
நாயகன் ரங்கராஜ், சிறு வயதில் தன் தாய் மற்றும் தந்தையை இழந்து அதன் பின்னர் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து படித்து காவல்துறை ஆய்வாளராக ரங்கராஜ், அதே ஆசிரமத்தில் இருக்கும் ஒரு அனாதை பெண் நான்ஸியை திருமணம் செய்து கொண்டு தன் மகள் மற்றும் மனைவியோடு வாழ்ந்து வருகிறார். காவல்துறை ஆய்வாளரான ரங்கராஜ், அடையாளம் தெரியாத ஒரு திருநங்கையை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். கொலை செய்யப்பட்டவர் யார்? என்று காவல்துறை ஆய்வாளரான ரங்கராஜ், தனது விசாரணையை தொடங்குகிறார்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டது அரசு அதிகாரி விஏஒ திருநங்கை என கண்டுபிடிக்கிறார்
கொலை செய்தது யார்? எதற்காக அரசு அதிகாரியை கொலை செய்தார்கள்?குற்றவாளியை , கண்டுபிடித்தாரா? என்பதுதான் இந்த “கட்ஸ்” திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகன் ரங்கராஜ், தமிழ் திரைப்பட உலகிற்கு இவர் புதுமுகம் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் நான்ஸி, கேரளத்து மொழியில் கொஞ்சி பேசுவதும், தனது கணவன் மீது வைத்திருக்கும் காதல் என பல இடங்களில் நன்றாகவே நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
நடிகை ஸ்ருதி நாராயணனுக்கு சிறிய கதாபாத்திரம் நடிப்பின் மூலம் உச்சத்தை தொட்டிருக்கிறார். ரங்கராஜின் மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய்தீனா காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டெல்லி கணேஷ், அறந்தாங்கி நிஷா, துணை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிர்லா போஸ், ரங்கராஜின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீலேகா,அனைவரும் மிக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த கட்ஸ் திரைப்படத்தில் திருநங்கைகளுக்கான முக்கியத்துவம், ஒரு பெண் எப்படி வீரமாக, இருக்க வேண்டும் ஆணின் கம்பீரம், தாயின் பாசம் என இயக்கியிருக்கிறார் இயக்குநர் ரங்கராஜ்.

