Breaking
March 7, 2026

“சிறை” திரை விமர்சனம்

சிவகங்கை மாவட்டத்தில் சார்ந்த கொலை வழக்கு ஒன்றில் விசாரணை கைதியாக வேலூர் மத்திய சிறையில் பல வருடங்களாக இருக்கும் எல்.கே.அக்‌ஷய் குமாரை, சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு விக்ரம் பிரபு தலைமையிலான காவலர் குழுவுக்கு வழங்கப்படுகிறது. போகும் வழியில் காவலர்கள் சில பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள , அதன் மூலம் கைதி அக்‌ஷய் குமாரை தொலைத்து விடுகிறார்கள். போலீஸ் துப்பாக்கியுடன் அவர்களிடம் இருந்து தப்பித்த அக்‌ஷய் குமார் மீண்டும் பிடிபட்டாரா ?, கொலை குற்றவாளியான அவரது பின்னணி

என்ன ?, அவர் யாரை எதற்காக கொலை செய்தார்? , இதனால் விக்ரம் பிரபு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன ?

தனது தாயை அடித்தவனை தள்ளி விடும் போது அது கொலையாக மாறுகிறது. இந்த உண்மை சம்பவத்தை விறுவிறுப்பாகவும் உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்வது தான் “சிறை”. கதைக்களம்.
ஒரு நடிகர் என்பதை தாண்டி, ஒரு காவலராக பார்வையாளர்கள் மனதுக்குள் விக்ரம் பிரபு பதிந்து விடுகிறார். மற்றொரு நாயகனாக நடித்திருக்கிறார் அறிமுக இளம் நடிகர் எல்.கே.அக்‌ஷய் குமார்நாயகியாக நடித்திருக்கிறார் அனிஷ்மா அனில்குமார்

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தமிழ் எழுதிய கதை சாதாரணமாக இருந்தாலும், அதை தனது திரைக்கதை மற்றும் இயக்கம் மூலம் மிக வலிமையான படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி.

Related Post