
“ப்ரைம் வீடியோவில் , பன்முகத்தன்மை, சமநிலை மற்றும் அனைவரையும் உள்ளடக்குவது தேவையானது மட்டும் அல்ல, இது அவசியமானது என நாங்கள் நம்புகிறோம். ஒரு நிறுவனமாக, நாங்கள் எப்போதுமே சமநிலையான பிரதிநிதித்துவத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம், ப்ரைம் வீடியோ மற்றும் எங்களுடைய உள்ளடக்க விஷயத்தில் மட்டும் அல்ல, ஆனால் பரவலாக படைப்புத் தொழிலுக்குள்ளும் அந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய தொழிலுக்குள் திறமை மிக்க பெண்களை வளர்ப்பது மற்றும் அதிகாரம் அளிப்பதன் மூலமாக, எங்களால் பரவலான சுற்றுப்புறச் சூழல் அமைப்பில் சாதகமான மாற்றத்தின் சிற்றலை விளைவை (தொடர்ச்சியான சிறு மாற்றங்களை) உருவாக்க முடியும் என்று சொன்னார் அபர்ணா புரோஹித் , ஹெட் ஆஃப் ஒரிஜினல்ஸ், இண்டியா மற்றும் தென் கிழக்கு ஏசியா, ப்ரைம் வீடியோ. “ஓ வுமெனியா! இந்த துறையை இணைப்பதற்கு மற்றும் பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைப்பதற்கு ஒன்றிணைந்த முயற்சியை பிரதிபலிக்கிறது. இந்த அறிக்கையின் சமீபத்திய பதிப்பு, மாற்றம் ஏற்படுத்தும் இந்த முயற்சிகளை துரிதப்படுத்துவதற்கான அவசரத்தை அடிக் கோடிடுகிறது. பார்ட்னர்களின் உறுதியான ஆதரவை மட்டும் அல்லாமல், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் உட்பட இந்த துறையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்கவர்களின் தீவிர பங்கேற்பையும் காண்பது இதயத்தை மகிழ்விப்பதாக உள்ளது. அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட அர்ப்பணிப்பை உறுதி அளிப்பது மட்டும் அல்லாமல் அதிக அளவில் பெண்களை உள்ளடக்குவதற்கு ஆதரவளிப்பதற்கு பரவலாக நிறுவன அளவிலான அர்ப்பணிப்புகளுக்கும் அவர்கள் உறுதி அளித்தனர்.”
11985 ல் ஆலிசன் பெக்டெல்லால் கருத்துருவாக்கப்பட்ட த பெக்டெல் டெஸ்ட், உள்ளடக்க விஷயங்களில் பாலின பிரதிநிதித்துவத்திற்கு சர்வதேச அளவில்-ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவுகோலாக பார்க்கப்படுகிறது. ஒரு திரைப்படத்தில் இரண்டு பெயரிடப்பட்ட பெண்கள் குறைந்தபட்சம் பேசிக் கொள்ளும் ஒரு சீன் உள்ளது, மற்றும் அந்த உரையாடல் ஆண்கள் / ஒரு ஆண் தவிர வேறு ஏதாவது விஷயம் பற்றியது என்றால் அந்த திரைப்படம் பேக்டெல் டெஸ்டில் தேர்ச்சி பெற்றதாக கருதப்படுகிறது. தொடர்கள் நீண்ட நேரம் ஓடும் என்பதால், தொடர்களை ஸ்ட்ரீம் செய்வதற்கு, மூன்று சீன்களை உள்ளடக்குவதற்கு விதி மாற்றம் செய்யப்பட்டது .
2ட்ரெய்லர் டாக் டைம் என்பது தனித்தன்மையாக ஓ வுமேனியா! –விற்காக உருவாக்கப்பட்டது. இந்த பரிசோதனையில், ஆண் மற்றும் பெண் கதாபாத்திரங்களுக்கு ஒதுக்கப்படும் பேசும் நேரம் வாரியாக, திரைப்படத்தின் அல்லது தொடரின் முக்கிய ட்ரெய்லர் ஆய்வு செய்யப்படும் மற்றும் வகைப்படுத்தப்படும். இந்த பரிசோதனை, பெண் கதாபாத்திரங்களுக்கு சொந்தமான பேசும் நேரத்தின் % -ஐ அறிக்கையாக அளிக்கிறது. இந்த பரிசோதனை உள்ளடக்க விஷயங்களை தயாரிப்பாளர்கள் மற்றும் ப்ளாட்ஃபார்ம்கள் எப்படி மார்கெட் செய்வது என்பது குறித்த ஒரு கருத்தை அளிக்கிறது. 73 % ட்ரெய்லர் டாக் டைம் ஆண் கதாபாத்திரங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது, இதன் முடிவுகள் அவர்களுடைய மார்கெட்டிங்கில் ஆண் கண்ணோட்டத்திலிருந்து திரைப்படங்கள் நிலைப்படுத்தப்படுவதாக ஆலோசனை அளிக்கிறது.
முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் டி ஆர் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ.வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாள, கலை இயக்கத்தை உதயா கவனிக்கிறார். ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகளை சக்தி சரவணன் அமைத்திருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இத்திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” 1980களில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை தழுவி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் கதை, கல்லூரியை களமாக கொண்டிருக்கிறது. இப்படத்தில் கல்லூரி மாணவர்களுக்கான அரசியலும் பேசப்பட்டிருக்கிறது. ஜீ.வி. பிரகாஷ் குமாரின் திரையுலக பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும்.” என்றார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் ‘சூர்யா 43’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும் ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் ஐந்து தேசிய விருதுகளை வென்ற கூட்டணி மீண்டும் ‘சூர்யா 43’ படத்தில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
சூர்யா -சுதா கொங்கரா – ஜீ.வி. பிரகாஷ் குமார் என தேசிய விருது பெற்ற கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால், ‘சூர்யா 43’ திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு, அறிவிப்பு வெளியான நிலையிலேயே அதிகரித்திருக்கிறது.
நடிகை மாளவிகா மோகனன் தன் தனித்துவமான அடையாளத்தை திரையில் மட்டும் வெளிப்படுத்தாமல், சமூக வலைதள பக்கங்களிலும் காண்பித்து தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதைத் தொடர்ந்து ‘மாஸ்டர்’, ‘மாறன்’ ஆகிய படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். இவர் திரைப்படங்களில் நடிப்பதுடன் சமூக வலைதள பக்கங்களில் தன்னைப் பின்தொடரும் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களுக்காக பிரத்யேக புகைப்படங்களை பதிவிட்டு அவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார்.
அண்மையில் தன் வசீகரிக்கும் அழகுடன் கூடிய புகைப்படங்களை பதிவிட்டார். அதில் அவருடைய அசத்தலான அழகுடன் கருணை நிரம்பிய பார்வையும் இடம்பெற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மாளவிகா மோகனன் தனக்கான ரசிகர்களை கவர்வதற்கு பிரத்யேக வழியை பின்பற்றி ரசிகர்களை மகிழ்விக்கிறார். அவரது சமீபத்திய புகைப்படங்களில் தன்னுடைய வசீகரமான தோற்றத்தை அவர் பயன்படுத்தும் பாணி வித்தியாசமானதாகவே தெரிகிறது.
இதனிடையே நடிகை மாளவிகா மோகனன், தற்போது இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து ‘தங்கலான்’ எனும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
. Noted Tamil Actor Vikram Prabhu of Kumki fame recommended many youngsters to have regular healthy lifestyle and fitness routines to arrest cardiac complications .Cancer patient wins the first prize for uniquely amplifying heart health through his interesting Instagram reel.
Chennai, October 21, 2023 – Prashanth Hospitals, a leading super-speciality hospital in Chennai, successfully culminated its impactful ‘Save Young Hearts’ 2023 digital campaign, in continuation with the major hit campaign of 2022, designed to raise awareness about cardiac wellness and encourage healthy lifestyles among the youth to prevent cardiac complications and heart attacks. The grand finale event featured distinguished guests and renowned cardiologists from Prashanth Hospitals who delivered key insights on stress management, healthy eating, and lifestyle choices crucial for cardiac well-being. Grandson of the legendary actor Chevalier Sivaji Ganesan and well-known Tamil actor Vikram Prabhu of the national award winning Kumki and Tamil blockbuster Ponniyin Selvan fame, extended his heartfelt congratulations as the event’s chief guest to the award winners and participants of the short video contest, recognizing their outstanding creative contributions in promoting cardiac wellness and encouraging a heart-healthy lifestyle. Prashanth Hospitals’ team of expert cardiologists shared their perspectives on the pressing need to de-stress, adopt a balanced diet, and make positive lifestyle choices to safeguard against cardiac issues. Their insights shed light on the gravity of frequent cardiac arrests among young individuals in recent times. The event included a recognition ceremony for the winners of the short video/reels contest, who have demonstrated exceptional creativity in advocating for cardiac wellness and healthy living. Overall, there were a total of more than 100 entries that innovatively resonated the trending topic on Instagram which aided in creating a mega awareness amongst the targeted audience. The first prize was awarded to a cancer patient Mr. Sivamani Kannan with a handsome cash reward of Rs.1 lakh for brilliantly conveying the intended message by depicting the rising cardiac complications in a smart and impactful manner. The second prize Rs.50,000 was awarded to Mr. Jeevan for creating a compelling video on preventive measures for heart health. Dr. Prashanth Krishna, Managing Director of Prashanth Hospitals, Chennai, emphasized, “Our unwavering commitment is to protect the hearts of our youth and ensure a healthier future. Increased awareness and lifestyle changes are instrumental in preventing heart attacks. Engaging with young individuals and the broader social media community is the key. Through this competition, we aim to convey the message of preventing cardiac arrests and fostering a heart- healthy lifestyle. We are delighted by the overwhelming response to this campaign and the tremendous support from celebrity influencers.”
Addressing the audience on the significance of being aware and alert of cardiac wellness, Senior Cardiologist, Dr. Kathiresan commented “The healthy lifestyle changes should be imbibed right from the school. There should be a continuous campaign for the public by professional organisations and the government. Long term environmental changes are also needed. We must immediately seek medical help when we face even the slightest signs and symptoms of cardiac complications like a heart burn, radiating pain in hands and shoulders, and a sense of discomfort in the heart or breathing. “Prashanth Hospitals’ ‘Save Young Hearts’ digital campaign reached out to a wide audience across various social media platforms, empowering young individuals to take proactive steps in preventing cardiac complications. Given the growing concern of heart disease among the younger generation, the campaign’s mission was to educate, inspire change, and drive the importance of heart health through innovative social media initiatives. The Grand Finale of this campaign was organized at Crest Club, Phoenix Marketcity, Chennai. The “Save Young Hearts Reels Contest” served as a platform for open discussions, creative engagement, and debates focused on preventing the increasing incidents of heart attacks.
கட்டுமானத்துறையில் சுமார் 33 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக பயணித்து வரும் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்களை உருவாக்கி கொடுத்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் கட்டிய வில்லாக்களுக்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததோடு, இந்நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் விரைவில் விற்பனையாகி விடுகிறது.
மேலும், நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நினைவாக்கும் விதத்தில் சென்னை சுற்றுவட்டாரத்தில் குறைந்த விலையில் ’ஒன் ஸ்கொயர்’ (One Square) என்ற பெயரில் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் கட்டி வரும் அடுக்குமாடி குடியிருப்பு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததால் மேல்தட்டு மக்களிடம் மட்டும் இன்றி நடுத்தர மக்களிடமும் இந்நிறுவனம் நம்பிக்கையை பெற்றுள்ளது.
சென்னை தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தங்களது வெற்றிகரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மூலம் தமிழகத்தின் நம்பிக்கைக்குரிய கட்டுமான நிறுவனமாக திகழும் ரூஃப்வெஸ்ட், தற்போது தமிழகத்தை கடந்து ஆந்திராவின் தடா உள்ளிட்ட தமிழகத்தை ஒட்டியுள்ள பிற மாநிலங்களிலும் கால்பதிக்க உள்ளது.
ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் இத்தகைய வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அந்நிறுவன ஊழியர்களை கெளரவிக்கும் விதத்தில், அவர்களை மகிழ்விக்க முடிவு செய்த நிறுவனத்தின் சி.இ.ஓ ஷாம் அவர்கள், ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் வழக்கமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்களோடு, அவர்களை சர்ப்பிரைஸ்ப்படுத்தும் விதமாக, ஊழியர்கள் மற்றும் குடும்பத்தாரை சமீபத்தில் வெளியான விஜயின் ‘லியோ’ திரைப்படத்தை பார்க்க வைத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், திரிஷா நடிப்பில் மிகப்பெரிய் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லியோ’ திரைப்படத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க விரும்புகிறார்கள். குறிப்பாக, விடுமுறை நாட்களில், டிக்கெட் கிடைக்காத நிலையில், தங்களது ஊழியர்களின் விருப்பம் அறிந்து அவர்களுக்கே தெரியாமல், இத்தகைய ஏற்பாட்டை ரூஃப்வெஸ்ட் நிறுவனம் செய்திருக்கிறது. அந்த வகையில், ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் அவர்களது குடும்பத்துடன் விஜயின் ‘லியோ’ திரைப்படத்தை பார்க்க வைத்து உற்சாகப்படுத்தியுள்ளனர்.
ஒரு திரைப்படம் பார்ப்பது சாதாரணமான நிகழ்வாக இருந்தாலும், தற்போதைய விடுமுறை நாளில், இதுபோன்ற ஒரு நிகழ்வை உருவாக்கி கொடுத்து ஊழியர்களை உற்சாகப்படுத்தியிருக்கும் ரூஃப்வெஸ்ட் நிறுவனம், எதிர்காலத்தில் ஊழியர்களுக்காக பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறது.
அந்த திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ள ரூஃப்வெஸ்ட், தங்களது தரத்தால் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவது போல், தங்களது ஊழியர்களையும் குஷிப்படுத்துவதை தங்களது நோக்கமாக கொண்டு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.