Breaking
September 30, 2024

“பயமறிய பிரம்மை” திரைவிமர்சனம்

Nanda

சிறை சாலையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொலை குற்றவாளியான ஜே.டி. ஜெகதீஷ் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதுவதற்காக பத்திரிக்கையாளர் வினோத் சாகர் அவரை சந்தித்து அவருடைய வாழ்க்கையைப் பற்றி உரையாடுகிறார்.இருவருக்குமான உரையாடலின் போது, “புத்தகங்கள் மனிதர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” வினோத் சாகர் கூறுகிறார்.

அது எப்படி நடக்கும்? என கொலை குற்றவாளியான கதாநாயகன் ஜே.டி. ஜெகதீஷ் கேட்க கேள்விக்கான பதிலாக, அவரது வாழ்க்கையையே புத்தக வாசகர்களின் கண்ணோட்டத்தில் திரையில் காட்சிகளாக மாறி இருப்பது ‘பயமறியா பிரம்மை’ திரைப்படத்தின் மீதி கதை.

இந்த திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஜே.டி.ஜெகதீஷ் ,மற்றும் குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகிய ஆறு பேர் ஜே.டி ஜெகதீஷ் கதாபாத்திரமாக உருமாறி நடித்திருக்கிறார்கள்.

மாறன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய் மற்றும் ஏ.கே, எழுத்தாளர் கபிலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினோத் சாகர், ஜே.டி.ஜெகதீஷின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திவ்யா கணேஷ் என இந்த பயமறியா பிரம்மை திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் தங்களது வேலை மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் பிரவின் மற்றும் நந்தா ஒளிப்பதிவின் மூலம் இந்தத் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கே -வின் இசையும் பாடல்களும் பிண்ணனி இசையும் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.

ஒரு கதையை புத்தகமாக பதிவு செய்வார்கள் ஆனால் இந்த திரைப்படத்தில் ஒரு புத்தகத்தை கதையாக வித்தியாசமான திரைக்கதையை அமைத்து, வித்தியாசமான முறையில் கதை சொல்கிறேன் என்ற பெயரில், கொலையை கலையாக சித்தரித்து அதிர வைத்தவர் அதை புரியும் படியாக பதிவு செய்திருக்கலாம் இயக்குனர் ராகுல் கபாலி .

மொத்தத்தில் பயமறியா பிரம்மை—– பயமும் கம்மி, பிரம்மையும் கம்மி…………

Related Post