
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் அந்த கிராம மக்களால், கடலுக்குள் சென்று மீன்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் என்ன காரணம், என்றால் பேராசை பிடித்த ஒருவரின் அமானுஷ்ய ஆன்மா அந்த கடல் முழுவதையும் ஆக்கிரமித்து அங்கு மீன் பிடிக்க வருபவர்களை கொன்று குவிப்பது வருகிறது.
அதனால், அந்த கிராமத்திலுள்ள மக்கள் சுமார் 40 ஆண்டுகளாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு, கிடைக்கும் வேலைகளை இந்த கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.
அதில் சில இளைஞர்கள் மட்டும் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த இளைஞர்களில் ஒருவரான கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார் கொஞ்ச நாட்கள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டாலும், அதன் உண்மையான பின்னணி என்னவென்று தெரிந்ததும் அதில் இருந்து விலகுவதோடு, தனது கிராம மக்கள் இழந்த வாழ்வாதாரதை மீட்டுக் கொடுக்க முடிவு செய்கிறார்.
அதன்படி, மர்மம் சூழ்ந்த அந்த கடலுக்குள் சென்று அமானுஷ்ய ஆத்மாவின் பிரச்சனையை தீர்க்க நினைக்கும் கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார், தனது நண்பர்களுடன் கடலுக்குள் செல்ல, கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமாரும் மற்றும் நண்பர்களும் உயிருடன் திரும்பி கரைக்கு உயிருடன் வந்தார்களா? உயிருடன் வரவில்லையா?, என்பதுதான் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த கிங்ஸ்டன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக ஜிவி பிரகாஷ் குமார் நடித்திருக்கிறார்.
மீனவ கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் மிக அருமையாக நடித்திருக்கிறார்.
இந்த கிங்ஸ்டன் திரைப்படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் திவ்ய பாரதிக்கு திரைப்படத்தில் பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும், திவ்ய பாரதி சில காட்சிகளில் திணிப்பதற்காகவே திரைப்படத்தில் திணித்திருக்கிறார்கள்.
அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், வில்லனாக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன். பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை மிகவும் சிறப்பாக சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், ஒளிப்பதிவு மூலம் கடலின் அழகு, மற்றும் ஆபத்து மற்றும் பிரமாண்டம் என அனைத்தையும் திரையில் மிக அருமையான காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்,இசையில் பாடல்கள் பின்னணி இசை மிக அருமையாக அமைந்திருக்கிறது.
கடலில் நடக்கும் திகில் கதையை மிகவும் ஃபேண்டஸியாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அழுத்தமான கதை மற்றும் மிக அருமையான திரைக்கதை இல்லாததால், அவருடைய ஃபேண்டஸி மற்றும் திகில் யோசனைகள் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடையே எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தவில்லை