Breaking
March 7, 2026

“கெவி” திரைவிமர்சனம்

பொதுவாக கெவி என்னும் வார்த்தை மலைப்பிரதேசங்களில் உள்ள பள்ளத்தாக்கை குறிக்கும் வார்த்தை.

இந்த கெவி திரைப்படமானது கொடைக்கானலில் வெள்ளக் கெவி என்னும் கிராமம், பல நூறு வருடங்களுக்கு முன்பு ஒரு கொடுங்கோல் மன்னர் ஆட்சியில் இருந்து தப்பித்து வரும் மக்கள், அந்த பள்ளத்தாக்கில் கெவி என்னும் கிராமத்தை உருவாக்கி வாழ்கிறார்கள்.

பல வருடங்கள் கழித்து இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட பொழுது அவர்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், மலைப்பிரதேசங்களில் தங்க முடிவு செய்கிறார்கள். அவர்கள் அவ்வாறு தேடி செல்லும் ஒரு மலையில் கெவி என்னும் கிராமத்தை அடைகிறார்கள் .அந்த மக்களை டோலி கட்டி சுமக்கும் மக்களாக பயன்படுத்தி அந்த பள்ளத்தாக்கிலிருந்து மேலே சென்று ஒரு நகரத்தை உருவாக்குகிறார்கள். அந்த நகரம் தான் இப்பொழுது பிரபலமாக இருக்கும் கொடைக்கானல்.

காலங்கள் எவ்வளவு கடந்தாலும் இந்த கெவி பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் இன்னமும் டோலி சுமந்து கொண்டு அவர்களுக்கான அடிப்படை தேவைகள் ஏதும் இன்றி வாழும் வழியினை கூற வருவதுதான் இந்த கெவி படத்தின் திரைக்கதை.
பல தலைமுறைகளாக வாழ்வாதாரத்திற்கு போராடி வரும் இந்த கிராமத்து மக்களுக்கு அரசின் எந்த திட்டங்களும் முழுமையாக இன்னமும் சென்று சேராத சூழல்தான் இருக்கிறது .இப்படி இருக்கும் சூழலில் இதற்கு முந்தைய காலகட்டங்களில் எத்தனை வருடங்களாக அவர்கள் எவ்வாறு வாழ்ந்திருப்பார்கள் என்பதை நம் கண் எதிரே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் இந்த படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள். இந்த கெவியில் வாழும் ஆதவன், ஷீலா கணவன் மனைவியாக வாழ்கிறார்கள் ஒரு நாள் இரவில் ஒரு மண் சரிவில் பலர் இறந்து விட அவர்களில் சிலரை காப்பாற்ற டோலி கட்டி தூக்கிச் செல்லும் பொழுது எதிரில் வரும் அந்த ஊரின் அரசியல்வாதியை எதிர்த்து கேள்வி கேட்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறான் நாயகன். அந்த சூழலில் அந்த அந்த சூழலில் அரசியல்வாதியை அடித்து விடுகிறான் காவல்துறையினர் மீது செருப்பும் வீசப்படுகிறது. இதை வஞ்சம் வைத்துக் கொண்டு காவல்துறை நாயகனை கொல்ல துடிப்பதும் ,,அதே நேரத்தில் பிரசவ வழியில் துடிக்கும் அவரது மனைவி ஷீலாவை அங்கே இருக்கும் மக்கள் டோலிகட்டி பல கிலோமீட்டர் பயணம் செய்த மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள், இடையில் அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர் அந்த கிராமத்திற்கு எல்லாம் வந்து என்னால் வைத்தியம் பார்க்க முடியாது உயிரோடு இருந்தால் கொண்டு வாருங்கள் ,இல்லை வரும் வழியில் செத்தால் புதைத்து விடுங்கள் என்று திமிராக பேசுகிறார் இந்த சூழ்நிலையில் அந்த குழந்தை பிறந்ததா? காவல்துறையின் தாக்குதலில் இருந்து ஆதவன் தப்பித்தாரா? அவர்களுக்கு தேவையான விஷயங்கள் கிடைத்ததா? என்பதுதான் இந்த கெவி படத்தின் திரைக்கதை
இதுவரை நாம் எவ்வளவு மலை சார்ந்த படங்களை பார்த்திருந்தாலும் இந்த படம் முழுக்க முழுக்க இரவில் படமாக்கி இருப்பது இந்த படத்தின் சிறந்த சாரம்சம் .இதுவரை நாம் பகலிலேயே மலையின் அழகு ரசித்தோம் இரவில் மலையின் துயரத்தை நாம் இதுவரை அனுபவிக்கவில்லை அதை இந்த திரைப்படம் நம் ரத்தத்தை உரையை செய்யும் வகையிலும் வந்துள்ளது,அந்த இரவு காட்சிகளை படம் பிடித்த ஒளிப்பதிவாளருக்கு நிச்சயம் பாராட்டுக்கள்
படத்தில் சில விஷயங்கள் உடன் படாமல் இருந்தாலும் சில முக்கியமான காட்சிகளில் சில பரபரப்பான காட்சிகளில் அந்த கதாபாத்திரங்கள் நின்று நிதானமாக வசனங்கள் பேசிக் கொண்டிருப்பது அந்த பரபரப்பை சற்றே துவள செய்கிறது அது இல்லாமல் இருந்தால் இன்னும் திரைக்கதை வேகமாக இருந்திருக்கும்.
நிச்சயம் இந்த கெவி திரைப்படம் அந்த மலைவாழ் மக்களின் வலியை வெளியுலகத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதை எந்த சந்தேகமும் இல்லை .

நிச்சயம் இந்த அரசியல் ஒரு புரியாத புதிரே

Related Post