ரேட்டிங் 4/5

நடிகர் தனுஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் இட்லி கடை.
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து பிழைப்புக்காக வெளிநாடுகளுக்கோ, நகரங்களுக்கோ புலம் பெயர்ந்து வாழும் மக்கள் ஏதோ ஒரு சூழ்நிலையில் தாங்கள் வாழ்ந்த மண்ணையும் அந்த மண்ணின் அடையாளத்தையும் மறக்க முடியாமல் அந்த நினைவுகளில் இருப்பவர்களுக்கு ஓர் இனிய நினைவாக இயக்கியிருக்கிறார் நடிகர் தனுஷ்.
ஒரு கிராமத்தில் இட்லி கடை வைத்து நடத்தும் ராஜ்கிரன், அவருடைய மகன் தனுஷ் கேட்டரிங் படித்துவிட்டு வெளிநாட்டில் சத்யராஜ் நடக்கும் மிகப் பெரிய ஹோட்டலில் வேலை செய்கிறார் ஒரு பெரிய பதவியில் இருக்கிறார்.அவருக்கு சத்யராஜ் தன் மகளை திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது அவ்வாறு இருக்கும் போது ராஜ்கிரண் இறந்துவிட தன் சொந்த ஊருக்கு வருகிறார் தந்தையின் இறுதிச் சடங்குக்காக, ஆனால் அங்கு தந்தையைத் தொடர்ந்து தனது தாயும் இறந்து விட, தந்தை தனக்கு சிறுவயதில் சொல்லிக் கொடுத்த விஷயங்களும், அவருடைய ஹோட்டலும் அதாவது இட்லி கடை அந்த கடை அந்த ஊரின் அடையாளமாக எவ்வாறு மாறியது என்பது நினைவுக்கு வர அங்கேயே தங்கிவிட முடிவு செய்கிறார்.
இதற்கிடையே சத்யராஜின் மகனான அருண் விஜய்க்கும் இவருக்கும் ஒரு ஈகோவில் எப்பொழுதும் ஒரு முரண்பாடு இருந்து கொண்டே இருக்கிறது. தன் தங்கையின் திருமணம் நின்று விட்ட கோபத்திலும் தனுஷ் தன்னிடம் வேலை செய்யும் ஒருவன் அவனுக்காக நாம் காத்திருக்க வேண்டுமா என்ற கோபத்திலும் வெளிநாட்டில் இருந்து வந்து தனுஷை வம்பு இழுத்து அடித்து இழுத்துப் போக நினைக்கிறார். அங்கு நடக்கும் சண்டையை தனுஷ் அவரை அடித்து விடுகிறார் அந்த கோபத்தில் தனுஷை எப்படியாவது பழி வாங்க நினைக்கிறார். இதற்கிடையே தனுஷிற்கு நித்தியாமேனன் மீது காதல், இதுவும் தன் தங்கையின் திருமணம் நின்று போன ஒரு கோபமும் சத்யராஜ் , மகனான அருண் தனுசை எவ்வாறு சித்திரவதை செய்கிறார்கள் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தார் என்பதுதான் கதை.
இந்த படத்தில் ராஜ்கிரண் அடிக்கடி சொல்லும் விஷயம் சண்டை போடக்கூடாது அகிம்சையே சிறந்தது என்று சொல்லி வளர்க்கிறார் .அதன்படியே இடைவேளையில் தனுஷ் அருன் விஜயைஅடிக்க மீண்டும் எப்படியும் அருண் விஜய் தனுஷை அடிப்பார் ஆனால் தனுஷ் அகிம்சை மூலம் எவ்வாறு செல்கிறார் என்பது நமக்கு தெரிந்தாலும் அதை சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது.
மேலும் இந்தப் படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் சமுத்திரகனி ஆகட்டும் பார்த்திபனாகட்டும், இளவரசாகட்டும், சத்யராஜ் ஆகட்டும், அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்கள் சிறப்பு .நம் கண் முன்னே வாழ்ந்த சிலரை நமக்கு நினைவு படுத்துகிறது அந்த வகையில் தனுஷ் ஒரு சிறந்த இயக்குனராக நிமிர்ந்து நிற்கிறார்.
நித்யா மேனன் தனக்கே வழக்கமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கோபம் ஆகட்டும் ,காதல் ஆகட்டும், சந்தோஷமாக, அனைத்திற்கும் ஒவ்வொரு விதமான ரியாக்சன் கொடுத்து அருமையாக நடித்திருக்கிறார்.
ஜி வி பிரகாஷ் இசை சில இடங்களில் தான் என்று நிரூபித்து விட்டார்.
ஒளிப்பதிவு வழக்கம்போல கிராமத்தின் அழகை எதார்த்தமாக காட்டியிருக்கிறார்கள்
நிச்சயம் இட்லி கடை இந்த மாதிரி கடைகளில் வாழும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறது

