
சென்னையில் ஒரே இடத்தில் வசிக்கும் மூன்று நண்பர்கள் அதில் ஒருவன் ஆன்மீகத்தை நோக்கி செல்ல நினைக்கிறான் மற்ற இருவரும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க ஜாலியாக இருக்க நினைக்கிறார்கள் இதே நேரத்தில் ஒரு கிராமத்தில் வாழும்ஒரு பெண் தாய் தந்தை இல்லாமல் தனது தாத்தாவுடன் வாழ்ந்து வருகிறார்.
அந்த நேரத்தில் ஆன்மீகத்தை தேடி வரும் நாயகன் அவர்கள் இருக்கும் இடத்தை வரும் பொழுது பசிய மயக்கத்தில் பாறையில் இருந்து விழுந்துதலையில் அடிபட்டு சுயநினைவை இழக்கிறான் அவர்களை காப்பாற்றும் தாத்தாவும் பேத்தியும் அவன் நார்மல் நிலைக்கு வரும் பொழுது அந்த பெண்ணை காதலிக்க தொடங்குகிறான்.ஒரு கட்டத்தில் தாத்தா ஒரு சொத்து பிரச்சனையில் அவர்கள் உறவினர்களாக கொல்லப்பட இந்த பெண்ணையும் கொலை செய்ய தேடுகிறார்கள் இந்த சூழலில் நாயகன் அவர்களை காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வருகிறான்.சென்னைக்கு வரும் அவன் அந்த பெண்ணின் மேல் உள்ள காதலில் தன் நண்பர்களை சந்தேகப்பட்டு அந்த சந்தேகம் ஒரு கொலையிலும் சென்று முடிகிறது இந்த நிலையில் அந்த இடத்தில் இருந்து வெளியேறும் நாயகி தனது சிறு வயது காதலனை கரம் பிடிக்கிறாள் இதுதான் தெரிஞ்சா காதலியே என்னும் திரைப்படத்தின் கதை.
திரைப்படத்தில்உங்கள் அனைவருமே புதுமுகம் என்பதால் அனைவருக்கும் நடிப்பு சற்று சிரமமாகத்தான் வருகிறது இருந்தாலும் கதைக்கான களம் அந்த கிராமத்து சூழ்நிலை மிகவும் அருமையாக அமைந்துள்ளது ஆனால் அதற்கு ஏற்றார் போல் திரைக்கதை கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருந்தால் நிச்சயம் தெரிஞ்சா காதலுங்க படம் பார்க்கிற மாதிரி இருந்திருக்கும்

