
சென்னையின் மிகப்பெரிய பிசினஸ்மேன் சத்யராஜ் அவரது ஒரே மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணமே வேண்டாம் என்று இருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள மதுரைக்கு சாலை வழியே காரில் செல்கிறார் செல்லும் வழியில் நிரஞ்சன் லெஃப்ட் கேட் ஏறிக்கொள்ள இருவரும் பயணப்படுகிறார்கள் வழியில் அவர்கள் பார்க்கும் சம்பவம் நிகழ்வுகள் இந்த நிகழ்வுகளால் அவர் சேர வேண்டிய இடத்திற்கு சில நொடிகள் தாமதமாக செல்ல அந்த தாமதம் அவரது உயிரை காப்பாற்றுகிறது அவர் செல்ல வேண்டிய இடம் வெடித்து அனைவரும் இறந்து விட இவர் அந்த ஒரு சில நொடிகள் தாமதத்தால் தப்பிக்கிறார்
அவ்வாறு தப்பிக்கும் அவர் தான் வந்த வழியில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு ஒரு சம்பவத்தால் சில நொடிகள் தாமதமாக அந்த தாமதம் தான் தனது உயிரை காப்பாற்றியதாக நினைத்து அவர்களுக்கு நேரில் சென்று நன்றி சொல்ல செல்கிறார் இதற்கு இடையில் நிரஞ்சன் உடன் ஒரு காதல் நிறைந்தவரின் குடும்பத்தாருடன் நெருங்கி பழக அவர்கள் குடும்பத்தையும் பிடித்து போகிறது இவ்வாறு அவர்களது பயணத்தில் அனைவரையும் சென்று நன்றி சொன்னாரா? நிரஞ்சனுக்கும் ஐஸ்வர்யா அர்ஜுனுக்குமான காதல் நிறைவேறியதா என்பதுதான் இந்த சீதா பயணம்.
இந்த சீதாப்பயணம் திரைப்படத்தை ஆக்சன் கிங் அர்ஜுன் கதை திரைக்கதை இயக்கம் செய்திருக்கிறார் தயாரித்தும் இருக்கிறார் தன் மகளுக்காக மேலும் இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலும் செய்து இருக்கிறார்.
படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நிரஞ்சனி நடிப்பு ஓரளவுக்கு கதையுடன் பொருந்தி போகிறது மேலும் இந்த படத்தில் குரு சார்ஜா ஒரு கெஸ்ட் ரோலும் பிரகாஷ்ராஜ் நாயகனின் தாத்தாவாகவும் கோவை சரளா ஒரு ஹோட்டல் வைத்திருக்கும் பெண்மணியாகவும் மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள் அனைவருக்கும் ஒரு சிறு கதைகளை இயக்குனர் தந்திருக்கிறார் அந்த கதைகள் இந்த படத்தின் திரைக்கதையை இணைக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு ஏற்றவாறு செல்கிறது.
என்னதான் அர்ஜுன் தன் மகளுக்காக இந்த படத்தை எழுதியிருந்தாலும் முதல் பாதையில் சற்றே தலை தொடங்குகிறது நமக்கு கதையில் விறுவிறுப்பு இல்லாமல் மிகவும் ஸ்லோவாக செல்கிறது இரண்டாம் பாதியில் அதை நிவர்த்தி செய்து வருகிறார்.
இயக்குனர் அர்ஜுன் முதல்பாதியில் இன்னும் சிறப்பாக செய்திருந்தால் இரண்டாம் பாதி மனதில் நிச்சயம் நீங்காத பயணமாக அமைந்திருக்கும் இந்த “சீதா பயணம்”

