ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்குகிறார். மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும் இப்படத்திற்கு ‘சீதா பயணம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சீதை எனும் பாத்திரத்தில் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழுக்கு அறிமுகமாகிறார்.
சீதா மிகப் புதுமையான ஆற்றல் மிகு பாத்திரம், உணர்வுரீதியாக மிக அழுத்தமான தைரியமான பாத்திரம், இப்பாத்திரத்தில் தன் தனித்துவமான நடிப்பின், முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா அர்ஜுன். அவரது பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ஒரு நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஐஸ்வர்யாவின் பாத்திரத்திற்குக் கூடுதல் முக்கியத்துவம் சேர்க்கும் வகையில், அவரது தந்தை ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா இப்படத்தை தயாரித்து இயக்குகிறார். ஐஸ்வர்யா அர்ஜுன் தனது அற்புதமான பாத்திரம் மூலம் தெலுங்கு ரசிகர்களின் இதயங்களை வெல்லவும் தயாராகி வருகிறார்.
சீதா பயணம் படத்தில் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.
மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் பான்-இந்தியா திரைப்படமான ‘தி ராஜா சாப்’ படத்தின் மீதான உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது, தயாரிப்பாளர்கள் படத்தின் முன்னணி சூப்பர்ஸ்டாரான பிரபாஸின் பிறந்தநாளில், அவர் இடம்பெறும் அசத்தலான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ரசிகர்களுக்கு விருந்தாக பகிரப்பட்ட இந்த மோஷன் போஸ்டர், தற்போது இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. முதல் முறையாக ஹாரர் காமெடி ஜானரில் பிரபாஸ் களமிறங்குகிறார். இது படத்தின் மீதான ஆவலை உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
2 நிமிட மோஷன் போஸ்டர் காட்டின் நடுவில் பியானோவில் ஒலிக்கும் “ஹேப்பி பர்த்டே” ட்யூனுடன் துவங்குகிறது. பின்னர், ஒரு மர்ம உருவம் காடுகளில் சுற்றித் திரிவதைப் பிந்தொடர்ந்து, பார்வையாளர்களை விண்டேஜ் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறது, அங்கு இறுதியாக பிரபாஸின் பிரமாண்ட தோற்றம் காண்பிக்கபடுகிறது. பழங்கால அரண்மனையின் பிரமாண்ட பின்னணியில், கறுப்பு உடையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பிரபாஸை வெளிப்படுத்தும் இந்த போஸ்டர், சூப்பர் ஸ்டாரின் கவர்ச்சியை மிகச்சரியாகப் படம்பிடிக்கிறது. ராஜாவாக உடையணிந்து, சுருட்டுப் பிடித்தபடி, பிரபாஸ் ஒரு சக்திவாய்ந்த, ஏக்கம் நிறைந்த அதிர்வை வெளிப்படுத்துகிறார், இது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த போஸ்டரில் “ஹாரர் இஸ் தி நியூ ஹ்யூமர்” என்ற டேக்லைனும், அதைத் தொடர்ந்து “ஹேப்பி பர்த்டே, ரெபெல் சாப்” என்பதும் இடம்பெற்றுள்ளது.
பிரபாஸ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் போஸ்டரைப் பகிர்ந்து…, “இது திரில்லுடன் ஜில் செய்யும் நேரம் இது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏப்ரல் 10, 2025 அன்று திரையரங்குகளில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டரில் பிரபாஸ் ரசிகர்கள் இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார்கள். #RajaSaabBirthdayCelebrations என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது, ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வழியே, பிரபாஸ் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
தொடர்ந்து ஆக்ஷன் நிரம்பிய பாத்திரங்களில் மாஸாக வலம் வந்த பிரபாஸ், முதல் முறையாக ஹாரர் -காமெடி ஜானரில், தி ராஜா சாப் மூலம் புதிய பரிமாணத்தில் தோன்றவுள்ளார். இந்த புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தை, ரசிகர்கள் பரபரப்பாக பகிர்ந்து வருகிறார்கள், இந்த போஸ்டர் அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு சரியான கிக்ஆஃப் ஆகும்.
இப்படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தை இயக்குநர் மாருதி இயக்க, பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரின் கீழ் விஸ்வ பிரசாத் தயாரிக்கிறார், தமன் எஸ் இசையமைக்கிறார். இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஏப்ரல் 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரான பிரபாஸ் இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் நாடு முழுவதும் மட்டுமில்லாமல் உலக நாடுகள் முழுவதும் பரவியிருக்கும் அவரது ரசிகர்களையும், பார்வையாளர்களையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறார். மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் அவரது திறமை- அவரின் ஈடு இணையற்ற செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது. அவரது பணிவு- ரசிகர்களுடன் உண்மையான அக்கறையுடன் கூடிய தொடர்பு – இதனால் அவர் ரசிகர்களிடம் அசைக்க முடியாத ஆதரவை பெற்றிருக்கிறார். இதன் காரணமாகவே பாக்ஸ் ஆபீஸ் வெற்றியையும் தொடர்ந்து உறுதி செய்கிறார். ‘பாகுபலி’ முதல் ‘கல்கி’ வரை பிரபாஸ் தொடர்ந்து மிகப்பெரிய ஓப்பனிங்கை வழங்குகிறார். தயாரிப்பாளர்களின் முதலீட்டிற்கு.. கணிசமான வருவாய் உத்திரவாதம் அளிப்பதன் மூலம் தயாரிப்பாளர்கள் இவரை நம்பி பிரம்மாண்டமான படைப்புகளை உருவாக்குகிறார்கள். அவருடைய திரைப்படங்கள்- பொழுது போக்கு மற்றும் எமோஷனின் கலவையாக இருப்பதால், அவர் ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கிறார். மேலும் பிராந்திய அளவிலான புகழில் இருந்து உலகளாவிய நட்சத்திர நடிகர் என்ற எல்லை வரை பிரபாஸின் பயணம் விரிவடைந்திருக்கிறது. இது அவரது திறமையையும், கடின உழைப்பையும் வெளிப்படுத்துகிறது.
பிரபாஸ் உண்மையில் ஒரு உணவுப் பிரியர். படப்பிடிப்பு தளங்களிலும் கூட தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சி அடைகிறார். மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற அவரது சிந்தனையாலும், செயலாலும், அக்கறையாலும் அவருடன் பணியாற்றும் நபர்களிடமிருந்து அவர் பெறும் மரியாதை தனித்துவமானது. ‘கல்கி 2898 கிபி’ படத்தின் விளம்பர நிகழ்வில் போது தீபிகா படுகோன் போன்ற சக கலைஞரிடமிருந்து உணவு பரிமாறும் விசயங்களில் பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.
மகத்தான வெற்றியைப் பெற்றாலும் பிரபாஸ் பணிவுடன் இருப்பதை பின்பற்றுபவர். ‘கல்கி 2898 கிபி’ படத்தின் வசூல் ஆயிரம் கோடியை கடந்த போது மிக மிக எளிமையான ஒரு போஸ்டரை மட்டுமே பகிர்ந்து கொண்டார். அவரது இந்த பணிவான செயல்.. ரசிகர்களிடம் எதிரொலித்தது. இதன் காரணமாகவே அவரின் பணிவை பலரும் பாராட்டினார்கள்.
பிரபாஸ் எப்போதும் தனது ரசிகர்களை ‘டார்லிங்’ என்று அன்புடன் குறிப்பிடுவார். இதிலிருந்து அவர் ரசிகர்கள் மீதும், ரசிகர்களுக்கு அவர் மீதும் இருக்கும் அன்பும், நன்றியும் பிரதிபலிக்கிறது. அவரது அபிமானத்திற்கு உரியவர்களிடம் அவரின் உண்மையான தொடர்பு.. அவரை ஒரு நட்சத்திரமாக மட்டுமல்ல அன்பிற்குரிய நபராகவும் மாற்றுகிறது.
பிரபாஸ் அர்ப்பணிப்பின் உருவம் என்று குறிப்பிடலாம். ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் அவரது கதாபாத்திர தோற்றத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட அசைக்க முடியாத அர்ப்பணிப்பு – இதற்கு சிறந்த சான்றாகும். இந்த படத்திற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்களை அவர் அர்ப்பணித்தார். மேலும் கடுமையான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டார். சிக்கலான… நுட்பமான… அதிரடி காட்சிகளில் நடிப்பதற்காகவும் தேர்ச்சி பெற்றார். அத்துடன் அந்த திரைப்படம் எடுத்துரைக்கும் காவிய உலகில் தன்னை ஒரு கதாபாத்திரமாகவே மூழ்கடித்து கொண்டார். இன்றைய வேகமான தொழில்துறையில் இந்த அளவிலான அர்ப்பணிப்பு என்பது மிகவும் அரிதானது. பிரபாஸின் இடைவிடாத சிறப்பான ஈடுபாடு.. அவரது வாழ்க்கையில் என்றும் நிலையானது. இது அவரை பின்பற்ற நினைக்கும் ஆர்வமுள்ள நடிகர்களுக்கு உண்மையான உத்வேகத்தையும் அளிக்கிறது.
பிரபாஸ் பெருந்தன்மை மிக்கவர். சமூக காரணங்களுக்காக தாராளமாக நன்கொடைகளை வழங்கி தன் பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார். அண்மையில் கேரளா – ஆந்திரா- தெலுங்கானா – ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட பேரிடரின் போது நிவாரண நிதியாக நான்கு கோடி ரூபாயை நன்கொடையாக அளித்தார்.
பிரபாஸின் தோற்றம் மற்றும் அவரது கவர்ச்சி ஒரு சூப்பர் ஸ்டாராகவே காணத் தோன்றுகிறது. சிக்ஸ் பேக் … மெலிந்த உடல்… என எந்த தோற்றத்தில் திரையில் தோன்றினாலும் அவரது வசீகரம்… பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இதனுடன் அவருடைய எளிமையான இயல்பும், அவரது தோற்றமும் அவர் சார்ந்த தொழில்துறையில் ஒரு தனித்துவமான ஆளுமையாக்குகிறது.
திறமை – பணிவு – அசைக்க முடியாத அர்ப்பணிப்பு – தாராளமான நன்கொடை- என பல்வேறு அம்சங்களால் இந்திய அளவில் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலித்து, தேசம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயத்தை வெல்கிறார். வென்று வருகிறார்.
பிரபாஸின் பிறந்த நாளில் ‘சலார் 2 முதல் கல்கி 2’ வரை அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்.. 2,100 கோடி ரூபாய் வசூலிக்கும் என பந்தயம் கட்டப்பட்டிருக்கிறது.
முதல் பான் இந்திய சூப்பர்ஸ்டாரான பிரபாஸ், அவருடைய தொழில் சார் வாழ்க்கையில் புதிய உச்சத்தில் இருக்கிறார். இதனால் அவரது பிறந்த நாளை நடிகராக மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை மாற்றி அமைத்த நட்சத்திரமாகவும் கொண்டாடுகிறார்கள்.
முதல் பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸின் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’, ‘சலார்’, ‘கல்கி 2898 கிபி’ போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை படைத்து இந்திய சினிமாவில் மறுக்க இயலாத சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். பார்வையாளர்கள் மீது அவர் வைத்திருக்கும் தீராத விசுவாசம் பிளாக்பஸ்டர் ஹிட்டிற்கு பிறகும் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் அவருடைய திரைப்படங்களில் பிரம்மாண்டமான முறையில் முதலீடு செய்வது எளிதாகிறது.
பெரிய திரையில் பிரபாஸ் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும்.. அதற்கான தோற்றமும்.. அவருடைய நடிப்பும் …ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களின் அபரிமிதமான அன்பையும், பாராட்டையும் பெறுகிறது. இது அவரது கவர்ச்சிக்கும், நட்சத்திர சக்திக்கும் ஒப்பிட முடியாத அளவில் இருக்கிறது. அதே தருணத்தில் அவர் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். திரை துறை வணிகர்களின் தரவுகளின் படி, தயாரிப்பாளர்கள் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிய அளவில் முதலீடுகளை செய்து ஆதரிக்கவும் தயாராக உள்ளனர்.
இந்த வரிசையில் அவர் நடிப்பில் தயாராகி வரும் படங்களின் பட்டியலை தொடர்ந்து காண்போம்.
‘சலார் 2’ : இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ஹை- வோல்டேஜ் ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படம் இது. இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஸ்பிரிட்: இந்தி சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக ‘ஸ்பிரிட்’ இருக்கிறது. இந்தப் படத்தில் முதன்முறையாக பிரபாஸ் – பரபரப்பிற்கு பெயர் பெற்ற இயக்குநரான சந்தீப் ரெட்டி வங்காவுடன் இணைந்திருக்கிறார்.
இயக்குநர் ஹனு ராகவ புடி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம்- 1940 ஆம் ஆண்டுகளில் பின்னணியில் சரித்திர புனைவு கதையாக தயாராகிறது. இந்தத் திரைப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மேற்கொள்கிறார்.
The Raja Saab: இந்த திரைப்படம் – இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் காதலும் காமெடியும் கலந்த திகில் படமாகும். இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பிரபாஸுடன் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
கல்கி 2 : ‘கல்கி 2898 கிபி’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. பிரபாஸ் ,தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படங்கள் அனைத்தும் பிரபாஸின் திறமை மற்றும் அவரது நட்சத்திர பலத்திற்காக தயாராகும் திரைப்படங்கள். இந்த திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் 2,100 கோடி ரூபாயை முதலீடு செய்து இருக்கிறார்கள். இது அவரது அற்புதமான ஈர்ப்பு- அவரின் நட்சத்திர சக்தி- சர்வதேச தரம்- பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் திறன்- போன்ற அம்சங்களுக்காகவும், அவருடைய சூப்பர் ஸ்டார் நட்சத்திரத்திற்கான சான்றும் ஆகும். அவரது அயராத பணிக்கு ஆதரவு தெரிவிக்கும் சினிமா ஆர்வலர்களின் ஆசிர்வாதம் இது என்றும் குறிப்பிடலாம். பிரபாஸ் .. கவர்ச்சி- திறமை – மேஜிக் ஆகியவற்றின் சரியான கலவையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் மிகப்பெரிய வெற்றியாக மாற்றம் பெறுவதையும் உறுதி செய்கிறார். இந்த பிறந்த நாளில் பிரபாஸ் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்த 2,100 கோடி ரூபாயும் அவரது ரசிகர்களுக்காக அவர் வழங்கும் அற்புதமான படைப்புகள் ஆகும். இதனையும் அவரது பிறந்தநாளில் கொண்டாடுவோம்
நமது ஆழ் மனதில் எதை அதிகம் விரும்புகிறோமோ அதுவே நமது வாழ்க்கை” என்ற கருத்தை காதல் பின்னணியோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சிவா.ஆர்.
சிறு வயதில் கதாநாயகன் வெற்றியின் கண் முன்னே நடந்த விபத்து ஒன்றில் தனது தாய் மற்றும் தந்தை இழந்து தன் மனப்போராட்டத்தில் இருந்து மீள்வதற்காக காசிக்கு சென்று ஆன்மீகம் கற்றுக்கொண்டு மனப் போராட்டத்தில் இருந்து தப்பிக்கலாம் என நினைக்கிறார்.
எழுத்தாளர் ஆக வேண்டும் என்று 10 வருடங்களாக முயற்சித்தும் ஆன்மீகத்தை மனதளவில் ஏற்க முடியாமல் தவிக்கிறார். எழுத்தாளராக வேண்டும் என்ற தனது பயணத்தை தொடங்குகிறார்.
அப்போது அவருக்கு ரயில் பயணத்தில் கிடைக்கும் வெளிநாட்டு பெண்னின் நட்பு, அந்தப் பெண்ணின் நட்பு மூலம் சன்னியாசியாக சுற்றி திரிந்த வெற்றி சாதாரண மனிதராக மாறி எழுத்தாளராக வேண்டும் என்று கனவினை நோக்கி பயணப் படும்போது, மீண்டும் ஒரு கசப்பான சம்பவத்தை கதாநாயகன் வெற்றி எதிர்கொள்கிறார்.
மீண்டும் சன்னியாசியாக மாறும் வெற்றியின் வாழ்க்கை என்னவானது எழுத்துலகில் அவர் சாதித்தாரா? சாதிக்கவில்லையா?, என்பதுதான் இந்த ஆலன் திரைப்படத்தின் மீதிக்கதை.
ஆலன் திரைப்படத்தில் நாயகனாக வெற்றி நடித்திருக்கிறார்.
அமைதியான முகம், அளவான நடிப்பு என சன்னியாசி கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் கதாநாயகன் வெற்றி.தன் சன்னியாசி கதாபாத்திரத்தை களைத்து விட்டு இந்த வெள்ளைக்கார பெண்ணுடன் காதல் வயப்படும் போது, தனது முகத்திலும், உடல் அசைவிலும் வெட்கத்தை வெளிப்படுத்தும் விதம், நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை மற்றும் தமிழ் மொழியை நேசிக்கக் கூடிய ஜெர்மனி நாட்டு பெண்ணாக நடித்திருக்கும் மதுரா, அனைத்து காட்சிகளிலும் சிரித்த முகத்தோடு பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அனு சித்தாரா ……
விவேக் பிரசன்னா, அருவி மதன், டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா, ஹரிஷ் பெராடி என மற்ற கதாபாத்திரங்களில்.
ஒளிப்பதிவாளர் வின்தன் ஸ்டாலின், தனது ஒளிப்பதிவு மூலம் ரிஷிகேஷ் உள்ள ஆன்மீகத் தளங்களுக்கு நேரில் சென்று பயணித்த அனுபவத்தை கொடுக்கிறது.
மொத்தத்தில் இந்த “ஆலன்” சன்னியாசிக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும்
‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா – பிளாக் பஸ்டர் ஹிட் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு – தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா – 14 ரீல்ஸ் பிளஸ் – எம். தேஜஸ்வினி நந்தமூரி – கூட்டணியில் தயாராகும் #BB4 எனும் படத்திற்கு ‘அகண்டா 2- தாண்டவம் ‘ என பெயரிடப்பட்டு , அதன் தொடக்க விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக் பஸ்டர் ஹிட் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு ஆகியோரின் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் படத்திற்கு, #BB4 அகண்டா 2 தாண்டவம் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது அவர்களின் பரபரப்பான பிளாக்பஸ்டர் அகண்டா திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகிறது. ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோர் 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் படத்தைத் தயாரிக்கின்றனர், அதே நேரத்தில் எம் தேஜஸ்வினி நந்தமுரி இந்த பான் இந்தியா திரைப்படத்தை வழங்குகிறார்.
படக்குழு மற்றும் முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் அகண்டா 2 இன்று சிறப்பாக தொடங்கப்பட்டது. முஹூர்த்தம் ஷாட்டுக்கு, தேஜஸ்வினி கேமராவை சுவிட்ச் ஆன் செய்ய, பிராமணி கிளாப்போர்டு அடித்தார். முஹூர்த்தம் ஷாட்டுக்கு பாலகிருஷ்ணா ஒரு பவர்ஃபுல் டயலாக்கைச் சொன்னார்.
அகண்டாவில் கதாநாயகியாக நடித்த பிரக்யா ஜெய்ஸ்வால் இப்படத்திலும் பங்கேற்கிறார். மேலும் அவர் பிரமாண்ட துவக்க விழாவிலும் கலந்து கொண்டார்.
நந்தமுரி ராமகிருஷ்ணா அகண்டா 2 டைட்டில் தீமை வெளியிட்டார், இது கதையில் பிணைக்கப்பட்ட ஆன்மீக கூறுகளை வெளிப்படுத்தும் அதே நேரம், எஸ் தமனின் அற்புதமான ஸ்கோர் உண்மையிலேயே தனித்து நிற்கிறது, இந்த தீம் படத்தின் பிரம்மாண்டத்தை எடுத்துக்காட்டுகிறது.
நந்தமூரி பால கிருஷ்ணாவை மாஸாக திரையில் காட்சிப்படுத்துவதில் பொயபட்டி ஸ்ரீனு தனித்துவமான திறமை மிக்கவர். அதிலும் நந்தமூரி பாலகிருஷ்ணாவை மாஸ் மகாராஜாவாக காட்சிப்படுத்தும் வகையில், ஐன் சக்தி வாய்ந்த திரைக்கதையை அவர் எழுதியிருக்கிறார். இத்திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீ ராம் பிரசாத் மற்றும் சந்தோஷ் டி டெடகே ஆகிய இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்கிறார்கள். ஏ. எஸ். பிரகாஷ் கலை இயக்குநராகவும், தம்மி ராஜு பட தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். ‘அகண்டா’ படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைத்த எஸ். தமன் அதன் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார்.
இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும், ஒவ்வொரு திரைப்பட ரசிகரும் இந்த பரபரப்பான கூட்டணியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அகண்டா 2 க்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும், மேலும் இந்த அகண்டா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
நடிகர்கள்: மாஸ் கடவுள் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிரக்யா ஜெய்ஸ்வால்
தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : பொயபட்டி ஸ்ரீனு தயாரிப்பாளர்கள் : ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா தயாரிப்பு நிறுவனம் : 14 ரீல்ஸ் பிளஸ் வழங்குபவர் : எம். தேஜஸ்வினி நந்தமூரி இசை : எஸ். தமன் ஒளிப்பதிவு : சி. ராம் பிரசாத் & சந்தோஷ் டி டெடகே கலை இயக்கம் : ஏ.எஸ். பிரகாஷ் படத்தொகுப்பு : தம்மி ராஜு மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடிக்கிறார்கள், சிட்டாடல் உலகிலிருந்து வெளிவரும் இந்த இந்தியத் தொடரை டி2ஆர் பிலிம்ஸ், அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ ஆகியவை தயாரித்துள்ளன.
சிட்டாடல்: ஹனி பன்னி நவம்பர் 7 ஆம் தேதி பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் திரையிடப்படுகிறது
மும்பை, இந்தியா—அக்டோபர் 15, 2024- மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒரிஜினல் தொடரான சிட்டாடல்: ஹனி பன்னியின் மனங்கவரும் அதிரடி டிரெய்லரை இந்தியாவில் முன்னிலையில் உள்ள பொழுதுபோக்குத் தளமான பிரைம் வீடியோ, இன்று வெளியிட்டது. சிட்டாடல் பிரிவில் வெளிவரும் இந்த இந்தியத் தொடரை ராஜ் & டிகே (ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே) இயக்கியுள்ளனர் மற்றும் ராஜ் & டிகே உடன் இணைந்து சீதா ஆர். மேனன் இதனை எழுதியுள்ளார். இந்தத் தொடரை டி2ஆர் ஃபிலிம்ஸ், அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர் மற்றும் ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ, ஏஜிபிஓவைச் சேர்ந்த ஆண்டனி ருஸ்ஸோ, ஜோ ருஸ்ஸோ, ஏஞ்சலா ருஸ்ஸோ-ஓட்ஸ்டாட் மற்றும் ஸ்காட் நேம்ஸ், டேவிட் வெயில் (ஹண்டர்ஸ்) உடன் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக இணைந்து சிட்டாடல்: ஹனி பன்னி-ஐ தயாரித்துள்ளனர் மற்றும் இவர்கள் சிட்டாடல் பிரிவின் அனைத்துத் தொடர்களையும் உருவாக்குகிறார்கள். மிட்நைட் ரேடியோவும் ஒரு நிர்வாக தயாரிப்பாளராகும். இத் தொடரில் திறமை வாய்ந்த வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களாகவும், பல்துறை வல்லுநர் கே கே மேனன், சிம்ரன், சாகிப் சலீம், சிக்கந்தர் கெர், சோஹம் மஜும்தார், சிவன்கித் பரிஹார் மற்றும் காஷ்வி மஜ்முந்தர் ஆகியோரை இணை நடிகர்களாகவும் நடித்திருக்கும் இந்த சிட்டாடல்: ஹனி பன்னி… பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நவம்பர் 7ஆம் தேதி திரையிடப்பட உள்ளது.
90களின் துடிப்பான ஒரு திரைக்கதை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள உற்சாகமூட்டும் மற்றும் ஆவலைத் தூண்டும் இந்த ஸ்பை த்ரில்லரின் முன்னோட்டமாக இந்த டிரைலர் வெளி வந்துள்ளது, இதில் அதிரடி ஆக்ஷன், ஹை-ஆக்டேன் ஸ்டண்ட் மற்றும் இருக்கை நுனிக்கு நம்மை அழைத்துச் செல்லும் உற்சாகம் ஆகியவை நிறைந்துள்ளன.
ஸ்டண்ட்மேன் பன்னி (வருண் தவான்) வாய்ப்புகளைத் தேடும் நடிகை ஹனியை (சமந்தா) துணை நடிகராக நியமிக்கிறார். அவர்கள் அதிரடி, உளவு மற்றும் துரோகம் ஆகியவற்றின் இடர் நிறைந்த உலகத்திற்குள் தள்ளப்படுகிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களது ஆபத்தான கடந்த காலத்தை அலசும் போது, மனமொடிந்து பிரிந்த ஹனியும் பன்னியும் மீண்டும் ஒன்றிணைந்து தங்கள் இளம் மகள் நதியாவைப் பாதுகாக்க போராடுகிறார்கள்.
“டீசருக்கு கிடைத்த அமோக வரவேற்புக்குப் பின், நிகழ்ச்சியின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருண், சமந்தா மற்றும் ராஜ் & டிகே ஆகியோருடன் அவர்களது ரசிகர்களும் நவம்பர் 7ஆம் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ரசிகர்களின் மனம் கவரும் வகையிலான சிட்டாடல்: ஹனி பன்னியின் வியக்கத்தக்க உலகத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட இதுவே சிறந்த நேரம் என நாங்கள் கருதினோம். ராஜ் & டிகே இந்த ஹை-ஆக்டேன் ஸ்பை த்ரில்லரில் எப்போதும் போலவே தங்கள் திறமையையும், அனைவரையும் கவரும் ஆற்றலையும் வெளிப்படுத்தி உள்ளனர், இது எங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய த்ரில்லிங் நிறைந்த பயணமாக இருக்கும்,” என்று இந்தியாவின் பிரைம் வீடியோவின் ஒரிஜினல்ஸ் தலைவர் நிகில் மதோக் கூறினார்.
ராஜ் மற்றும் டி.கே கூறுகையில் “சிட்டாடல்: ஹனி பன்னி எங்களுக்கு ஒரு முக்கியமான பிராஜக்ட் ஆகும், இது இதுவரை முயலாத உளவாளிகள் மற்றும் உளவு பார்க்கும் உலகில் பயணிக்க எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது, நாங்கள் பல பிராஜக்ட்களைச் செய்திருந்தாலும், சிட்டாடல்: ஹனி பன்னி எங்கள் முதல் கூட்டுப்பணியாகும். இது ருஸ்ஸோ பிரதர்ஸ் போன்ற படைப்பாற்றல் சக்திகளுடனும், உலகெங்கிலும் உள்ள திறமையான திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளர்களுடனும் இன்னைந்து செயலாற்றும் அற்புதமான மதிப்புமிக்க படைப்பு அனுபவமாக அமைந்தது.” என்றனர்.
“பன்னி நான் இதுவரை நடித்த கதாபாத்திரங்கள் போலன்றி வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஒரு உளவாளியாக, பன்னி.. இரட்டை வாழ்க்கை நடத்துவது மட்டுமல்லாமல், அவரது ஆளுமையின் ஒவ்வொரு அம்சமும் இரண்டு தனித்துவமான பக்கங்களைக் கொண்டுள்ளது. ஒரு நடிகராக இது எனக்கு மிகவும் உற்சாகமூட்டுவதாக இருந்தது. நுணுக்கமாக பிணைக்கப்பட்டுள்ள இக்கதை களத்திற்கு ஏற்ப நான் உருவகப்படுத்திய அனுபவங்கள் மற்றும் கதாபாத்திரங்களின் கலவையைப் புனைந்து அதே சமயம் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையான ஸ்டண்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு தயாராக வேண்டிய சூழல். இது எனது மிகவும் சவாலான நடிப்புகளில் ஒன்றாகும். மேலும் பன்னியை உயிர்ப்பிக்க வாய்ப்பளித்த பிரைம் வீடியோ, ராஜ் & டிகே மற்றும் ஏஜிபிஓ ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று வருண் தவான் கூறினார்.
சமந்தா கூறுகையில், “மனங்கவரும் கதைக்களம், செழுமையான கதாபாத்திர ஆழம் மற்றும் சர்வதேச தரத்திற்கு போட்டியாக விளங்கும் சண்டைக்காட்சிகளுடன் ஒரு ஆக்ஷன் நிரம்பிய பொழுதுபோக்கின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பும், இதில் ஒரு முக்கியப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்துள்ளது. இதிலுள்ள உளவு கதைகளின் தொகுப்பு, இந்த பிராஜெக்ட்டிற்குள் என்னை ஈர்த்தது. இந்தியாவில் மட்டுமல்லாது, பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படும். பல நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்கள் இந்தத் தொடரை முழுமையாக ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.
மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், ரோஹித் கேபி, கே நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி, பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் #SDT18 திரைப்படத்தின் இன்ட்ரூட் இன்டு தி வேர்ல்ட் ஆஃப் ஆர்கேடி (ஆர்கேடி உலகில் ஒரு பயணம்) வீடியோ வெளியாகியுள்ளது.
விருபக்ஷா மற்றும் ப்ரோ என தொடர்ந்து, பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தந்த மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், தற்போது அறிமுக இயக்குனர் ரோஹித் கேபி இயக்கத்தில் மிகப்பெரிய கேன்வாஸில் உருவாகி வரும் #SDT18 எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
முன்னதாக பான் இந்திய வெற்றிப்படமான பிளாக்பஸ்டர் ஹனுமான் திரைப்படத்தை வழங்கிய பிரைம்ஷோ எண்டர்டெயின்மெண்ட்டின் சார்பில், கே நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில், பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.
சாய் துர்கா தேஜுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து, தயாரிப்பாளர்கள் “இன்ட்ரூட் இன்டு தி வேர்ல்ட் ஆஃப் ஆர்கேடி” என்ற தலைப்பில் ஒரு அற்புதமான வீடியோவை வெளியிட்டுள்ளனர், இது படத்தின் கதைக்களத்தை விவரிக்கும் வகையில், படத்தினைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. ஒரு நிலம் நீண்ட காலமாக தீய சக்திகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது, அதன் மீட்பரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறது. தற்போது அந்த காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
இந்த அற்புதமான உலகத்தை உயிர்ப்பித்திருக்கும் தயாரிப்புக் குழுவின் அர்ப்பணிப்பு முயற்சிகளை, இந்த வீடியோ நமக்கு எடுத்துக் காட்டுகிறது. பிரமிக்க வைக்கும் செட்கள், சிக்கலான வடிவம் கொண்ட ஆயுதங்கள் மற்றும் நடிகர்கள் பாத்திரங்களாக மாற்றப்படுவதை பார்வையாளர்கள் இந்த வீடியோவில் காணலாம் , குறிப்பாக வீடியோவின் கடைசி பிரேம்கள் பிரமிக்க வைக்கின்றன, கதாநாயகன் பிரம்மாண்டமாக எழுச்சி அடையும் தருணத்தை, படம் பிடித்து காட்டுகிறது. இது படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.
ஆர்கேட் உலகத்துக்கான இந்த ஸ்னீக் பீக், அபாரமான ஆர்வத்தைத் தூண்டுகிறது, குறிப்பாக சாய் துர்கா தேஜ் பீஸ்ட் மோடில் இருப்பது, நம்மை சிலிர்க்க வைக்கிறது. இது உண்மையிலேயே ஒரு அபாரமான படைப்பு என்பதை உணர்த்துகிறது.
சாய் துர்கா தேஜ் முதன்முறையாக ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த அதிரடி, பீரியட்-ஆக்சன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்கிறார்.
இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.
நடிகர்கள்: சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி
தொழில்நுட்பக் குழு: எழுத்து, இயக்கம் : ரோஹித் கே.பி தயாரிப்பாளர்கள்: கே நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி தயாரிப்பு : பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் மக்கள் தொடர்பு : யுவராஜ்
‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு – தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா + கோபி அச்சந்தா – 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் – எம். தேஜஸ்வினி நந்தமூரி ஆகியோர் கூட்டணியில் தயாராகும் #BB4 எனும் திரைப்படத்தின் தொடக்க விழா எதிர்வரும் 16 ஆம் தேதி காலை 10 மணி அளவில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு இந்தக் கூட்டணி ..இந்திய சினிமாவின் அற்புதமான கூட்டணிகளில் ஒன்று. இந்த டைனமிக் கூட்டணி – ஏற்கனவே ‘சிம்ஹா’, ‘ லெஜண்ட்’, ‘அகண்டா’ என மூன்று பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற படைப்புகளை வழங்கி உள்ளது. இந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் எதிர்பார்ப்புகளை கடந்து பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனையை படைத்தது.
இந்நிலையில் பாலகிருஷ்ணா – பொயப்பட்டி ஸ்ரீனு இருவரும் நான்காவது முறையாக ‘# BB4 ‘ எனும் படத்தில் மீண்டும் இணைகிறார்கள். இது தொடர்பான அறிவிப்பு நந்தமூரி பாலகிருஷ்ணா பிறந்த நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை ‘லெஜண்ட்’ படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களான ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா ஆகியோர், 14 ரீல்ஸ் பிளஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை எம். தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்.
நவராத்திரி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த தருணத்தில் எதிர்வரும் பதினாறாம் தேதி இப்படத்திற்கான பிரம்மாண்டமான தொடக்க விழாவில் வெளியீட்டிற்கான அறிவிப்பினை தயாரிப்பாளர்கள் வெளியிடுகிறார்கள். அங்கு இந்த திரைப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்..
BB4 திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் சர்வதேச தொழில்நுட்ப தரத்துடன் உருவாக உள்ளது. நடிகர் பாலகிருஷ்ணாவின் நடிப்பில் இதுவரை அதிக பொருட்செலவில் தயாரான திரைப்படமாக இந்தப் படம் அமைய உள்ளது
நடிகர்கள் : ‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பால கிருஷ்ணா
தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : பொயப்பட்டி ஸ்ரீனு தயாரிப்பாளர்கள் : ராம் அச்சந்தா -கோபி அச்சந்தா தயாரிப்பு நிறுவனம் : 14 ரீல்ஸ் பிளஸ் வழங்குபவர் : எம். தேஜஸ்வினி நந்தமூரி மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், குளோபல் ஸ்டார் ராம் சரண் கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில், தில் ராஜு தயாரிப்பில், தென்னிந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், கேம் சேஞ்சர் திரைப்படம், ஜனவரி 10, 2025 சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகிறது. பட வெளியீட்டை அறிவிக்கும் விதமாக, ஒரு அசத்தலான போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த போஸ்டரில் ராம் சரண் ஸ்டைலிஷான லுக்கில் காட்சியளிக்கிறார், அவரது தோற்றம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் நேர்மைமிக்க ஐஏஎஸ் அதிகாரி ராம் நந்தன் எனும் கதாபாத்திரத்தில், இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நட்சத்திர நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார், நடிகை அஞ்சலி ஃப்ளாஷ்பேக் காட்சியில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், கேம் சேஞ்சர் ஒரு அற்புதமான காட்சி அனுபவமாக உருவாகியுள்ளது. தனித்துவமான வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். சாய் மாதவ் புர்ரா அட்டகாசமான வசனங்களை வழங்கியுள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையும், எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்ந்துள்ளது.
தயாரிப்பாளர்கள் கேம் சேஞ்சர் திரைப்படத்தை, மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். ஹைதராபாத், நியூசிலாந்து, ஆந்திரப் பிரதேசம், மும்பை மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் உள்ள பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு கண்கவர் அனுபவமாக இருக்கும்.
அதிரடி ஆக்ஷன் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன், கேம் சேஞ்சர் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளின் சிக்கல்களை பேசும் படமாக உருவாகியுள்ளது. கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமில்லாமல், அழுத்தமான கதையுடன் அட்டகாசமான அனுபவமாக இப்படம் உருவாகியுள்ளது.
கேம் சேஞ்சருக்கான எதிர்பார்ப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது, படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த உற்சாகத்தை கூட்டும் வகையில், தயாரிப்பாளர்கள் டீசர்கள், போஸ்டர்கள் மற்றும் ஃபிலிம் மேக்கிங் காட்சிகள் என ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர். முதல் இரண்டு பாடல்களான ஜருகண்டி மற்றும் ரா மச்சா மச்சா ஆகியவை சார்ட்பஸ்டர்களாக அமைந்தன. ரா மச்சா மச்சா யூடியூப்பில் 55 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதன் மூலம் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக சாதனை படைத்துள்ளது.
நட்சத்திர நடிகர்கள், திறமையான குழுவினர் மற்றும் வசீகரிக்கும் கதைக்களத்துடன், கேம் சேஞ்சர் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெறத் தயாராக உள்ளது. படத்தின் ரிலீஸை நோக்கி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சங்கராந்தி பாக்ஸ் ஆபிஸில் இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.