Breaking
March 7, 2026

March 2026

“போர்த் ஃப்ளோர்” திரை விமர்சனம்

மும்பையில் வசிக்கும் ஆரிக்கு சென்னையில் இருக்கும் அவரது முன்னாள் காதலியிடம் இருந்து ஒரு போன் வருகிறது அதில் தான் ஒரு பிரச்சனையில் இருப்பதாகவும் நீ சென்னைக்கு உடனடியாக வரவேண்டும் நீ வந்த பிறகு நானே உனக்கு போன் செய்கிறேன் என்று சொல்லி அழைக்கிறாள்.
சென்னை வரும் ஆரி அங்கு உள்ள ஒரு தனிமையில் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டில் தங்குகிறார்.அந்த வீட்டின் மூன்று மாடியில் மட்டுமே புழக்கத்தில் இருக்கும்போது இவருக்கு தவறுதலாக நான்காவது மாடியில்உள்ள அறைக்கு சாவி வழங்கி அங்கே தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.நேரத்தில் அந்த அப்பார்ட்மெண்டில் ஒரே ஒரு பெண்ணும் வேறு ஒரு பிளாக்கில் ஷார்ட் பிலிம் எடுக்கின்ற பேர்வழிகள் என்று ஒரு சில இளைஞர்களும் இளைஞர்களும் தங்கி இருக்கிறார்கள்.
நிலையில் அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு சிலர் ஆரிய இடம் சில விஷயங்கள் பேசுகிறார்கள்.திடீரென ஏதேதோ மர்மமான கனவுகள் வருகிறது தனது காதலியை நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்க அவரையும் தேடுகிறார் இந்த சூழலில் அந்த மர்ம பங்கு அப்பார்ட்மெண்டில் என்ன நடக்கிறது என்பதை இந்த திரைக்கதை 4th ப்ளோர் என்னும் திரைப்படம் கூறுகிறது.
இந்த போர்த் பார் திரைப்படம் ஆனது ஹாரர் மூவியா பழிவாங்கும் திரைப்படமா க்ரைம் திருவிழா என பல்வேறு குழப்பங்களுக்கிடையில் இயக்கியிருக்கிறார் இயக்குனர்.
காதலியை தேடும் பாரிக்கு காதல் என்னவானால் என்று தெரியவில்லை ஆனால் அதே பங்களாவில் ஒரு அறையில் ஆரியன் மகள் அவருக்கே தெரியாமல் இருக்கும் மகள் ஒரு அறையில் அடைபட்டு இருப்பது அவரை மீட்பது ,மேலும் ரியல் எஸ்டேட் பிசினஸில் ஈடுபடும் ரவுடிசம் என பல்வேறு விஷயங்களை இந்த ஹாரர் மூவிக்குள் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர்.
இந்த படத்தில் ஹீரோவாக ஆரி அவருக்கு நடிப்பு மிகவும் சுமாராகத்தான் வருகிறது அவர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்க வேண்டும்,இல்லனாக இயக்குனர் சுப்பிரமணியன் சிவா இவர் முழுநேர நடிகராக மாறிக் கொண்டிருக்கிறார்.
பவித்ரா நாயகி யாவும் அவரின் மாமாவாக தலைவாசல் விஜயம் தங்களது தரப்பட்ட கதாபாத்திரங்களை செய்து இருக்கிறார்கள்.

இசை தரண் குமார் திகில் படத்திற்கான இசையில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம் அதே போல் ஒளிப்பதிவும்.
இயக்குனர் எல் ஆர் சுந்தரபாண்டி திரைக்கதையில் இன்னும் மெனக்கட்டு இருந்தால் நிச்சயம் இந்த ஹாரர் மூவி நமக்கு பயம் கொடுத்திருக்கும்

“தடயம்” வெப் தொடர் விமர்சனம்

1995 1999 இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் உள்ள கிராமங்களில் நடந்த தொடர் கொலைகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் தொடர் தான் தடயம்
ஆந்திரா எல்லை வர தமிழக கிராமங்களில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக இரட்டை கொலைகள் கணவன் மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டு அவர்களது தாலி மற்றும் அருணா கயிறு அதை மட்டும் மறுத்துக் கொண்டு செல்கிறார்கள்.இது தொடர்ந்து நடக்க மக்கள் வீதி அடைய இதை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக சமுத்திரகனி.அவரது அதிகாரியாக சிவா தான் இன்ஸ்பெக்டராக வருகிறார்.இருவரும் இணைந்து இந்த தொடர் கொலைகளை செய்தவர்களை தேட அது ஆந்திர பிரதேசம் வரை செல்கிறது.அதே நேரத்தில் வழக்கமாக உயர் அதிகாரிகளின் ஒத்துழையாமை போன்றவையும் இந்த வழக்கை சுணக்கப்படுத்துகிறது.இந்த நிலையில் இருவரும் இணைந்து எப்படி இந்த கொலைகளை கண்டுபிடிக்கிறார்கள் அந்த கொலைகளுக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் திரைக்கதை தான் தடயம்.
இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக சமுத்திரகனி ஒரு வித்தியாசமான நடிப்பாகவும் தன்னுடைய பாடி லாங்குவேஜ் மாற்றி புதிதாக ஏதோ தர முயற்சி செய்திருக்கிறார் அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்.அவரது முதிர்ச்சியான நடிவம் கூர்நோக்கு பார்வையும் இந்த கொலை வழக்கை எளிமையாக கையாள வைக்கிறது அவருக்கு.
இன்ஸ்பெக்டர் கேரக்டரில் ஷிவதாநடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ள கதாபாத்திரம் அதில் அவர் தன்னை நிரூபித்தும் இருக்கிறார்.
திரைக்கதையில் வரும் பல்வேறு கதாபாத்திரங்கள் மிகவும் அழுத்தமாகவும் தேவையான இடத்திலும் பயன்பட்டு இருக்கிறார்கள்.
முக்கியமாக வில்லன் கதாபாத்திரம் புஷ்பா ஒன்று படத்தில் வில்லனாக வந்த ராஜ் இந்த வெப் சீரிஸில் கொடூரமான சைக்கோ இல்லனாக மிரட்டுகிறார்.
இந்த படத்திற்கான ஒளிப்பதிவும் அந்த காலகட்டமும் ,இசையும் சிறப்பாக பொருந்தி வருகிறது.
இந்தப் படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் திரைக்கதை விறுவிறுப்பாக செல்வதால் தொய்வில்லாமல் செல்கிறது.
ஒரு இரட்டைக் கொலையும் அந்த வீட்டில் உள்ள ஒரு கேள்விக்குறி மார்க்கும் அதை தொடர்ந்து செல்லும் 72 கொலைகளும் என இந்த திரை கதையை சிறப்பாக எழுதி இயக்கி இருக்கிறார்நவீன் குமார் பழனிவேல்
தடயம் zee5 ott தளத்திற்கு ஒரு விறுவிறுப்பான க்ரைம் தொடர்