
தஞ்சை மாவட்டம் அருகில் அந்த ஒரு அழகிய கிராமத்தில் மேல் ஜாதியும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் சிலர், பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பவர்களை கீழ் ஜாதியும் என்று எண்ணி அவர்களை எடுபிடி வேலைக்கு வைத்துக் கொள்வது அக்கிராமத்தில் பழக்கமாக இருந்து வருகிறது.
அந்த கிராமத்தின் முன்னாள் ஊர் தலைவர் மற்றும் கோவில் தர்மகர்த்தாவாக இருந்த, தனது மகன் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் தன்னால் அந்த கிராமத்தில் தலைநிமிர்ந்து நடக்க முடியவில்லை என்று எண்ணி வருந்தி கொண்டிருக்கிறார்.
அந்த கிராமத்தில் தலைவராக இருக்கும் ராஜூ ராஜப்பன். அவருடைய மனைவி கீதா கைலாசம். இவர்களுக்கு ஒரு மகள் கதாநாயகி ரூபா கொடுவாயூர் ஒரு மகன் சுபாஷ் ராமசாமி இருக்கிறார்கள்.
சிறு வயது முதலே அவ்வப்போது மூச்சு விடுவதில் சிரமம் இருந்து வருகிறது கதாநாயகி ரூபா கொடுவாயூர். இதனால், இவர் சுவாச மருந்தை எடுத்துக் கொண்டு வருகிறார்.
ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன்.
மகன் சுபாஷ் ராமசாமிக்கு திருமணம் முடிந்து அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன்.
மகன் சுபாஷ் ராமசாமி மற்றும் நண்பர்கள் சேர்ந்து ஊர் கோவிலில் இருக்கும் சாமியின் கிரீடத்தைத் திருடி தொழில் தொடங்கி, அந்த தொழிலும் நஷ்டத்தில் முடிந்து விடுகிறது.
இன்னும் இரு வாரத்தில் ஊர்த் திருவிழா நடைபெற இருப்பதால் ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன்.
மகன் சுபாஷ் ராமசாமிக்கு அவருடைய நண்பர்களும் அடமானம் வைத்த ஊர் கோவிலில் இருந்து எடுத்த சாமியின் கிரீடத்தைத் எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தநிலையில், கடும் கோபத்துடன் வீட்டிற்கு வரும் ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன் தனது மனைவியுடன் சண்டை போட்டு அவரை கைநீட்டி அடித்து விட
அம்மாவை எதற்காக அடித்தீர்கள்.? என்று கேள்வியெழுப்ப ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன் கதாநாயகி ரூபா கொடுவாயூரை அடித்து விடுகிறார்.
இதனால், மனம் உடைந்த
கதாநாயகி கதாநாயகி ருபா கொடுவாயூர் அழுது கொண்ட தனது ரூமிற்கு சென்று விடுகிறார்.
இதனை தொடர்ந்து நடு இரவில் எழுந்த அம்மா கீதா கைலாசம், தனது மகள் ரூமுக்கு செல்ல அங்கு மகள் கதாநாயகி ருபா கொடுவாயூர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததைக் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.
கதாநாயகி ருபா கொடுவாயூர்
தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் நம் கிராமத்திற்கு தெரிந்தால், குடும்ப கெளரவம் மற்றும் மனம் போய்விடும் மூச்சுத் திணறலால் கதாநாயகி ருபா கொடுவாயூர் இறந்து விட்டதாக குடும்பத்தினர் கூறிவிடுகின்றனர்.
கதாநாயகி ருபா கொடுவாயூர் இறந்துவிட்ட செய்தியறிந்து அந்த கிராமமே துக்கத்தில் மூழ்கி விடுகிறது.
இந்த நிலையில், இறுதி சடங்கு நடத்துவதற்காக கதாநாயகி ருபா கொடுவாயூர் உடலை கிராமத்துஇளைஞர்கள் சிலர் தூக்க முயல, இறந்த உடல் கனக்க, அவர்களால் அந்த உடலை தூக்க முடியவில்லை.
இருந்த உடல் அசைவதைக் கண்டு இளைஞர்கள் அனைவரும் பயந்து ஓடுகின்றனர்.
கதாநாயகி ருபா கொடுவாயூர் உடலை வீட்டை விட்டு வெளியே எடுத்துச் செல்ல முடியாத அளவிற்கு தடுத்து நிறுத்தும் அமானுஷ்ய சக்தி யார்? கதாநாயகி ருபா கொடுவாயூர் தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டாரா.? வேறு யாராவது கொலை செய்து தூக்கில் மாட்டி விட்டார்களா? என்பது தான் இந்த எமகாதகி திரைப்படத்தின் மீதிக்கதை
இந்த “எமகாதகி” திரைப்படத்தில் கதாநாயகனாக நரேந்திர பிரசாத், நடித்திருக்கிறார்
அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நரேந்திர பிரசாத்,
மிகவும் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
அறிமுக நடிகராக நரேந்திர பிரசாத் மிக அருமையாக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்ததால் நம்மால் ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது.
இந்த எமகாதகி திரைப்படத்தில் கதாநாயகியாக ரூபா கொடுவாயூர் நடித்துள்ளார்.
காதல், அழுகை, கோபம், குறும்புத்தனம் என பல காட்சிகளில் தனது முக பாவனைகளை மிக அழகான நடிப்பை கொடுத்து லீலா கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
அதிலும், பிணமாக இருக்கும் காட்சியில் அழகாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.
கதாநாயகி ரூபா கொடுவாயூர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம், அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுபாஷ் ராமசாமியும் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜூ ராஜப்பன் ஊர் தலைவர் கதாபாத்திரத்தில் மிக அருமையாக பொருந்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுமே மிகவும் இயல்பாகவே தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்து முடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்க் இவரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் ஜெசின் ஜார்ஜின் இசையில் மூன்று பாடல்களும் அருமை பின்னணி இசை கதையோடு பயணிக்க வைத்திருக்கிறார்.
தமிழ் திரைப்பட உலகில் வித்தியாசமான கதைகளத்துடன் அனைவரும் திரும்பி பார்க்கும்படியான ஒரு படைப்பு படைத்திருக்கிறார் இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜயசீலன்.