Breaking
August 15, 2026

Unveiling Suryadev’s Fe550D CRS TMT Bars, Forged to Conquer Corrosion

Chennai, 11 May 2024

Suryadev Alloys and Power, a key player in the Indian steel industry and a leading player in Tamil Nadu, has launched Fe550D CRS TMT bars that offer unparalleled anti-corrosion properties. Suryadev Fe550D CRS TMT bars are meticulously crafted from high-quality iron ore and are enhanced with a robust blend of copper, chromium, and nickel.

From the relentless assault of salt-laden sea air in coastal cities to the harsh reality of industrial pollutants in inland regions, the diverse climates of India present a formidable challenge to steel: corrosion. This issue poses a significant concern nationwide and is estimated to cost the Indian economy 3-4% of its GDP annually. Research indicates that the rate of corrosion in coastal areas may be up to four times greater than in inland regions. However, even in areas far from the coast, industrial pollutants serve as silent aggressors, accelerating corrosion and potentially diminishing the structural integrity of buildings by 1-3% annually.

At Suryadev, the challenge of corrosion is met with a relentless pursuit of innovation. In response to this enduring challenge, these bars significantly extend the lifespan of structures while minimizing the environmental impact associated with frequent repairs and replacements.

The Suryadev Fe550D CRS TMT bar serves as the perfect shield against elements. It redefines industry standards and represents a smarter, more sustainable approach to construction, ensuring a durable future for next generations.

Founded in 2006, Suryadev is known for its unwavering commitment to quality and innovation. With an annual finished steel capacity of 600,000 tonnes, Suryadev’s integrated steel plant in New Gummidipoondi is a testament to this commitment. As Tamil Nadu’s leading steel manufacturer, Suryadev is equipped to meet the nation’s rising demand for steel with its diverse range of intermediate and finished steel products.

The company focuses on consistent quality while also championing sustainability. Its Waste Heat Recovery Boiler (WHRB) power plant harnesses residual heat from DRI plant, transforming it into clean energy and significantly reducing its carbon footprint. Suryadev is exploring additional ground-breaking technologies and methods with one of the country’s leading academic institutions to decarbonize steelmaking.

Suryadev’s relentless pursuit of operational excellence and superior product quality is highlighted by ISO certifications in Quality Management (ISO 9001), Environmental Management (ISO 14001), and Occupational Health and Safety (ISO 45000). These standards ensure the company not only delivers top-tier products but also upholds a safe and healthy work environment for its employees. Further affirming its financial stability and credibility, Suryadev maintains robust credit ratings, with CARE A2 for short-term banking facilities and CARE A- for long-term commitments.

Suryadev is proud to be an integral part of nation-building through its contribution to landmark infrastructure projects like the Chennai Metro Rail, Bangalore-Chennai Expressway, Chennai Peripheral Ring Road, and the Chennai Port-Maduravoyal Expressway. The company’s success is fuelled by a strong and committed network of over 500 dealers across South India and its greatest asset, a team of more than 2,000 skilled professionals. Innovation and excellence ingrained in the culture of the organization keep Suryadev at the forefront, constantly driving progress and maintaining a competitive edge in the market.

விஜய் தேவரகொண்டா + ரவி கிரண் கோலா + ராஜு -ஷிரிஷ் இணையும் பான் இந்திய திரைப்படம்

விஜய் தேவரகொண்டா + ரவி கிரண் கோலா + ராஜு -ஷிரிஷ் இணையும் பான் இந்திய திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

‘ராஜா வாரு ராணி காரு’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவுடன் மீண்டும் விஜய் தேவரகொண்டா இணைகிறார். எஸ் வி சி புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் 59ஆவது திரைப்படம் இது.

விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளான நேற்று இந்தப் படம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக போஸ்டரில் விஜய் தேவரகொண்டா கத்தியை கையில் வைத்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. அதிரடியாக படம் உருவாகிறது எனலாம். மேலும் போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் டயலாக் படம் மாஸாக இருக்கும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

இந்தத் திரைப்படம் கிராமிய பின்னணியில் மிக பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்படுவதாகவும், இது பான் இந்திய அளவிலான கவன ஈர்ப்பை கொண்டிருக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

விஜய் தேவரகொண்டா முழுக்க முழுக்க கிராமிய பின்னணியிலான கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்றும், இவர் திரையில் தோன்றுவதை பார்ப்பதற்கு அதிரடியாகவும், உற்சாகமாகவும் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ரவி கிரண் கோலா இதற்கு முன் ‘ராஜா வாரு ராணி காரு’ எனும் திரைப்படத்தின் மூலம் ஒரு திறமையான இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார். மேலும் அவர் இப்படத்தின் திரைக்கதைக்காக அயராது உழைத்து, நுட்பமாக செதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் தில் ராஜுவும் இந்த திரைப்படத்தை மிகவும் தரமான படைப்பாக உருவாக்க திட்டமிட்டுள்ளார். மேலும் இதனை பான் இந்திய அளவில் உருவாக்குகிறார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஜய் தேவரகொண்டா தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிய வருகிறது. மேலும் அவரது திரையுலக பயணத்தில் இந்த திரைப்படம் மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என அவர் நம்புகிறார்.

இந்த திரைப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!

ரீல் குட் ஃபிலிம்ஸின் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘சேத்துமான்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் மேற்கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.

மே மாதம் 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற
‘தீரா என் ஆசை என் ஓசைகள் நீ..’ என தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுத பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். மெலோடி பாடலாக தயாராகி இருக்கும் இந்தப் பாடல் திரையிசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம் பெற்று சார்ட் பஸ்டர் ஹிட்டாகியிருக்கிறது.

விஜய் தேவரகொண்டா, ராகுல் சங்கிரித்யன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய பான் இந்தியா படம் அறிவிக்கப்பட்டுள்ளது

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக VD14 என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் குறித்த அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு போர்வீரரின் சிலையின் பின்னணியில் “சபிக்கப்பட்ட நிலத்தின் புராணக்கதை” என்ற தலைப்புடன் கூடிய போஸ்டர் பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது. 1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையை இப்படம் விவரிக்கிறது.

பான் இந்தியன் திட்டம் 19 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மையான வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உணர்ச்சிப்பூர்வமான ஒரு சினிமாவாக, பிரம்மாண்டமான பான் இந்திய படைப்பாக இப்படம் உருவாகிறது. முன்னதாக விஜய் தேவரகொண்டாவை வைத்து, டியர் காம்ரேட், குஷி போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. விஜய் தேவரகொண்டா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணி ஹாட்ரிக் ஹிட்டடிக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.. சூப்பர் ஹிட்டான டாக்ஸிவாலா படத்திற்கு பிறகு விஜய் மற்றும் ராகுல் இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

‘தண்டேல்’ படக்குழுவினர்- நாயகியான சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

நாக சைதன்யா -சந்து மொண்டேட்டி- அல்லு அரவிந்த் – பன்னி வாஸ்- கீதா ஆர்ட்ஸ் ..கூட்டணியில் தயாராகும் ‘தண்டேல்’ படக்குழுவினர்- நாயகியான சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

நாக சைதன்யா- சாய் பல்லவி ஜோடி ‘லவ் ஸ்டோரி’ எனும் படத்தில் திரையில் தோன்றி ரசிகர்களை மயக்கியது. மேலும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் தயாராகும் ‘தண்டேல்’ திரைப்படத்தில் மீண்டும் நாக சைதன்யா- சாய் பல்லவி இணைந்திருப்பதால்.. அவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி மற்றும் திரை தோன்றல் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரும் இணைந்து திரையில் தோன்றி ரசிகர்களை வசீகரிக்கவிருக்கிறார்கள். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் அல்லு அரவிந்த் வழங்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் பன்னி வாஸ் தயாரிக்கிறார்.

இன்று சாய் பல்லவியின் பிறந்தநாள். இதற்காக படக்குழுவினர் நேற்று ஒரு அற்புதமான போஸ்டரை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று அவர்கள் பிரத்யேகமான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இந்த காணொளியின் தொடக்கத்தில் நடிகை சாய் பல்லவி இதற்கு முன் நடித்த திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் காண்பிக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து ‘தண்டேல்’ படத்தில் அவர் ஏற்றிருக்கும் புஜ்ஜி தல்லி (சத்யா) எனும் கதாபாத்திரமாக
அறிமுகப்படுத்தப்படுகிறார். இது ஒரு சிறந்த சிந்தனை.

சாய் பல்லவியின் திறமையான நடிப்பை நாம் அனைவரும் அறிவோம். இந்த வீடியோவில் அவரது அசலான முகமும், வேடிக்கையான நிகழ்வுகளும் காண்பிக்கப்படுகிறது.‌ அதில் அவர் அழும் போது நம்மை அழ வைக்கிறார். அவர் சிரிக்கும்போது நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கிறார். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதுடன், அவர்களுடன் விளையாடும் தருணங்களும் காணப்படுவதால்.. சாய் பல்லவி அடிப்படையில் எவ்வளவு நல்ல மனிதர் என்பதையும் இது உணர்த்துகிறது. வீடியோவின் இறுதியில் நாக சைதன்யாவுக்கும், சாய் பல்லவிக்கும் இடையே நடக்கும் உரையாடலும் நிகழ்வுகளும் அழகான தருணங்கள்.

சாய் பல்லவியின் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோ அனைவரும் நினைப்பது போல் சீரியஸாக இல்லாமல்.. சிறந்த நடிகராக மட்டும் இல்லாமல்.. கனிவான மனிதராகவும் இருக்கும் புதிய சாய் பல்லவியை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நிச்சயமாக சாய் பல்லவியின் மறுபக்கம் இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

சாய் பல்லவியின் நடிப்பு இந்த படத்திற்கு பெரிய வரவேற்பினை பெற்று தரும். நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி ஜோடி மீண்டும் ஒருமுறை திரையில் மாயாஜாலத்தை ஏற்படுத்தும் என்று பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இயக்குநர் சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்குவதால் ‘தண்டேல்’ ஒரு அற்புதமான சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கப் போவது உறுதி. இந்தத் திரைப்படத்தில் காதலை தவிர வேறு பல சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.‌

ஷாம் தத்தின் ஒளிப்பதிவும்,’ ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஆத்மார்த்தமான பின்னணி இசையும் படத்திற்கு வலிமை சேர்த்துள்ளன. ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் அற்புதமான பாடல்கள் அடங்கிய ஆல்பத்தை வழங்கியுள்ளார். இது தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். ஸ்ரீ நாகேந்திரன் தாங்கலா இப்படத்திற்கு களை இயக்குநராக பொறுப்பேற்றிருக்கிறார்.

நடிகர்கள் :
நாக சைதன்யா, சாய் பல்லவி

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : சந்து மொண்டேட்டி
வழங்குபவர் : அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர் : பன்னி வாஸ்
தயாரிப்பு நிறுவனம் : கீதா ஆர்ட்ஸ்
இசை : ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு : ஷாம் தத்
கலை இயக்கம் :ஸ்ரீ நாகேந்திரன் தாங்கலா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

ஸ்டார் திரைவிமர்சனம்

கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் “ஸ்டார்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். “பியார் ப்ரேமா காதல்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இளன் இரண்டாவது திரைப்படமாக “ஸ்டார்” திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

திரைப்பட உலகில் நடிகராக சாதிக்க வேண்டும் என நடிப்பின் உள்ள மோகத்தால் தனது சொந்த ஊரைவிட்டு ஓடி வந்த லால், அதில் திரைப்பட உலகில் சாதிக்க முடியாமல் புகைப்பட கலைஞராக ஆகிறார்.கவின் தந்தை லால் சிறு வயது முதலே தன் மகனுக்கு நடிப்பின் மீது அதிகளவில் ஆர்வத்தை ஆர்வத்தை ஊட்டி வளர்த்து வருகிறார். கவினும் நடிப்பில் ஆர்வம் கொண்டு தன் சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது தீராக்காதல் கொண்ட அதில் தீவிர கவனம் செலுத்துகிறார்.அதன் பின்னர் கதாநாயகன் கவின் எப்படியாவது திரைப்படத் துறையில் நடிகனாக வேண்டும் என பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறார்..

அது ஒரு புறம் இருக்க கல்லுரிபில் படிக்கும் கொண்டிருக்கும் போது தனக்கு படிப்பு இரண்டாம் பட்சம்தான் வாழ்ந்தவரும் கவின ப்ரீத்தி முகுந்தனை காதலித்து வருகிறார்.நடிப்பு பயிற்சி கற்றுக் கொள்வதற்காக மும்பையில் உள்ள திரைப்படக் நடிப்பு பயிற்சி பட்டறையில் சென்று சேர விரும்பி அங்கு சென்று தோல்வியை சந்திக்கிறார்.இந்நிலையில் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய விபத்தில் சிக்கும் கதாநாயகன் கவினுக்கு அதிக அளவில் முகத்தில் காயங்கள் ஏற்பட முகத்தில் தழும்பாக மாறுகிறது.அதன் பிறகு கதாநாயகன் கவின் நடிகனாகும் கனவு தகர்ந்து போகிறது.

தான் உயிருக்கு உயிராக காதலித்த காதலி ப்ரீத்தி முகுந்தனை கதாநாயகன் கவினை விட்டு புரிந்து சென்று விடுகிறார்.நண்பர்கள் மற்றும் குடும்பம் மட்டுமே உடன் இருக்க அதன் பின்னர் கதாநாயகன் கவின் உடன் கல்லூரியில் படித்த கதாநாயகி அதிதி போஹங்கர் கதாநாயகன் கவிணை காதலித்து ஆரம்பிக்கிறார்.இறுதியில் கதாநாயகன் கவின் நடிகராக ஆனாரா? நடிகனாக வில்லையா? மீண்டும் காதலில் வெற்றி பெற்றாரா? காதலில் வெற்றி பெறவில்லையா? என்பதுதான் இந்த ஸ்டார் திரைப்படத்தின் மீதிக்கதை.

கவின், முதல் பாதியில் சாக்லேட் பாயாகவும், லவ்வபல் பாயாகவும் இரண்டாம் பாதியில் சாதிக்க துடிக்கும் இளைஞராகவும் நடித்து மனதில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் பதிந்து இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்து இருக்கும் பிரீத்தி முகுந்தன் கதாநாயகன் கவினின் காதலியாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.மற்றொரு கதாநாயகியாக வரும் அதிதி போஹங்கர், கவினின் முயற்சிக்கு உறுதுணையாக வந்து ரசிகர்கள் மனதில் நிற்கிறார்.

கவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லால், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம், தன் மகனை நினைத்து வருந்துவது, மற்றும் கண்டிப்பது என்று நடிப்பில் பளிச்சிடுகிறார்.

ஒளிப்பதிவாளர் K.எழில் அரசு ஒளிப்பதிவு மூலம் 1980 கால கட்டத்திற்கு ஏற்றாற்போல் அழகாக திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.

இயக்குனர் இளன் கதைக்களத்தை காதல் ஆக்சன் சென்டிமென்ட் என அனைத்து தரப்பையும் கவரும் விதத்தில் இருக்கிறார்.

கிளைமாக்ஸ்சில் அவர் வைத்திருக்கும் திருப்பம் சிறு குழப்பத்தை ஏற்படுத்தினாலும் அரங்கை விட்டு வெளி வரும்போது அது ரசிகர்களிடையே பேசும் பொருளாக மாறி பட்டிமன்றமாக கூட மாறி விடுகிறது.

ஸ்டார் ஏனோ ஜொலிக்காமல் மினுமினுத்த படி எரிகிறது

Spinny expands its presence in Chennai with one-of-its-kind experiential hub, Spinny Park in Chennai

Spinny Park serves an unparalleled customer car buying experience spanning across 2 acres with an assortment of over 400 Spinny Assured, Budget and Max Luxury Cars 

Chennai, May 09, 2024

With the continuous mission to strengthen innovation and earn trust by improving the car buying and selling experience in Tamil Nadu, Spinny, India’s leading full-stack used car platform, has expanded its fifth Spinny Park, an experiential hub, located in OMR, Sholinganallur, Chennai. The park concept enhances the car-buying experience for customers in the city, through its handpicked collection of used cars in Chennai and expansive, state-of-the-art space.

The new facility is spread across a total area spanning 2 acres and can board a huge assortment of cars, including over 400 Spinny Assured, Budget and Max luxury cars in addition to an inventory of over 300 cars from Spinny car Hub located in Nexus Vijaya Mall. The park provides an open experience for visitors and customers to freely explore, select, and test drive their preferred cars.  

Spinny’s expansion directly reflects the significant consumer demand for top-tier used vehicles and a premium car ownership experience from Chennai. In addition to enhancing the customer experience, the new Spinny Park will contribute to the local economy by creating employment opportunities. This initiative aligns with Spinny’s mission of driving innovation while fostering sustainable growth within the communities it serves. 

Since the operations started in January 2021, Spinny has successfully facilitated over 30,000 transactions in buying and selling used cars, representing an impressive 10% of Chennai’s used car market share. Seeing the consistent demand for luxury car sales in the city and the increasing interest from younger demographics, Spinny aims to fill the gap by offering accessible luxury used cars. 

Niraj Singh, Founder and CEO of Spinny, expressed enthusiasm about this development, stating, “Chennai is an important and thriving market for us, and we are excited to elevate our customers’ experience in the city. As pioneers in providing a simple and delightful buying and selling experience in the used-car industry, we understand the need for a car for individuals and families, and what it means for them. Launching our fifth Spinny Park in the country speaks volumes about our commitment to offering a seamless consumer experience. The sizable experiential hub is set amidst a scenic view, for customers to relax and test drive their favorite cars. 

The company’s commitment to customer experience is evident in its provision of home deliveries and doorstep inspections, extending its services to neighboring cities such as Salem, Madurai, and Trichy. Additionally, Coimbatore stands out as another crucial hub in Tamil Nadu, with Spinny delivering over 200 cars monthly to this region.

Across India, Spinny has facilitated over 4 lakh transactions for both purchasing and selling cars, underscoring its commitment to seamless automotive experiences nationwide. 

Saravanan Radhakrishnan, City Head, Spinny Chennai, added, “Since we entered Chennai two years ago, we have witnessed an overwhelming response from customers who appreciate our commitment to transparency, quality, and convenience. The launch of Spinny Park is a testament to our dedication to meeting the evolving needs of the local market. We look forward to welcoming customers to this immersive experience and continuing to deliver exceptional service.”

Spinny operates more than 57 car hubs across the country with a total parking capacity of over 20,000 cars and operates with 5 more hubs specific for dealer partners.  Spinny also launched its flagship & India’s largest experiential hub in Bengaluru last year and another Spinny Park in Pune, Kochi, and Ahmedabad in 2023. 

Every Spinny Assured car on the Spinny platform comes with a 200-point inspection checklist, a 5-day no-questions-asked money-back guarantee and a 1-year after-sales warranty, which resonates with the brand’s promise of delivering complete transparency, convenience, trust, and quality. Over the last couple of years, Spinny has had a cumulative customer base of over two lakhs, and almost 54% of car purchases are done online from Spinny’s online platform.

For More Information visit: https://www.spinny.com/

‘லெவன்’ படத்திற்காக டி இமான் இசையில் முதல் முறையாக பாடிய மனோ

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’

பல ஆண்டுகளாக திரையுலகில் தொடர்ந்து பயணித்து வரும் நிலையிலும் இதுவரை இணைந்து பணிபுரியாத இசையமைப்பாளர் டி இமானும் பிரபல பாடகர் மனோவும் முதல் முறையாக கைகோர்த்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ள ‘லெவன்’ திரைப்படத்திற்காக இமான் இசையில் மனோ பாடியுள்ளார்.

உணர்ச்சிப் பூர்வமான இந்த பாடல் குறித்து பேசிய மனோ, “இமான் இசையை தொடர்ந்து ரசித்து வருகிறேன். அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக பாடுவது மிக்க மகிழ்ச்சி. உயிரோட்டமிக்க இந்த பாடல் பெரிதும் வரவேற்கப்படும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இது குறித்து பேசிய இசையமைப்பாளர் டி இமான், “மனோ அவர்களுடன் இணைந்து பணியாற்றவில்லை என்ற ஏக்கம் பல காலமாக இருந்தது, இன்று அது பூர்த்தியாகி உள்ளது அவரது குரலுக்கு மிகவும் உகந்த பாடலை உணர்ச்சிப்பூர்வமாக அவர் பாடியுள்ளார்,” என்று தெரிவித்தார்.

‘லெவன்’ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “திரைப்படத்தின் முக்கியமான கட்டத்தில் இந்த பாடல் இடம்பெறுகிறது. இமான் இசையில் மனோ அவர்கள் முதல் முறையாக பாடியது ‘லெவன்’ திரைப்படத்திற்காக என்பது மிகுந்த பெருமை,” என்று கூறினார். இப்பாடலின் வரிகளை கபிலன் எழுதியுள்ளார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான ‘லெவன்’ திரைப்படத்தை தங்களது மூன்றாவது திரைப்படமாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர்.

இயக்குநர் சுந்தர் சி இடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். ‘சரபம்’, ‘சிவப்பு’ மற்றும் ‘பிரம்மன்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சமீபத்தில் வெளியாகி பெரிதும் பாராட்டப்பட்ட வெப் சீரிஸான ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’யிலும் நடித்துள்ள இவர், இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ‘விருமாண்டி’ புகழ் அபிராமி, ஆடுகளம் நரேன், ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன், ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா, அர்ஜை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கான இசையை டி. இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். படத்தொகுப்புக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார்.

‘லெவன்’ திரைப்படம் குறித்த மேலும் தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக ‘லெவன்’ அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் பேனரில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் திரைப்படமான ‘லெவன்’ படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விமல், கருணாஸ் நடிப்பில்  “போகுமிடம் வெகு தூரமில்லை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.

Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க,  அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”.  விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.

நடிகர் விமல் மற்றும் கருணாஸ் கதாபாத்திரங்களின் பின்னணியில்  ஒரு காரும் இடம்பெற்றிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்தவுடனே உணர்வுப் பூர்வமான கதைக்களத்தில் அற்புதமான அனுபவம் தரும் திரைப்படமாக இருக்குமென்பதை உறுதி செய்வதாக இருந்தது. மிக வித்தியாசமானதாக அமைந்துள்ள ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது.

இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும், மார்ச்சுவரி  வேன் ஓட்டும் நாயகன் விமல், தனது அவசரப் பணத்தேவைக்காக,  திருநெல்வேலி வரை ஒரு முக்கியமானவரின்  உடலை எடுத்துச் செல்கிறார்.  சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு உடலை எடுத்துச் செல்லும் பயணம் தான் இந்த படத்தின் மையம்.  அந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும் மனிதர்கள், அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் மற்றும் தடங்கல்களை  தாண்டி அவர் எப்படிச் சென்றடைகிறார் என்பது தான் இப்படத்தின் கதை.

தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன்,  அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா.

சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணம் படத்தின் மையம் என்பதால், படம் தமிழ்நாடு முழுக்க பட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.   திருநெல்வேலி மற்றும் சென்னையில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.

இதுவரையிலான  திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் முழு படப்படிப்பும் முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.  படத்தின் டீசர், டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்

இயக்குநர்: மைக்கேல் K ராஜா
தயாரிப்பாளர்: சிவா கிலாரி (Shark 9 pictures)
இசையமைப்பாளர்: N.R.ரகுநந்தன்
ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்
தொகுப்பாளர்: M.தியாகராஜன்
கலை இயக்குநர்: சுரேந்தர்
ஸ்டண்ட் டைரக்டர்: மெட்ரோ மகேஷ்
நடன மாஸ்டர்: ரிச்சி ரிச்சர்ட்சன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ராகேஷ் ராகவன்
நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கி மகி
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’

இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது !!

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் இனிதே துவங்கியது !!

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தங்களின் முதல் திரைப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்நிறுவனங்கள் பல புதிய திரைப்படங்களை இணைந்து தயாரிக்கவுள்ளனர். முன்னணி நட்சத்திர இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் முதல் படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மே 6ஆம் தேதி தொடங்குகிறது. பரியேறும் பெருமாள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா ரஞ்சித்துடன் இணையும் படம் இது என்பது குறிப்பிடதக்கது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, அமைதிக்கான பாதையைத் தேடிய, ஒரு போர்வீரனின் கதையை, நம் கண்களுக்கு விருந்தாக கொண்டுவருகிறது.

இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கும் இப்படத்திற்கு, எழில் அரசு K ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டராக சக்திகுமார், மூத்த கலை இயக்குநர் குமார் கங்கப்பன் கலை இயக்கத்தையும், ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக ஏகன் ஏகாம்பரம் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் வழங்கும், “பைசன் காளமாடன்”, அற்புதமான படைப்பாளியான மாரி செல்வராஜின் இயக்கத்தில், மனித ஆத்மாவின் வெற்றி வேட்கையைப் பேசும் கலைப்படைப்பாக, மிக உன்னதமான அனுபவத்தை வழங்கவுள்ளது.