Breaking
September 29, 2024

September 2024

‘கியாரா கியாரா’ தமிழ் மற்றும் தெலுங்கில் செப்டம்பர் 20 முதல் ZEE5 இல் ஒளிபரப்பாகிறது

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ சீரிஸ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில்

~ கரண் ஜோஹர் மற்றும் குனீத் மோங்கா தயாரிப்பில் உருவான, “கியாரா கியாரா” சீரிஸில், ராகவ் ஜூயல், கிருத்திகா கம்ரா மற்றும் தைர்யா கர்வா ஆகியோர் நடித்துள்ளனர் ~

ZEE5 தளத்தில் வெளியான கியாரா கியாரா சீரிஸ் பெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த சீரிஸின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப்பதிப்புகளை வெளியிட்டுள்ளது. கிருத்திகா கம்ரா, ராகவ் ஜூயல் மற்றும் தைரிய கர்வா ஆகியோரின் நடிப்பில், வித்தியாசமான கதைசொல்லல் மற்றும் தனித்துவமான நடிப்பிற்காகக் கொண்டாடப்படும், இந்த அற்புத சீரிஸ், தற்போது அதன் பல மொழி வெளியீட்டின் மூலம், புதிய பார்வையாளர்களை வசீகரிக்கத் தயாராக உள்ளது. குனீத் மோங்கா கபூரின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் கரண் ஜோஹரின் தர்மா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், திறமை மிகு இயக்குநர் உமேஷ் பிஸ்ட்டால் இயக்கத்தில், உருவான ‘கியாரா கியாரா’ ஏற்கனவே ZEE5 இல் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் ZEE5 இல் அதிகம் பார்க்கப்பட்ட அசல் தொடராகும்.

உத்தரகாண்ட் மலைகளில் ‘கியாரா கியாரா’ கதை விரிகிறது, அங்கு யுக் ஆர்யா (ராகவ் ஜூயல்) என்ற போலீஸ் அதிகாரி, கடந்த கால போலீஸ் அதிகாரியான ஷௌர்யா அன்த்வால் (தைரிய கர்வா) உடன், மிகத்துல்லியமாக 11 மணிக்கு நொடிகள் மட்டும் கடந்த காலத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் வாக்கி-டாக்கியைக் கண்டுபிடிக்கிறார். 15 ஆண்டுகளாக ஊரை ஆட்டிப்படைத்த அதிதி என்ற இளம்பெண்ணின் கொலை உட்படத் தீர்க்கப்படாத குற்றங்களைத் தீர்க்க அவர்கள் ஒன்றாக வேலை செய்கிறார்கள். ஒன்றாக, அவர்கள் கடந்த காலத்தை மாற்றுகிறார்கள், இது நிகழ்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் கியாரா கியாரா வெளியானது குறித்து தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் கூறுகையில்..
‘கியாரா கியாரா’ தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த சீரிஸ் எங்கள் எதிர்பார்ப்புகளைத் தாண்டி, ரசிகர்களின் அன்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. ZEE5 மூலம், எங்கள் கதை இந்தியா முழுதும், பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது, தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீடாக, மொழித் தடைகளைத் தகர்த்து, ‘கியாரா கியாரா’ இன்னும் அதிகமான இதயங்களைத் தொடவுள்ளதில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ரசிகர்களிடமிருந்து கிடைத்து வரும் ஆதரவுக்கு நன்றி. இந்த பல மொழி டப்களை ரசிகர்கள் கொண்டாடுவதைக் காண ஆவலோடு இருக்கிறோம்.

ராகவ் ஜூயல் தனது கூறுகையில்..
“தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்கள் இப்போது தங்கள் பிராந்திய மொழியில் ‘கியாரா கியாரா’வின் அற்புத அனுபவத்தை அதன் மாயத்தன்மை மற்றும் சிலிர்ப்பைப் பார்த்து, அனுபவிக்க முடியும் என்பதை அறிந்து, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சி மூளையை அதிரவைக்கும் அதிரடி திருப்பங்களால் நிரம்பியுள்ளது, அது உங்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும். இந்த சீரிஸில் வாக்கி-டாக்கி கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது, கதைக்கு ஒரு புதிய பலத்தைச் சேர்க்கிறது. ஒவ்வொரு எபிசோடிலும், எதிர்பாரா ஆச்சரியங்கள் உங்களை வியப்பின் உச்சிக்குக் கூட்டிச்செல்லும். தவறவிடக்கூடாத ஒரு அற்புதமான சீரிஸ் இப்போது ZEE5 இல் உங்கள் மொழியில்.

செப்டம்பர் 20 முதல் ZEE5 இல் ‘கியாரா கியாரா’வை தமிழ் மற்றும் தெலுங்கில் பார்வையாளர்கள் ஸ்ட்ரீம் செய்யலாம்!

அக்டோபர் 6 முதல், “பிக்பாஸ் சீசன் 8”, உங்கள் விஜய் தொலைக்காட்சியில் !!

நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கும், “பிக்பாஸ் சீசன் 8” அக்டோபர் 6 முதல் ஒளிபரப்பாகவுள்ளது !!

“ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு..” பிக்பாஸ் சீசன் 8, அக்டோபர் 6 முதல் !!

புத்தம் புதிய பல ஆச்சரியங்களுடன், உங்கள் “பிக்பாஸ் சீசன் 8”, அக்டோபர் 6 முதல் !!

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது. சமீபத்தில் மிகப்புதுமையான முறையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில், மக்கள் முன்னிலையில் மக்கள் கைகளால் வெளியிடப்பட்ட இந்த பிக்பாஸ் சீசன் 8ன் அசத்தலான ப்ரோமோ, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மிகப்பெரும் புகழைப்பெற்று, மக்களின் மனங்களில் இடம்பிடித்த நிகழ்ச்சி, பிக்பாஸ். கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன், கோலாகலமாக அறிவிக்கப்பட்டது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கும், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அசத்தலான ப்ரோமோ, வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது புதிய சீசன் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த புதிய சீசனின் ப்ரோமோ வெளியீட்டை, விஜய் டிவி மிகப்புதுமையான முறையில் நடத்தியது. தமிழகம் முழுக்க, மக்கள் குழுமியிருக்கும், முக்கிய நகரங்களின் முக்கிய இடங்களில், பெரிய திரையில் மக்கள் முன்னிலையில் அவர்களையே வைத்து சர்ப்ரைஸாக வெளியிட்டது.

இந்த ப்ரோமோவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் பற்றி, மக்கள் அறிவுரை சொல்ல, அதைக்கேட்டுக்கொண்டு, அசத்தலாகக் களமிறங்கும் விஜய் சேதுபதி, உங்க விருப்பமான show.. இன்னும் நெருக்கமா.., இந்த வாட்டி “ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு..” எனும் டேக் லைனை சொல்லி முடிக்கும் டிரெய்லர், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த முறை நடிகர் விஜய் சேதுபதி களமிறங்குவது, மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பல புது ஆச்சரியங்களுடன், புதுப்பொலிவுடன் “பிக்பாஸ் சீசன் 8” வரும் அக்டோபர் 6 ஆம்தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட விழாவுடன் கோலாகலமாகத் துவங்கிறது.

பிக்பாஸ் சீசன் 8 உங்கள் விஜய் தொலைக்காட்சியில், அக்டோபர் 6 முதல் கண்டுகளியுங்கள்.

விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதையில் நடிகர் பிரஜன் நடிக்கிறாரா????????

சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சேவகர்’.இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் பத்திரிகையாளர்கள் ஊடகத்தினர் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள நடைபெற்றது.

இப்படத்தை திரையரங்குகளில் ஆக்சன் ரியாக்ஷன் விநியோக நிறுவனத்தின் சார்பில் வெளியிடும் விநியோகஸ்தர் ஜெனிஷ் விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். அவர் பேசும்போது,

” இந்தப் படத்தின் அறிமுக விழாவைப் பெரிதாக நடத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் ஆசைப்பட்டார். அதன்படி இன்று அரங்கு முழுதும் நிறைந்த பார்வையாளர்களோடு இந்த விழா நடைபெறுகிறது. இந்தப் படத்தின் கதை விஜய்க்காக உருவாக்கப்பட்டது. அவரை வைத்து இயக்குவதற்காக எழுதப்பட்ட கதை இது என்று கூறும் போது, கதை எப்படிப்பட்டது என்று புரியும். அப்படிப்பட்ட கதையில் பிரஜின் நடித்துள்ளார்.
சென்சாரிலேயே இந்தப் படத்தைப் பாராட்டினார்கள்.
இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்கும்படியான படமாக இருக்கும் .எந்த நல்ல முயற்சிக்கும் ஆதரவு தரும் ஊடகங்கள் இதற்கும் ஆதரவு தர வேண்டும். ” என்றார்.

தயாரிப்பாளர் ராஜன் ஜோசப் தாமஸ் பேசும்போது,

” எனக்கு சினிமா மீது மிகவும் ஆர்வம் ஈடுபாடு உண்டு. அதனால் கேரளாவில் இருந்து இங்கே வந்து சினிமாவில் நுழைய வேண்டும் என்று பல நாட்கள் அலைந்தேன்.
ஒரு துணை நடிகராகக் கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு நன்றாகப் படித்து அமெரிக்கா சென்றேன். அங்கே தபால் துறையில் 28ஆண்டுகள் வேலை பார்த்தேன். இப்போது ஓய்வு பெற்றுவிட்டு அதே சினிமா ஆர்வத்துடன் தான் இந்தியா திரும்பினேன். அந்த ஆர்வத்தை அணைய விடாமல் வைத்திருந்தேன். மலையாளத்தில் சில படங்கள் தயாரித்தேன், நடித்தேன். இங்கே பாக்யராஜ் சார் வந்திருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி.
பாக்யராஜ் சாரின் அந்த 7 நாட்கள் என்னை மிகவும் கவர்ந்த திரைப்படம். அவர் இங்கே வந்ததில் எனக்குப் பெருமை.
ஏனென்றால் அவர்களது மனைவி பூர்ணிமா அவர்கள் மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் காலத்திலேயே லேடி சூப்பர் ஸ்டார் ஆக விளங்கியவர்.அவரைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன்.அவர் படப்பிடிப்பில் இருப்பதால் இங்கே வர முடியவில்லை.

சினிமா என்பது என் கனவு.எனக்குப் பணத்தைவிட நல்ல படம் எடுப்பது தான் முக்கியம். இந்தப் படத்தின் மூலம் சம்பாதித்தால் வேறு பெரிய நல்ல படம் செய்வேன். எனவே மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

‘சேவகர்’ படத்தின் இயக்குநர் சந்தோஷ் கோபிநாத் பேசும்போது ,

“எனக்கு தமிழ் நாட்டின் மீது, திரை உலகத்தின் மீது மிகுந்த மரியாதை உண்டு . நல்ல நல்ல புதிய முயற்சிகளை வரவேற்பார்கள். அந்த நம்பிக்கையில் தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். படத்தைப் பற்றி நான் பெரிதாகப் பேச விரும்பவில்லை .என் படம் பேசப்பட வேண்டும் என்று தான் நான் நினைக்கின்றேன்” என்று கூறினார்.

கதைநாயகி ஷானா பேசும்போது,

” எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தான் தமிழ் தெரியும் .முதல் படமாக இந்தப் படம் அமைந்தது மிக்க மகிழ்ச்சி அனைவரும் ஆதரவு தர வேண்டும் “என்றார்.

படத்தின் நாயகன் பிரஜின் பேசும் போது,

” ஒவ்வொரு ஊரிலும் ஊருக்கு நல்லது செய்யும் சேவகர்கள் நாலு பேர் இருப்பார்கள்.அவர்கள் ஊருக்கு எதாவது நல்லது செய்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் ஒரு குழுவாக இருப்பார்கள். அப்படி நல்லது செய்பவர்களைத் தடுக்கும் தீய சக்திகள் இருப்பார்கள். அப்படி நல்லது செய்யும் சேவகனும் அவனை தடுக்கும் தீய சக்திகளையும் பற்றிச் சொல்வது தான் இந்தப் படம். அப்படி ஒரு பாத்திரத்தில் தான் நான் நடித்துள்ளேன்.

இதில் பலரும் படத்திற்காக உழைத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள்.
ஒரு நல்ல விஷயம் நடக்கும் என்று தான் நானும் சினிமாவில் 18 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

இயக்குநர் நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது,

“இந்தச் சிறிய படத்திற்கு இவ்வளவு பெரிய கூட்டம் வந்தது ஆச்சரியமாக உள்ளது. பிரஜின் எனக்கு பதினைந்து ஆண்டு காலமாக நட்புள்ள தம்பி. நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பு ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தபோது தூங்காமல் இருப்பதற்காக இரவில் ஆட்டோ ஸ்டாண்டில் கதை சொல்வேன் . அப்படி சொன்ன ஒரு கதை தான் கன்னி மாடம். என் மனநிலையுடன் தான் பிரஜினும் இருப்பதாக உணர்கிறேன். ஆனாலும் அவர், சரியான இடத்திற்கு வரவில்லை, வரவேண்டும். நான் கன்னிமாடம் படத்திற்கு பிரஜினை மனதில் வைத்து தான் இருந்தேன். தயாரிப்பாளரிடம் கூறியிருந்தேன். அவரும் சமதித்திருந்தார்.ஆனால் அந்தப் படத்திற்காக துறுதுறுவென உழைத்த ஸ்ரீராமுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தேன். இப்போது சொல்கிறேன் எனது அடுத்த படத்தில் பிரஜினைப் பயன்படுத்திக் கொள்வேன். இந்த படத்திற்காகத் தயாரிப்பாளர் பணத்துக்கு எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை நேரில் பார்த்தேன்.

சிறிய படங்களுக்கு இந்த சினிமாவில் வளர்ந்தவர்கள் ஆதரவு கொடுப்பதில்லை.இந்த நிலையில் இயக்குநர் பாக்யராஜ் அவர்கள் எல்லா சின்ன படங்களுக்கும் ஆதரவு கொடுத்து வருகிறார். அதேபோல் கே. ராஜன் சார் அவர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார் .இப்படி உதவி செய்கிற மனநிலையில் இருக்கும் இருவரும் இங்கே வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் இந்த அவை சிறக்கும்.

இது பற்றி நான் வெற்றிமாறன் அவர்களிடம் கேட்டபோது அவர் எனது அடுத்த ‘சார்’ படத்திற்கு ஆதரவு கொடுத்தார். வெற்றிமாறன் வழங்கும் சார் என்றவுடன் அந்த படத்தின் உயரம் எங்கோ சென்று விட்டது. எனது படத்தின் விழாவுக்கும் அவர் வருகிறார்.

ஊடகங்கள் சிறிய படங்களின் குறைகளை அதிகம் சொல்லாமல் ஊக்கப்படுத்த வேண்டும். ” என்றார்.

கதை வசனகர்த்தா வி. பிரபாகர் பேசும் போது,

“சின்ன படம் பண்ணும் தயாரிப்பாளர் தான் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை கொடுக்கிறார்கள் . பல குடும்பங்களை வாழ வைக்கிறார்கள் .இந்த தயாரிப்பாளர் தமிழ் பார்வையாளர்களை நம்பி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். இயக்குநரின் நம்பிக்கையை அறிய முடிந்தது .இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன் பேசும்போது,

“தமிழ் ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாட்டுக்குப் படம் எடுக்க, கேரளாவில் இருந்து வந்திருக்கும் இவர்களை வரவேற்கிறேன். அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். அவர்களது துணிச்சலைப் பாராட்டுகிறேன் .

ஒரு திரைப்படம் எடுக்க இயக்குநரை விட, நடிகர்களை விட தயாரிப்பாளர் முக்கியம்.

தமிழில் ஆண்டுக்கு 200 படங்கள் வந்தாலும் 150 தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். இதுதான் நிலைமை. இதற்கு யார் காரணம்?

25 நாட்களில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் ராமநாராயணன் குறுகிய காலத்தில் நன்றாகத் திட்டமிட்டுப் படத்தை எடுத்து அதிக அளவில் வெற்றிகளைக் கொடுத்தவர். 20 அல்லது 28 நாட்களில் ஒரு படத்தை முடித்து விடுவார்.ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வேலைகள் நடந்து கொண்டிருக்கும். அவர் கதாநாயகனை நம்பாமல் விலங்குகளை நம்பிப் படம் எடுத்தார் ,வெற்றி பெற்றார்.

எந்த ஒரு நடிகர் தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அந்த நடிகர் வெற்றி பெறுவார். அந்த வகையில் பிரஜினுக்கு நல்ல வெற்றி காத்திருக்கிறது. அண்மைக்காலமாகப் பெரிய கதாநாயகர்கள் படங்கள் எல்லாம் பெரிதாக ஓடவில்லை. சிறிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன.
குட் நைட், டாடா, போர் தொழில் இப்போது வந்துள்ள வாழை போன்ற சிறிய படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. தமிழ் மண்ணை அதன் பண்பாடு கிராமியத்தை சரியாகச் சொன்னால் மக்கள் ஏற்கத்தான் செய்கிறார்கள். இந்த சேவகர் படம் நிச்சயம் வெற்றி பெறும். தயாரிப்பாளர் மனதிற்கும் இயக்குநரின் நம்பிக்கையும் உரிய பலன் கிடைக்கும்.

இப்போது அதிகாரிகளிடம் 70 சதவீதம் கையூட்டு வாங்குகிறார்கள். நேர்மையானவர்கள் 30 சதவீதம் தான் இருக்கிறார்கள். அக்கிரமம் நடக்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் தான் காரணம்.
எதற்கெடுத்தாலும் முதலமைச்சரைக் குறை கூறுகிறார்கள். இவனுக்கு பஸ் தாமதமாக வந்தால் கூட முதலமைச்சர் என்ன செய்கிறார் என்கிறான். எல்லாவற்றையும் முதலமைச்சர் எப்படி கவனித்துக் கொண்டிருக்க முடியும்? சம்பந்தப்பட்ட இலகா அதிகாரிகள் தான் அதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும் .முதல்வரும் எத்தனையோ சந்திப்பு போட்டு அதிகாரிகளிடம் பேசுகிறார். சம்பந்தப்பட்டவர்கள் சரியாகப் பணியாற்ற வேண்டும்.

சமுதாய சீர்கேட்டைத் தட்டிக் கேட்கும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்.
அக்கிரமம் நடைபெறும் போது நாம் கண்டிக்க வேண்டும். தண்டிப்பதை அரசு பார்த்துக் கொள்ளும். இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும்” என்று வாழ்த்தினார்.

இயக்குநர் மோகன் ஜி பேசும்போது,

‘ எனது முதல் படத்தின் கதாநாயகன் பிரஜின். அவருக்காகத் தான் நான் இங்கே வந்தேன் .அவருக்கு நல்லதொரு வெற்றி கிடைக்க வேண்டும் .அவருடைய உழைப்புக்குப் பெரிய வெற்றி காத்திருக்கிறது. இந்தப் படத்தை மலையாளத்தில் வந்து இயக்குநர் இயக்கி உள்ளார். கேரளாவில் உள்ள அரசியல் வேறு, தமிழ்நாட்டு அரசியல் வேறு. இதில் எப்படி செய்திருக்கிறார் என்று பார்ப்போம்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்கிறது. இங்கே அப்படி இல்லை. இப்போது இங்கே கம்யூனிசம் அதிகம் பேசப்படவில்லை. இளைஞர்கள் கம்யூனிசம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். தோழர் ஜீவா என்ன செய்தார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த படம் வெற்றி பெற வேண்டும் ” என்று கூறி வாழ்த்தினார்.

இயக்குநர் கே பாக்யராஜ் பேசும்போது,

” தமிழ் ஆட்களை நம்பி இங்கே படம் எடுக்க வந்திருக்கும் கேரள தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி. எங்கிருந்து வந்தாலும் தமிழ் மக்கள் ஆதரவு கொடுப்பார்கள். இங்கே அப்படிப்பட்ட ஆட்கள் தான் இருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் இல்லை என்றால் இயக்குநர் இல்லை நடிகர் இல்லை என்று கே. ராஜன் சொன்னார் .கதை இல்லை என்றால் தயாரிப்பாளரே இல்லை .கதை இல்லை என்றால் சினிமாவில் எதுவுமே முடியாது.

ஒருவருக்கு சினிமா பிடித்து விட்டது என்றால் அது விடவே விடாது. இந்தத் தயாரிப்பாளர் அப்படித்தான் இங்கே வந்திருக்கிறார் .

அவர்
பல ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு மீண்டும் இங்கே வந்திருக்கிறார்.
இந்தப் படத்தை 25 நாட்கள் சிரமப்பட்டு முடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு செய்வது
எத்தனை நாட்கள் என்பது முக்கியமல்ல. 16 வயதிலே படம் கூட 32 நாட்களில் எடுக்கப்பட்டது தான். எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது .எவ்வளவு நாட்கள் என்பதை வைத்துப் படத்தைப் பற்றி நாம் முடிவு செய்ய முடியாது. அப்படித் திட்டமிட்டு இந்த படத்தை திட்டமிட்டு படம் எடுத்தால் தயாரிப்பாளரை இந்தப் படம் காப்பாற்றும்.

சினிமா ஆசை யாரையும் விடாது என்பது பற்றி யோசிக்கும் போது ஒன்று நினைவு வருகிறது.

ஏற்காட்டில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது ஒருவரைச் சந்தித்தேன். அவர் ஒரு டாக்டர் அவர் மிகவும் நகைச்சுவை உணர்வு உள்ளவர் .அவருக்கு இரண்டு பிள்ளைகள்.
அவர் வீட்டில் மிருதங்கம் வைத்து வாசித்துக் கொண்டு ஏதாவது செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

அவர் சினிமா ஆர்வத்தில் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தபோது
அவர் படிப்பை பாதியில் விட்டு விட்டு ஓடி வந்தவர். அப்பா அவருக்காக பெரிய ஹாஸ்பிடல் கட்டியிருந்தார். ஒரு வழியாக அவரைச் சமாதானப்படுத்தி படிக்க வைத்து டாக்டர் ஆக்கி இருக்கிறார். அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை. அவர் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு நான் ராசுக்குட்டி படத்தில் ஐஸ்வர்யாவுக்கு அப்பாவாக நடிக்க வைத்தேன்.அவருக்கு அதில் மிகவும் மகிழ்ச்சி – அதுவும் ஐஸ்வர்யாவுக்கு அப்பாவாக நடித்தது மிக மிக மகிழ்ச்சி.

அதே போல் லால்குடி முனுசாமி என்பவர் இன்னொரு ரசிகர் .அவரை எல்லாரும் ஊமை என்பார்கள். அவர் என் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் வருவார்.உதட்டு அசைவை வைத்து என்ன பேசுவது என்று கண்டுபிடிக்கும் லிப் ரீடிங் நன்றாக வரும். சரியாகச் செய்வார் .அவரை பவுனு பவுனுதான் படத்தில் டி டி ஆர் ஆக நடிக்க வைத்து என்னிடமே பேச வைப்பது போல் ஒரு காட்சியில் நடிக்க வைத்தேன்.நான் எழுதிக் கொடுத்தபடியே உதட்டு அசைவு செய்தார்.டிக்கட் இல்லாமல் வந்திருக்கிறாயே என்று என்னுடன் அவர் பேசுவது போன்ற காட்சி. அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து படத்தில் காட்டினோம்.
படமாக வந்த போது ஊரில் உள்ள அனைவருக்கும் ஆச்சரியம். அவர் எப்படிப் பேசினார் என்று .இப்படி சினிமாவில் நிறைய நிஜ கேரக்டர்களைச் சந்தித்து இருக்கிறேன் .

இங்கே இசையமைப்பாளராக இருக்கும் இந்த மோகன் எனக்கு சிங்கு என்றுதான் பழக்கம். பல ஆண்டுகளாக கோடம்பாக்கத்தில் வலம் வந்தவர். ஏவிஎம் ஸ்டுடியோவையே சுற்றிச் சுற்றி வருவார். எப்படியாவது ஒரு இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தார். பல ஆண்டுகள் இருந்தவருக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நான் அண்மையில் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்திருந்தேன். படத்தின் பெயர் 35 .அதில் பெரிய கதாநாயகனா பெரிய நடிகர்களோ கிடையாது. குழந்தைகள் சம்பந்தப்பட்ட கதை .சின்ன சின்ன சராசரியான நடிகர்களை வைத்து தான் எடுத்திருந்தார்கள்.

அமீர்கான் எடுத்தாரே தாரே ஜமீன்பர், அது போல
ஒரு சின்ன பையனை மையமாக வைத்து தான் அந்தக் கதை நகரும் .ஆனால் அந்தப் படம் இப்போது வெளியாகி பெரிய வெற்றி பெற்றுள்ளது. பெரிதும் பேசப்படுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் மக்கள் நல்ல கதையைப் பார்க்கிறார்கள் .

பொதுவாக எப்போதும் தெலுங்கில் பெரிய ஐட்டம் சாங் , சண்டைக் காட்சிகள், பெரிய ஸ்டார்கள் என்று இருந்தால்தான் படம் பார்ப்பார்கள் .இப்போது அவை இல்லாமல் கதையைப் பார்க்கிற பழக்கம் தெலுங்கு திரை உலகத்திலேயே வந்துவிட்டது .அந்தப் படத்தை தமிழில் வெளியிடும் நோக்கத்தில் தமிழில் பேச வைத்து எடுத்தார்கள். விரைவில் தமிழில் வெளியாகும்.

நல்ல படமாக இருந்தால் தெலுங்கு ரசிகர்களும் பார்ப்பார்கள். தமிழ் ரசிகர்களும் பார்ப்பார்கள். தமிழில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்.

நல்ல படம் எடுத்து தமிழ் ரசிகர்களை நம்பினால் கை கொடுப்பார்கள். நன்றாக இருந்தால் வரவேற்பு தருவார்கள் .இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்று கூறினார் .

விழாவில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது .

Ravensbourne University London Announces Admissions for MBA in Fashion Business & Entrepreneurship

Chennai, 23th September 2024: Ravensbourne University, London announces the opening of admissions for its MBA in Fashion Business & Entrepreneurship, with the course set to begin in November 2024. This one-year course is designed to offer students the advanced knowledge and skills to navigate the ever-evolving world of fashion. Applicants to the MBA program should hold a bachelor’s degree or equivalent qualification in a relevant field, such as fashion, business, or a related discipline. Ravensbourne also offers a range of scholarships and financial aid packages designed to support students from around the globe in achieving their academic and career aspirations.

Ravensbourne’s MBA in Fashion Business & Entrepreneurship is uniquely tailored for aspiring fashion professionals and entrepreneurs, offering a deep understanding of business landscapes within the fashion industry. Students will engage with industry experts, participate in live projects, and gain access to Ravensbourne’s extensive network of fashion and business professionals.

In addition to the MBA program, Ravensbourne University London offers a diverse range of other creative courses in design, media, and technology. These include BA (Hons) Interior Design Environment Architectures, BA (Hons) Digital Photography, BA (Hons) Music & Sound Production, among many others. Each program is designed to nurture creativity and innovation, equipping students with the skills and knowledge necessary to thrive in their chosen fields.

Established in the year 1962, Ravensbourne University is a digital media & design University, with vocational courses in fashion, television & broadcasting, interactive product design, architecture, environment design, music production & sound design. Ravensbourne’s commitment to excellence is reflected in its esteemed alumni, who have gone on to become leaders and innovators in the fashion and creative industries globally.

OIEG has a long track record of successfully working to build universities’ reputation overseas, enabling more Indian students to access quality education. OIEG in partnership with Ravensbourne -delivers student recruitment, compliance, conversion, admissions, student support and enrolment services.

Oxford International Education Services (OIES), a division of OIEG in India, aids University partners scale and diversify student enrolment. With over 50,000 successful admissions to-date, OIES facilitates connections for students with the pathways, vocational training, language courses, and direct degree opportunities.

Mohit Gambir, Managing Director at OIES states “The MBA in Fashion Business & Entrepreneurship has been uniquely designed for all those who are interested in pursuing a career within the fashion industry. Students will study among the UK’s finest creatives in a design led, technological and business environment and participate in a collaborative working environment. This is a fantastic opportunity for students from India who want to drive innovation and find solutions to global issues within the world of fashion.”

ஓடிடி தளங்களில் வெற்றி நடை போடும் “வாஸ்கோடகாமா”

ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல்,அர்த்தனா பின்னு,கே எஸ் ரவிக்குமார், ஆனந்த்ராஜ், வம்சி கிருஷ்ணா, முனிஸ்கான் மற்றும் பலர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வந்து வெற்றி நடை போட்ட வாஸ்கோடகாமா திரைப்படம் தற்பொழுது பிரைம் வீடியோ மற்றும் ஆகா ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது

இந்த கலியுகத்தில் இருக்கும் மனிதர்கள் அனைவரும் கெட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மத்தியில் ஒருவன் நல்லவனாக எப்படி வாழ முடியும் என்னும் ஒரு வித்தியாசமான கதை களத்தை கையில் எடுத்த இயக்குனர் அதைத் திறம்பட திரைக்கதை அமைத்து இயக்கி அதில் வெற்றியும் கண்டார் இப்பொழுது இந்த படம் ஓடிடி தளங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது

“ஹிட்லர்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!

“ஹிட்லர்” திரைப்படம் உலகம் முழுதும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது !!

Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி. படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில். படக்குழுவினர் பல விளம்பர நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

இன்று தனியார் மாலில், மிகப்பெரும் மக்கள் திரள் நிரம்பியிருக்க, படக்குழுவினர் கலந்துகொள்ள, ஹிட்லர் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, அங்கிருந்த மக்கள் அனைவரையும், மேடைக்கு ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுடன் பாடல் பாடி, நடனமாடி, அவர்களின் ஆசைகளைக் கேட்டு நிறைவேற்றினார். அங்கிருந்த 5 வயது குழந்தையுடன் அவர் சேர்ந்து பாடிய பாடலைக் கேட்டு, அங்கிருந்த மக்கள் உற்சாகத்தில் கூக்குரலிட்டு வாழ்த்தினர்.

இந்நிகழ்வினில் கலந்துகொண்ட

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது…,
உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி. சென்னை வந்து 13 வருடம் ஆகிவிட்டது, நல்ல படம் பண்ணனும், நல்ல இயக்குநரோடு, நடிகரோடு நடிக்க ஆசைப்பட்டேன். அந்த வகையில் இந்தப்படம் கிடைத்தது மகிழ்ச்சி. தனா சாருக்கும், ராஜா சாருக்கும் நன்றி. நான் பார்டி போனால் விஜய் ஆண்டனியின் மஸ்காரா பாட்டுக்குத் தான் ஆடுவேன், இப்போது அவர் படத்தில் நடனமாடியிருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும். தனா சார் படம் அருமையாக எடுத்துள்ளார். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
ஒரு நல்ல எண்டர்டெயினர் திரைப்படம் 27 ஆம் தேதி வருகிறது. எல்லோரும் திரையரங்கில் பார்த்து என்ஜாய் செய்யுங்கள். விஜய் ஆண்டனி, ஆக்சன், மாஸ், சொசைட்டிக்கு தேவைப்படுற மெசேஜ் எல்லாம் சேர்த்து, இந்தப்படத்தை நம்மிடம் கொண்டு வந்துள்ளார். சஞ்சய்க்கும் அவர் தந்தை ராஜாவுக்கும் இந்தப்படம் நல்ல லாபம் தரட்டும், நன்றி.

இயக்குநர் தனா பேசியதாவது…
என் படம் உணர்வுப்பூர்வமானதாக இருக்கும். ஆனால் இப்படம் கொஞ்சம் மாறுபட்ட ஆக்சன் படமாக இருக்கும். எனக்கு எல்லாவிதமான படமும் செய்ய வேண்டும் என ஆசை, அந்த வகையில் தான் இந்த ஆக்சன் படம் செய்துள்ளேன், விஜய் ஆண்டனி சாரை இதில் வித்தியாசமாகப் பார்க்கலாம். ரசிகர்களுக்குப் புதுமையான அனுபவமாக இருக்கும்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது…
“இந்தப்படத்தைத் தயாரித்த நண்பர் ராஜாவுக்கு நன்றி. படத்தில் என்னுடன் நடித்த கலைஞர்கள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப்படத்தில் இயக்குநர் தனா அருமையான மெசேஜ் வைத்திருக்கிறார். ரசிகர்களுக்குப் பிடிக்கும் ஆக்சன் படமாக இப்படம் இருக்கும். தியேட்டரில் எல்லோரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

பரபரப்பு திருப்பங்களுடன் ஒரு அழகான காதலும் கலந்த திரைக்கதையில், அனைவரும் ரசிக்கும் வகையிலான, திரைப்படமாக இப்படம் இருக்கும்” என்றார்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். நீண்ட இடைவேளைக்குப்பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார். நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் விவேக், மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைக் கன்னடத்தின் வெற்றிப் படமான மப்டி படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் செய்துள்ளார். கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார். Chendur film international சார்பில் T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார், பிரமாண்ட பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், பட வெளியீட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

Automotive manufacturers Pvt  ltd [ AMPL] unveils the most awaited THE SUV : The Thar ROXX

Chennai, 19th September, 2024: Mahindra & Mahindra Ltd., India’s leading SUV manufacturer, proudly presents Thar ROXX – ‘THE’ SUV, a category disruptor set to break norms and redefine the SUV landscape in the country. With a starting price of ₹ 12.99 Lakh, the Thar ROXX embodies

the Mahindra boldness and unconventional spirit. Designed and engineered to turn heads and deliver a refined drive and powerful yet safe performance, the Thar ROXX conquers all terrains while offering an array of luxurious features.

Built on Mahindra’s All-New M_GLYDE platform, the Thar ROXX delivers an exceptionally smooth ride with crisp handling and class leading dynamics. It effortlessly blends Thar’s outdoor DNA with modern sophistication, offering a premium SUV experience that caters to those who demand the finest in every aspect of their lives. 

The Thar ROXX has been rigorously tested in extreme conditions across diverse terrains and altitudes, including the scorching sand dunes of the Thar desert at +50°C, the high altitudes of Umling La, tricky muddy surfaces in Coorg and the freezing cold of -20°C in Kaza. This extensive testing guarantees that the Thar ROXX is a robust and reliable choice for the Global Indian – people who are Indian at heart but have a global mindset.

The Thar ROXX has been launched for Chennai Customers by Automotive Manufacturers Pvt Ltd, Chennai (AMPL) on Sep 19th infront of 300+ Customer in a grand way. They are taking customer’s interest for Booking & offering Test Drives to the customers. The official Bookings Open will be from 3rd Oct for The SUV.

FPL MG Ambattur  Unveils MG Windsor, India’s 1st Intelligent CUV

  • MG Windsor starts from INR 13,49,800 (Ex-Showroom)

Chennai ,  September 22  2024: JSW MG Motor India today announced the prices for the recently launched MG Windsor, starting at INR 13,49,800 (Ex-Showroom). India’s 1st Intelligent CUV combines the comfort of a sedan and the expanse of an SUV offering a luxurious business-class experience to customers.

The CUV is offered with futuristic aerodynamic design, spacious and opulent interiors, reassuring safety, smart connectivity, driving comfort, and many hi-tech features. In addition, customers are ensured complete peace of mind through various initiatives such as a lifetime warranty on the battery for the first owner, assured 60% buyback after three years, and one-year free charging at public chargers using the eHUB by MG app. The Windsor will be available in four colour options: Starburst Black, Pearl White, Clay Beige, and Turquoise Green.

The Windsor features an AeroGlide design language, which is futuristic and transcends the concept of traditional segmentation. The interiors are opulent and luxurious with spacious Aero Lounge seats that can be reclined to 1350, coupled with the expansive Infinity View Glass Roof, adding to the business class experience. Immersive entertainment and smart connectivity features are powered by a massive 15.6” GRANDVIEW Touch Display in the central console.

MG Windsor comes with a 38 kWh Li-ion battery pack, which is IP67 certified, delivering an impressive performance of 100KW (136ps) power and 200Nm Torque through four driving modes (Eco+, Eco, Normal and Sport) that results in a 332 km  ARAI certified range on a single charge.

“கோழிப்பண்ணை செல்லதுரை” திரை விமர்சனம்

சீனுராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகிபாபு. பிரகிடா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைபடம் கோழி பண்ணை செல்லதுரை
நாயகனும் அவன் தங்கையும் சிறு வயதாக இருக்கும் போது அவர்ளுடைய தாய் உன் கள்ளகாதலுடன் ஓடிவிட, அப்பாவோ அவள் மேல் உள்ள கோபத்தில் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டு அவனும் சென்று விட, அதே ஊரில் கோழி பண்ணை வைத்திருக்கும் யோகிபாபு அரவணைப்பில் 12 ஆண்டுகள் பாடுபட்டு வளர்ந்து தன் தங்கைக்கு திருமணம் முடித்து தானும் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கும் போது, ஓடி போன தாய் பைத்தியமாக வந்து நிற்க, அவளை காப்பாற்ற போகும் போது. விட்டு போன தந்தை இரண்டு கிட்னியும் செயலிழந்து ஒற்றை மகளுடன் வந்து நிற்க அவருக்கு தன் ஒரு கிட்னி தந்து காப்பாற்றி நாயகன் தியாகியாகும் கதைதான் இந்த கோழி பண்ணை செல்லதுரை.

நாயகனாக ஏகன் பல வேலைகள் செய்து தங்கையை வளர்க்கும் கதாபாத்திரம்.நிறைய தியாகத் தன்மையோடும் அமைக்கப்பட்டு இருக்கும் கதாபாத்திரம், தங்கையாக சத்யா தேவி அண்ணனே தெய்வம் என வாழ்ந்திருக்கிறார்.
பிரகிடாவிற்கு படத்தில் ஒரே ஒரு வேலைதான நாயகனை காதலிப்பது. யோகி பாபு யாருக்காக, எதற்காக இந்த படத்தில் வந்தார் என்று தெரியவில்லை. கடமைக்கு வருகிறார். நடிப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஜீவனும் இல்லை.
இயக்கம் சீனுராமசாமி இந்த மாதிரி ஒரு படத்தை நிச்சயம் நாம் அவரிடம் எதிர்பார்க்கவில்லை ஏமாற்றிவிட்டார. படத்தில் உள்ள காதாபாத்திரங்கள் எல்லாம் விட்டிற்கு உள்ளேயே செல்ல மாட்டேங்குது எல்லாம் வெளிலேயே பேசுகிறார்கள். பெண் பார்க்கும் காட்சி கூட வீட்டின் போர்டிகோவில் தான் பேசுகிறார்கள். படம் பயங்கர பட்ஜெட் படம் போல.
தேனி மாவட்டத்தில் நடக்கும் கதை என்று கூறிவிட்டு ஒரு காதாப்பாத்திரம் கூட வட்டார மொழி பேசவில்லை ஏனோ இயக்குநர் அதை கவணிக்கவில்லை.

இசை உயிரோட்டமாக இல்லை.

கோழி பண்ணை செல்லதுரை கதையில் பறவை காய்ச்சல் வந்தது போல் ஆகிவிட்டது.

“கடைசி உலகப்போர்” திரை விமர்சனம்

ஹிப்பாப் ஆதி தயாரிப்பு மற்றும் கதை, திரைகதை, எழுதி இயக்கி இருக்கும் படம் கடைசி உலக போர்.

கதைக்களம் 2028 ஆம் ஆண்டில் தொடங்குகிறது.தமிழகத்தில் முதலமைச்சராக நாசர் பதிவில் இருந்து வருகிறார்.பினாமியாக, இருக்கும் அவருடைய மச்சான் நட்டி நடராஜ் கூறும் அனைத்து ஐடியாக்களை நம்பி நாசர் செயல் பட்டு வருகிறார்.நட்டி நடராஜ்தான் தமிழக ஆட்சியையே உருவாக்கி இருப்பது போல தன்னை நினைத்து கொள்கிறார்.ரிபப்ளிக் நாடுகள், மற்ற நாடுகள் என இரண்டாக பிரிந்துள்ளது.இந்தியாவை கைபற்ற ரஷிய மற்றும் இதர ரிபப்ளிக் நாடுகள், மற்ற நாடுகள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.இந்தியாவை கைபற்ற ரஷிய மற்றும் இதர ரிபப்ளிக் நாடுகள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த சூழலில் கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதியை தமிழக முதல்வராக இருக்கும் நாசரின் மகள் காதலித்து வருகிறார்.ரிப்பப்ளிக் நாடுகள் இந்தியா மீது தாக்குதல் நடத்துகின்றனர்.தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அனைத்து மக்களும் என்ன நடக்கிறது என்று அவதிப்படுகிறார்கள்..சென்னை மாகாணம் மொத்தமும் குண்டுகள் வீசி தரைமட்டமாக அழிக்கப்படுகிறது.

இதற்கு பிறகு என்ன ஆனது? ரிபப்ளிக் நாடு சென்னையை கைப்பற்றியதா? கைப்பற்றவில்லையா? என்பதுதான் இந்த கடைசி உலகப் போர் திரைப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக ஹிப் ஹாப் ஆதி அமைதியான முறையில் மிக அருமையாக அரசியல் பேசுகிறார்.காதல் காட்சிகளில் கவனம் செலுத்தாமல் ஆக்சன் காட்சிகள் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி ரசிகர்களை கவர்கிறார்.

நாயகியாக அனகா கொடுத்த கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்.

நட்டி நட்ராஜ், தன்னை ஒரு கிங் மேக்கர் என்று சொல்லிக் கொண்டு ஆட்சியாளர்களை ஆட்டுவிக்கும் வேலையை நடிப்பின் மூலம் காண்பித்திருக்கிறார்.வழக்கமான பாணி தான் என்றாலும் கதாபாத்திரம் திரைப்படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

நாசர் தனது அனுபவ நடிப்பு கொடுத்து திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

புலிப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள், சினிமா நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாரா முனீஷ்காந்த், சிங்கம்புலி, ஹரீஷ் உத்தமன், கல்யாண், தலைவாசல் விஜய், குமரவேல், இளங்கோ குமணன் ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உடன் இணைந்து திரையில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமான ஒளிப்பதிவின் மூலம் மாயாஜாலத்தை நிகழ்த்தி இருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் இசையமைத்து இயக்கி தயாரித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, மிகவும் வித்தியாசமான முயற்சி மட்டும் இன்றி விபரீதமான முயற்சியும் இந்தத் திரைப்படத்தின் மூலம் எடுத்துள்ளார்.