Breaking
September 30, 2024

July 2024

Kauvery Doctors Successfully Perform a Complex Spine Deformity Corrective Surgery on a 2-year-old!

A 2-year-old child presented to the Kauvery Institute of Brain and Spine, Kauvery Hospital, Radial Road, with a progressively increasing hump on her upper back. She had also started developing weakness of the legs especially after playing for some time. The child had a history of tuberculosis infection affecting her spine when she was 6 months old.

After evaluating the child, Dr Krish Sridhar, Group Mentor, Neurosciences & Director, Institute of Brain & Spine, Neurosurgery, Kauvery Hospital, Radial Road, and his spine team found that the problem was due to very bad curvature deformity (Kyphosis), and compression of the spinal cord caused due to near collapse of the spinal column in the upper thoracic region. A multi-disciplinary team meeting was held to decide on the best course of action for this complex case, following which Surgical Correction of the deformity was advised for the child.

An eight-hour complex spinal procedure through the chest wall was performed on the child by a team of 4 surgeons led by Dr K Sridhar. The collapsed part of the spine was removed, and the spine reconstructed after reducing the curve. Surgery was done under continuous neuro-monitoring.

Dr Sridhar said, “Major surgery in children is relatively difficult compared to that in adults. The team performing these complex spine procedures not only requires experience, but also a thorough understanding of the developmental changes related to child growth.”

“Spinal surgery is no longer something that one needs to be scared about. The technological advances in anaesthesia, monitoring, spinal implants and other equipment⸻like high-speed drill and the operating microscope⸻have allowed precision surgery, especially in complex cases, with positive outcomes.” he stated.

The child was discharged after a week in the hospital, and is back to running around and playing. The parents and family are happy that they have been able to get a Complex Spinal Deformity Corrective Surgery done.

ரியோ- மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில் ரியோராஜ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில், ஜோ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரியோ- மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, புதுமுக இயக்குனர் “பிளாக்‌ஷிப்” கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் ரொமான்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது.

திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லும், ரொமான்ஸ் காமெடி ஜானரில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது.

ரியோ- மாளவிகா மனோஜ் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க பிளாக்‌ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், Stills பாண்டியன், ஜென்சன் திவாகர் , ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு , சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு , சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு , என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணி இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளது. S2 மீடியா சதீஷ்குமார் இப்படத்தின் மக்கள் தொடர்பு பணிகளைக் கவனிக்கிறார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கிய படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடித்து, அசத்தியுள்ளது படக்குழு.

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை துவக்கியுள்ளது படக்குழு. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்”   திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா

நடிகர்கள் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில்,  இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதுமையான திரில்லர் டிராமா “மெட்ராஸ்காரன்”  திரைப்பட டீசர் வெளியீட்டு விழா  !!

SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் B.ஜெகதீஸ்  பேசியதாவது…
நம் மெட்ராஸின் அடையாளம் எல்லா ஊர்க்காரரும் இங்கு இருப்போம், எல்லா ஊர்க்காரரும் வேலை பார்ப்போம், அதே போல் இந்த மெட்ராஸ்காரனில் எல்லாமே இருக்கிறது. எந்த ஒரு தயாரிப்பாளரும் முழு கதை கேட்டுத் தான் ஒகே செய்வார்கள், ஆனால் நான் பாதி கதை கேட்ட போதே, படத்தை ஆரம்பிக்க சொல்லிவிட்டேன். இயக்குநர் மீது இருந்த நம்பிக்கை தான் காரணம். படம் பார்த்து விட்டேன் திருப்தியாக இருக்கிறது. ஷேன் அவ்வளவு அர்ப்பணிப்பாக உழைத்துள்ளார். ஷேன் நிகாம் படப்பிடிப்பிற்கு எப்போதும் சீக்கிரம் வந்து விடுவார், இப்படத்திற்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார், அவருக்குத் தமிழில் பெரிய எதிர்காலம் இருக்கிறது. கலை பிரதர் மிக உரிமையாகப் பழகுவார். மெட்ராஸ் அன்பு பாத்திரத்திற்குப் பிறகு, இந்தப்படத்தில்  துரை சிங்கமாகக் கலக்குவார்.  நிஹாரிகா மிக அழகாக, அற்புதமாக நடித்துள்ளார். நான் தயாரிப்பாளராக இருக்க ஐஸ்வர்யாவும் ஒரு காரணம், அவர் கதாபாத்திரம் நன்றாக வந்துள்ளது. சாம் சிஎஸ் ஒரு மியூசிக் டாக்டர், படத்தை எப்படி கொடுத்தாலும் சரியாக்கி விடுவார். கேமராமேனும் நானும் எப்போதும் சாப்பாடு பற்றித் தான் பேசுவோம் அவ்வளவு நெருக்கம். எடிட்டர் சின்னப் பையன் தான் ஆனால் கலக்கிவிட்டார். படம் மிக அருமையாக வந்துள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது…
என் புரோடியூசர் முதலாளி ஜெகதீஸ், இந்தப்படம் ஆரம்பமாக, காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தா  இருவருக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து கதையை முழுதாகக் கூட  கேட்காமல்  தயாரித்தார். இந்தப்படம் பற்றி அனைவரும் சொல்லிவிட்டனர்.  படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.

நடிகர் ஷேன் நிகம் பேசியதாவது…
அன்புள்ள மனிதர்களுக்கு வணக்கம், என்ன சொல்வதென்றே தெரியவில்லை, மனது நிறைவாக இருக்கிறது. வாலி ப்ரோ, ஜெகதீஸ் ப்ரோ இருவருக்கும் நன்றி. என் மீதே, எனக்கே சந்தேகம் இருந்தபோது, வாலியும், ஜெகதீஸும் என் மீது நம்பிக்கை வைத்து, இப்படத்தை உருவாக்கியுள்ளனர். என் பட டீசரை வெளியிட்ட  நடிகர் எஸ் டி ஆருக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத்  தாருங்கள் நன்றி.

நடிகை நிஹாரிகா பேசியதாவது…
எனக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. டீசர் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மிக நல்ல திறமையாளர்கள் ஒன்றாக இணைந்து, ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளனர், ஷேன் உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை தந்த  வாலிக்கு, என் நன்றிகள்.

நடிகர் கலையரசன் பேசியதாவது…
மெட்ராஸ்காரன், என் ஊர் மெட்ராஸ் ஆனால் இந்தப்படத்தில் புதுக்கோட்டை ஆளாக நடித்துள்ளேன்.  ஷேன் நிகாம் மிக அருமையான நடிகன், அவருடன் நடித்தது மிக மகிழ்ச்சி. வாலி அவர் முன்பு செய்த படத்தின் டீசர் காட்டினார், மேக்கிங் பிடித்திருந்தது, படத்தின் கதையும் பிடித்தது, உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். படம் அருமையாக வந்துள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதெல்லாம் முக்கியமில்லை, நல்ல படத்தில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம். இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஸ் மிக ஆதரவாக இருந்தார். கதையை நம்பி நல்ல படத்தை எடுத்துள்ளார். எல்லோருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…
பணம் கொடுத்துப் பார்க்கும் ஆடியன்ஸுக்கு தரமான படைப்பைத் தர வேண்டும். நல்ல கதை வைத்து படம் செய்யும் இயக்குநருக்குக் கதை எழுதும்போது,  இந்த மாதிரி நடிகர்கள் தான் நினைவுக்கு வருவார்கள், பெரிய ஹீரோ படம் என்றால் அவருக்கு எனக் கதை மாற்றி, சீன் மாற்றி, இறுதியாக நினைத்தது வராது. இந்த மாதிரி சின்ன படத்தில் அது நிகழாது. பெரிய ஹீரோ படம் நல்லாயில்லை என்றாலும், அது வைரலாகிறது. ஆனால் சின்ன படத்திற்கு நல்லா இருந்தாலும் அது நிகழ்வதில்லை, ரசிகர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஷேன் உடன் மலையாளத்தில் வேலை பார்த்தாலும், தமிழில் வேலை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக  இருந்தது. ஒரு படம் நன்றாக எடுக்கும் போது,  எல்லோருடைய பங்களிப்பும் மிக நன்றாக வந்து விடும். இப்படம் மிகத் தரமான படைப்பாக வந்துள்ளது. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். இளன் பாடல் மிக நன்றாக எழுதியுள்ளார். கல்யாணம் பற்றி மிக அருமையான பாடலாக வந்துள்ளது. இப்படத்தில் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சி, வாலி உடன் பணியாற்றியது மகிழ்ச்சி  நன்றி.

இயக்குநர் இளன் பேசியதாவது…
இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவரும் என் ஃப்ரண்ட்ஸ். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஒரு பாடல் எழுதியுள்ளேன் உங்கள் ஆதரவைத் தாருங்கள்,  இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் பாண்டியன் பேசியதாவது…
மெட்ராஸ்காரன் படத்தில் நான் ஒரு அப்பா கேரக்டர் செய்துள்ளேன். இயக்குநர் தான் என் ஃபெர்பார்மன்ஸ் பற்றிச் சொல்ல வேண்டும். என் மகன்  இளன் இப்படத்தில் பாடல் எழுதியிருப்பது இப்போது தான் தெரியும். பாடல் அருமையாக உள்ளது. பாடல் தனியே, இசை தனியே, எனக் கேட்க இனிமையாக உள்ளது.  படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது…
தமிழ் சினிமாவில் இது எனக்கு 11 வது வருடம், பல தடைகளைத் தாண்டி எனக்கு இந்தப்படம் கிடைத்துள்ளது. பல படங்கள் நடித்துள்ளேன் ஆனால் சில படங்கள் வெளியாகவே இல்லை. வாலி மோகன் தாஸ் ஒரு முறை என்னிடம் கதை சொன்னார் , மிக அருமையாக இருந்தது, அந்தப்படம் 5 நாளில் நின்று விட்டது. மிக அருமையான படம், தயாரிப்பாளர் ஜெகதீஸ் என்னோட ஃபிரண்ட், ஃபெண்டாஸ்டிக் ஹியூமன் பீயிங், அவரிடம் எல்லாமும் சொல்வேன், வாலி பற்றிச் சொன்னேன். அப்படித்தான் இந்தப்படம் ஆரம்பித்தது. எனக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது. பிடிச்ச டைரக்டர், பிடிச்ச புரோடியூசர். ஒரு நல்ல படம். தமிழில் இந்தப்படம் மூலம் நான் மீண்டும் வருவேன். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் சரண் பேசியதாவது…
இந்தப்படத்தின் ஒருங்கிணைப்பாகவும் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறேன். இப்படத்தில் எல்லோருமே மிக அருமையாக நடித்துள்ளார்கள். நான் வாலி ப்ரோ, இருவரும் ரங்கோலி படம் முடித்த பிறகு, நிறையப் பேசிக்கொண்டிருந்தோம், அவருக்குக் கல்யாணம் நடந்தது. அப்போது தான் இந்தக்கதையை எழுதினார். அப்போது இரண்டாவது பாகத்தை எப்படி முடிப்பது என விவாதித்துக் கொண்டிருந்தோம்,  ஆனால் தயாரிப்பாளர் இரண்டாம் பாகம் கேட்காமலே படத்தைத் தயாரிக்க ஒத்துக்கொண்டு செக் கொடுத்துவிட்டார். ஷேன் நிகம் ரங்கோலி படம் பார்த்து விட்டு இந்தப்படத்தை ஒத்துக்கொண்டார். இந்தப்படத்திற்காக அவர் கொடுத்த உழைப்பு பிரமிப்பானது. கலை பிரதர் பல வருடம் பழகியவர் போலவே, அன்பைப் பொழிவார். ஐஸ்வர்யா இந்தப்படம் ஆரம்பிக்க ஒரு காரணமாக இருந்தார். நிஹாரிகா அருமையாக நடித்துள்ளார். சாம் சிஎஸ் அவர் கையில் இந்தப்படத்தின் மூச்சு உள்ளது. படம் மிக அருமையாக வந்துள்ளது,  அனைவருக்கும் நன்றி.

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.  இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் கலையரசன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடித்துள்ளனர்.

ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாகத் தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார்.

பெரும் பொருட்செலவில்,  உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பைச் சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ‘சட்னி – சாம்பார்’ சீரிஸ்………

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான காமெடி சரவெடி ஜானரில் உருவாகியுள்ள சீரிஸ், ‘சட்னி – சாம்பார்’. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த சீரிஸின் முதல் இரண்டு எபிஸோடுகள், பத்திரிக்கையாளர்களுக்காகச் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இத்திரையிடலைத் தொடர்ந்து வெப் சீரிஸ் குழுவினர், பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்

வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அஸ்வின் பேசியதாவது…
வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், நாங்கள் தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ் இது. பெரிய நட்சத்திரங்களை வைத்துத் தயாரித்துள்ளோம், ஹாட்ஸ்டார்க்கு எங்களது நன்றி. இயக்குநர் ராதா மோகன் மிக அற்புதமாக இயக்கியுள்ளார். இரண்டு எபிஸோட் பார்த்திருப்பீர்கள், உங்களுக்குப் பிடித்திருக்குமென நம்புகிறோம். மற்ற 4 எபிசோடுகள் உட்பட 6 எபிஸோடுகளும் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. முமுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள், அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா பேசியதாவது…
இயக்குநர் ராதா மோகனின் படைப்பில், நானும் இருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமை தான். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு எனது நன்றி. இந்த படைப்பில் உழைத்த அனைவருக்கும் எனது நன்றி, இந்த சீரிஸ் உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.

இசையமைப்பாளர் அஜீஸ் அசோக் பேசியதாவது…
இது எனக்கு மூனாவது வெப்சீரிஸ், ஹாட்ஸ்டாரில் இரண்டாவது வெப் சீரிஸ். என்னோட ஃபேவரைட் இயக்குநர் ராதா மோகன் சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. வேல்ஸ் பிலிம்ஸுக்கு நன்றி. யோகி பாபு சார், வாணி போஜன், கயல் சந்திரன் என எல்லோருமே மிக அருமையான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். உங்கள் எல்லோரையும் இந்த சீரிஸ் கவரும் என நம்புகிறேன் நன்றி.

நடிகர் இளங்கோ குமரவேல் பேசியதாவது…
இயக்குநர் ராதா மோகன் திரைக்கு வந்து 20 வருடங்கள் கடந்திருக்கிறது. அவரது முதல் படத்திலும் நான் இருந்தேன், அவரது முதல் சீரிஸிலும் இருக்கிறேன், மகிழ்ச்சி. ஆர்ட் டைரக்டர் கதிர், ரைட்டர் பொன் பார்த்திபன் என, நண்பர்கள் அனைவரும் அவரோடு இத்தனை வருடம் இணைந்து, பயணித்து வருகிறோம். அன்று எப்படி எனர்ஜியோடு இயங்கினாரோ, அதே எனர்ஜியோடு இன்றும் இயங்குகிறார். நடிக்கும் போது பொறுப்பை நம்மிடம் கொடுத்துவிட்டு, வேடிக்கை மட்டுமே பார்ப்பார். நமக்கு முழு சுதந்திரம் கொடுத்து, நடிக்க வைப்பார். அவரது சிறப்பு அம்சம் அது, அவருடன் வேலை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த சீரிஸை உருவாக்க மிகுந்த ஒத்துழைப்பு தந்த, வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், ஹாட்ஸ்டாருக்கும் எனது நன்றி. இந்த சீரிஸுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் நிதின் சத்யா பேசியதாவது…
வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் அவர்களுக்கு என் முதல் நன்றி, பலருக்கு வாழ்க்கை தந்திருக்கும் பிரதீப் அவர்களுக்கு நன்றி. நான் வாய்ப்பு கேட்டு ராதா மோகன் சாரிடம் சென்றேன், ஒரு சின்ன கதாபாத்திரம் இருக்கிறது செய்கிறாயா? என்று கேட்டார், அதே கதாபாத்திரத்தைக் கொஞ்சம் டெவலப் செய்து, மிகப் பெரிய பாத்திரம் ஆக்கி, என்னை இதில் நடிக்க வைத்திருக்கிறார். சார் மிகப்பெரிய நன்றி சார். என்னுடன் நடித்த இளங்கோ குமரவேல் சார், வாணி போஜன், யோகி பாபு, சந்திரன் என எல்லோருமே மிகச் சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள். பிரசன்னா மிக அருமையாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார், இசையில் அஜீஸ் அசத்தி இருக்கிறார். பொன் பார்த்திபன் மிக அருமையான வசனங்கள் தந்திருக்கிறார். உங்கள் எல்லோருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

நடிகர் கயல் சந்திரன் பேசியதாவது…
வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் அவர்களுக்கு என் நன்றிகள், இத்தனை பிரம்மாண்டமான சீரிஸ் உருவானதற்கு அவர்கள் தான் காரணம், இதற்கு ஒத்துழைத்த ஹாட்ஸ்டாருக்கு எனது நன்றிகள். இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு சீரிஸில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு எனது நன்றிகள். ராதா மோகன் சார் ஐ லவ் யூ சார், என்னை ஒரு நடிகனாக பயன்படுத்தியதற்கு நன்றி. என்னுடன் நடித்த அத்தனை பேரும் மிக அற்புதமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள், உங்கள் எல்லோருக்கும் இந்த சீரிஸ் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

நடிகை சம்யுக்தா பேசியதாவது…
இம்மாதிரி மேடையில் மிகப் பெரும் ஆளுமைகளுடன் இருப்பது, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெப் சீரிஸில், அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். நான் ராதா மோகன் சாரின் ரசிகை, அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட கால ஆசை. இவ்வளவு விரைவில் அது நடைபெறும் என நினைக்கவில்லை, இந்த சீரிஸில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்த சீரிஸில் பணிபுரிந்தது மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சீரிஸ் உங்கள் எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தும் நன்றி.

நடிகை நந்தினி பேசியதாவது…
ஹாட்ஸ்டாருக்கு என்னுடைய நன்றி, ஹாட்ஸ்டாரில் நான் செய்யும் இரண்டாவது சீரிஸ் இது. ராதா மோகன் சார் எனக்கு ஒரு மிகச் சிறந்த கதாபாத்திரம் தந்திருக்கிறார். இங்குள்ள அனைவரும் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார்கள், எல்லோரும் இனிமையாகப் பழகினார்கள். எல்லோருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு இந்த சீரிஸ் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

நடிகை மீரா கிருஷ்ணன் பேசியதாவது…
வேல்ஸ் நிறுவனத்திற்கும் ஹாட்ஸ்டாருக்கும் என் முதல் நன்றி. இது நான் நடிக்கும் முதல் வெப்சீரிஸ். இந்த கதாபாத்திரத்தைத் தந்த இயக்குநர் ராதா மோகன் சாருக்கு நன்றி. கிட்டத்தட்ட அவரை நாங்கள் லவ் பண்ணவே ஆரம்பித்து விட்டோம், அவர் எப்படி வேலை வாங்குகிறார் என்றே தெரியாது, நடிகர்களை இயல்பாக வைத்து, மிக அற்புதமாக வேலை வாங்கி விடுவார். ஜாலியாக ஒரு ஃபேமிலியில் இருப்பது போலவே தான் இருந்தது. இங்குள்ள அனைவருடனும் பணிபுரிந்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் என் நன்றி.

நடிகை வாணி போஜன் பேசியதாவது…
ராதா மோகன் சாருடன் நான் இரண்டாவது முறையாக வேலை பார்க்கிறேன், சட்னி சாம்பார் சீரிஸ் மிக அற்புதமாக வந்துள்ளது. ராதா மோகன் சார் ஐ லவ் யூ. என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் எனது அன்புகள். இந்த சீரிஸ் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சியான அனுபவம், அனைவருக்கும் என் நன்றிகள்.

ஹாட்ஸ்டார் சார்பில் பிரதீப் மில்ராய் பேசியதாவது…
ஹாட்ஸ்டாரில் பதினைந்துக்கும் மேற்பட்ட சீரிஸ் தயாரித்து வருகிறோம், நிறைகுடம் எப்பொழுதும் தளும்பாது என்பது, ராதா மோகன் சாருடன் வேலை பார்க்கும் போது தான் தெரியவந்தது. ஊட்டியில் படப்பிடிப்பாகட்டும், டிஸ்கசனாகட்டும், பல ஸ்டார்களை ஒன்றிணைத்து சூட்டிங் ஆக இருக்கட்டும், எந்த ஒரு சலனமும் இல்லாமல் மிகச் சிறப்பாகப் படப்பிடிப்பை நடத்துவார். அவருக்குள் இத்தனை காமெடி இருக்கிறது என்றே தெரியாது, மிக மிக இயல்பாக இருப்பார். யோகிபாபு மிக நன்றாக நடித்திருக்கிறார், அவருக்கு இது முதல் வெப் சீரிஸ், ராதா மோகன் சாருக்கும் இது முதல் வெப் சீரிஸ், மிக அற்புதமாக வந்துள்ளது. அத்தனை நடிகர்களும் மிக அற்புதமான உழைப்பைத் தந்திருக்கிறார்கள். பிரசன்னா மிக பிஸியான ஒளிப்பதிவாளர், ஆனால் இந்த சீரிஸில் பணியாற்றித் தந்ததற்கு நன்றி. அஜீஸ் நல்ல இசையைத் தந்துள்ளார். இந்த சீரிஸில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். இந்த சீரிஸை உருவாக்கித் தந்த வேல்ஸ் நிறுவனத்திற்கு என்னுடைய நன்றிகள். உழைத்த அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி.

கலை இயக்குநர் கதிர் பேசியதாவது…
இயக்குநர் ராதா மோகனுடன் பணியாற்றுவது மிக மகிழ்ச்சியானதாக இருக்கும், அவருடன் பணியாற்றும் போது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம். நான் இயக்குநர் ஹரி உடன் அடிதடி, சண்டை, ரத்தம், போன்ற காட்சிகள் என பணிபுரிந்து கொண்டிருப்பேன், ஆனால் இவருடன் வந்து பணியாற்றும் போது மனது இலகுவாகிவிடும். ஆரம்பகால படங்களிலிருந்து இவருடன் பணியாற்றி வருகிறேன். திடீரென ஒரு நாள் கூப்பிட்டு, ஒரு விமானத்தை செட் போட முடியுமா? என்று கேட்டார். உனக்கு என்ன பைத்தியமா? என்று கேட்டேன். ஆனால் கதையைச் சொல்லி, விமான செட் போடச் சொன்னார். அந்த விமான செட் போட்டது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. இன்று வரை நான் பல படங்களில் வேலை பார்த்து இருக்கிறேன், ஆனால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது. விமானத்தை உருவாக்கியது நல்ல அனுபவமாக இருந்தது. இந்த சீரிஸில் பணியாற்றியதும் நல்ல அனுபவமாக இருந்தது. இதில் உழைத்த அனைத்து கலைஞர்களும், தங்கள் முழு உழைப்பைத் தந்திருக்கிறார்கள். ராதா மோகன் முத்திரை காமெடிகள் இந்த சீரிஸில் இருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும் நன்றி.

எழுத்தாளர் பொன் பார்த்திபன் பேசியதாவது….
உப்புக் கருவாடு படத்தில் என்னை எழுத்தாளர் ஆக்கி அழகு பார்த்தார் ராதா மோகன் சார், இப்போது இந்த படைப்பின் மூலம் சீரிஸிற்கும் என்னைக் கூட்டி வந்துள்ளார், நன்றி சார். இந்த சீரிஸ் திரையிட்டபோது, நீங்கள் எங்கெல்லாம் சிரிக்கிறீர்கள் எனப் பதட்டமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம், நீங்கள் சிரிக்க ஆரம்பித்தவுடன் தான் எங்களுக்குப் பயம் விலகியது. இந்த சீரிஸ் உருவாவதற்கு உறுதுணையாக இருந்த வேல்ஸ் நிறுவனத்திற்கும், ஹாட்ஸ்டாருக்கும் எனது நன்றிகள். எங்களுக்கு இன்னும் நிறைய ஆதரவு தந்தால், உங்களுக்கு இன்னும் நிறையப் படைப்புகளைத் தருவோம். கலை இயக்குநர் கதிர் அவர் பணிபுரியும் படங்களுக்கு, என்னையும் கூட்டிச் சென்று விடுவார். ரத்தம், வெட்டு என பணிபுரிந்து விட்டு வரும்போது ராதா மோகன் சார் கூப்பிட்டு மனதை இலகுவாக்கிவிடுவார். அவர் உன்னால் முடியும் என்று நம்பி பொறுப்பைத் தந்துவிடுவார். இந்த சீரிஸில் அனைத்து கலைஞர்களின் கெமிஸ்ட்ரியும் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் ராதா மோகன் பேசியதாவது…
திரைத்துறையில் 20 ஆண்டுகளைக் கடந்து இருக்கிறேன் என்கிறார்கள், 20 ஆண்டுகளைக் கடந்து இங்கு நிற்கிறேன் என்றால், அதற்கு நீங்கள் தந்த ஆதரவு தான் காரணம், பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். சட்னி சாம்பார் சீரிஸ் பற்றி எல்லோரும் சொல்லி விட்டார்கள். இந்த சீரிஸில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடித்திருக்கும் முதல் சீரிஸ், எங்களுக்காக அவர் மிக பிஸியான நேரத்தில் பத்து நாட்கள் கால்ஷீட் தந்தார், எல்லோரும் உங்களுக்கு பத்து நாள் கால்ஷீட் தந்தாரா? என ஆச்சரியப்பட்டார்கள். அவர் தந்த ஒத்துழைப்பிற்கு நன்றிகள். இந்த நேரத்தில் ஓடிடிக்கு என்னை அணுகிய செந்தில், கிருஷ்ணன் குட்டி, பிரதீப், ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நடிகர்கள் அனைவரும் இங்கே இருக்கிறார்கள், எல்லோரும் மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்தார்கள். அனைவருக்கும் என்னுடைய நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். என்னுடைய உதவி இயக்குநர் குழுவிற்கு, என்றும் நான் நன்றி சொன்னதே இல்லை, அவர்கள் இல்லாமல் நான் இல்லை, அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இந்த சீரிஸ் என்னுடைய மற்ற படைப்புகள் போல உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி’ என்றார்.

இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது. யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த சீரிஸில் காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘சட்னி-சாம்பார்’ சீரிஸிற்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜீஸ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன், இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார். கலை இயக்கம் K கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ‘சட்னி – சாம்பார்’ சீரிஸ் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் துவங்கியுள்ளது.

Dr Ram Chidambaram, founder and director of Chennai Upper Limb Unit, launches revolutionary advances in shoulder replacement using ‘Modular glenoid system with VIP’ and Mixed Reality Navigation with HoloLens at CULTCON meeting in Chennai.

Dr Ram Chidambaram, along with Top Global Shoulder Experts, Prof Stefan Greiner from Germany and Prof Stefano Gumina from Italy, launched a revolutionary technology for Shoulder Replacement surgery using Modular glenoid system with VIP (Virtual Implant Positioning) and Mixed Reality Navigation with HoloLens. Dr Ram Chidambaram performed the first live surgery demonstration of VIP shoulder in March 2024, and the first Mixed Reality guided shoulder replacement using HoloLens in India in May 2023.

These innovations were highlighted with re-live demonstrations of reverse shoulder surgery performed using Arthrex VIP system with MR navigation and HoloLens in CULTCON 2024.
CULTCON stands for Chennai Upper Limb Unit Teaching Convention. Featuring expert talks, panel discussions and live demonstrations by 2 international and 25 national faculty, the conference aims to teach and train general orthopaedic surgeons and post graduate residents in the specialised field of shoulder and upper limb surgery, a novel concept in India. With over 400 orthopaedic surgeons from all over the country in attendance, it is evident that CULTCON is taking place at the right time.

Chennai Upper Limb Unit is a dedicated specialist centre in Alwarpet that exclusively caters to patients with problems affecting the shoulder, elbow, wrist and hand. Inaugurated this year by Dr Radhakrishnan IAS, it is the first of its kind in India, offering treatment for all kinds of upper limb trauma, sports injuries and joint replacement. The patient’s well-being is at the core of Chennai Upper Limb Unit’s philosophy, a trait that is reflected in the
clinic’s state-of-the-art equipment and physiotherapy services.

Dr Ram Chidambaram, founding director of the Chennai Upper Limb Unit, is a senior consultant shoulder & upper limb surgeon with over 30 years of experience in India and the UK. In 2011, he left behind a flourishing orthopaedic practice in the UK’s National Health Service and settled in Chennai. He developed an exclusive practice in sports medicine and treating upper limb ailments and is now regarded as one of the best shoulder and upper

limb surgeons in Asia. He has performed over 4,500 keyhole surgeries, 1,100 joint replacements and 3,500 upper limb trauma surgeries. He served as the president of Shoulder and Elbow Society, India for 4 consecutive years, from 2017 to 2021.

Dr Ram has a passion for reverse shoulder arthroplasty, a unique and novel procedure where the ball is replaced with a prosthetic socket and vice versa. He is credited with performing the first reverse shoulder replacement in South India in 2011, and the first stemless shoulder in 2012.
Regarding the Arthrex VIP system, Dr Ram says ‘Shoulder replacement surgery is a procedure to ease pain and regain function in people with severe shoulder joint issues like arthritis or fracture. Traditional methods sometimes struggle with precise implant placement. This new system is a game-changer designed to tackle these issues, customising the implant according to the patient’s unique anatomy.’
Regarding the new HoloLens technology, Dr Ram says ‘We use AI to process information from the patient’s CT scans to identify the best possible placement for the glenoid peg and screws. I wear the HoloLens during surgery, take references from bone points, and project the 3D hologram on patients in real time during the operation. This helps to further heighten the accuracy and precision of my surgery.’

With robust implant placement, smaller incisions and far less tissue damage, patients operated with this technology can make a much faster recovery. In fact, they don’t even need a sling! Patients can start moving their arm the very next day after the operation.

Dr Ram has also made it his mission to improve public perception of upper limb injuries and encourage the right way to seek treatment. The Chennai Upper Limb Unit is proud to launch its newest feature – a 24-hour helpline that allows prospective patients to call in and learn more about their conditions and seek second opinions, in addition to booking appointments and scheduling surgeries. He wishes to provide the best service possible to every patient that seeks his care, and through his teaching initiatives and clinical milestones, he hopes to inspire others to do the same.

360 டிகிரி வடிவிலான மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா

நாய்ஸ் & கிரைன்ஸ் மற்றும் பூமர் ஃபேஷன் இணைந்து வழங்கும் இந்தியாவில் முதல்முறையாக 360 டிகிரி வடிவிலான மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எவர் கிரீன் ஹிட் என்பதை இசை ரசிகர்கள் நன்கு அறிவர். இரண்டு தலைமுறைகளாக தமிழ் திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல்… அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி அற்புதமான இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா தற்போது ‘U1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்’ எனும் பெயரில் சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த இசை நிகழ்ச்சியை இசை துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் மற்றும் முன்னணி இசைக் கலைஞர்களுடன் இணைந்து இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி, உலக அளவில் நற்பெயரை சம்பாதித்த பத்து ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நாய்ஸ் & கிரைன்ஸ் எனும் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பூமர் ஃபேஷன் எனும் முன்னணி ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் விளம்பரதாரராக பங்களிப்பு செய்கிறது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன்போது நாய்ஸ் & கிரைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மகாவீர் மற்றும் கார்த்திக் சீனிவாஸ், விளம்பரதாரரான பூமர் ஃபேஷன் நிறுவனத்தின் தலைவர் லிங்குசாமி மற்றும் ஹரிதா லிங்குசாமி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாய்ஸ் & கிரைன்ஸ் நிறுவனத் தலைவர் மகாவீர் பேசுகையில், ” இது இந்த இசை நிகழ்ச்சி- எங்களுடைய நிறுவனத்தின் பத்தாம் ஆண்டுக்கான இசை நிகழ்ச்சி. இந்த இசை நிகழ்ச்சி எங்களுக்கு மிகவும் சிறப்பானது. முக்கியத்துவமானது. ஏனென்றால் இசை ரசிகர்களின் இதயத்தில் ராஜாவாக வீற்றிருக்கும் யுவன் சங்கர் ராஜா. நான் உள்பட அனைவரும் யுவனின் தீவிர ரசிகர்கள். இசை நிகழ்ச்சிக்காக யுவன் சங்கர் ராஜாவுடன் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பயணித்து, இந்த முறை அவரிடம் இசை நிகழ்ச்சிக்கான அனுமதியை பெற்று இருக்கிறோம். கடந்த ஆண்டு முதல் நிகழ்ச்சியை நடத்தினோம். அதில் கிடைத்த வெற்றி.. எங்களின் அணுகுமுறை .. இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பாணி… ஆகியவற்றை பாராட்டி, இந்த ஆண்டும் எங்களுக்கு இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்திருக்கிறார் யுவன் சார்.
‘யுவன் லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்’ எனும் இந்த தொடர் இசை நிகழ்ச்சிகளின் முதல் நிகழ்வு பெங்களூருவில் நடைபெற்றது. மொழி எல்லைகளைக் கடந்து பெங்களூரில் நடைபெற்ற யுவனின் இசை நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது சென்னையில் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

சென்னை இசை நிகழ்ச்சியின் சிறப்பம்சம் என்னவென்றால்.. முதன் முறையாக இந்தியாவில் 360 டிகிரி வடிவிலான மேடையில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் மூலம் ரசிகர்களுக்கும், யுவனுக்கும் இடையேயான நெருக்கம் மேலும் அதிகமாகும். இதனை இசை ரசிகர்களும் விரும்புவார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுடன் நான் மேலும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற யுவன் சாரின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம்.

360 டிகிரி இசை நிகழ்ச்சி சர்வதேச அளவில் பல நாடுகளில் நடைபெற்றிருக்கிறது. அதனை முதன் முதலாக இந்தியாவின் ஏன் முயற்சிக்க கூடாது என எண்ணி, விரிவான ஏற்பாடுகளுடன் திட்டமிட்டு இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறோம். அந்த வகையில் இந்திய கலைஞர்களை கொண்டு இந்தியாவில் நடைபெறும் 360 டிகிரி வடிவிலான மேடையுடனான நேரலையான முதல் இசை நிகழ்ச்சி இதுதான்.

யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி என்று சொன்னவுடன் பூமர் பேஷன் நிறுவனத்தினர் மிக்க மகிழ்ச்சியுடன் விளம்பரதாரராக பங்கு கொள்வதில் விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கும் இது தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையை தொடர்ந்து விரைவில் கோயம்புத்தூர் மற்றும் சிங்கப்பூரில் இதே போன்றதொரு இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். ” என்றார்.

இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா பேசுகையில், ” இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் சிறப்பானது.‌ கடந்த முறை சென்னையில் இசை நிகழ்ச்சி நடக்கும் போது, எனக்கும்- ரசிகர்களுக்கும் இடையே சிறிய இடைவெளி விட்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்களிடமிருந்து சற்று தள்ளி இருக்கிறோமோ..! என்ற எண்ணம் ஏற்பட்டது. அதே தருணத்தில் ரசிகர்களுடன் மேலும் நெருக்கமாக இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என விரும்பினேன். என்னுடைய விருப்பத்தை நாய்ஸ் & கிரைன்ஸ் குழுவினரிடம் தெரிவித்தேன். அந்த தருணத்தில் 360 டிகிரி வடிவிலான மேடையை அமைப்பது குறித்து விவாதித்தோம். இந்த புது அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறேன். இந்த இசை நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இது ரசிகர்களையும் , என்னையும் உற்சாகப்படுத்தும். ஜூலை 27ஆம் தேதியன்று ஒய் எம் சி ஏ மைதானத்தில் சந்திப்போம்.” என்றார்.

இதனிடையே யுவன் சங்கர் ராஜாவின் U1 long drive live in concert எனும் இந்த நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜாவுடன் பின்னணி பாடகர்கள் ஆண்ட்ரியா, ஹரி சரண், பிரேம் ஜி, ராகுல் நம்பியார், ஹரிப்பிரியா, திவாகர், ரிஷா, ஆதித்யா , ஸ்ரீ நிஷா, எம் சி சனா என ஏராளமான முன்னணி பின்னணி பாடகர்கள்- பாடகிகள் பாடுகிறார்கள் என்பதும், இந்திய கலைஞர்களை கொண்டு 360 டிகிரி வடிவிலான மேடையில் முதன்முதலாக நடைபெறும் நேரலையான இசை நிகழ்ச்சி இதுதான் என்பதும், இது திரை ரசிகர்களுக்கு புதுவிதமான இசை அனுபவத்தை வழங்கும் என்பதால் இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும், இந்த இசை நிகழ்ச்சியில் 35 க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம் பெறுவதும், அதில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை யுவன் சங்கர் ராஜாவே பாடி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவண்ணாவின் 131வது படம் ………

கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட் வந்துள்ளது, சிவண்ணாவின் 131வது படம் இனிதே துவங்கவுள்ளது. சமீபத்தில், சிவண்ணாவின் பிறந்தநாளில் அறிமுக டீசரை வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது தயாரிப்பு குழு. தற்போது படத்தைத் தயாரிக்கத் தயாராகி விட்டது. சிவன்னாவின் 131வது படத்தின் பூஜை (மங்கல ஆரம்பம்) விரைவில் நடக்கவுள்ளது.

சிவண்ணாவின் 131வது படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது

ஹாட்ரிக் ஹீரோ சிவராஜ்குமாரின் 131வது படத்திற்கான படப்பிடிப்பை பிரமாண்டமாக துவங்கிட படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று ஒட்டுமொத்த படக்குழுவும் இன்று சிவண்ணாவைச் சந்தித்தது.

இயக்குநர் கார்த்திக் அத்வைத், தயாரிப்பாளர்கள் N.S. ரெட்டி மற்றும் சுதீர், ஒளிப்பதிவாளர் A.J.ஷெட்டி, மற்றும் எடிட்டர் தீபு S.குமார் ஆகியோர் ஹாட்ரிக் ஸ்டார் சிவண்ணாவை அவரது நாகவாரா இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.

இயக்குநர் கார்த்திக் அத்வைத் இந்த படத்தின் மூலம் சாண்டல்வுட்டில் அறிமுகமாகிறார், இது அவருக்கு இயக்குநராக இரண்டாவது படமாகும். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக தயாராகும் இப்படத்தில், சிவண்ணா வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிக வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். மோஸ்ட் புகழ், V.M.பிரசன்னாவும், ‘சீதாராமம்’ புகழ் ஜெயகிருஷ்ணாவும் இப்படத்திற்கு எழுத்தாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். ‘விக்ரம் வேதா’, ‘ஆர்டிஎக்ஸ்’, ‘கைதி’ புகழ் சாம் C.S. இசையமைக்க, A.J. ஷெட்டி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். படத்தொகுப்பை தீபு S. குமார் செய்ய, கலை இயக்கத்தினை ரவி சந்தேஹக்லு செய்கிறார். இப்படத்தை புவனேஷ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் S.N. ரெட்டி மற்றும் சுதீர் P. தயாரிகின்றனர். ரமணா ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

Yakult Danone India expands its product portfolio by introducing Yakult Light Mango Flavour 

Adding a refreshing twist to its probiotic beverage portfolio

New Delhi, 24th July 2024 – Yakult Danone India Pvt Ltd, a globally renowned probiotic brand, has announced today that it is expanding its product portfolio by introducing a new variant – Yakult Light Mango Flavour, on 25th July 2024. The launch event was graced by Bollywood star Sanya Malhotra, Mr Takashi Ariyoshi, Minister and Deputy Chief of Mission of the Embassy of Japan in India, Mr Eiji Amano, Managing Director of Yakult Danone India Pvt Ltd, and Dr Neerja Hajela, Head – Science and Regulatory Affairs of Yakult Danone India Pvt Ltd.

Yakult Light Mango Flavour is a sister product of the signature Yakult. The new product contains the same unique probiotic, Lactobacillus casei Shirota (SHIROTA strain), in the same amount of 650 crores as the original and flagship Yakult. The original probiotic drink was invented by a Japanese medical doctor called Dr Minoru Shirota and designed to take in the human-friendly bacterium that had the ability to reach the gut alive and impart tremendous health benefits. Saddened by the death of children caused by infections due to inadequate hygiene and poverty in Japan in the early 1900s, he emphasised on preventing diseases with the power of probiotics rather than curing diseases and infections after they occur. He embodied his ideal by launching SHIROTA strain as a food in the market so that as many people as possible could get the benefit of the probiotic bacterium while enjoying the delicious taste. Through more than 90 years of research, SHIROTA strain has been scientifically proven to help improve digestion and build immunity when consumed regularly. Based on Dr Shirota’s philosophy, the Yakult company in India came to launch Yakult Light Mango Flavour, a national-favourite-fruit-taste product, to contribute to the health of more people in India.

The retail price of Yakult Light Mango Flavour is Rs. 100/—for a pack of 5 bottles, which will be available at retail outlets in 28 states and 5 union territories from 25th July 2024 onwards. Also, Yakult has a unique home delivery sales channel, where nearly 300 ‘Yakult Ladies’ deliver the products to the customers’ doorstep in Delhi NCR, Chandigarh, Jaipur, Mumbai, and Pune. Yakult products, including Yakult Light Mango Flavour, are also available through e-commerce.

Speaking about the launch of Yakult Light Mango Flavour, Mr Eiji Amano, Managing Director, Yakult Danone India Pvt Ltd, said, “At Yakult, our core philosophy is to enhance the gut health of consumers worldwide using our unique probiotic strain “Lactobacillus casei SHIROTA strain”. With over 2 lakh bottles of Yakult consumed daily in India, we have become a household name, enjoyed by many families as part of their daily routine. With the launch of Yakult Light Mango Flavour, we are expanding our product portfolio to cater to the tastes and preferences of Indian consumers. This new variant maintains the same health benefits as our classic Yakult while introducing a delightful mango flavour that is widely loved. We believe this addition will appeal to our consumers who relish mango taste.”

Taking centre stage at the launch, Bollywood actress Sanya Malhotra said, “I am super excited to be a part of this exciting launch. There is great concern about the increasing rise in lifestyle disorders due to erratic lifestyles, poor nutrition, stress, lack of adequate sleep, pollution and generally poor gut health. I take my daily dose of probiotics to keep my gut healthy, and Yakult has been an integral part of my diet for a long time now. Today, I am pleased that the company has introduced Yakult Light Mango Flavour, which tastes delicious and refreshing. I am sure it will be a favourite among all mango and Yakult lovers.”

Dr Neerja Hajela, HeadScience and Regulatory Affairs, Yakult Danone India Pvt Ltd, added that Lactobacillus casei strain Shirota (SHIROTA strain) is unique to Yakult, and is backed by more than 100 human studies conducted across the globe, including India. Probiotics are essential as they increase the good bacteria in the gut and reduce the harmful disease-causing bacteria. By doing so, they ensure better digestion of food, proper absorption of nutrients and stronger immunity to reduce the risk of infections. A decrease in probiotic bacteria in the gut, coupled with poor lifestyle, can lead to poor gut health and weak immunity, manifesting as fatigue, poor growth and development, malnutrition and repeated infections. To keep the gut healthy, it is essential to introduce probiotics into the daily diet through scientifically validated probiotic products.

Kotak Mahindra Bank focused on building an ecosystem for driving SME growth.

Chennai 24.07.2024 Kotak Mahindra Bank is set to expand its SME business in Tamil Nadu, recognizing the southern region as a growing opportunity. Shekhar Bhandari, President-SME, emphasized that SME banking at Kotak is about building the entire ecosystem and partnering in their growth journey, rather than just about funding. The Bank has associated with IIT Madras for “Kotak IIT Madras Save Energy Mission”, with a primary objective of enabling energy efficiency in the SME segment by providing various types of energy assessment services resulting in the decarbonisation of the manufacturing sector via energy conservation and making SMEs efficient, cost effective and sustainable.

The program has so far conducted detailed energy audits for 161 SMEs across 23 different manufacturing sectors resulting in recommendations of annual energy cost savings of Rs. 123 crores*. 19% of the SMEs belong to Tamil Nadu from the Textile and Engineering sectors showcasing Kotak’s Commitment to supporting SMEs in the region by guiding them towards adopting environment-friendly & sustainable practices.

While speaking to reporters, Shekhar Bhandari, President-SME, Kotak Mahindra Bank said, “SMEs are integral to our growth strategy, and Tamil Nadu along with Southern region is central to our vision for SME growth. We are happy to support sustainability and energy efficiency amongst SMEs in the region resulting in cost savings. SME banking at Kotak is about offering comprehensive sustainable solutions across trade, collections, working capital management, estate planning, wealth and salary, thereby building the entire ecosystem which helps foster their development.” 

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இணையும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK)

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் – இயக்குநர் விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா, சீமான், கிரித்தி ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார்.‌ இன்றைய இளம் இணைய தலைமுறையினரின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் L . K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதனின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருப்பதால்… இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘நானும் ரவுடிதான்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் – ‘லவ் டுடே’ படத்தின் மூலம் பிரமாண்ட வெற்றியை பெற்று, தமிழ் திரையுலகத்தின் நம்பிக்கைக்குரிய நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் – ‘மாஸ்டர்’, ‘ லியோ’ போன்ற பிரம்மாண்டமான படைப்புகளை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்- ஆகியோரின் கூட்டணியில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ தயாராகி இருப்பதால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்க நாதனின் பிறந்த நாளில் அவர் நடிக்கும் ‘எல் ஐ கே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால்… அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.