Breaking
March 7, 2026

MRS&MR திரைவிமர்சனம்

வனிதா விஜயகுமார் கதை திரைக்கதை வசனத்தில் ராபர்ட் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் மிசஸ் அண்ட் மிஸ்டர்.

தாய்லாந்தில் பேக்கரி கடை வைத்திருக்கும் வனிதா ராபர்ட் தம்பதியினர் திருமணம் ஆகி 20 வருடங்கள் கழித்து தங்களது 40 வது வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிறார்கள். இதற்கு ராபர்ட் ஒத்துக்கொள்ள வில்லை ,ஆனால் வனிதா வம்படியாக எனக்கு குழந்தை வேண்டும் என்று கேட்கிறார். இந்த சூழ்நிலையில் ஒரு நாள் வனிதா கர்ப்பமாக இருப்பது ராபர்ட்க்கு தெரிய வர ராபர்ட் கோபித்துக் கொண்டு வனிதாவை தரம் தாழ்த்தி பேசுகிறார். இதனால் வனிதா மனதளவில் பாதிக்கப்பட்டு தன் தாயிடமே வந்து விடுகிறார்.

அங்கிருந்து திடீரென கிளம்பி தங்களது பூர்வீகமான சித்துருக்கு வந்து அங்கு அவருக்கு தனது மாமாவான ஸ்ரீமனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். அவ்வாறு நடக்கும் பொழுது அங்கு அவர்களை தேடி வரும் ராபர்ட் நான் ஏன் அப்படி பேசினேன் அதற்கு என்ன காரணம் என்று கூறுகிறார். அதைக் கேட்கும் ஸ்ரீமன் ராபர்ட் இடம் இதுதான் இந்த வார்த்தைக்காக தான் நாங்கள் இவ்வளவு நாள் காத்திருந்தோம் இதை நீ தாய்லாந்தில் சொல்லி இருந்தால் எங்களுக்கு டிக்கெட் செலவு மிச்சம் .நாங்கள் சித்தூருக்கு வந்திருக்க மாட்டோம் என்று கூற,

மருத்துவமனையில் வனிதாவிற்கு குழந்தை பிறக்கிறது, குழந்தையும் வனிதாவும் இறந்துவிட்டார்கள் என்று சொல்ல அந்த குழந்தை வனிதாவின் மேல் போடுகிறார்கள் திடீரென நின்று போன இதயம் துடிக்க ஆரம்பித்து மருத்துவமனையில் உள்ள மிஷினில் நேராக ஓடிய கோடு குறிக்கும் நடக்குமாக ஓடி அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று காட்டுகிறது.
இப்படியாக இந்த படம் முடிகிறது கதை திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாமே வந்து நம்ம வனிதா விஜயகுமார் தான்.
இந்தப் படத்தில் வனிதாவை பாராட்ட வேண்டியது என்னவென்றால் தன்னுடைய நண்பர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து நடிக்க வைத்திருக்கிறார். ஆனால் அவர்களையெல்லாம் பார்க்கும் பொழுது எப்சி முடிந்து போன வண்டியை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஏலத்தில் எடுத்து பெயிண்ட் அடித்து ஊரில் ஓட்ட விடுவது போல் எல்லாம் ரிட்டையர்டு பார்ட்டிகளாக கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார்.


ஏன் வனிதா உனக்கு இந்த வேலை உனது வயதுக்கு ஏற்றவாறு இந்த படத்தில் நடித்திருக்கலாம் ,இந்த வயதில் உனக்கு இந்த கிளாமர் தேவையா உனக்கு வயது வந்த ஒரு பெண் இருக்கிறது அதை மனதில் வைத்தாவது இந்த படத்தை ஒரு கண்ணியமாக எடுத்திருக்கலாம் .ராபர்ட் அவரும் மிகவும் பல்க்காக இருக்கிறார் எதற்கு டபுள் மீனிங் பேசிக்கொண்டு,

ஏன் இந்த படம் என்றே தோன்றுகிறது நிச்சயம் இந்த படம் பார்த்து விட்டு வந்து எங்களுக்கே ஒரு நிமிடம் யாராவது எங்களை தவறாக பார்த்து விடுவார்கள் என்ற தியேட்டர் வாசலில் தான் தோன்றுகிறது அந்த மாதிரியான ஒரே அடல்ட் கன்டென்ட் .

இதையெல்லாம் சரி செய்து வனிதா படம் எடுத்திருந்தால் நிச்சயம் ஒரு நல்ல கதையாக தான் வந்திருக்கும்

Related Post