
நீதியை நிலைநாட்ட சட்டத்தை தன் கையில் எடுக்கும் ஒரு காவல் அதிகாரியின் கதையும், அதே நேரத்தில் தன் மகனை தொலைத்து விட்டு காணாமல் தேடும் ஒரு தந்தையின் தவிப்பையும், ஒரே இடத்தில் ஒரு சேர நடப்பது போல் அமைந்திருக்கும் கதை தான் ரைட்.
காவல்துறை அதிகாரியாக நட்டி என்னும் நடராஜ் தான் கைது செய்யும் நான்கு அரசியல்வாதியின் மகன்களை தனது செல்வாக்கினால் ஒருவன் வெளியில் கொண்டு செல்கிறான். அதே நேரத்தில் அருண்பாண்டியன் தன் மகன் காணாமல் போக அதே காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருகிறார். அந்த நேரத்தில் நட்டி பிரதமர் வருகையினால் இருக்கும் பாதுகாப்பிற்கு சென்று விடுகிறார் .அந்த நேரத்தில் காவல் நிலையத்தில் இருக்கும் காவலர்கள் அருண்பாண்டியனின் புகாரை மதிக்காமல் அலட்சியப்படுத்துகிறார்கள் எனவே மீண்டும் மீண்டும் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு நடக்கிறார் அருண் பாண்டியன். அந்த நேரத்தில் அந்த காவல் நிலையத்தில் ரைட்டர் அமரும் சேரில் வெடிகுண்டை வைத்து அவர் எழுந்தால் வெடித்துவிடும் என்று மிரட்டுகிறான் ஒருவன். அந்த மிரட்டலில் பலர் பனைய கைதிகளாக மாற அதில் ஒரு நீதிபதியும் மாட்டுகிறார், அந்த காவல் நிலையம் கோர்ட் ஆகிறது, அந்த இடத்தில் என்ன நடக்கிறது அந்த பாம்பை எடுத்தார்களா அந்த ஸ்டேஷனில் உள்ளவர்கள் தப்பித்தார்களா என்பதை ஒரே இடத்தில் ஒரே நாளில் நடக்கும் பரபரப்பு கதையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர்.
இந்தப் படத்தில் கைகள் கட்டப்பட்ட நேர்மையான காவல் அதிகாரியாக நடராஜ் நடிப்பில் தேறியிருக்கிறார் ,தன்னுடைய மகள் பாலியல் வன்கொடுமைக்கு பலியாக அதற்கு எடுக்கும் ரிவஞ்சல் காவல் அதிகாரியாக நிமிர்ந்து நிற்கிறார் நட்ராஜ்.
மகனை காணாமல் பரிதவிக்கும் தந்தையாக அருண்பாண்டியன் நடிப்பில் எதார்த்தத்தை தருகிறார்
மேலும் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் தங்கள் பாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள், நீதிபதியாக வரும் வினோதினி தன் நடிப்பை எதார்த்தமாக வழங்கி இருக்கிறார்,
மிகப்பெரிய கதையாக யோசித்து ஒரே இடத்தில் சிக்கனமாக படம் முடிப்பதில் இயக்குனர் ரைட்டாக நிற்கிறார்

