Breaking
October 16, 2024

October 2024

Brands from Palladium showcase their Autum-Winter collection!

Chennai, October 14, 2024: Palladium and Phoenix MarketCity hosted an Autumn Winter Fashion Walk with various luxury brands from the mall like The collective, Hackett, Dune London, Tumi, Shopper Stop, Forever 21,American Eagle, Monte carlo, Femiga, Kazo, Calonge, Kompanero, New Balance, Hunkmoller, Wacole and many more  showcased the best of seasonal attire to choose from. The charismatic models strutted the ramp decked in the latest outfits alluring the spectators to have the latest, trendy must- have collections in their wardrobe. Sameer Khan, An International Fashion Choreographer, Show Director, Model Trainer and Grooming Expert known for his unique style of brining elegance in anything, choreographed the show to deliver exquisite styling techniques this Autumn-Winter. 

About Phoenix MarketCity, Chennai:

A premier destination for luxury lifestyle, it provides guests with a variety of opulent options. Phoenix continues to be “The” destination for the most affluent and sophisticated residents of the city as well as expats thanks to its truly international appearance and feel, elegantly decorated interiors, and the best of food, fashion, and entertainment from across the world. The mall provides Chennai with the most extensive and appealing lifestyle shopping experience. The stores represent a comprehensive mix of international, national, and regional luxury brands. Phoenix Marketcity in Chennai is more than simply a mall; it’s a confluence of fascinating cultures, lovely clothes, and high-end couture. A city within a city, in an urban setting with coexisting shopping, entertainment, and leisure options._____________________________________

Galaxy A16 5G,First A Series With 6 Generations of OS Upgrades, Set to Launch in India Soon

Chennai – October14, 2024: Samsung, India’s largest consumer electronics brand, is excited to announce the upcoming launch of Galaxy A16 5G smartphone in India. Galaxy A16 5G marks a significant advancement in mid-range smartphones by providing 6 generations of OS upgrades and 6 years of security updates. Samsung Galaxy A16 5G boasts segment-defining features while offering exceptional value to consumers.

The Galaxy A16 5G is set to adorn the premium Galaxy A-Series design with the signature ‘Key Island’ aesthetic. The new glasstic back pattern, coupled with a larger display and thinner bezels, transforms Galaxy A16 5G into a truly immersive entertainment device, perfect for streaming visual content. Galaxy A16 5G will be available in three stunning colours: Gold, Light Green, and Blue Black.

By providing an unmatched 6 generations of OS upgrades and 6 years of security updates in its segment, Galaxy A16 5G is set to redefine the value proposition in India’s smartphone industry and deliver unmatched experience in mid-range smartphones, enabling users to enjoy the latest features over a long period of time.

Galaxy A16 5G is the first mid-range Galaxy A series smartphone to provide an IP54 rating for water and dust resistance. It will come with ‘Knox Vault Chipset’ for securing essential data, including pins and passwords.

Adding to its unmatched longevity, Samsung Galaxy A16 5G will come with versatile features such as a triple camera system with ultra wide lens designed to capture stunning images and expansive landscapes. Galaxy A16 5G builds upon Galaxy A series’ rich heritage of delivering exceptional camera capabilities, allowing users to express their creativity like never before. In addition to its impressive camera system, a vibrant Super AMOLED display further enhances the viewing experience with brilliant colours and deep contrasts.

Additionally, an upgraded MediaTek processor will bring hyper-fast connectivity, high-performance multitasking capabilities as well as great gaming experience. Samsung Galaxy A16 5G also comes with its defense grade Knox security solutions offering features such as Auto Blocker,Secure Folder, Private Share, Pin App, etc. to enable protection of users’ personal data and safeguard against unauthorized sources, malware, and blocking any malicious activity.

Hope Striking Workers Will Return Soon and Join Us: Samsung Electronics Workers Federation

Workers at Samsung’s Chennai plant are hopeful of a bright future, days after they signed a Memorandum of Agreement with the management of Samsung Chennai. Sathish A., representative of the newly formed Samsung Electronics Workers Federation and one of the signatories to the Memorandum of Agreement, thanked everyone for the support.

“On behalf of Samsung Electronics Worker Federation, I take this opportunity to thank the management for the recognition. It is a challenging situation that I am confident of handling effectively. We will do collective bargaining on wages and other welfare measures. We thank all friends who supported us and we hope our striking friends will return back to work and join us soon. We will have good future ahead,” he said.

The Memorandum of Agreement, signed between Samsung Chennai and its representative of Workers on October 7, 2024, aims to mitigate the difficulties faced by workers and enhance the Company’s competitiveness by resolving the ongoing illegal strike which commenced on September 9th, 2024.

As per the Memorandum of Agreement, Samsung Chennai will improve the working environment for the welfare of its workers, and continuously consult with the workers committee. 

‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும் புதிய படத்தின் தொடக்க விழா

‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு – தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா + கோபி அச்சந்தா – 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் – எம். தேஜஸ்வினி நந்தமூரி ஆகியோர் கூட்டணியில் தயாராகும் #BB4 எனும் திரைப்படத்தின் தொடக்க விழா எதிர்வரும் 16 ஆம் தேதி காலை 10 மணி அளவில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு இந்தக் கூட்டணி ..‌இந்திய சினிமாவின் அற்புதமான கூட்டணிகளில் ஒன்று. இந்த டைனமிக் கூட்டணி – ஏற்கனவே ‘சிம்ஹா’, ‘ லெஜண்ட்’, ‘அகண்டா’ என மூன்று பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற படைப்புகளை வழங்கி உள்ளது. இந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் எதிர்பார்ப்புகளை கடந்து பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனையை படைத்தது.

இந்நிலையில் பாலகிருஷ்ணா – பொயப்பட்டி ஸ்ரீனு இருவரும் நான்காவது முறையாக ‘# BB4 ‘ எனும் படத்தில் மீண்டும் இணைகிறார்கள். இது தொடர்பான அறிவிப்பு நந்தமூரி பாலகிருஷ்ணா பிறந்த நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை ‘லெஜண்ட்’ படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களான ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா ஆகியோர், 14 ரீல்ஸ் பிளஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை எம். தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்.

நவராத்திரி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த தருணத்தில் எதிர்வரும் பதினாறாம் தேதி இப்படத்திற்கான பிரம்மாண்டமான தொடக்க விழாவில் வெளியீட்டிற்கான அறிவிப்பினை தயாரிப்பாளர்கள் வெளியிடுகிறார்கள். அங்கு இந்த திரைப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்..

BB4 திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் சர்வதேச தொழில்நுட்ப தரத்துடன் உருவாக உள்ளது. நடிகர் பாலகிருஷ்ணாவின் நடிப்பில் இதுவரை அதிக பொருட்செலவில் தயாரான திரைப்படமாக இந்தப் படம் அமைய உள்ளது

நடிகர்கள் : ‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பால கிருஷ்ணா

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : பொயப்பட்டி ஸ்ரீனு
தயாரிப்பாளர்கள் : ராம் அச்சந்தா -கோபி அச்சந்தா
தயாரிப்பு நிறுவனம் : 14 ரீல்ஸ் பிளஸ்
வழங்குபவர் : எம். தேஜஸ்வினி நந்தமூரி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

இயக்குநர் ஷங்கரின் “கேம் சேஞ்சர்” 10 ஜனவரி 2025 அன்று வெளியாகிறது !!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்,
குளோபல் ஸ்டார் ராம் சரண் கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில், தில் ராஜு தயாரிப்பில், தென்னிந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், கேம் சேஞ்சர் திரைப்படம், ஜனவரி 10, 2025 சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகிறது. பட வெளியீட்டை அறிவிக்கும் விதமாக, ஒரு அசத்தலான போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரில் ராம் சரண் ஸ்டைலிஷான லுக்கில் காட்சியளிக்கிறார், அவரது தோற்றம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் நேர்மைமிக்க ஐஏஎஸ் அதிகாரி ராம் நந்தன் எனும் கதாபாத்திரத்தில், இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நட்சத்திர நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார், நடிகை அஞ்சலி ஃப்ளாஷ்பேக் காட்சியில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், கேம் சேஞ்சர் ஒரு அற்புதமான காட்சி அனுபவமாக உருவாகியுள்ளது. தனித்துவமான வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். சாய் மாதவ் புர்ரா அட்டகாசமான வசனங்களை வழங்கியுள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையும், எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்ந்துள்ளது.

தயாரிப்பாளர்கள் கேம் சேஞ்சர் திரைப்படத்தை, மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். ஹைதராபாத், நியூசிலாந்து, ஆந்திரப் பிரதேசம், மும்பை மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் உள்ள பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு கண்கவர் அனுபவமாக இருக்கும்.

அதிரடி ஆக்‌ஷன் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன், கேம் சேஞ்சர் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளின் சிக்கல்களை பேசும் படமாக உருவாகியுள்ளது. கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமில்லாமல், அழுத்தமான கதையுடன் அட்டகாசமான அனுபவமாக இப்படம் உருவாகியுள்ளது.

கேம் சேஞ்சருக்கான எதிர்பார்ப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது, படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த உற்சாகத்தை கூட்டும் வகையில், தயாரிப்பாளர்கள் டீசர்கள், போஸ்டர்கள் மற்றும் ஃபிலிம் மேக்கிங் காட்சிகள் என ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர். முதல் இரண்டு பாடல்களான ஜருகண்டி மற்றும் ரா மச்சா மச்சா ஆகியவை சார்ட்பஸ்டர்களாக அமைந்தன. ரா மச்சா மச்சா யூடியூப்பில் 55 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதன் மூலம் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக சாதனை படைத்துள்ளது.

நட்சத்திர நடிகர்கள், திறமையான குழுவினர் மற்றும் வசீகரிக்கும் கதைக்களத்துடன், கேம் சேஞ்சர் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெறத் தயாராக உள்ளது. படத்தின் ரிலீஸை நோக்கி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சங்கராந்தி பாக்ஸ் ஆபிஸில் இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படம்: கேம் சேஞ்சர்

நடிகர்கள்: ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், ஜெயராம், சுனில், நவீன் சந்திரா மற்றும் பலர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்
இயக்கம் : ஷங்கர் சண்முகம்
தயாரிப்பாளர்கள்: தில் ராஜு, சிரிஷ் எழுத்தாளர்கள்: சு.வெங்கடேசன், விவேக்
கதைக்களம்: கார்த்திக் சுப்புராஜ்
இணை தயாரிப்பாளர்: ஹர்ஷித்
ஒளிப்பதிவு: எஸ்.திருநாவுக்கரசு
இசை: எஸ்.தமன்
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
லைன் புரொடியூசர்ஸ் : நரசிம்ம ராவ். என், எஸ்.கே.ஜபீர்
கலை இயக்கம் : அவினாஷ் கொல்லா
சண்டைக் காட்சி இயக்குநர் : அன்பறிவு
நடன இயக்குநர்: பிரபு தேவா, கணேஷ் ஆச்சார்யா, பிரேம் ரக்ஷித், போஸ்கோ மார்டிஸ், ஜானி, சாண்டி
பாடலாசிரியர்கள்: ராமஜோகையா சாஸ்திரி, ஆனந்த ஸ்ரீராம், காசர்லா ஷியாம்
பேனர்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘#நானிஓடேலா2 ‘படத்தின் தொடக்க விழா

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா – தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி – எஸ் எல் வி சினிமாஸ் – கூட்டணியில் உருவாகும் ‘#நானிஓடேலா 2 ‘எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, ‘தசரா’ எனும் பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படத்தை தொடர்ந்து அதன் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா மற்றும் ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரியுடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இரண்டாவது முறையாக இணைகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘ #நானி ஓடேலா 2 ‘ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ‘இந்த திரைப்படம் ‘தசரா’ திரைப்படத்தை விட நூறு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும்’ என நானி அண்மையில் தெரிவித்திருந்தார்.

‘தசரா’ திரைப்படம் ஏராளமான விருதுகளை குவித்து பெரும் புகழை பெற்றுள்ளதால், இந்த பான் இந்திய திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு உற்சாகத்துடன் அதிகரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கான தொடக்க விழாவை நடத்த தயாரிப்பாளர்கள் நவராத்திரி திருவிழாவை தேர்வு செய்தனர்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா அழுத்தமான மற்றும் வாழ்க்கையை விட பெரிய கதையை அடர்த்தியான திரைக்கதையுடன் வடிவமைத்துள்ளார். இதில் நானியை இதற்கு முன் கண்டிராத வகையில் மாஸான கதாபாத்திரத்தில் காட்சிப்படுத்தவிருக்கிறார். இதற்காக நடிகர் நானி.. அவருடைய தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டு இருக்கிறார். இது அவரது நடிப்பில் தயாராகும் மிகவும் கொடூரமான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். பன்முக ஆளுமைக்கு பெயர் பெற்ற நானி- இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா உடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். வெற்றிகரமான மற்றும் டைனமிக் கூட்டணியுடன் தயாராகும் இந்த திரைப்படம்.. நானியின் திரையுலக பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இருக்கும்.

நடிகர்கள் : நானி

தொழில்நுட்பக் குழு:

எழுத்து & இயக்கம் : ஸ்ரீகாந்த் ஓடேலா
தயாரிப்பாளர் : சுதாகர் செருகுரி
தயாரிப்பு நிறுவனம் : எஸ் எல் வி சினிமாஸ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும் “விஸ்வம்பரா”

மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி சாகசத் திரைப்படத்தில் நடித்து நீண்ட காலமாகிவிட்டது, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அவர், நம்மை புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், பிரம்மாண்டமான
ஃபேண்டஸி சாகசத் திரைப்படமான, விஸ்வம்பரா படத்தில் நடித்து வருகிறார். பிம்பிசாராவின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, தனது ஆதர்ஷ நாயகனை இப்படத்தில் இயக்குகிறார் இயக்குநர் வசிஷ்டா. முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது, முன்னதாக ரசிகர்களுக்கு உறுதியளித்தபடி, தயாரிப்பாளர்கள் தசரா பண்டிகையை முன்னிட்டு, படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும் டீசர் ரசிகர்களைப் பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி உலகிற்கு அழைத்துச் செல்கிறது. இந்த டீசர் இது ஒரு மாய நிலப்பரப்பில் துவங்குகிறது. மீன் வடிவ பறவைகள் வானத்தில் பறக்க, கர்ஜிக்கும் காண்டாமிருகங்கள் அங்கு உலவுகிறது. ஒரு தீய சக்தி இந்த சாம்ராஜ்யத்தின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க அச்சுறுத்துகிறது. என்ன நடக்கும் ? காலம் தான் அந்த கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும்.

இந்த இருளை எதிர்கொள்ள முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு நாயகன் உதயமாகிறான். ஒரு இளம் பெண் வரவிருக்கும் போரைப் பற்றி அறிய முற்பட்ட உடனேயே, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு சூப்பர் ஹீரோவைப் போல, பறக்கும் குதிரையில் சவாரி செய்கிறார். டீஸர் சிரஞ்சீவியின் அதிரடி காட்சிகளைக் காட்டுகிறது, இது ஒரு சக்திவாய்ந்த தருணத்தில் முடிவடைகிறது, அங்கு அவர் தனது எதிரிகளுக்கு எதிராக ஒரு சூலாயுதத்தைப் பயன்படுத்துகிறார், இது அவருக்கு வழிகாட்டும் தெய்வீக வலிமையைக் குறிக்கும் ஹனுமான் சிலையால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவில் தனித்து நிற்கும் ஒரு நம்பமுடியாத பிரபஞ்சத்தை வடிவமைத்துள்ள வசிஷ்டாவின் தொலைநோக்கு பார்வை உண்மையிலேயே முன்மாதிரியானது. பிரமிக்க வைக்கும் மற்றும் கற்பனையான உலகம் பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கதைசொல்லல் ஆரம்பத்திலிருந்தே ஈர்க்கிறது, அதன் அழுத்தமான அறிமுகங்கள் பார்வையாளர்களை ஈர்க்கிறது. அதிரடி காட்சிகள் பிரமிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடைசி பகுதிகள், ஹனுமான் சிலை மற்றும் சிரஞ்சீவியின் தந்திரத்துடன் கூடிய சக்தி வாய்ந்த செயல் ஆகியவை இந்த டீசருக்கு சிறப்பு சேர்க்கிறது.

சிரஞ்சீவி இளமையாகவும் வசீகரமாகவும் தோற்றமளிக்கிறார், சமீப காலங்களில் தோற்றங்களிலிருந்து மிக மாறுபட்ட தோற்றத்தில் மெகாஸ்டார் ரசிகர்களை ஈர்க்கிறார். ஃபேண்டஸி சாகசத்தில் அவர் ஜொலிக்கிறார். அதிரடி காட்சிகளில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆன்டிஹீரோவின் முகம் மறைக்கப்பட்டிருந்தாலும், அப்பாத்திரம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தத் திரைப்படத்தில் ஒரு நட்சத்திர நடிகர்கள் மற்றும் உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றுகிறார்கள், த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் முன்னணி கதாநாயகிகளாக நடிக்கின்றனர், மேலும் குணால் கபூர் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த டீஸர் முதன்மையாக சிரஞ்சீவியின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறது.

விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக இருக்கும். இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதுகிறார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர். ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.

இந்த அற்புதமான டீசரைப் பார்த்த பிறகு, விஸ்வம்பராவைப் பார்ப்பதற்கான ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தில் உள்ளது.

நடிப்பு : மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: வசிஷ்டா தயாரிப்பாளர்கள்: விக்ரம், வம்சி, பிரமோத் பேனர்: UV கிரியேஷன்ஸ்
இசை: எம்.எம்.கீரவாணி
ஒளிப்பதிவு : சோட்டா கே நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ் ஆடை வடிவமைப்பாளர்: சுஷ்மிதா கொனிடேலா எடிட்டர்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், சந்தோஷ் காமிரெட்டி
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
பாடல் வரிகள்: ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ்
ஸ்கிரிப்ட் அசோசியேட்ஸ்: ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மதி ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா
நிர்வாகத் தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ்
லைன் புரடியூசர்: ராமிரெட்டி ஸ்ரீதர் ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

BTG Universal, ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படங்கள்  !!

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பு துறையில் கோலோச்சி வரும் BTG Universal நிறுவனத்துடன் இணைந்து இரண்டு புதிய படங்களில் பணியாற்றவுள்ளார். பிரம்மாண்டமான கமர்ஷியல் படங்களாக உருவாகவுள்ள, புதிய படைப்புகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.  

தமிழ் திரையுலகில் கால் பதித்து பல வித்தியாசமான படங்களை பிரம்மாண்டமாக தயாரித்து வரும் BTG Universal நிறுவனம், 20 வருடங்களை கடந்து தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல் உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய  அளவில் ஜாம்பவானாக கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன்,  BTG Universal நிறுவனம்  மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M.மனோஜ் பெனோ தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று நிறுவனம் மற்றும் திரைப்படங்களின் படைப்பாற்றல் மற்றும் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார். இந்நிறுவனம் சின்ன படம், பெரிய படம் என்று பாராமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களுக்கு பிடித்தவாறு உருவாகும் படங்களை கொடுக்க இருக்கிறார்கள்.

முன்னதாக இந்நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்,  அருள்நிதி நடிப்பில் வெளியான ஹாரர் திரைப்படமான “டிமான்ட்டி காலனி 2” ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.  அடுத்ததாக இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் இயக்கத்தில் நடிகர்கள்  வைபவ் மற்றும் அதுல்யா நடிப்பில் காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள “சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே படப்புகழ் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ”ரெட்டதல” படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் அடுத்ததாக ஜெயம்ரவியை வைத்து பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களை உருவாக்கவுள்ளது.

தமிழ் திரையுலகில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஜெயம் ரவி 20  ஆண்டுகளை கடந்து முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். வித்தியாசமான கதைகளங்களில், மாறுபட்ட பாத்திரங்களில் பல வெற்றிப்படங்களை தந்து ரசிகர்களின் விருப்பமிகு நாயகனாக, குடும்பங்கள் கொண்டாடும் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். 

ரசிகர்கள்  ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் BTG Universal நிறுவனத்தின் தயாரிப்பில்
அவர் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதிய படங்களின் இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படங்களின்  தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

‘லெவன்’ திரைப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட்டார்

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’ திரைப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட்டார்

டி. இமான் இசையில் ஷ்ருதி ஹாசன் பாடிய உற்சாகமிக்க பாடலை சரிகம வெளியிட்டுள்ளது

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’ திரைப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார். டி. இமான் இசையில் ஷ்ருதி ஹாசன் பாடியுள்ள ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்’ எனும் இப்பாடலின் வரிகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் எழுதியுள்ளார். முன்னணி இசை நிறுவனமான சரிகம இப்பாடலை வெளியிட்டுள்ளது.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான ‘லெவன்’ திரைப்படத்தை தங்களது மூன்றாவது படைப்பாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர்.

இயக்குநர் சுந்தர் சி இடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

முதல் பாடலான ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்’ குறித்து பேசிய இயக்குநர், “உற்சாகம் மிகுந்த இந்த பாடல் உயர்தரத்தில் முழுக்க ஆங்கிலத்தில் உருவாகியுள்ளது. டி. இமானின் இசையும் ஷ்ருதி ஹாசனின் குரல் வளமும் பாடலுக்கு மிகப்பெரிய பலமாகும். நாயகன் மற்றும் வில்லனைக் குறித்த பாடலாக இது அமைந்துள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை உருவாக்கும் என்று நம்புகிறோம்,” என்றார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இணையத் தொடர், ‘சரபம்’, ‘சிவப்பு’ மற்றும் சசிகுமாரின் ‘பிரம்மன்’ உள்ளிட்டவற்றில் நடித்துள்ள இவர், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் எதிர் நாயகனாக தற்போது நடித்து வருகிறார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ‘விருமாண்டி’ புகழ் அபிராமி, ஆடுகளம் நரேன், ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன், ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா, அர்ஜை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கான இசையை டி. இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்புக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார்.

‘லெவன்’ திரைப்படம் குறித்த மேலும் தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக ‘லெவன்’ அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் பேனரில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் திரைப்படமான ‘லெவன்’ படத்தை நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ, “மஹாகாளி”!

பிரசாந்த் வர்மா PVCU3 இன் முதல் பெண் இந்திய சூப்பர் ஹீரோ மஹாகாளி என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார், RK துக்கல் வழங்க, பூஜா அபர்ணா இயக்கத்தில், RKD Studios சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கிறார்!!

பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் திரைப்படமாக பிரசாந்த் வர்மா எழுதி இயக்கிய ஹனுமான் பான் இந்தியா பிளாக்பஸ்டராக வெற்றி பெற்றது. PVCU3 சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ 3வது திரைப்படத்தை அறிவித்துள்ளார். RKD Studios சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் இப்படத்தை தயாரிக்க, RK துக்கல் வழங்குகிறார். RKD Studios இந்தியாவின் முன்னணி மோஷன் பிக்சர் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கையகப்படுத்தும் நிறுவனமாகும், இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பில் களமிறங்குகிறது. கதை மற்றும் திரைக்கதையை பிரசாந்த் வர்மா எழுத, பெண் இயக்குநர் பூஜா அபர்ணா கொல்லுரு இப்படத்தை இயக்குகிறார். ஆன்மீகம் மற்றும் புராணங்களை சமகால சிக்கல்களுடன் கலந்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இருந்து வரும் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் மற்றும் இந்த சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகவும் அசத்தலான சூப்பர் ஹீரோவாகும்.

இப்படத்திற்கு வங்காளத்தின் வளமான கலாச்சார பின்னணியில் அமைக்கப்பட்ட “மஹாகாளி” என்ற தலைப்பை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த சக்திவாய்ந்த மற்றும் சமூகம் சம்பந்தப்பட்ட திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரே மாதிரியான கருத்துக்களை உடைத்து, அழகு தரத்தை மறுவரையறை செய்து, முக்கிய பாத்திரத்தில் கருமை நிற நடிகையால் காளி தேவியின் தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சித்தரிப்பைக் கொண்டிருக்கும்.

காளி தேவியை அதிகமாக வழிபடும் பிராந்தியமான வங்காளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், அந்நிலத்தின் சாரத்தையும் அதன் ஆழமான வேரூன்றிய மரபுகளையும், அதிர்ச்சியூட்டும் காட்சியமைப்புகள் மற்றும் உணர்வுப்பூர்வமாக ஈர்க்கும் கதையுடன் படம்பிடிக்கும்.

அறிவிப்பு போஸ்டரில் ஒரு பெண், புலியின் தலையை மெதுவாகத் தொடும் காட்சி இடம்பெற்றுள்ளது. பின்புலத்தில் குடிசைகளும் கடைகளும் தெரிகின்றன, மக்கள் பீதியில் ஓடுகிறார்கள். ஒரு பெர்ரிஸ் சக்கரம் தீப்பிழம்புகளில் காணப்படுகிறது. பெங்காலி எழுத்துருவில் வடிவமைக்கப்பட்ட டைட்டில் போஸ்டர் நடுவில் வைரம் போன்ற வடிவத்தைக் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, அந்த பிரம்மாண்டத்தில், போஸ்டர் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது.

காளி தேவியின் கடுமையான மற்றும் இரக்க குணத்தால் ஈர்க்கப்பட்ட, அதிகாரம், நம்பிக்கை ஆகியவற்றின் காவியப் பயணமாக “மஹாகாளி” இருக்கும். இத்திரைப்படம் அவரது தெய்வீக சக்தியை மட்டுமல்ல, பாகுபாடு, உள் வலிமை மற்றும் ஒருவரின் அடையாளத்தை மீட்டெடுப்பது போன்ற கருப்பொருள்களையும் தொடும், இது பெரும்பாலும் கருமையான சருமத்தின் மதிப்பை மறுவரை செய்யும்.

இந்தியப் பெண்களின் பன்முகத்தன்மை மற்றும் அவர்களின் அடங்காத மனப்பான்மை ஆகியவற்றைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திரைப்படம், ஒருவரின் அடையாளத்தை முழுமையாகத் தழுவுவதில் உள்ள வலிமையை எடுத்துக்காட்டுகிறது. சமூக நெறிமுறைகளுக்கு சவால் விடும் வகையிலும், ஒதுக்கப்பட்ட அல்லது குறைவான பிரதிநிதித்துவம் பெற்றவர்களுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாகச் செயல்படும் வகையிலும் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு இணைந்து பணியாற்றுகிறார்கள். ஸ்மரன் சாய் இசையமைக்க, ஸ்ரீ நாகேந்திரா தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். படத்தின் நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

“மஹாகாளி” திரைப்படத்தை, இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஐமேக்ஸ் 3டியில் கண்டுகளிக்கலாம். இந்த யுனிவர்ஸில் “ஹனுமான்” சமீபத்தில் ஜப்பானில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

“மகாகாளி” வெறும் திரைப்படம் அல்ல. இது உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவத்தை நோக்கிய இயக்கம்!

தொழில்நுட்பக் குழு:
எழுத்து : பிரசாந்த் வர்மா
இயக்கம் : பூஜா அபர்ணா கொல்லுரு
தயாரிப்பாளர்: ரிஸ்வான் ரமேஷ் துக்கல் வழங்குபவர்: RK துக்கல்
பேனர்: RKD Studios
இசை: ஸ்மரன் சாய்
கிரியேட்டிவ் டைரக்டர்: சினேகா சமீரா
ஸ்கிரிப்டிங் பார்ட்னர்: ஸ்கிரிப்ட்ஸ்வில்லே
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா
எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்: வெங்கட் குமார் ஜெட்டி
விளம்பர வடிவமைப்புகள்: அனந்த் கஞ்சர்லா
மக்கள் தொடர்பு : யுவராஜ்