“கெணத்த காணோம்” திரை விமர்சனம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமம் அந்த கிராமத்தில் குடிதண்ணீருக்கே அல்லல் படும் மக்கள்கள்.
அந்த ஊரில் கோவில் பூஜாளியாக யோகி பாபு அவர் ஒரு சிலை வடிக்கும் சிற்பியும் கூட அவருக்கு பக்கத்து ஊரை சேர்ந்த லெவலின் சந்திரசேகரை காதலிக்கிறார் இந்த சூழ்நிலையில் ஊர் மக்கள் தண்ணீரைக்காக கலெக்டர் முதற்கொண்டு பலருக்கும் மனு கொடுத்து பல்வேறு முயற்சி செய்கிறார்கள் அதில் கிணறு வெட்ட அரசாங்கம் பணம் ஒதுக்குகிறது அந்த பணத்தை வைத்து நீரூற்றைத் தேட அந்த நீரூற்று யோகி பாபுவின் வீட்டு வாசலில் இருக்க அங்கு போர் போடலாம் என்று முடிவு செய்யும் போது யோகி பாபுவின் தாத்தா, அதெல்லாம் முடியாது எங்க கிணறுதான் வெட்ட வேண்டும் என்று கூறுகிறார்.
அவ்வாறு கிணறு வெட்ட பூதம் கிளம்பும் கதையாக அந்த கிணற்றுக்குள் ஏதோ ஒரு மிகப்பெரிய மிருகத்தின் எலும்பு படிவம் இருக்கிறது எனவே அந்த இடத்தை தொல்லியல் துறை கைப்பற்றுகிறது அவர்கள் நடத்தும் அராஜகம் அந்த ஊர் மக்களை அடித்து விரட்டி விட்டு அந்த ஊரை முழுவதுமாக தோண்டி எடுக்க முயற்சி செய்ய யோகி பாபு ஊர் மக்களும் போராடுகிறார்கள் அந்த போராட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? அந்த ஊருக்கு தண்ணீர் வந்ததா என்பது தான் படத்தின் திரைக்கதை
வழக்கம்போல யோகி பாபுவை தவிர மற்றவர்கள் எல்லோரும் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் யோகிபாபுவுக்கு வழக்கமான நடிப்புதான் அதுவும் போர் அடித்து அந்த நடிப்புதான் ஒரே மாடுலேஷனில் யாரையும் மரியாதை இல்லாமல் பேசுவது இதுதான் அவரது பாடி லாங்குவேஜ்.
படத்தின் திரைக்கதை காண கதைக்களம் மிகவும் அருமையாக தேர்ந்தெடுத்து இருக்கிறார் இயக்குனர் மேலும் இந்த கதையில் அவர் எடுத்திருக்கும் விதம் என்னதான் நமது வரலாறை உலக கொண்டு வந்தாலும் நிகழ்காலத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வாரதாரத்தை பாதிக்காமல் அதைத் தேட வேண்டும் என்பதை கூற நினைத்து இருக்கிறார் இயக்குனர் இதில் நடக்கும் தில்லுமுல்லுகளையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.
மிகப்பெரிய சோகம் என்னவெனில் இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் கடைசி படம் படம் முடித்து சில நாட்களிலேயே அவர் இறந்துவிட இந்த படம் இப்பொழுது திரைக்கு வந்திருக்கிறது

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *