
சென்னையில், காளி வெங்கட் மனைவி ஷெல்லி கிஷோர், மகள் ரோஷ்னி மற்றும் மகன் விஷ்வா ஆட்டோ ஓட்டிக் கொண்டு மிகவும் எளிமையானவாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.காளி வெங்கட் மகள் ரோஷ்னி பெங்களூருவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.மகன் 12 ஆம் வகுப்பில் நல்லதொரு மதிப்பெண் எடுத்து இன்ஞ்சினியரீங் படிப்பில் சேருவதற்கு தயாராகி வருகிறார். மகள் ரோஷ்னிக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருக்கிறார்.ஆனால், எந்தவொரு மாப்பிள்ளையும் கிடைக்காமல் திருமணம் தொடர்ந்து தள்ளிக் கொண்டே போகிறது.
குடும்ப கஷ்டத்தை மகள் ரோஷ்னி மீது திணித்ததால்தான்ரோஷ்னி மனதளவில் தவித்துக் கொண்டிருக்கிறாள் என காளி வெங்கட் கவலை படுகிறார்.
தன்னுடைய தந்தை அனைவரிடமும் மிகவும் தாழ்ந்து போவதையும் பேசுவதையும் பணிவாக நடந்து கொள்வதையும் பிடிக்காத மகன் விஷ்வா, தந்தை மீது அதிக கோபத்தில் இருந்து வருகிறான்.
தன்னுடைய குடும்பத்தில் என்ன நடந்தாலும்,தாங்கிச் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தாய் ஷெல்லி இருக்கிறார்.இவர்களின் குடும்பத்தில் அடுத்து என்ன நடந்தது என்பதுதான் “மெட்ராஸ் மேட்னி” திரைப்படத்தின் மீதிக்கதை.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட் எதார்த்தமான நடிப்பை கொடுத்து கண்ணன் என்ற கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.மனைவியாகவும் இரண்டு குழந்தைகளுக்கு தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷெல்லியும் தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாகவே செய்து முடித்திருக்கிறார்.
மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோஷ்னி, தனது குடும்பத்தையும் தனது நிலையையும் நினைத்து கண்கலங்கும் காட்சியில் திரைப்படம் பார்க்கும் நம்மையும் அவருடன் சேர்த்து கண்கலங்க வைத்துவிட்டார்.
விஷ்வா, நாய் மீது வைத்திருக்கும் பாசம், தந்தையை புரிந்து கொள்ளும் தருணம் என பல காட்சிகளில் மிகவும் இயல்பான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதாகைலாசம், இவரின் உதவியாளராக வரும் விஜய் டிவி ராமர், லோக்கல் ரவுடி, ஊறுகாய் விற்கும் சாம்ஸ், HR ஆக வரும் அர்ச்சனா, ட்ரைவிங் கற்றுத் தரும் ஜார்ஜ் மரியன், EB அலுவலர் என அனைவருமே தங்களது கதாபாத்திரங்களை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் :- கே.சி. பாலசாரங்கன்
இரண்டாம் பாதியில் படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்த இயக்குனர் கார்த்திகேயன் மணி அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.