December 2024

Uttar Pradesh Minister of States’ Shri JPS Rathore & Shri Asim Arun Leads Roadshow for Prayagraj Mahakumbh-2025 in Chennai

– Uttar Pradesh Government Committed to organize a Divine, Grand and digitally enhanced Mahakumbh – Minister of Cooperatives, Shri JPS Rathore

– Mahakumbh is the eternal and collective proclamation of unity in the diversity of India – Minister of Social Welfare, Shri Asim Arun

– Arrangements have been made for clean drinking water, an Integrated Control Command Center established, Flower shower will be conducted at 44 ghats, including the riverfront –Minister of Cooperatives, Shri JPS Rathore

– The headcount of pilgrims attending the Mahakumbh will be efficiently managed using advanced technology – Minister of Social Welfare, Shri Asim Arun

Chennai, 13 December: The Uttar Pradesh government, led by Chief Minister Sri Yogi Adityanath, is dedicated to making Mahakumbh 2025 a global symbol of India’s cultural unity. As part of this endeavor and vision, Minister of State (Independent Charge)- Cooperative,  Shri Jayendra Pratap Singh Rathore and Minister of State (Independent Charge)- Shri Asim Arun led a grand roadshow in Tamil Nadu. He highlighted the Mahakumbh as a unique celebration of unity within India’s diversity and extended an invitation to the Hon. Governor of Tamil Nadu, Shri RN Ravi, Hon. Chief Minister Shri M. K. Stalin, and the esteemed people of Tamil Nadu to participate in the Prayagraj Mahakumbh-2025. They emphasized that the government is taking significant steps to ensure the event is historic, featuring international participation and state-of-the-art facilities. Speaking to the media after the roadshow, Shri Singh stated that the Mahakumbh embodies the spirit of India’s cultural and spiritual consciousness and is a divine and vibrant representation of ‘Ek Bharat- Shreshth Bharat-Samaveshi Bharat (One India, Great India, Inclusive India).’

During the press conference, the Cooperatives Ministerreminded, “Many of you may have witnessed the ‘divine and grand’ experience of the Prayagraj Kumbh in 2019, which became an indelible symbol of India’s cultural pride on the global stage. The world widely acknowledged the efficient management of the event.” He further emphasized that this year’s Mahakumbh will surpass the previous one in both grandeur and divine essence. Prayagraj Mahakumbh-2025 is expected to welcome over 450 million pilgrims, saints, ascetics, and tourists. In preparation, the Uttar Pradesh government has made meticulous and timely arrangements.

During his address to the press, the Shri Rathore informed, “Under the inspiration and guidance of Honorable PrimeMinister Shri Narendra Modi and the leadership of Chief Minister Shri Yogi Adityanath, the Mahakumbh will take place in Prayagraj from January 13 to February 26, 2025, on the sacred banks of the confluence of the Ganga, Yamuna, and Saraswati rivers. Recognized by UNESCO as an Intangible Cultural Heritage of Humanity, the Mahakumbh will once again be held on the holy land of Prayag after a gap of 12 years.”

Swachh, Swasth, Surakshit and Harit Mahakumbh

Addressing the media regarding the preparations for the Mahakumbh, the Cooperatives Minister said, “It would be a clean, healthy, safe and digital  Mahakumbh. A pledge has been taken to make the event environment friendly by declaring it a single-use plastic-free Mahakumbh. As part of this initiative, various shops of dona-pattal vendors will be allocated within the Mela area, and meetings have been conducted with principals of 400 schools to discuss cleanliness and the initiative of a clean Maha Kumbh is being communicated to 4 lakh children and 5 times the population of Prayagraj. Furthermore, under the ‘Har Ghar Dastak’ campaign, the message of a single-use plastic-free environment is being delivered to every household.”

He highlighted that special emphasis has been placed on making Mahakumbh Mela 2025 both clean and green. Approximately three lakh plants have been cultivated across Prayagraj, with the Uttar Pradesh government pledging to ensure their care and maintenance even after the conclusion of the Mela.

Comprehensive healthcare services for pilgrims, sadhus, saints, and tourists

The Cooperatives Minister informed that the preparations for the Mahakumbh Mela are being made with a focus on health and hygiene. This includes making healthcare arrangements for pilgrims, sadhus, saints, those observing Kalpwas at Mahakumbh and tourists. A large number of specialist doctors have been deployed. A 100-bed hospital has been set up at the Parade Ground. Two more hospitals with 20 beds each and smaller hospitals with 8 beds have also been prepared. Two 10-bed ICUs have been set up by the Army Hospital at the Mela area and Arail. These hospitals will have doctors on duty 24 hours a day. In total, there will be 291 MBBS doctors and specialists, 90 Ayurvedic and Unani specialists, and 182 nursing staff. Moreover, separate wards for male, female and children have been set up in these hospitals. Delivery rooms, emergency wards and doctors’ rooms will also be available.

Devotees will also experience the digital Mahakumbh – Shri JPS Rathore

Addressing the press, the Minister of State (Independent Charge)- Shri Asim Arun stated that the Uttar Pradesh government is committed to organizing a divine, grand, and digital Maha Kumbh. The preparations include the launch of a dedicated website and app, an AI-powered chatbot in 11 languages, QR-based passes for people and vehicles, a multilingual digital lost-and-found center, ICT monitoring for cleanliness and tents, software for land and facility allocation, multilingual digital signage (VMD), an automated ration supply system, drone-based surveillance and disaster management, live software for monitoring 530 projects, an inventory tracking system, and integration of all locations on Google Maps.

Smart parking facilities will be provided for the convenience of tourists – Shri Asim Arun 

The Social Welfare Minister informed that arrangements have been made to ensure tourists do not face parking issues. In this regard, 101 smart parking facilities have been created, capable of accommodating up to five lakh vehicles daily. The parking area spans 1,867.04 hectares, which is 763.75 hectares larger compared to the 1,103.29 hectares allocated for parking in 2019. These parking facilities will be monitored through the Integrated Control Command Center.

Arrangements for clean drinking water, an Integrated Control Command Center, and flower showers at 44 ghats, including the riverfront

During the press conference, the Cooperatives Ministerprovided details about the arrangements for the Mahakumbh. He informed that 35 existing permanent ghats and 9 new ghats have been constructed in the Mahakumbh city to facilitate bathing for devotees. Aerial flower showers will be carried out across all 44 ghats spread over a 12-kilometer area. He further mentioned that a riverfront, modeled after Mumbai’s Marine Drive, has been developed along a 15.25-kilometer stretch on the banks of the Ganges, extending from the Sangam to Nagvasuki Temple, Surdas to Chhatnag, and near Curzon Bridge to Mahavir Puri. Additionally, the Integrated Control Command Center has been upgraded to enhance crowd management. Four viewing centers, equipped with 52-seater setups, have been established for real-time CCTV monitoring.

Headcount of pilgrims attending the Mahakumbh will be done through technology

The Cooperatives Minister stated that approximately 450 million devotees are expected to attend Prayagraj Mahakumbh-2025, marking a significant milestone. Three technical methods will be used to count every individual.

The first method is attribute-based search, where tracking will be conducted using person attribute search cameras. The second method involves RFID wristbands, which will be provided to pilgrims. Through these wristbands, entry and exit times will be tracked using RFID readers. The third method is mobile app tracking, where, with the consent of the pilgrims, their location will be tracked through GPS using a mobile application.

Mahakumbh is an eternal and unified proclamation of India’s unity in diversity

Minister of State (Independent Charge), Social Welfare, Shri Asim Arun stated that the Kumbh is not merely a fair or a ritualistic dip in the holy waters but an eternal and unified proclamation of India’s unity in diversity. The Mahakumbh is a grand festival that immerses all differences, disputes, and divisions in the sacred flow of the river, serving as a unique example of social harmony. This festival holds special significance not only for the entirety of India but also for followers of Indian culture worldwide.

Minister of State (Independent Charge)- Cooperative,  ShriJayendra Pratap Singh Rathore emphasized that under the guidance of Prime Minister Narendra Modi and the leadership of Chief Minister Yogi Adityanath, Uttar Pradesh’s double-engine government is uniquely showcasing the cultural, spiritual, traditional, and mythological essence of the rare and highly distinguished religious event of Mahakumbh on the global stage. The state government is extending invitations for Mahakumbh-2025, the grand festival of Sanatan Indians, to all states across India and the entire world. In this context, we have come to you with a humble request to participate in this sacred pilgrimage

எக்ஸ்டிரீம் ( Xtreme) பட இசை வெளியீட்டு விழா !!

SIEGER PICTURES ( சீகர் பிக்சர்ஸ் )
நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் “Extreme”( எக்ஸ்டிரீம் ). இம்மாதம் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்
தயாரிப்பாளர் ராஜ்குமார் பேசியதாவது…

இப்படம் எங்களது இரண்டாவது படம். நண்பன் ராஜவேல் முதலில் ஒரு கதை சொன்ன போது, அதை ஷார்ட் ஃபிலிமாக எடுத்தோம். அந்தப்படம் நிறைய விருதுகள் வாங்கியது, அதில் என் நடிப்பும் பாராட்டப்பட்டது. பின் நாம் ஏன் படம் எடுக்கக் கூடாதென, தூவல் எனும் படத்தை எடுத்தோம், அதுவும் நிறையப் பாராட்டுக்கள் வாங்கியது. அதன் பின்னர், பெண்களின் பாதுகாப்பை மையப்படுத்தி, இந்தக்கதையைச் சொன்னார். உடனே இதை செய்யலாம் என இதை ஆரம்பித்தோம். என்னை போலீஸாக நடிக்கச் சொன்னார், நான் தயங்கினேன், ஆனால் ஊக்கம் தந்து நடிக்க வைத்தார், படம் நன்றாக வந்துள்ளது. விரைவில் திரைக்குக் கொண்டு வருகிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது….

எக்ஸ்டிரீம் இந்தப்படம் பற்றி எந்த ஒரு விசயமும் தெரியாமல் தான் கலந்துகொண்டேன். டிரெய்லர் பார்த்த போது, நாம் நினைக்காத விசயத்தை எல்லாம் செய்கிறார்களே என மகிழ்ச்சியாக உள்ளது. டைட்டிலே வித்தியாசமாக உள்ளது. சீகர் பிக்சர்ஸ் நிறைய வெற்றியோடு பயணிக்க வேண்டுமென வாழ்த்துகிறேன். ரக்‌ஷிதா மஹாலட்சுமியின் ரசிகன் நான், கடந்த வாரம் ஒரு படம் பார்த்தேன், அருமையாக நடித்திருந்தார். இந்தப்படத்திலும் நன்றாக நடித்துள்ளார். அபி நட்சத்திரா அயலி மூலம் கலக்கியவர், இதிலும் நன்றாக நடித்துள்ளார். தொழில் நுட்ப கலைஞர்களும், மிக அற்புதமாக பணிபுரிந்துள்ளனர். இசை அருமை, ஒளிப்பதிவு நன்றாகக் காட்சிப்படுத்தியுள்ளார். தன் கணவரின் ஆசைக்குப் பின்புலமாக இருந்து படத்தைத் தயாரித்திருக்கும், தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள். எப்போதும் வெளியிலிருந்து, சினிமாக்காரர்களை கலாய்ப்பார்கள் ஆனால் நிஜத்தில் சினிமாக்காரர்களை விடக் கேவலமானவர்கள் இங்கு இருக்கிறார்கள். சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார் அதற்குள் அவரை கட்டம் கட்டி விமர்சிக்கிறார்கள். அவர் முதலில் அரசியல் செய்யட்டும் பின் விமர்சிக்கலாம். சினிமாவில் இருந்து நிறைய முதல்வர்கள் வந்துள்ளார்கள். சினிமாவிலிருந்து யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். இந்த நேரத்தில் சினிமாவுக்கு வந்திருக்கும் சீகர் பிக்சர்ஸுக்கு வாழ்த்துக்கள். இயக்குநருக்கு என் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் ராஜ் பிரதாப் பேசியதாவது…

இயக்குநர் ராஜவேல் பிரதரை எனக்கு மிக நீண்ட காலமாகத் தெரியும், அவர் இந்தக்கதையைச் சொன்ன போது, கொஞ்சம் காண்டரவ்ர்ஸியாக தெரிந்தது. முழுதாக கேட்ட போது தான் கதையின் அழுத்தம் புரிந்தது. படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

பிழை பட தயாரிப்பாளர் தாமோதரன் பேசியதாவது..

நான் படமெடுக்கும் போது, நடந்த விசயங்கள் நினைவுக்கு வருகிறது. ஒரு படம் ரிலீஸாக வேண்டுமானால் நிறைய பேரின் சப்போர்ட் வேண்டும். அது இந்த குழுவிற்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. ஒரு படத்தில் எவ்வளவு முடியுமோ அந்தளவு எக்ஸ்டிரீம் சென்று, இந்த படத்திற்காக உழைத்துள்ளனர். ரக்‌ஷிதா மேடம் மிக நன்றாக நடித்துள்ளார். இயக்குநரைப் பார்க்கும் போது, அந்தக்கால இயக்குநர் பாண்டியராஜன் சார் ஞாபகம் வந்தது வாழ்த்துக்கள். பெரிய படம் போலத் தான் எல்லா சின்னப்படமும் இங்கு எடுக்கிறார்கள், அதே பெரிய படத்திற்குக் கொடுக்கும் சப்போர்ட்டை இந்த படத்திற்கும் தாருங்கள். அனைவருக்கும் நன்றி.

நடிகை அபி நட்சத்திரா பேசியதாவது…

இயக்குநர் ராஜவேல் கதை சொன்னபோது நார்மலாகத்தான் இருந்தது, ஆனால் அதில் எவ்வளவு விசயம் இருக்கிறது என்பது படத்தில் நடிக்கும் போது தான் தெரிந்தது. தயாரிப்பாளர்களுக்கு என் நன்றிகள். படம் மிக நன்றாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது….

இந்தப்படம் டிரெய்லர் பார்த்தேன், மனம் விட்டு வாழ்த்த வைத்துவிட்டது. மியூசிக், கேமரா, நடிப்பு எல்லாம் அருமையாக உள்ளது. இயக்குநர் எல்லோரையும் வேலை வாங்கியுள்ளார். இவரின் தூவல் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்றனர். அது தமிழ்நாட்டின் சாபம், ஏதோ மொழி புஷ்பா படத்திற்கு 500 திரையரங்குகள் தந்துள்ளார்கள். முதலில் தமிழ்ப்படத்திற்குத் திரையரங்குகள் தாருங்கள், எத்தனை காலம் புஷ்பா மாதிரி படங்கள் உங்களைக் காப்பாற்றும்? அதனால் எப்போதும் தமிழுக்கு முக்கியத்துவம் தாருங்கள். தமிழ் நடிகர்களை நடிக்க வையுங்கள். அதன் பிறகு மற்ற மொழிகளுக்கு வாய்ப்பு கொடுங்கள். இப்போதெல்லாம் நல்ல கதையுள்ள சின்ன படங்கள் தான் ஜெயிக்கிறது. லப்பர் பந்து படம் பெரிய படங்களைத் தாண்டி ஜெயித்தது. அதை மக்கள் தான் ஜெயிக்க வைத்தார்கள். அது போல் இந்தப்படத்திலும் எல்லா மனமும் மிக நன்றாக உள்ளது. படம் கண்டிப்பாக ஜெயிக்கும் வாழ்த்துக்கள். கடந்த வாரம் ஒரு பெரிய படத்தைப் பத்திரிக்கையாளர்கள் தோற்கடித்துவிட்டதாகச் சொன்னார்கள். படம் நன்றாக இருந்தால் யாராலும் அதன் வெற்றியைக் குறைக்க முடியாது. நல்ல படம் எடுங்கள் பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தருவார்கள் என்றேன். அதே போல் நல்ல படமெடுத்த இந்தக்குழு ஜெயிப்பார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் ராஜகுமாரன் பேசியதாவது…

சீகர் பிக்சர்ஸ் கமலா குமாரி அம்மா, ராஜ்குமார் மற்றும் இயக்குநர் ராஜவேல் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். தெளிவாகத் திட்டமிட்டுச் சரியாக வேலை செய்பவர்கள் கண்டிப்பாக ஜெயிப்பார்கள். அந்த வகையில் திட்டமிட்டு நல்ல படைப்பைத் தந்துள்ள இந்தக்குழுவினரும் ஜெயிப்பார்கள் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் ராஜ்குமார் நன்றாக நடித்துள்ளார், தொடர்ந்து நடியுங்கள். படத்தில் எல்லோரும் நன்றாக பணியாற்றியுள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த Xtreme படம் Xtreme வெற்றி அடையட்டும் வாழ்த்துக்கள்.

நடிகை ரக்‌ஷிதா மஹாலட்சுமி பேசியதாவது…

பிக்பாஸ் முடிச்சு வந்தபோது தான் இயக்குநர் எனக்கு போன் செய்தார். அவருக்கு முதலில் என்னை யாரென்று தெரியவில்லை. எனக்கு லுக் டெஸ்ட் எல்லாம் வைத்தார். அவருக்கு என்ன வேண்டும் என்பதில், மிகத் தெளிவாக இருந்தார். அவருக்கடுத்து சிவம் மிகக் கடினமாக உழைத்துள்ளார். இந்தப்படத்தில் மியூசிக் மிக அற்புதமாக வந்துள்ளது. டிரெய்லர் பார்த்த எல்லோரும் பாராட்டினார்கள். நான் நடிக்காமலிருந்தாலும் இந்தப்படத்தை வியந்து பார்த்திருப்பேன். அந்தளவு நல்ல கதையம்சம் உள்ள படம். எல்லோரும் எவ்வளவு கடுமையாக இப்படத்திற்காக உழைத்துள்ளனர் என அருகிலிருந்து பார்த்துள்ளேன். படம் மிக அருமையாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் கமலா குமாரி பேசியதாவது…

மேடைப்பேச்சு தான் எங்களுக்குச் சோறு போடும் தொழில். அதிலிருந்து தான் வந்துள்ளோம். என் கணவர் கனவும் என் கனவும் நனவாக வேண்டும் என்பது தான் ஆசை. அவருக்கு நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை, அதற்காகத் தான் இப்படத்தைத் தயாரித்தோம், ஆனால் அதை மிக நல்ல படைப்பாகத் தர வேண்டும் என்று தான் உழைத்துள்ளோம். ராஜவேல் மிக நல்ல படைப்பைத் தந்துள்ளார். இப்படத்திற்காக ஒத்துழைப்பைத் தந்த ரக்‌ஷிதாவுக்கு நன்றி. படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

படத்தின் இயக்குநர் ராஜவேல் பேசியதாவது…

எனது பிழை படத்தை சென்னையில் ஒரு வாரம் கஷ்டப்பட்டு ஓட வைத்த என் முதல் பட தயாரிப்பாளர் தாமோதரன் அவர்களுக்கு நன்றி. என் வாழ்வில் முக்கியமானவர் சிவம் சார் அவர் தான் இந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் கமலகுமாரி, ராஜ்குமார் அவர்களிடம் அழைத்துச் சென்றார். முதலில் ஒரு ஷார்ட் ஃபிலிம் தான் எடுத்தோம் அதற்கே ராஜ்குமார் சார் என்ன கேட்டாலும் தருவார், இந்தப்படத்திற்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார். என் டீம் எனக்காக எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுப் பார்த்தனர். அனைவருக்கும் நன்றி. ஒரு குறுகிய காலத்தில், சின்ன பட்ஜெட்டில் படம் செய்ய முடிந்ததற்குக் காரணம் இவர்கள் தான். பெண்களுக்கான படம் இது, தப்பாகப் போய்விடக்கூடாது என்று தயாரிப்பாளர் தெளிவாக இருந்தார். நானும் கண்டிப்பாகத் தவறாகிவிடாது எனச் சொன்னேன். இன்று ஆடியன்ஸ் மாறிவிட்டனர் ஆனால் திரையரங்குகள் மாறவில்லை. பெரிய அளவில் திரையரங்குகள் கிடைக்காத போதும் வெளியூர்களில், எனது தூவல் படம், இரண்டாவது வாரம் நன்றாக ஓடுகிறது. ஆனால் சென்னையில் திரையரங்குகள் தரவில்லை. உலகநாடுகள் முழுதும் 40 விருதுகள் வழங்கி அங்கீகரித்த திரைப்படம், இங்கு மக்கள் ஆதரவு இருந்தும், திரையரங்குகள் தராதது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர்கள் நல்ல படத்திற்குத் திரையரங்குகள் தருவதில்லை. நல்ல திரைப்படங்களைத் திரையிடுங்கள். எனக்கு இந்தப்படத்தில் கிடைத்த வரம் ரக்‌ஷிதா மேடம் தான், அவருக்குள் ஒரு இரும்புப் பெண் இருக்கிறார். உப்புக்கருவாடு படத்தில் கலக்கியிருந்தார் அதைப்பார்த்துத் தான் நான் அவரை இப்படத்திற்குத் தேர்ந்தெடுத்தேன். அபி நட்சத்திரா, ஆனந்த் நாக் எல்லோரும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர். தயாரிப்பாளருக்கு வெற்றி வரவேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். அதை மனதில் வைத்துத் தான் உழைத்துள்ளோம். ஒரு நல்ல படைப்பு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் பேரரசு பேசியதாவது…

இயக்குநர் படத்தை மிகக் குறைந்த காலத்தில் எடுத்ததாகக் கூறினார். இந்த காலகட்டத்தில் ஒரு படத்தை மிக அழகாக பிளான் செய்து, மிக சிக்கனமாக எடுப்பது தான் மிகச்சிறந்த இயக்குநருக்கான திறமை. இவர்கள் அதைத் திறம்படச் செய்து நல்ல படத்தைத் தந்துள்ளார்கள். ரக்‌ஷிதா கண் பயங்கர ஈர்ப்பாக இருப்பதாகச் சொன்னார் ஆர் வி உதயகுமார் சார், அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ரக்‌ஷிதா நன்றாகவும் நடித்துள்ளார். பெண்களுக்கான நல்ல விசயத்தைச் சொல்லும் படமாக இப்படம் வந்துள்ளது. சினிமா தான் நம் நாட்டில் உயர்ந்த விசயம், பெண்ணிற்குப் பாதுகாப்பை, குடியின் தீமையை, அம்மா அப்பா பாசத்தை என பல நல்ல விசயங்களை, சினிமா தான் சொல்கிறது. அரசியல்வாதி நடிக்க வந்தால் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் சினிமாக்காரன் அரசியலுக்கு வந்தால் ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?. எல்லோரையும் எல்லா காலகட்டத்திலும் கூத்தாடிகள் எனத் தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். கூத்தாடி தான் நாட்டுக்கு நல்லது சொல்கிறான். கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் இன்று விஜய் என எல்லோருமே கூத்தாடிகள் தான். ஜாதியைப் பேசுவது எப்படி தவறோ?, அது போல் கூத்தாடியை இழிவாகப் பேசுவது தவறு தான். அரசியல்வாதியை விட சினிமாக்காரன் எவ்வளவோ மேல். ஒரு நல்ல விசயத்தைப் பேசும் இப்படத்தை ஆதரியுங்கள் நன்றி.

Xtreme என்றால் உச்சக்கட்டம், தீவிரம், அளவுக்கு அதிகம்னு சொல்லுவோம்.
எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. ஆனால் அதை மீறும்போது நடக்குற விளைவுதான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தில் சரவணன் மீனாட்சி தொடர் மற்றும் பிக்பாஸ் 6 வது சீசன் மூலம் பிரபலமான ரக்ஷிதா மஹாலஷ்மி மற்றும் சமீபத்தில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அயலி படத்தின் மூலம் பிரபலமான அபி நட்சத்ரா, நேரம் படத்தைத் தொடர்ந்து ரெஜினா படங்கள் உட்படச் சிறந்த படைப்புகளில் நடித்துவரும் ஆனந்த் நாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மற்றும் இவர்களுடன் அம்ரிதா ஷெல்டர், ராஜ்குமார், சிவம் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு : D.J. பாலா
சந்தானம் நடித்த பிஸ்கோத், காசேதான் கடவுளடா போன்ற படங்களுக்கு இசையமைத்த ராஜ் பிரதாப் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.
டம்ளர் குத்து மற்றும் ஹிப்ஹாப் ஆதி நடித்த ஆகிய படங்களுக்கு நடனம் அமைத்த சிவ்ராக் சங்கர் நடனம் அமைக்கிறார்.
சண்டை பயிற்சியை சிவம் மேற்கொள்கிறார்.
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்
தயாரிப்பு நிறுவனம் : SIEGER PICTURES
தயாரிப்பாளர்கள் : கமலகுமாரி, ராஜ்குமார்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ராஜவேல் கிருஷ்ணா.
இவரது முதல் படமான ” பிழை “சென்னை திடைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது படமான ” தூவல் ” உலகம் முழுக்க 40 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்டிரீம் ( Xtreme) திரைப்படம் இம்மாதம் 20 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது.

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம்

“எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. குறிப்பாக “தேவைக்கு கிடைக்காததும்… தேவைக்கு அதிகமாக கிடைக்கிறதும்…
எப்பவுமே ஒரு வலிதான்…” என பாரதிராஜா குறிப்பிடும் வசனம் மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தி வைரலாகி கொண்டு வருகிறது.

திரு.மாணிக்கம் படம் மாஸ்டர் பீஸ் நிறுவனம் மூலம் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் பெருவாரியான திரையர‌ங்குகளில் வெளியிடப்படுகிறது.

மேலும் ZEE தொலைக்காட்சி நிறுவனம் திரைக்கு வரும் முன்னரே திரு.மாணிக்கம் திரைப்படத்தை பார்த்து இதயம் கரைந்து இந்தப் படம் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற படமாகவும் மனதை நெகிழவைக்கும் படமாகவும் இருக்கும் என்பதை உணர்ந்து, திரு.மாணிக்கம் திரைப்படத்தின் OTT மற்றும் SATELLITE உரிமையை வாங்கி உலகமெங்கும் வெளியிடவிருக்கிறார்கள்…

‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி திரு.மாணிக்கம் திரைப்படத்தை விறுவிறுப்பான திரைக்கதையாக எழுதி இயக்கியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார்.

ஆதங்கம்… ஆற்றாமை… தவிப்பு… தடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாப் பாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜாவும், நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். இவர்களுடன் அனன்யா, தம்பி ராமையா, வடிவுக்கரசி, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன், இரவின் நிழல் சந்துரு..ஆகியோர் வேறொரு புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கிறார்கள்.

‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்திலும் கவரவிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட இசைகலைஞர்களை வைத்து ஹங்கேரியில் பின்னணி இசையை இரவு பகல் பாராது உயிரோட்டத்துடன் உருவாக்கியுள்ளார்.

பாடலாசிரியர்கள் சினேகன், ராஜு முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் அற்புதமான இத்திரைப்படத்தை ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.

Trailer Link ▶️ https://youtu.be/_vRPCVjGs-4?si=-2XhqsaCPiM-KAIR

“மெட்ராஸ்காரன்” திரைப்பட இரண்டாவது சிங்கிள் “காதல் சடுகுடு”

SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் “காதல் சடுகுடு” பாடல் வெளியீட்டு விழா, தனியார் மாலில், மக்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, சிறப்பாக நடைபெற்றது.

ஆடல், பாடல், நடனம் மற்றும் மேஜிக் ஷோ என மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வினில்…

இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது…
மிக மிகச் சந்தோசமாக இருக்கிறது. படம் ஆரம்பித்து இவ்வளவு தூரம் வந்துவிட்டது. விரைவில் உங்களை மகிழ்விக்கத் திரையில் இப்படத்தைக் கொண்டு வருகிறோம். இந்தப்படம் ஆரம்பமாக மிக முக்கிய காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தாவுக்கு நன்றி. சதீஷ் மாஸ்டர், அருமையாக வேலை பார்த்துத் தந்ததற்கு நன்றி. எடிட்டர் வசந்த் பார்க்க சின்னப்பையன் போல இருப்பார், ஆனால் அருமையாக வேலை பார்த்துள்ளார். ஷேன் நிகாம், நிஹாரிகா இருவரும் பெரும் ஒத்துழைப்பு தந்தனர், இருவருக்கும் நன்றிகள். தயாரிப்பாளர் ஜகதீஸ் என் மீது நம்பிக்கை வைத்து முழுதாக கதை கேட்காமல் தயாரித்தார் அவருக்கு நன்றி. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.

டான்ஸ் மாஸ்டர் சதீஷ் பேசியதாவது…
மிக மகிழ்ச்சியாக உள்ளது. எப்போதும் கோரியோகிராஃபராக என் வேலை கேமராவுக்கு பின்னால் முடிந்து விடும். பல வருடங்களுக்குப் பிறகு, கோரியோகிராஃபராக மேடை ஏறியுள்ளேன். மெட்ராஸ்காரன் படக்குழுவிற்கு நன்றி. காதல் சடுகுடு பாடல் இனிமையான அனுபவம். இந்தப் பாடலுக்கு கல்லூரி காலத்தில் நடனமாடியுள்ளேன், இந்த பாடலை ரீமேக் செய்ய வேண்டும் என சொன்ன போது, மகிழ்ச்சியாக இருந்தது. ஷேன் நிகாம் ரசிகன் நான், மனிதர் எப்படி இப்படியெல்லாம் நடிக்கிறார் என வியந்திருக்கிறேன். அவர் இந்தப்பாடலில் இருக்கிறார் என்பது மகிழ்ச்சி. நிஹாரிகாவும் மிக அருமையாக ஒத்துழைத்தார். என்னிடம் இருந்த ஐடியாவை பிரசன்னா மிக அட்டகாசமாக எடுத்து தந்தார். பாடல் பார்த்து எல்லோரும் பாராட்டுகிறார்கள். இயக்குநர் மிகவும் ஆதரவாக இருந்தார். தயாரிப்பாளர் ஜகதீஸ் பட்ஜெட்டை மீறி இப்பாடலுக்காகச் செலவு செய்தார். பிருந்தா மாஸ்டர், மணிரத்னம் சார் என ஜாம்பவான்கள் செய்த பாடல், அவர்களுக்கு அர்ப்பணிப்பாக இந்த பாடல் செய்துள்ளோம். எனக்குப் பெரிய சம்பளம் தந்துள்ளார் தயாரிப்பாளர். இந்தப்படத்தை மிகவும் நம்புகிறார். கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் நன்றிகள்.

நடிகர் கலையரசன் பேசியதாவது…
இங்குள்ள ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நாம் எல்லாப்படத்திலும் உண்மையாக அர்ப்பணிப்போடு உழைப்போம், ரசிகர்கள் தரும் ஆதரவு தான் நாம் நடிகர்களாக வெற்றி பெறுகிறோம். தயாரிப்பாளர் ஜகதீஸ் நல்ல மனசுக்காரர், அவருக்காக இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். ஷேன் டார்லிங், நிஹாரிகா சூப்பராக நடித்துள்ளனர். ஐஸு இந்தப்படத்தில் வித்தியாசமான ரோல் செய்துள்ளார். டைரக்டர் வாலிக்கு நன்றி. இந்தப்படத்தில் எல்லோரும் சின்சியராக உழைத்துள்ளனர். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது…
SR PRODUCTIONS என்னுடைய புரடக்சன் மாதிரி தான். இந்த புரடக்சன் ஆரம்பித்த நாட்களிலிருந்து உடன் இருந்துள்ளேன். ஜகதீஸ் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். அவரது மனதுக்கு இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என நம்புகிறேன். நான் ஒரு நல்ல நடிகையாகப் பெயரெடுக்க, வாலி ஒரு நல்ல வாய்ப்பை தந்துள்ளார். ஷேன் நிகாம் அவருக்கு இங்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. நிஹாரிகாவுக்கு வாழ்த்துக்கள். வாலி மிகப்பெரிய டைரக்டராக வர வாழ்த்துக்கள். அலைபாயுதே என் ஃபேவரைட் ஃபிலிம், இந்தப்பாடலைத் தந்த மணிரத்னம் சார், ஏ ஆர் ரஹ்மான் சார், சரிகமாவிற்கு நன்றி. இந்தப்பாடல் எங்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.

நடிகை நிஹாரிகா பேசியதாவது…
எல்லோருக்கும் நன்றி. படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. எனது கனவு நனவாகியிருக்கிறது. மணி சார் மாதிரி ஜாம்பவான் செய்த பாடல் எங்களுக்குக் கிடைத்தது வரம். என்னை ஆட வைத்த சதீஷுக்கு நன்றி. பாடல் அழகாக வரக் காரணம் ஜகதீஸ் சார் தான் அவருக்கு நன்றி. வாலி சார் இந்தப்படத்தை என்னை நம்பி தந்ததற்கு நன்றி. எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது, ஆனால் பாடல் பார்த்து பாராட்டுக்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் படம் உங்களை மகிழ்விக்கும் நன்றி.

நடிகர் ஷேன் நிகாம் பேசியதாவது…
தயாரிப்பாளர் ஜகதீஸுக்கு நன்றி. மலையாளத்தில் நிறையத் தயாரிப்பாளர்களுடன் வேலை பார்த்துள்ளேன். ஆனால் யாரும் இவர் அளவு ஒத்துழைப்பு தந்ததில்லை நன்றி. சதீஷ் , என்னை ஆட வைத்ததற்கு நன்றி. நிஹாரிகா நல்ல ஒத்துழைப்பு தந்தார். வாலி மோகன் தாஸ் இந்தப்படம் தந்ததற்கு நன்றி. தமிழ்ப் படங்களின் ரசிகன் நான், என் முதல் தமிழ்ப்படம் இது, கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்தப்படம் பிடிக்கும் நன்றி.

தயாரிப்பாளர் B.ஜகதீஸ் பேசியதாவது…
என் தாய் தந்தைக்கு முதல் நன்றி. பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. எங்களுக்கு இந்த பாடலைத் தந்த ஏ ஆர் ரஹ்மான் சார், மணிரத்னம் சார், சரிகமா நிறுவனத்திற்கு நன்றி. இந்தப்பாடலுக்கு யாரை டான்ஸ் மாஸ்டராக போடலாம் என்ற போது சதீஷ் தவிர யாரும் ஞாபகத்திற்கு வரவில்லை. அவர் பாடல் கேட்டு விட்டு இந்தப்பாடல் பயங்கர ஹிட்டாகும் நானே செய்கிறேன் என்றார். நான் சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாகச் செய்தார், ஆனால் அவர் செய்த விஷுவல் பார்த்த போது ஏன் இந்த பட்ஜெட் வந்தது எனத் தெரிந்தது. பிரசன்னா அவரும் அருமையான விஷுவல் தந்துள்ளார். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். ஷேன் நிகாம் தயாரிப்பாளரிடம் இவ்வளவு நெருக்கமாக ஒரு ஆக்டர் இருப்பாரா எனத் தெரியவில்லை, நான் எப்போது கொஞ்சம் சோகமாக இருந்தாலும் உடனே உற்சாகப்படுத்துவார். இந்தப்படம் வந்த பிறகு தமிழில் மிக முக்கியமான நடிகராக இருப்பார். கலை பிரதர் உரிமையாகப் பழகுவார். மெட்ராஸ் அன்பு மாதிரிதான் நிஜத்திலும், நிறையக் கஷ்டப்பட்டிருக்கிறார். இப்படத்தில் துரை சிங்கமாகக் கலக்குவார். நிஹாரிகா மேடம் பெரிய புரடியூசர் ஆகிவிட்டார். மிகவும் அன்பானவர். இந்தளவு டான்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கவில்லை. மிக நன்றாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா மிகச்சிறந்த நண்பர், நான் வெற்றி பெற வேண்டுமென மனதார நினைப்பவர். எனக்கா நிறைய உழைத்துள்ளார். வாலி மோகன் தாஸ் கதை சொன்ன போதே பிடித்தது. மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். இந்தப்படம் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும். பல தடைகளைக் கடந்து தான் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறேன். இதே மவுண்ட் ரோட்டில் டீ வித்திருக்கிறேன். இப்போது தயாரிப்பாளராக மாறியுள்ளேன். கண்டிப்பாக இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் கலையரசன் முதன்மைப் பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.

ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார்.

பெரும் பொருட்செலவில், உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனாவின் “தி கேர்ள்பிரண்ட்”

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் திறமைமிகு நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் “தி கேர்ள்பிரண்ட்”. பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை, கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மெண்ட் பேனர்கள் இணைந்து தயாரிக்கிறது. ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள “தி கேர்ள்பிரண்ட்” படம் ஒரு அழகான காதல் கதையைச் சொல்கிறது. இப்படத்தை தீரஜ் மொகிலினேனி மற்றும் வித்யா கோப்பினிடி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இன்று, பிரபல முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா “தி கேர்ள்பிரண்ட்” படத்தின் டீசரை வெளியிட்டார்.

படம் குறித்து விஜய் தேவரகொண்டா கூறியதாவது.. “”தி கேர்ள்பிரண்ட்” டீசரில் உள்ள ஒவ்வொரு காட்சியும் வெகு சுவாரஸ்யமாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகாவை சந்தித்தேன். பல பெரிய வெற்றிகளைப் பெற்றாலும், இன்னும் அவர் மிகவும் அடக்கமாகவே இருக்கிறார். “தி கேர்ள்பிரண்ட்” படம், ஒரு நடிகையாக அவருக்கு அதிக பொறுப்பை அளித்துள்ளது, அந்த பொறுப்பை அவர் முறையாக ஏற்றுக்கொண்டு, தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களின் இதயங்களைக் கவரும் “தி கேர்ள்பிரண்ட்” படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துகள்,” என்று அவர் கூறியுள்ளார்.

“தி கேர்ள்பிரண்ட்” டீஸர் ராஷ்மிகா கல்லூரி விடுதிக்குள் நுழைவதிலிருந்து தொடங்குகிறது. டீசர் ஹீரோ தீக்ஷித் ஷெட்டி மற்றும் ராஷ்மிகாவின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது, அவர்களுக்கு இடையேயான அழகான உறவைக் காட்டுகிறது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் முன்னணி ஜோடியின் உணர்வுபூர்வமான பயணம் இதயப்பூர்வமான தருணங்களுடன் அவர்களின் உறவைச் சித்தரிக்கிறது. கவித்துவமான உரையாடல்களுடன் விஜய் தேவரகொண்டாவின் குரல்வளம் நம்மை கவர்கிறது. ஹேஷாம் அப்துல் வஹாப்பின் பின்னணி இசையும், டீசரின் முடிவில் ராஷ்மிகாவின் உரையாடலும் அனைவரையும் கவர்வதாக அமைந்துள்ளது. வித்தியாசமான காதல் கதையாக உருவாகி வரும் “தி கேர்ள்பிரண்ட்” விரைவில் திரைக்கு வர உள்ளது.

Cast: Rashmika Mandanna, Deekshith Shetty, and others.

நடிகர்கள்: ராஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி மற்றும் பலர்.

தொழில்நுட்ப குழு:

  • ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த்
  • இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
  • ஆடைகள்: ஷ்ரவ்யா வர்மா
  • தயாரிப்பு வடிவமைப்பு: எஸ். ராமகிருஷ்ணா, மௌனிகா நிகோத்ரி
  • மக்கள் தொடர்பு : யுவராஜ்
  • மார்கெட்டிங் : முதல் காட்சி
  • வழங்குபவர் : அல்லு அரவிந்த்
  • தயாரிப்பு பேனர்கள் : கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ், தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட்
  • தயாரிப்பாளர்கள்: தீரஜ் மொகிலினேனி, வித்யா கோப்பினிடி

– எழுத்து & இயக்கம் : ராகுல் ரவீந்திரன்

சீயான் விக்ரம் நடிக்கும் ‘ வீர தீர சூரன் ‘

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீர தீர சூரன் – பார்ட் 2 ‘எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி. கே. பிரசன்னா மேற்கொள்ள, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் கவனித்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் ஏற்கனவே வெளியாகி பதினான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ எனும் இந்த திரைப்படத்தின் டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வியப்பில் ஆழ்த்தி இருப்பதால்… படத்தைப் பற்றிய ஆர்வத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.‌

சீயான் விக்ரம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

HYATT INDIA LAUNCHES AN ALL ‘NEW F&B CAMPAIGN’

The campaign reinforces its position as a culinary leader and further cements its reputation as a trailblazer in India’s hospitality industry

Chennai(December 5, 2024) – Hyatt India today unveiled its innovative Food and Beverage (F&B) campaign in India, poised to reinforce its position as a leader in the country’s luxury culinary landscape. The campaign aligns with Hyatt’s core value of caring for people, empowering them to be their best. With this campaign Hyatt reinforces its position as a culinary leader and further cements its reputation as a trailblazer in India’s hospitality industry. 

Hyatt’s culinary journey in India is rooted in the success of its signature restaurants, including La Piazza, TK’s Oriental Grills, China House, The Flying Elephant, Malabar Café, Koyo Koyo to name a few. These iconic outlets have consistently delivered exceptional dining experiences, reflecting the brands passion for innovation, quality, creativity, and authenticity. The campaign celebrates this legacy with a bold narrative.

“This campaign represents a bold new chapter in our culinary journey, one that celebrates the evolving tastes and preferences of Indian consumers. By showcasing our commitment to exceptional cuisine, authentic service, and unforgettable experiences, we’re challenging traditional notions of luxury dining and inviting guests to discover a world of experiences that’s both accessible and exceptional. Above all, the campaign is rooted in our purpose of `Care`. The line `No matter what we do, Our restaurants take all your attention` is based on the insight that exceptional F&B experiences are a powerful thing. They can even make you forget other great things about our hotel –like fabulous service, attention to detail, the thoughtfulness. The film endswith the message `Made with Love, Cherished Forever` epitomising the attention to detail and effort behind all our F&B offerings that result in unforgettable experiences for our guests said Deepa Krishnan, Head of Marketing, India and Southwest Asia, Hyatt.

Hyatt globally and in ASPAC is known for our F&B programme. In India, Hyatt has a strong legacy with restaurants like La Piazza, TK’s Oriental Grills, China House, The Flying Elephant, Koyo Koyo, Malabar Café and many more. At Hyatt, we’re committed to redefining luxury dining in India. We’re passionate about exceeding expectations and crafting experiences that linger long after the meal is finished. From the first bite to the last, every detail – our chefs’ creativity, our staff’s warmth, and the ambience – is thoughtfully designed to make our guests feel truly special and celebrated,” said Thomas Angerer, Director of Food & Beverage, India and Southwest Asia, Hyatt.

Conceptualised by Animal and Directed by Achowe, the campaign can be seen across Digital, OOH and Property platforms.

The campaign takes center stage in a captivating brand film, where the exceptional gastronomic experience at Hyatt’s restaurants shines. At the heart of the film is Hareesh, a Hyatt staff member who exemplifies the brand’s commitment to exceptional service and meticulous attention to detail. Not to be outdone, the restaurant experience is equally captivating with an array of chefs who create an unforgettable experience for the guests. As the narrative unfolds, one phrase perfectly captures the essence of the Hyatt experience: “Made with Love, Cherished Forever”

“There are over 535 million posts under #food on Instagram – delicious-looking reels, carousels, stories that can make your mouth water and also, fill you up. So when we set out to do a campaign about the legendary food and restaurants of Hyatt, one thing all of us were clear on was that we couldn’t lead with food – because it’s everywhere. So we started thinking about how great food makes us feel. What it makes us do. What it opens our eyes to. And finally: what great food makes us turn a blind eye to.

A thought that hopefully does justice not only to the incredible food at Hyatt but also to the fabulous, courteous, hard-working people who work there.” said Sayantan Choudhury, Senior Partner, Animal

இசையமைப்பாளர் வித்யாசகர், முதல் முறையாக இசையமைத்த, ஆன்மிக ஆல்பம், “அஷ்ட ஐயப்ப அவதாரம்”

ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் தயாரிப்பில், சரிகமா நிறுவனம் வழங்கும், இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில், “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆன்மிக ஆல்பம் !!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசகர், முதன்முறையாக ஆன்மிக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஐயப்ப சாமியின் புகழ் பாடும் வகையில் உருவாகியுள்ள, “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தை, இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் சார்பில், முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் 225 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்றவர், இசையமைப்பாளர் வித்யாசாகர். முன்னணி நட்சத்திரங்களின் வெற்றிப்பாடல்கள் முதல், காலத்தால் அழியாத பல அற்புதமான மெலடி பாடல்களைத் தந்து, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த வித்யாசாகர், முதன் முறையாக ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

சுயாதீன ஆல்பங்கள், திரைப்பட பாடல் இசை, ஆன்மீக ஆல்பம் என இந்திய இசைத்துறையில் கோலோச்சும் முன்னணி இசை நிறுவனமான
சரிகமா நிறுவனம் இந்த “அஷ்ட ஐயப்ப அவதாரம்” இசை ஆல்பத்தினை வெளியிட்டுள்ளது.

“அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தின் 10 பாடல்களுக்கும் வித்யாசாகர் இசையமைக்க, முன்னணி நட்சத்திர பாடகர்கள் சித்ரா, ஷங்கர் மகாதேவன், ஹரிசரண், விஜய் பிரகாஷ், புஷ்பவனம் குப்புசாமி முதலாக பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.

இந்த பாடல்களின் ஆடியோ வடிவம் வெளியாகி, இசை தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வீடியோ வடிவில் இது வரை 4 பாடல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான “கருப்பு வராரு” வீடியோ பாடலில், தினேஷ் மாஸ்டர் நடனமைக்க, இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் நடனமாடியுள்ளார்.

“அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பம் பாடல் விபரம்

1.அஷ்ட ஐயப்ப அவதாரம்
வித்யாசாகர், திருப்புகழ் மதிவண்ணன், விஜய் பிரகாஷ்

2.காடேரி மலையேரி வித்யாசாகர், முரளிகிருஷ்ணன் ரங்கன்

3.தங்கத்திலே வீடு கட்டி
வித்யாசாகர், கே.எஸ்.சித்ரா

4.அய்யனே
வித்யாசாகர், சந்தீப் நாராயண்

5.ஹரி ஓம்
வித்யாசாகர், விஜய் பிரகாஷ், டாக்டர் கிருத்தியா

6.கருப்பு வராரு
வித்யாசாகர், சங்கர் மகாதேவன், டாக்டர் கே.பி. வித்தியாதரன்

7.கண்ட கண்ட
வித்யாசாகர், ஹரிசரண், நெல்லை ஜெயந்தா

8.துள்ளி வரகுது வேல்
வித்யாசாகர், அபிநயா செண்பகராஜ், மாளவிகா ராஜேஷ், சுஷ்மிதா நரசிம்மன், அபர்ணா நாராயணன், வாலி

9.வில்லாளி வீரனே
வித்யாசாகர், புஷ்பவனம் குப்புசாமி, டாக்டர் கிருத்தியா

10.பம்பா கணபதி
வித்யாசாகர், மது பாலகிருஷ்ணன், பா.விஜய்

கீழ்காணும் லிங்கில் அனைத்து பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம்.
https://linktr.ee/ashtaayyappaavatharam

ஜே எஸ் கே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள ‘ஃபயர்’

பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, ‘அநீதி’, ‘வாழை’, உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ‘ஃபயர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பத்மன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தால் உந்தப்பட்ட விறுவிறுப்பான திரில்லர் ஆகும்.

ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாராகும் ‘ஃபயர்’ திரைப்படத்திற்கு டி கே (அறிமுகம்) இசையமைத்துள்ளார். சதீஷ் ஜி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநரும் பிரபல வசனகர்த்தாவுமான எஸ் கே ஜீவா வசனங்களை எழுதியுள்ளார். படத்தொகுப்பை சி எஸ் பிரேம் குமாரும் கலை இயக்கத்தை தேவராஜும் கையாள, பாடல்வரிகளை ‘கே ஜி எஃப்’ புகழ் மதுரகவி இயற்றியுள்ளார், மானஸ் நடனம் அமைத்துள்ளார்.

இசை வெளியீட்டு விழா முக்கிய அம்சங்கள் வருமாறு:

வசனகர்த்தா எஸ் கே ஜீவா பேசியதாவது…

“‘அநீதி’ படத்திற்கு நான் எழுதிய வசனங்களை பார்த்து பாராட்டிய ஜே எஸ் கே அவர்கள்
‘ஃபயர்’ திரைப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பை வழங்கினார். நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று அறியப்பட்டவர் இயக்குநராகவும் இப்படத்தில் தனது திறமையை நிரூபித்துள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் சிறப்பாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் பணிபுரிந்துள்ள நடிகர், நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், பாடல் ஆசிரியர், நடன அமைப்பாளர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளனர் இப்படிப்பட்ட ஒரு கதையை திரையில் செல்வதற்கு தைரியம் வேண்டும், அது ஜே எஸ் கே அவர்களிடம் உள்ளது அவருக்கும் படக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.”

கவிஞர் மதுரகவி பேசுகையில்…

“ஒரு இயக்குநராக தனக்கு என்ன தேவை என்பதை வாங்குவதில் ஜே எஸ் கே அவர்கள் கெட்டிக்காரர். இந்த படம் விளிம்பு நிலை மாந்தர்களுக்கான விழிப்புணர்வு படம். இப்படத்திற்கு ஃபயர் என்று ஜே எஸ் கே சார் பெயர் வைத்திருக்கிறார். உண்மையில் அவர் ஒரு பன்முக ஃபயர். பல திறமைகளை தன்னகத்தே கொண்டவர். இப்படம் சிறப்பாக உருவாகி உள்ளது. நன்றி.”

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…

“தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக ஆகி இருக்கும் ஜே எஸ் கே-க்கு இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகள். ஃபயர் படத்தின் முன்னோட்டம் பெயருக்கேற்றார் போல ஃபயர் ஆக உள்ளது. அடுத்தது என்ன என்று ஆவலை தூண்டுகிறது. தேசிய விருதுகள் வென்ற படங்களின் தயாரிப்பாளர் இயக்கியுள்ள முதல் படமும் தேசிய விருது பெறும் என நம்புகிறேன். இதில் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.”

கவிஞர் ரா பேசியதாவது…

“பாடலாசிரியராக இது என்னுடைய முதல் மேடை. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த ஜே எஸ் கே அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என நம்புகிறேன்.”

நடன இயக்குநர் மானஸ் பேசியதாவது…

“இயக்குநர் ஜே எஸ் கே இப்படத்தில் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். நடிகர்கள் பாலாஜியும் காயத்ரியும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். ஒரே இரவில் முழு பாடலையும் எடுத்து முடித்தோம். ஆதரவளித்த ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் நன்றி.”

ஒளிப்பதிவாளர் சதீஷ் ஜி பாபு பேசியதாவது…

“சிவா சார் மூலம் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது அவருக்கு நன்றி. ஏனென்றால் அவர் மூலம் தான் ஜே எஸ் கே சாரின் அறிமுகம் கிடைத்தது. ஒரு ஒளிப்பதிவாளராக அவரை திருப்திப்படுத்தி உள்ளேன் என்று நினைக்கிறேன். படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி.”

படத்தொகுப்பாளர் சி எஸ் பிரேம்குமார் பேசியதாவது…

“குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மா சாருக்கு நன்றி சொல்லி என் உரையை தொடங்குகிறேன். என்றால் அவர் மூலமாகத்தான் ஜே எஸ் கே சார் எனக்கு பழக்கம். எட்டு வருடங்களுக்குப் பின்னரும் என்னை நினைவு வைத்து இப்படத்தில் பணியாற்ற அழைத்தார். ஒரு குழுவாக இணைந்து இப்படத்தை உருவாக்கி உள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள்.”

நடிகை அனு பேசியதாவது…

“இது எனக்கு முதல் படம், முதல் மேடை. எஸ் கே ஜீவா சார் மூலம் தான் ஜே எஸ் கே அவர்கள் அறிமுகமானார். ஃபயர் திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தை செய்துள்ளேன், ஆனால் அது படம் முழுக்க வரும். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த ஜே எஸ் கே சாருக்கு நன்றி.”

இசையமைப்பாளர் டி கே பேசியதாவது…

“எனக்கு வாய்ப்பளித்த ஜே எஸ் கே சாருக்கு நன்றி. வாய்ப்பளித்தார் என்பதை விட நிறைய கற்றுத் தந்தார் என்று சொல்லலாம். குறிப்பாக ரீ ரெக்கார்டிங்கில் நிறைய நுணுக்கங்களை அவரிடம் இருந்து அறிந்து கொண்டேன். படத்தில் நான் இசையமைத்த ஒரு பாடல் ஆரம்பத்திலேயே அவரது மிகவும் பிடித்திருந்தது. இன்னொரு பாடலுக்கு நிறைய மெனக்கெட்டு அவரை திருப்திப்படுத்த வேண்டி இருந்தது. ஃபயர் படத்தில் பணியாற்றியது ஒரு மிகச்சிறந்த அனுபவம், நன்றி.”

நடிகை சாந்தினி தமிழரசன் பேசியதாவது…

“இப்படத்தில் துர்கா என்ற வேடத்தில் நான் நடித்துள்ளேன். பெண்களுக்கு மிகவும் தேவையான ஒரு கருத்தை தாங்கி வரும் படம்தான் ஃபயர். அனைவரும் இப்படத்தை திரையரங்கத்தில் பார்த்து ஆதரவு தர வேண்டும்.”

நடிகை காயத்ரி ஷான் பேசியதாவது…

“சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் இது எனது முதல் மேடை. அதற்காக ஜே எஸ் கே சாருக்கு நன்றி. முதலில் கதை கேட்கும் போது பயமாக இருந்தது. ஆனால் முழுவதும் கேட்டு முடித்ததும் மிகவும் பிடித்து இப்படத்தை உடனே ஒப்புக் கொண்டேன். பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கும் ஆண்களை ஏமாற்றும் பெண்களுக்கும் இப்படம் ஒரு பாடமாக இருக்கும்.”

நடிகை சாக்ஷி அகர்வால் பேசியதாவது…

“இந்த படம் ஒரு துணிச்சலான முயற்சி. இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் அவசியமான கருத்தை இது சொல்கிறது. அதே சமயம் இளைஞர்கள் ரசிக்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளது இந்த கருவை கையில் எடுத்ததற்காக ஜே எஸ் கே அவர்களுக்கு நன்றி. அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்.”

நடிகர் பாலாஜி முருகதாஸ் பேசியதாவது…

“இது கிட்டத்தட்ட எனக்கு முதல் படம் மாதிரி தான். களி மண்ணுக்கு மதிப்பில்லை. ஆனால் அதை பானையாகவோ பொம்மையாகவோ செய்தால் அதன் மதிப்பே வேறு. அது போல் என்னை இப்படத்தில் இயக்குநர் ஜே எஸ் கே மற்றும் இதர குழுவினர் செதுக்கி உள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.”

தயாரிப்பாளர் டி சிவா பேசியதாவது…

“நினைத்ததை முடிப்பதில் ஜே எஸ் கே வல்லவர். துணிச்சல் மிகுந்தவர், தன்னம்பிக்கை மிக்கவர், ஆளுமை உள்ளவர், அன்பானவர். அவர் இயக்கிய முதல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பது மிக்க மகிழ்ச்சி. பாடல்களும் முன்னோட்டமும் மிகவும் அருமையாக உள்ளன. இந்த படம் மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி பேசியதாவது…

“திட்டமிடலுக்கு பெயர் பெற்றவர் ஜே எஸ் கே. என் தந்தையாருக்கு பிறகு இன்றைய காலகட்டத்தில் திட்டமிட்ட பட்ஜெட்டில் திட்டமிட்டவாறு படமெடுக்க முடியும் என்று ஜே எஸ் கே நிரூபித்துள்ளார். இந்த படத்தை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். ஃபயர் திரைப்படம் கட்டாயம் வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருதும் இல்லை.”

நடிகர்-இயக்குநர் பாண்டியராஜன் பேசியதாவது…

ஜே எஸ் கே எப்போதும் ஆச்சரியப் படுத்திக்கொண்டே இருப்பார். சினிமாவில் அவர் தொடாத இடமே இல்லை. திரைப்படங்களை விநியோகித்தார், தயாரித்தார். பின்னர் நடிக்க ஆரம்பித்தார், இப்போது இயக்குநராக உருவெடுத்துள்ளார். அவரது இந்த புதிய முயற்சி மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.

ஃபயர் திரைப்படத்தின் இயக்குநர் ஜே எஸ் கே பேசியதாவது…

“என் மீது அன்பு கொண்டு இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம், நன்றி. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இப்படம் உருவாக தங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்த எங்கள் குழுவினர் ஒவ்வொருவருக்கும் நன்றி. பொதுவாக திரைப்பட நிகழ்ச்சிகளில் உதவி இயக்குநர்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்காது. ஆகையால் எனது உதவி இயக்குநர்களை ஒரு சில வார்த்தைகள் பேச அன்புடன் மேடைக்கு அழைக்கிறேன். இந்த படத்தை இது வரை பார்த்த அனைவரும் பெரிதும் பாராட்டி உள்ளனர். ஃபயர் அனைவருக்கும் புடிக்கும். வந்திருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி.

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த‘பிரதர்’………

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான “பிரதர்” திரைப்படம், குறுகிய காலத்தில், 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது.

தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், கலக்கலான காமெடி, பொழுது போக்கு திரைப்படமாக
ZEE5 இல் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி பிரதர் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடம், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ZEE5 இல் வெளியான வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

கமர்ஷியல் காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ள ‘பிரதர்’ திரைப்படத்தில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து, குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான இப்படம், தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களை மிகவும் கவர்ந்த இப்படம் தற்போது ZEE5 தளத்தில் நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.

காதல், பாசம், சென்டிமென்ட் கலந்து வெளியான பிரதர் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இவரது இசையில் அமைந்த மக்காமிசி பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது. இயக்குநர் ராஜேஷ் தனக்கே உரிய பாணியில், கலக்கலான காமெடியுடன் குடும்பங்கள் ரசிக்கும்படி, இப்படத்தை இயக்கியுள்ளார்.

திரையில் கொண்டாடப்பட்ட இப்படம் ZEE5 டிஜிட்டல் வெளியீட்டிலும் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

ZEE5 தளம் தொடர்ந்து பல சிறப்பான சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களை ரசிகர்களுக்கென பிரத்தியேகமாக வழங்கி வருகிறது. இத்தளத்தில் சமீபத்தில் வெளியான “ஐந்தாம் வேதம்” சீரிஸ் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. தற்போது “பிரதர்” படமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.