Breaking
April 28, 2024

Kauvery Hospital Vadapalani Launches Kauvery Heart Institute on World Heart Day

[Chennai – September 29, 2023] – In commemoration of World Heart Day, Kauvery Hospital Vadapalani launched Kauvery Heart Institute, a state-of-the-art facility dedicated to advancing cardiovascular care in the region. The institute was launched by Thiru P K Sekar Babu, Hon’ble Minister for Hindu Religious and Charitable Endowments Department, Government of Tamil Nadu.

The Kauvery Heart Institute, equipped with cutting-edge technology and staffed by a team of highly skilled cardiac specialists, aims to provide comprehensive cardiac care that meets the highest international standards. This institute will serve as a hub for the diagnosis, treatment, and prevention of heart-related ailments, ensuring that patients receive the best possible care from a team of experts.

The institute is equipped with the latest diagnostic equipment, including advanced cardiac MRI and CT scanners, allowing for precise and early detection of heart conditions. A dedicated catheterization lab is in place for highly experienced interventional cardiologists who are capable of performing all complex interventional cardiology procedures in addition to standard angioplasty and stent placement.

The Institute is also proficient in the field of complex cardiac electrophysiology interventions, and offers a sophisticated range of technology for addressing and resolving complex heart rhythm disorders.

The institute also offers a wide range of cardiac surgical interventions, including coronary artery bypass grafting (CABG), valve replacements and minimally invasive surgeries.

The Kauvery Heart Institute at Kauvery Hospital, Vadapalani, is closely integrated with Kauvery Hospitals Chennai’s ambitious and highly accomplished Heart – Lung Transplantation Program which was recently accoladed by TRANSTAN for Best Performance In Heart and Lung Transplant for the year 2022-23.

A comprehensive cardiac rehabilitation program is available to help patients recover and regain their heart health after surgery or a cardiac event.

Apart from treating heart ailments, the department will also educate the public on prevention of heart diseases through health checkups, lifestyle modification guidance and awareness campaigns.

Speaking on the occasion, Dr. Aravindan Selvaraj, Co-Founder & Executive Director Kauvery Hospitals said, “The launch of the Kauvery Heart Institute is a significant step forward in our mission to provide accessible, high-quality healthcare. Heart disease is a growing concern globally, and our institute aims to address this by offering a holistic approach to heart health. We are proud to bring world-class cardiac care to Vadapalani and surrounding areas. One of our centers of excellence is Cardiology and we are pleased to extend this excellence in Vadapalani, our latest addition to the Kauvery Group of Hospitals”

Speaking on the occasion, Hon’ble Minister Thiru Sekar Babu said, “The incidence of heart diseases has been on the rise and we also see the younger population suffering from heart diseases. Therefore, it is crucial to have access to advanced and right medical facilities and it is even more important to be aware of the prevention methods. Kauvery Hospital has been addressing both – treating heart diseases and creating awareness on prevention. I congratulate Kauvery Hospital for the launch of Kauvery Heart Institute at their new hospital in Vadapalani.”

In an effort to raise awareness on prevention and early diagnosis, the hospital is also organizing a free cardiac camp which offers ECG and ECHO evaluation and Consultation with a Cardiologist from 29th Sept to 1st Oct 2023. Above 300 people shall be benefiting from the camp.

Kauvery Hospital Alwarpet hosted a series of activities at Elliots Beach Road Besant Nagar which included a 2 km walkathon and Zumba session promoting healthy lifestyle for a healthy heart. The importance of a healthy lifestyle to prevent heart diseases, and the timely intervention during cardiac emergencies were highlighted through a mime show performance. The hospital also hosted a session on Basic Life Support and AED during times of cardiac arrests.
Over 200 people participated in the activities.

சுந்தர் சி இயக்கத்தில் “அரண்மனை 4” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் .

பொங்கல் வெளியீடாக தயாராகிறது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் “அரண்மனை 4”

தமிழகமெங்கும் குடும்பங்களைக் குதூகலப்படுத்திய பேய் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து பாகங்கள் வெளிவந்து ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகம் விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. Benzz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்கி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. ரசிகர்களுக்காக மட்டுமே படம் என்பதில் உறுதியாக இருக்கும் சுந்தர் சி இயக்கும் படங்கள், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கொண்டாடும் படி இருக்கும். அந்த வகையில் அவர் உருவாக்கிய அரண்மனை படம், தமிழில் பேய் படங்களைக் குழந்தைகளும் கொண்டாடிப் பார்க்கும் வண்ணம் மாற்றிய படமாகும். முதல் மூன்று பாகங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து,  தற்போது நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திர கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா,  யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், உட்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திரக்கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.

முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் சுந்தர் சி. 2024 பொங்கல் அன்று வெளியாகவள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நுட்ப குழு

தயாரிப்பு – Benz Media Pvt Ltd (A.C.S அருண்குமார்) and Avni Cinemax (P) Ltd (குஷ்பு சுந்தர்)
எழுத்து இயக்கம் – சுந்தர் சி
வசனம் – வேங்கட் ராகவன்
இசை : ஹிப்ஹாப் தமிழா
ஒளிப்பதிவு – இசக்கி கிருஷ்ணசாமி
படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர்
கலை இயக்கம் – பொன்ராஜ்
சண்டைப்பயிற்சி – ராஜசேகர் K
ஸ்டில்ஸ் – V.ராஜன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.

விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்து வெற்றிகண்ட Chendur film international தங்களது 7வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. D.ராஜா வழங்கும், T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” படத்தின் முதல் பார்வையை படக்குழு மோஷன் போஸ்ட்டராக வெளியிடப்பட்டுள்ளது.

முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக்,  மற்றும் விஜய் ஆண்டனி தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  

படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய தனா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார்.

ஹிட்லர் திரைப்படத்தை ஆக்‌ஷன் திரில்லர் வகையில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் தனா. பரபர திருப்பங்களுடன் பறக்கும் திரைக்கதையில், ஒரு அழகான காதலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஒரு மாறுபட்ட அனுபவமாக இப்படம் இருக்கும்.  

ஹிட்லர் ஒரு மனிதனாக இருக்கலாம் ஆனால் இன்று வரலாற்றில் அந்தப் பெயர் சர்வாதிகாரத்தின் அடையாளம். அதன் காரணமாகவே இப்படத்திற்கு ஹிட்லர் என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு  நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார். நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர்  விவேக் மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை கன்னடத்தின் வெற்றிப் படமான மப்டி படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் செய்துள்ளார். கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார். Chendur film international  சார்பில் T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார், பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

The TOP TWO HIGHEST GROSSERS OF ALL TIME NOW BELONG TO SHAH RUKH KHAN

Shah Rukh Khan becomes the only actor to achieve this feat with Jawan and pathaan in a SINGLE YEAR!

Jawan is not only SRK’s second film to become the top grosser but might also be the first hindi film to join the 600cr club and despite the new film releases, the film continues to be Rock steady!

Today, Jawan went on to become the highest grossing hindi film ever in the history of Indian cinema, making history yet again, Shah Rukh Khan yet again breaking records and setting new benchmarks for the industry.

Red Chilies Entertainment’s Jawan, starring Shah Rukh Khan, is synonymous with the word history. Since its release on September 7, 2023, the film has been rewriting history at the box office, writing new records, and attaining massive numbers at the box office.

Jawan raked in 525.50 crores in hindi and a grand total of 584.32 crores at the Indian box office, while at the global box office the film as broken all records by garnering 1000 plus crores and stands tall at a monstrous 1043.21cr! All of these massive numbers garnered and records broken in just 22 DAYS flat!

Jawan’s performance is unaffected by the new releases, and it is a clear sign that fans are adoring the film and lavishing praise on it even in its third week.

ஒரே ஆண்டில் ஜவான் மற்றும் பதான் மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய ஒரே நடிகர் ஷாருக்கான்.

ஜவான் அதிக வசூல் செய்த SRK இன் இரண்டாவது படம் மட்டுமல்ல, 600cr கிளப்பில் இணைந்த முதல் இந்தி படமாகவும் சாதனை செய்துள்ளது. மேலும் பல புதிய பட வெளியீடுகள் இருந்தபோதிலும், படம் தொடர்ந்து வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது !

இன்று, ஜவான் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த ஹிந்தித் திரைப்படமாக வரலாற்று சாதனை புரிந்துள்ளது, இந்தியாவின் முன்னணி நடிகரான ஷாருக்கான் திரைத்துறையில் மீண்டும் பல சாதனைகளை முறியடித்து, திரைத்துறையில் சாதனைகளுக்கு புதிய வரையறைகளை அமைத்திருக்கிறார்.

ஷாருக்கான் நடிப்பில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மென்ட்டின் ஜவான், வரலாறு என்ற வார்த்தைக்கு அர்த்தமாக மாறியுள்ளது. செப்டம்பர் 7, 2023 அன்று வெளியானதிலிருந்து, திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்றை மாற்றி, புதிய சாதனைகளை எழுதி வருகிறது, மேலும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகள் படைத்துள்ளது.

ஜவான் இந்தியில் 525.50 கோடிகளையும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் 584.32 கோடிகளையும் வசூலித்தது, அதே நேரத்தில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் படம் 1000 க்கும் மேற்பட்ட கோடிகளை ஈட்டி அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. தற்போது மொத்தமாக இப்படத்தின் வசூல் 1043.21 கோடியை தாண்டியிருக்கிறது! இந்த மிகப்பெரிய சாதனைகள் அனைத்தும் வெறும் 22 நாட்களில் தகர்க்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது!

புதிய வெளியீடுகளால் ஜவானின் அதிரடி வசூல் கொஞ்சம் கூட பாதிக்கப்படவில்லை, மேலும் மூன்றாவது வாரத்தில் கூட ரசிகர்கள் படத்தை ரசிக்கிறார்கள் மற்றும் அதைப் பாராட்டுகிறார்கள் என்பது படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு சான்றாகும்.

”சந்திரமுகி 2′ படத்தை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்து செப்டம்பர் 28ஆம் தேதியான நேற்று வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இந்தத் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்வையிட்டார். அத்துடன் இயக்குநர் பி. வாசு மற்றும் ராகவா லாரன்ஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்தார். இதனால் படக் குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் தயாராகி உலகம் முழுவதும் 450 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘சந்திரமுகி 2’ வெளியானது. இந்த திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளை கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது.‌ படத்தைப் பற்றிய நேர் நிலையான விமர்சனங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாவதால் படத்தை பார்ப்பதற்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. இதற்காக அவர்கள் முன் பதிவு செய்து படத்தை ரசிக்க காத்திருக்கிறார்கள்.‌

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசிக்கும் வகையில் வடிவேலுவின் காமெடி, ராகவா லாரன்ஸின் நடிப்பு, சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கணா ரனாவத்தின் பேய் அவதாரம்… ஆகியவற்றால் ‘சந்திரமுகி 2’ படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்தில் ராகவா லாரன்ஸின் வேட்டையன் கதாபாத்திரத்திற்கும் ரசிகர்களிடம் பேராதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தை பிரத்யேகமாக பார்வையிட்டு, பட குழுவினரை உற்சாகப்படுத்தும் வகையில் வாழ்த்தும், ஆதரவும் தெரிவித்திருப்பது திரையுலகினத்தினரிடமும், ரசிகர்களிடமும் பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக தற்போது இப்படத்தின் வசூல் அதிகரித்துள்ளது.

Prabhas and Prashanth Neel’s “Salaar Part 1 – Ceasefire” Set to Illuminate Screens on December 22, 2023

The moment fans have been eagerly waiting for has finally arrived! Hombale Films, the powerhouse behind the much-anticipated film “Salaar Part 1 – Ceasefire,” directed by the acclaimed Prashanth Neel and starring the charismatic Prabhas, has officially unveiled the film’s release date. Get ready to mark your calendars for December 22, 2023, as this action-packed extravaganza is set to light up the big screens.

Ever since Hombale Films dropped the action-packed teaser of “Salaar Part 1 – Ceasefire,” audiences have been on the edge of their seats, eagerly anticipating more from this action-packed entertainer. The teaser gave viewers a thrilling sneak peek into the world of Salaar.

In a testament to their commitment to delivering cinematic brilliance year after year, the production house also has an exciting lineup of Indian releases in the coming years, including ‘Yuva’, ‘Kantara 2’,’Raghu Thatha’, ‘Richard Anthony’, ‘KGF 3’, ‘Salaar Part 2’ and ‘Tyson’.

And now, the excitement reaches new heights with the long-awaited announcement of the film’s release date, coinciding with the festive season of Christmas on December 22, 2023.
To add to the anticipation, the makers have unveiled a captivating poster of “Salaar Part 1 – Ceasefire,” featuring the Pan India superstar, Prabhas. As the poster revealed the release date, it sent waves of excitement through fans, promising one of the biggest cinematic experiences of the year. This film marks the historic collaboration between the visionary director of “KGF,” Prashanth Neel, the iconic Baahubali superstar, Prabhas, and the prolific creators of “KGF” and “Kantara,” Hombale Films.
What makes this union even more exhilarating is the pairing of the master of action, Prashanth Neel and the Rebal Star Prabhas for the first time on such an epic canvas. This synergy promises to deliver an action-packed spectacle that will leave audiences spellbound.

Hombale Films’ “Salaar” not only features Prabhas but also boasts a stellar ensemble cast, including Prithviraj Sukumaran, Shruti Haasan and Jagapathi Babu. Under the visionary direction of Prashanth Neel, this cinematic extravaganza is all set to hit theaters on December 22, 2023, making it a Christmas to remember for moviegoers across the world.

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.

நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘சலார் – பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது. புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தினை தயாரித்து வரும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ், படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியை உங்கள் நாட்குறிப்பில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த அதிரடி களியாட்டம் பெரிய திரைகளை ஒளிர செய்யும் வகையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹோம்பாலே ஃபிலிம்ஸ், ‘சலார் – பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் டீசரை வெளியிட்டதிலிருந்து பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த அதிரடி பொழுதுபோக்கு திரைப்படத்திலிருந்து மேலும் கூடுதலான அம்சங்களை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அந்த டீசர் – பார்வையாளர்களுக்கு சலார் உலகில் ஒரு சிலிர்ப்பான அனுபவத்தை வழங்கியது.

ரசிகர்களின் புத்திசாலித்தனமான சினிமா அனுபவத்தை வழங்குவதற்கு தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் அர்ப்பணிப்புடன் தயாராகி வருகிறது. இதற்கு சான்றாக இந்நிறுவனம் தற்போது ‘யுவா’, ‘காந்தாரா 2’, ‘ரகு தாத்தா’, ‘ரிச்சர்ட் ஆண்டனி’ உள்ளிட்ட பல படைப்புகளை தயாரித்து வருகிறது.
இதனுடன் ‘கே ஜி எஃப் 3’, ‘சலார் -பார்ட் 2’ மற்றும் ‘டைசன்’ ஆகிய படைப்புகளின் மீதும் அதிதீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று ‘சலார் – பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தின் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

ரசிகர்களின் மற்றும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை கூடுதலாக அதிகரிக்கும் வகையில் பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸ் நடிக்கும் ‘சலார் -பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் வசீகரிக்கும் புதிய போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டருடன் படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்திருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.‌

இந்த ஆண்டின் மிகப்பெரிய சினிமா அனுபவங்களில் சலார் – பார்ட் 1 சீஸ்ஃபயரும் ஒன்றாகும். இந்த திரைப்படம் ‘கே ஜி எஃப்’ என எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல், பாகுபலி சூப்பர் ஸ்டார் பிரபாஸ், ‘கே ஜி எஃப்’, ‘காந்தாரா’ ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் ஆகியவற்றின் கூட்டணியில் வெளியாகும் சிறந்த படைப்பு இது.‌

‘மாஸ்டர் ஆஃப் ஆக்சன்’ பிரசாந்த் நீல், ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் முதன் முறையாக இது போன்ற காவிய படைப்பில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்த கூட்டணி அதிரடி படைப்புகளை வழங்குவதை உறுதியளிக்கிறது. மேலும் பார்வையாளர்களை மயக்கும் வகையில் இந்த படைப்பு உருவாகி இருக்கிறது.

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்’ திரைப்படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளார்கள். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. உலகெங்கும் உள்ள திரைப்பட பார்வையாளர்களுக்கு ‘சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்’ சிறந்த கிறிஸ்மஸ் பரிசாக அமையும் என்பது உறுதி.

‘முசாசி’ படக்குழுவினரைப் பாராட்டிய இலங்கை பிரதமர்

பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்

இலங்கையின் படப்பிடிப்பிற்காக முகாமிட்டிருக்கும் பிரபுதேவாவின் ‘முசாசி’ படக் குழுவினரை அந்நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்து, சந்தித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும் , நடன இயக்குநருமான பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘முசாசி. அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா கம்பீரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இவருடன் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், ஜார்ஜ் மரியான், தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார்.‌ ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கையில் முகாமிட்டு இருக்கிறார்கள். படக்குழுவினரை கௌரவப்படுத்துவதற்காக அந்நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினை ஏற்ற படக் குழுவினர் அவர் நேரில் சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர். இது தொடர்பான புகைப்படத்தை படக் குழுவினர் பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

‘முசாசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகவும், விரைவில் இப்படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

வெளியானது அனிமல் டீசர்.

இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படத்தின் டீசரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் ஒரு சுருக்கமான பார்வையுடன், படத்தின் அதிரடியான களம், உயிர்ப்புடனும் உணர்வுப்பூர்வமாகவும் காட்டப்பட்டுள்ளது. நட்சத்திர நாயகன் ரன்பீர் கபூரின் பிறந்தநாள் சிறப்பாக, டீஸர் வெளியிடப்பட்டிருப்பது, கூடுதல் உற்சாகத்தை சேர்க்கிறது. ‘அனிமல்’ என்பது ஒரு புதுமையான அதிரடியான திரை அனுபவம், இது சுவாரஸ்யமும் ஆர்வமும் இணைந்து நீங்கள் நினைத்து பார்த்திராத பயணத்திற்கு இது உங்களை அழைத்துச் செல்லும். இந்த திரில்லர் டிராமா திரைப்படத்தை பூஷன் குமார் தயாரித்துள்ளார். அனில் கபூர், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் திரிப்தி டிம்ரி ஆகிய நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

உங்கள் காலெண்டரில் குறித்து வைத்து கொள்ளுங்கள், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ‘அனிமல்’ திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு புதுவிதமான அனுபவத்திற்கு தயாராகுங்கள்

‘அனிமல்’ படத்தை பூஷன் குமார் மற்றும் கிரிஷன் குமாரின் டி-சீரிஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.