Breaking
October 19, 2024

‘சிக்லெட்’ திரைவிமர்சனம்

சிறு வயது முதல் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா இவர்கள் மூவரும் இணைபிரியாத தோழிகளாக , ஒரே பள்ளியில் இவர்கள் மூவரும் படித்து வருகிறார்கள்.இவர்கள் மூவருடைய பெற்றோர்களும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு பெற்றோர்களுக்குமதங்கள் பிள்ளைகள் மீது மிகப்பெரிய அளவில் கனவு ஒன்று இருக்கும்.

அதே சமயம், பள்ளி படிப்பை முடிக்கும் மூவரும் தங்களது வயது கோளாறில் காரணமாக காதல், டேட்டிங் போன்ற பலவிதமான விசயங்களில் ஈடுபாடு அதிக அளவில் காட்டுகிறார்கள்.

அதன்படி முவரும் தங்களது மனதுக்கு பிடித்த ஆண் நண்பர்களை தேர்வு செய்து அவர்களுடன் ஊர் சுற்றி உல்லாசம் அனுபவிப்பதற்காக தனது பெற்றோர்களிடம் தமது தோழிக்கு திருமண வரவேற்பு என பொய் சொல்லிவிட்டு தன் ஆண் நண்பர்களுடன் செல்கிறார்கள்.

தான் பெற்ற பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு தப்பான வழிக்கு சென்று இருக்கிறார்கள் என உண்மை தெரிய வருகிறது, தங்களது பிள்ளைகளை தேடி மூன்று பெற்றோர்களும் அவர்களை தேடி செல்கிறார்கள்.

இறுதியில், கதாநாயகிகள் மூவரின் ஆசை நிறைவேறியதா? அல்லது பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களின் கனவு பலித்ததா? என்பதுதான் இந்த ‘சிக்லெட்ஸ்’. திரைப்படத்தின் மீதி கதை.

இந்த சிக்லெட்ஸ் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வருண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாத்விக் வர்மா, சிக்கு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாக் ராபின்சன் மற்றும் ஆரோன்

டீன் ஏஜ் வயது கோளாறில் கூத்து கும்பலம் என ஜாலியாக வாழ நினைக்கும் இளசுகள் அனைவரும் பேசும் வசனங்களில் நிறைந்திருக்கும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகள், உடல் மொழியில் கவர்ச்சி என திரைப்படம் முழுவதும் காம வசனங்களை மட்டுமே பேசி நடித்திருக்கிறார்கள்.

சுரேகா வாணி, ஸ்ரீமன், அறந்தை ராஜகோபால் மற்றும் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டப்பிங் ஜானகி .

ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு பெரும்பாலும் கதாநாயகிகள் மூவரின் உடலை சுற்றியே வலம் வருவதோடு, திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரையும் பெருமூச்சு விட வைக்கும் விதத்தில் அவர்களுடைய அங்கங்கள் அனைத்தையும் மிக அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசை பாலமுரளி பாலு

இந்த திரைப்படத்தில் பலான பலான மேட்டர்கள் பற்றி, வசனம் மற்றும் காட்சிகள் மூலம் சொல்லிவிட்டு, இறுதியில் இதெல்லாம் தப்பு என்று வழக்கமான பாணியில் பயணிப்பதோடு, திரைப்படம் முழுவதும் ஆபாசமான காட்சிகளையும், அருவருப்பான வசனங்களையும் வைத்து இளைஞர்களை ஈர்க்க நினைத்திருக்கிறார் இயக்குநர் முத்து.

சிக்லெட் மெல்லாமலே துப்பி விடலாம் அந்த அளவுக்கு உள்ளது.

Related Post