Breaking
March 7, 2026

“மாரீசன்” திரைவிமர்சனம்

சின்ன சின்ன திருட்டுகளில் அடிக்கடி சிறைக்குச் செல்லும் தயாளன் என்னும் பகத் பாசில் ஒருநாள் சிறையில் இருந்து வெளியில் வருந்து ஒரு வண்டியை திருடிக் கொண்டு செல்லும் அவன், ஒரு வீட்டில் திருடன் திட்டமிடுகிறான் அந்த வீட்டிற்குள் சென்று திருடும்பொழுது அந்த வீட்டில் அல்சைமர் என்னும் நினைவு இழப்பு நோயால் பாதிக்கப்பட்டு வேலாயுதம் பிள்ளை எனப்படும் வடிவேலு அங்கு சங்கலியால் கட்டி வைக்கப்பட்டு இருக்கிறார்.

அவரிடம் வடிவேலு என்னை காப்பாற்றினால் உனக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக பேரம் பேசுகிறார். பணம் கிடைக்கிறது என்பதால் வடிவேலுவை அவரும் விடுவித்து கூட்டி செல்க, ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது வடிவேலின் அக்கவுண்டில் 25 லட்சம் இருப்பதைபார்க்கும் பகத் பாஸில் அதை எப்படியாவது திருடன் நினைக்கிறார்.

அல்சைமரல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வடிவேலு அடிக்கடி அனைத்தையும் மறந்து விடுகிறார், தான் செல்லும் ஊரே மறந்து விடுவார் ஒரு தடவை திருவண்ணாமலை என்கிறார் அதை பிறகு பாலக்காடு என்கிற இப்படி தனக்கு வாயில் வந்த ஊர் பெயர் எல்லாம் சொல்லும் வடிவேலு அவரை நம்பி பகத் பாசில் இருவரும் பயணப்படுகிறார்கள்.

வழியில் பகத் பசில் 25 லட்சம் திருடினாரா? அல்லது வடிவேலு ஏமாற்றப்பட்டாரா? என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை
இந்த படத்தில் முக்கிய நாயகர்களுக்காக வடிவேலு மட்டும் பகத் பாஸில் வடிவேலுக்கு அல்சைமர் நோய் இருக்கும் என்பதை காட்டும் இயக்குனர் ஆரம்பத்திலேயே அவர் நடிக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது அந்த அளவிற்கு திரை கதையில் தெளிவாக எழுதி இருக்கிறார். மேலும் இவர்கள் பயணப்படும் பொழுது இவர்கள் இருவரும் மட்டுமே சுமார் ஒன்றரை மணி நேரம் பயணப்பட்டு இடைவேளைக்கு முன் ஒரு மூன்று பேர் இறந்து கிடப்பதாக திடீரென காட்டுகிறார்கள். அது காட்டும்போதே தெரிந்து விட்டது அதை செய்ததெல்லாம் வடிவேலு தான் என்று இனி அவர் வேறு யாரையோ ஒருவர் கொலை செய்யத்தான் இரண்டாம் பாகத்தில் பயணப்பட போகிறார் என்பதும் தெரியும்.

அந்தப் பயணத்தில் பகத் பாஸில் திருடனாக இருந்து திருந்தி அந்த நான்காவது நபரை இவர்தான் கொலை செய்வார் என்பது ஆரம்பித்த உடனே நம்மால் யுகம் செய்ய முடிகிறது இந்த அளவுக்கு ஒரு எந்த சஸ்பென்சும் இல்லாமல் ஒரு சஸ்பென்ஸ் கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர். மேலும் இந்த படத்தில் இந்த கொலைகளை ஏன் வடிவேலு செய்கிறார் என்பதற்கு ஒரு வலுவான காரணம் இருந்தும் அது நம்மை ஒரு நிமிடம் கூட கண்கலங்க வைக்கவில்லை, ஒரு நெருடலை ஏற்படுத்தவில்லை, அந்த காட்சிகள் முக்கியமாக ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகம் விஷயத்தை அவருடைய தாய் கூறும் போது ஏதோ டயலாக்கை மனப்பாடம் செய்து பள்ளியில் ஒப்படைக்கும் ஒரு மாணவியை போல் கேமராவை பார்த்து ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார். அவர் மகள் இறந்துவிட்டாள் என்ற ஒரு துளி கவலையும் அந்த முகத்தில் காட்டவில்லை இந்த மாதிரியான ஒரு விஷயம் இந்த படம் சொதப்பலுக்கு காரணமாக இருக்கிறது.

இந்த படம் முழுக்க முழுக்க வடிவேலு மட்டும் பகத் பாசிலை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது இருவரும் நடிப்பில் மிகப்பெரிய அரக்கர்கள் ஆனால் அந்த அரக்கத் தன்மையை திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார்கள்.

ஒளிப்பதிவு அருமை அவர்கள் செல்லும் பயணத்தை மிகவும் அருமையாக காட்டுகிறது இது ஒன்று மட்டும் தான் இந்த படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறது.

மாரீசன் அந்த கதாபாத்திரத்தின் பெயரில் இருக்கும் சூட்சுமம் திரைக்கதையில்இல்லை

Related Post