
கதாநாயகன் ஜெகவீர் மற்றும் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் சிறு வயது முதல் பள்ளிக்கூடத்தில் இருந்து கல்லூரி வரை இருவரும் ஒன்றாக படித்து வரும் நிலையில் அதன் பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து வெட்டிங் போட்டோகிராபி கம்பெனி ஒன்றை தொடங்குகிறார்கள்.
கதாநாயகன் ஜெகவீர் மற்றும் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் இவர்கள் எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக இணைந்து செல்வார்கள் இவர்களை பார்க்கும் அனைவரும் இருவரும் காதலர்கள் என கூறுகிறார்கள்.
கதாநாயகன் ஜெகவீர் மற்றும் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மட்டுமே உள்ளது.
இப்படி உள்ள நிலையில் பவித்ரா என்பவரை கதாநாயகன் ஜெகவீர் காதலிக்க ஆரம்பிக்கிறார்.
கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜனிடன் நெருங்கி பழகுவது நட்பு வைத்துக் கொள்வது என்பது பவித்ராவிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.
இதனால் கதாநாயகன் ஜெகவீரிடம் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜனுடன் இருக்கும் நட்பை பவித்ரா விட வேண்டும் என கூறுகிறார்.
கதாநாயகன் ஜெகவீர் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜனுடன் நட்பை தொடரக்கூடாது என பவித்ரா கூற அதை செய்ய மறுக்கிறார்.
நட்புக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என தெரியாமல் பவித்ரா கூறும் நிலையில் காதலுக்கும் நட்புக்கும் இடையே சிக்கித் தவிக்கிறார் கதாநாயகன் ஜெகவீர்.
இதற்கு அடுத்து என்ன ஆனது? கதாநாயகன் ஜெகவீர் காதலிக்கும் பவித்ராவுடன் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா? கதாநாயகன் ஜெகவீர் காதலுக்கு கை கொடுத்தாரா? இல்லை நட்புக்கு கை கொடுத்தாரா? என்பதுதான் இந்த 2K லவ்ஸ்டோரி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த 2K லவ் ஸ்டோரி திரைப்படத்தில் ஜெகவீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெகவீர் முடிந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
சிங்கம்புலி, ஜெய பிரகாஷ், நந்தினி, பால சரவணன், ஜி.பி முத்து மற்றும் சிங்கம்புலி, ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, லத்திகா பாலமுருகன், ஆகியோரின் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் வி.எஸ் ஆனந்த கிருஷ்ணனின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் டி இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் டி இமானின் பின்னணி இசை சுமாராக உள்ளது.
இந்த காலத்தில் உள்ள இளைஞர்களின் காதல், நட்பு அவர்கள் மேற்கொள்ளும் எமோஷனை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.
நல்ல கதையை கையில் எடுத்த இயக்குனர் திரைக்கதையில இன்னும் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.