Breaking
March 7, 2026

“டி என் ஏ”| திரைவிமர்சனம்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா மற்றும்நிமிஷா சஜயன் நடித்திருக்கும் திரைப்படம் டி என் ஏ
காதல் தோல்வியில் இருக்கும் அதர்வா தினமும் குடித்துவிட்டு போதை பொருள்களுக்கு அடிமையாகி வீட்டில் இருப்பவர்கள் நிம்மதியை கெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் .இந்த சூழ்நிலையில் அதர்வாவின் எதிர்காலத்தை மனதில் கொண்ட அவரை ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கின்றனர் குடும்பத்தினர். அதன் பிறகு அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். அவர்கள் பார்க்கும் பெண் நிமிஷா சஜயன் . ஓவர் ஆட்டிட்யூட் கொண்ட ஒரு பெண் துருதுருவென்று இருக்கும் இவரை அவரது உறவினர்கள் பைத்தியம் என்று கூறி குடிகாரன் ஆன அதர்வாவிற்கு திருமணம் செய்து வைத்தால் தான் செட் ஆகும் என்று திருமணம் செய்து வைக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தன் மனைவியை சரியாகப் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையை துவங்குகிறார் அதர்வா. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது மருத்துவமனையில் தாயிடம் குழந்தையை கொண்டு வந்து தரும் பொழுது நிமிஷா சஜயன் இது தனது குழந்தை இல்லை என்று கூறுகிறார். குடும்பத்தினர் அனைவரும் அவரை பைத்தியம் என்று கூற அதர்வா மட்டும் தன் மனைவியை நம்பி அந்த குழந்தை தனது தானா என்று டி என் ஏ டெஸ்ட் மூலம் தெரிந்து கொள்கிறார். அப்பொழுது அவருக்கு அந்த அதிர்ச்சிகரமான தகவல் தெரிகிறது அந்த குழந்தை தனது இல்லை என்றும் மருத்துவமனையில் அந்த குழந்தையை மாற்றி உள்ளனர் என்றும் தெரிந்து தனது குழந்தையை தேடி பயணப்படுகிறார்.

அவ்வாறு தேடும் அதர்வா காவல்துறை உதவியுடன் தனது குழந்தையை திருடியது யார்? தன்னிடம் உள்ள அந்த குழந்தை யாருடையது? என்று தெரிந்து அதை ஒப்படைத்தாரா? அல்லது தனது குழந்தையை கடத்தியவர்களை கண்டுபிடித்தாரா? என்பது தான் இந்த திரைப்படத்தின் கதை.
இத்திரைப்படத்தின் நாயகனாக அதர்வா நடித்திருக்கிறார் அதர்வாவின் நடிப்பு நிச்சயம் ஒரு அவருக்கு மைல்கல்லாக தான் இருக்கும். காதல் தோல்வியில் இருக்கும் ஒரு சாதாரண மனிதனாக, தனது குழந்தையை தொலைத்த பின் குழந்தையை தேடும் ஒரு தகப்பனாக தனது நடிப்பினை பல்வேறு பரிமாணங்களில் சிறப்பாக வெளிப்படுத்துகிறார் நீண்ட நாள் கழித்து அதர்வாவிற்கு ஒரு சிறந்த திரைப்படமாக சிறந்த நடிப்பாக இந்த படம் இருக்கும்.
நிமிஷா சஜயன் அதர்வாவின் மனைவியாக நடித்திருக்கிறார் ஒரு லூசுத்தனமான கேரக்டர் தான் என்றாலும் இவருக்காகவே இந்த கேரக்டரா அல்லது இந்த கேரக்டருக்காக இவரா என்பது போல் இருக்கிறது அவரது நடிப்பு இதற்கு மேல் இவர் நடிப்பை எதுவும் சொல்ல இயலாது.

மேலும் இந்த படத்தில் காவல்துறை ஏட்டாக பாலாஜி சக்திவேல் இன்னும் இரண்டு ஒரு நாட்களில் ஓய்வு பெறும் கேரக்டர் அதர்வாவுடன் சேர்ந்து அந்த குழந்தையை கண்டுபிடிக்க அவர் அலைவது அவரது நடிப்பு நன்றாக இருக்கிறது மேலும் இந்த படத்தில் பல கேரக்டர்கள் இருக்கிறார்கள். வில்லனாக பிரபல இயக்குனர் சுப்பிரமணிய சிவா நிச்சயம் அவர் இனிவரும் நாட்களில் முழு நேர நடிகராக மாறிவிடுவார் ரித்திகா, விஜய் சந்திரசேகர் ,போஸ் வெங்கட், சேத்தன்,ரமேஷ் திலக் பலரது நடிப்பும் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது
படத்தின் திரைக்கதையில் அங்கங்கே பல குறைகள் இருக்கிறது உதாரணமாக அதர்வா தனது குழந்தையை தேடி செல்லும் போது அவருடன் பாலாஜி சக்திவேல் மட்டுமே செல்கிறார் இந்த குழந்தை கடத்தலின் பின்னணியில் பல சதிகளும் பல பெரிய கும்பல்களும் இருப்பது தெரிந்தும் அந்தக் காவல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். ஓரிடத்தில் பல குழந்தைகள் பிச்சை எடுக்க ஒரு குடோனில் அடைத்து வைத்திருக்கும் குழந்தைகள் என்னவானார்கள் என்று தெரியவில்லை இவ்வாறாக பல திரைக்கதை ஓட்டைகள் இருந்தாலும் திரைக்கதை ஓட்டம் சற்று விறுவிறுப்பாக தான் இருக்கிறது இயக்குனர் இன்னும் முழுமையாக வேகத்தை கூட்டி இருந்தால் நிச்சயம் இந்த டி என் ஏவின் ஸ்ட்ரக்சர் என்னும் திரைக்கதை விறுவிறுப்பாக இருந்திருக்கும் மேலும் இந்த படத்திற்கு இசையும் ஒழிப்பது மிகப்பெரிய பலமாக இருக்கிறது

Related Post