
மும்பையில் கடலில் கச்சா எண்ணெய் இருப்பதை கண்டுபிடிக்கும் இந்திய நிறுவனத்தை சேர்ந்த ஒரு விஞ்ஞானி அதை ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ரகசியமாக அந்த தகவலை விற்க, அதை கையகப்படுத்த அந்த கார்ப்பரேட் கம்பெனி அந்த எண்ணெய் ஆராய்ச்சி கம்பெனியில் போலியான ஒரு வெடி விபத்தை ஏற்படுத்தி அதில் பலரைக் கொன்று அதை கையகப்படுத்த நினைக்கிறது. அவ்வாறு நினைக்க அதற்கு தேவையான பணத்தை இந்திய அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாக கொடுக்க சுமார் ஒரு லட்சம் கோடியை கைமாற்ற ஒரு நபரை தேடுகிறது .அதற்கு நேர்மையான சிபிஐ அதிகாரியாக இருந்து போலி வழக்கில் சிக்கி சிறையில் ஏழு ஆண்டு தண்டனை இருக்கும் நாகார்ஜுனாவை கொண்டு வருகிறார்கள். நாகார்ஜுனா அந்த பணத்தை அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பட்டுவாடா படுத்த அவர் தேர்ந்தெடுக்கும் வழி ஐந்து பிச்சைக்காரர்களை கொண்டு ஒரு போலியான மல்டி நேஷனல் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து அதன் மூலமாக பல அரசியல்வாதிகளுக்கு பணப்பரிமாவர்த்தனை செய்ய நினைக்கிறார் .அவ்வாறு அவர் தேர்ந்தெடுக்கும் ஐந்து பிச்சைக்காரர்களுல் தனுஷ் ஒருவர் தனுஷ். திருப்பதி பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் அவரும் மற்ற நான்கு நால்வரையும் கூட்டிக்கொண்டு வந்து பணம் பரிவர்த்தனை செய்ய நினைக்கும் பொழுது அந்த கார்ப்பரேட் கம்பெனி முதலாளியோ பண பரிவர்த்தனை செய்து அந்த விஷயம் வெளியே வரக்கூடாது என்று நினைத்து அந்த பிச்சைக்காரர்களை கொன்றுவிட நினைக்கிறார். அதில் ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்து நாகார்ஜுனா அவர்களை காப்பாற்ற நினைக்கிறார்.
இவ்வாறான சமயத்தில் தனுஷ் அவர்களிடமிருந்து தப்பித்து ஓட தனுஷின் பெயரிலிருக்கும் பத்தாயிரம் கொடியை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று அந்த கார்ப்பரேட் கம்பெனியும் ,ஒரு பக்கம் நாகார்ஜுனாகவும் தேட ஆரம்பிக்கிறார்கள் அப்படி தேடும்பொழுது அந்த பணத்தை அவர்கள் எடுத்தார்களா? இல்லை தனுசு அந்த பணத்தை எடுத்துக் கொண்டாரா ?நாகார்ஜுனா திரும்பி மீண்டும் நேர்மையான சிபிஐ அதிகாரியாக மாறினாரா? என்பதே படத்தின் கதை.
பிச்சைக்காரன் வேடத்தில் நடித்திருக்கும் தனுஷ் தாடியுடன் கிழிந்த சட்டையுடன் பிச்சைக்காரன் ஆகவே வாழ்கிறார் அதற்கான உடல் மொழியும் அவருக்கு அருமையாக ஒத்துழைக்கிறது தனக்கு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தன் நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
நாகார்ஜுனா பணம் பட்டுவாடா படுத்த சூழ்நிலையை கைதியாக தன்னை எப்படியாவது ஜெயில் இருந்து காப்பாற்றிக் கொள்ள கார்ப்பரேட் கம்பெனியிடம் அடிமையாக செல்லும் கதாபாத்திரம் ஆனாலும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்க முயற்சித்து இருக்கிறார் நாகார்ஜுனா அவரது கதாபாத்திரத்தை இன்னும் அழுத்தமாக செய்திருக்கலாம்.
ராஷ்மிகா மந்தனா ஓடும் ரயிலில் தானாக வந்து ஏறும் கேரக்டர் போல தானாக வந்து தானாக செல்கிறது .இந்த படத்திற்கு ராஸ்மிகாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எதற்காக அந்த கேரக்டர் ? அவரது நடிப்பு சற்றே எரிச்சல் ஊட்டும் விதமாகத்தான் உள்ளது ஒரு பொம்மை போல தான் வந்து போகிறார் அவருக்கு என்று தனியாக எதுவும் இல்லை சொல்லுகின்ற மாதிரி.
மேலும் பல கேரக்டர்கள் வந்து போகிறது நாசர் ,பாக்யராஜ் இப்படி பலரை சொல்லலாம்.
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் வில்லன் வில்லனாக நடித்தவர் மிகவும் அருமையான நடிப்பாக ஒரு கார்ப்பரேட் முதலாளி எப்படி இருக்க வேண்டும் ஒரு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளியாக மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார் அவரது நடிப்பிற்கு படத்திற்கு பலமாக இருக்கிறது
இந்த படத்துக்கு கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் சேகர் கம்முலேலி இவரது பலமே இந்த படத்தின் கதையை ஆரம்பித்த பத்து நிமிடத்தில் கூறிவிடுகிறார் ஆனால் அவ்வாறு கூறப்பட்ட கதை மேற்கொண்டு நகராமல் நாகார்ஜுனா வந்த பிறகாவது கொஞ்சம் வேகம் பிடிக்கும் என்றாலும் சற்றே தொய்வடைந்து இருக்கிறது தனுஷ் வந்த பிறகும் அவ்வாறே நகர்கிறது இந்த படத்தின் நீளத்தை குறைத்து இன்னும் விறுவிறுப்பாக திரைகதை அமைத்திருந்தால் குபேரா நிச்சயம் விறுவிறுப்பான கதையாக அமைந்திருக்கும்.

