
திருமணம் நடந்து மூன்று மாதங்களான கதாநாயகன் ஹரி கிருஷ்ணனுடன் மற்றும் மனைவி கதாநாயகி லிஜோமோல் ஜோஸ், இருவரும் சென்னையில் உள்ள அப்பார்ட்மெண்டில் வாழ்ந்து வரும் நிலையில் மனைவி கதாநாயகி லிஜோமோல் ஜோஸ், மீது கதாநாயகன் ஹரி கிருஷ்ணன் அளவுக்கு அதிகமான பாசத்தோடு இருக்கிறார் என நினைக்கும் போது, தனது கணவர் கதாநாயகன் ஹரி கிருஷ்ணனின் செல்போன் மூலம் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரிய வருகிறது.
தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தவுடன் கடும் கோபமடையும் கதாநாயகி லிஜோமோல் ஜோஸ், கணவர் கதாநாயகன் ஹரி கிருஷ்ணனை கொலை செய்து விடுகிறார்.
இரத்த வெள்ளத்தில் கணவர் கதாநாயகன் ஹரி கிருஷ்ணன் இறந்ததை பார்த்து பயமில்லாமலும் கொஞ்சம் கூட களங்கம் இல்லாமலும், கணவர் கதாநாயகன் ஹரி கிருஷ்ணனின் உடலை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்துவிட்டு, சர்வசாதாரணமாக தனது வேலையை பார்க்க தொடங்கி விடுகிறார்.
இதற்கிடையே, கதாநாயகன் ஹரி கிருஷ்ணனை காணவில்லை என அவருடைய காதலி மற்றொரு கதாநாயகி லஸ்லியா காவல்துறையில் புகார் ஒன்றை கொடுக்கிறார்.
மற்றொரு கதாநாயகி லஸ்லியா கொடுத்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்குகின்றனர்.
இந்த நிலையில் தனது கணவர் கதாநாயகன் ஹரி கிருஷ்ணனை கொலை செய்துவிட்டு மிக சர்வ சாதாரணமாகவும் மிக சகஜமாகவும் உலா வரும் கதாநாயகி லிஜோமோல் ஜோஸ் காவல்துறையிடம் இருந்து தப்பித்தாரா? தப்பிக்கவில்லையா?
காவல்துறையினர் கதாநாயகன் ஹரி கிருஷ்ணனை கண்டுபிடித்தார்களா?, கண்டுபிடிக்கவில்லையா?
என்பதுதான் இந்த ‘ஜென்டில்வுமன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஜென்டில் உமன் திரைப்படத்தில் கதையின் நாயகியாக லிஜோமோல் ஜோஸ், நடித்திருக்கிறார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ், தனது கணவன் செய்த மிகப்பெரிய துரோகத்தை அறிந்து சாதாரண பெண் போல் கலங்கினாலும், அடுத்த கணமே சற்றும் எதிர்ப்பார்க்காத விதமாக மிகப்பெரிய அளவில் ஒரு முடிவு எடுத்து அதை செய்து திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களை பதற வைத்துவிடுகிறார்.
தன் கணவனை கொலை செய்து உடலை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்துவிட்டு எந்த ஒரு பதட்டத்தையும் வெளிக்காட்டாமல் ஒவ்வொரு நாட்களையும் கடந்து செல்வது திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், அதை நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறார்.
இந்த ஜென்டில்வுமன் திரைப்படத்தில் கதாநாயகனாக ஹரி கிருஷ்ணன் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஹரி கிருஷ்ணன், கடவுள் மீது அதிக பக்தி, நெற்றியில் பட்டை என்று நல்லவனாக இருந்தாலும், பெண்கள் விசயத்தில், பசுந்தோல் போத்திய பன்னாடை எனக் கூறும் அளவுக்கு பெண் பித்தனா வலம் வந்திருக்கிறார்.
இந்த ஜென்டில்வுமன் திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக லாஸ்லியா நடித்திருக்கிறார்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா, தன் கதை பத்திரத்தை விழுந்து மிகச் சரியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகி லிஜோமோல் ஜோஸின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தாரணி, காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜிவ் காந்தி, காவல்துறை இணை ஆணையராக நடித்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சுதேஷ், காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வைரபாலன் என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ் காத்தவராயன், அப்பார்ட்மெண்ட் க்குள் வைத்தே பல காட்சிகளை திரைப்படமாக்கியிருந்தாலும், கதாபாத்திரங்களின் மன போராட்டங்களை திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்கள் மனதில் பதியும் அளவிற்கு காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் சிறப்பு பின்னணி இசை கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் மிகச் சிறப்பாக பயணித்திருக்கிறார்.
பெண்கள் எந்த நிலைக்கு சென்றாலும், அவர்களை ஆண்கள் தங்களுக்கு கீழே தான் வைத்திருக்கிறார்கள், உள்ளிட்ட வசனங்கள் மூலம் பெண்ணியம் பேசினாலும், அதை கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் சேர்த்து கமர்ஷியலாக மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன்,