“அந்தரன்”திரை விமர்சனம்

இவானா வருண் எப்போதெல்லாம் திருமணம் நிச்சயமாகிறதோ, அப்போதெல்லாம் மாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழக்கிறான். இதனால் தனக்கு ஏதோ துரதிர்ஷ்டம் இருப்பதாக பயந்து, திருமணம் செய்ய அஞ்சுகிறாள்.இந்த விசித்திரமான வழக்கைப் புலனாய்வு செய்ய ஐபிஎஸ் அதிகாரி பிரஜின் வழக்கின் பின்னணியை தேடிச் செல்லும்போது, அவரேஇவானா வருண் மேல் காதலில் விழுகிறார். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அதற்குப் பின் பிரஜினின் உயிருக்கு ஆபத்து வந்ததா? அந்த மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் கொலையாளி யார்? அவர் கண்டுபிடிக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மை என்ன? என்பதே மீதிக்கதை.


செழியனாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரஜின் ஒரு கம்பீரமான, நேர்மையான போலீஸ் அதிகாரியாக அமைதியான நடிப்பு படத்திற்குப் பெரிய பலம்.


இவானா வருண் கார்த்திகாவாக அறிமுக நாயகியாக இருந்தாலும், கதாபாத்திரத்தை நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். தன்னைச் சுற்றி நடக்கும் மரணங்களால் ஏற்படும் பயம், மன உளைச்சல் காதல் எனப் உணர்ச்சிகளை தனது கண்கள் மூலமாகவேவெளிப்படுத்தியுள்ளார்.


ஒரு சைக்காலஜிக்கல் சஸ்பென்ஸ் கதையைத் தேர்ந்தெடுத்து, அதை இறுதிவரை தொய்வில்லாமல் கொண்டு சென்றதில் இயக்குனர் சந்தோஷ் ராவணன் வெற்றி பெற்றுள்ளார்


‘அந்தரன்’.அந்த விசித்திரமான மரணங்களின் பின்னணியில்நல்ல சைக்காலஜிக்கல் த்ரில்லராக உருவெடுத்துள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *