Breaking
March 7, 2026

Cinema Reviews

“நந்தன்” திரைவிமர்சனம்

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைபடம் நந்தன்

காலம் காலமாக எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் போட்டியின்றி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பஞ்சாயத்து தலைவராக இருந்து வரும் வணங்கான் குடி கிராமத்தை திடீரன தனித்தொகுதியாக மாற்ற, ஏற்கனவே தலைவராக இருக்கும் பாலாஜி சக்திவேல் தன் வீட்டில் வேலை செய்யும் தலித்தை சேர்ந்த சசிகுமாரை நிற்க வைத்து தனக்கு அடிமையாக்கி தானே அதிகாரத்தில் இருக்க நினைக்கிறார்.

அது நிறைவேறியதா? இல்லை சசிகுமார் அடிமை தனத்தில் இருந்து வெளியே வந்தாரா? என்பது தான் கதை.
வணங்கான் குடி தலைவராக பாலாஜி சக்திவேல், அவரின் அடிமை கூல் பானையாக சசிகுமார்.
பொது தொகுதியாக இருக்கும் தனது ஊரை தனித்தொகுதியாக மாற்றியதும் கோபப்படும் பாலாஜி சக்திவேல், தனக்கு ஒரு அடிமை தலைவரை தேர்ந்தடுக்க காட்டும் படபடப்பு, அவன் கை மீறும் போது காட்டும் கோபம், அந்த ஊரின் நிரந்தர தலைவர் தான் மட்டுமே என்று நினைக்கும் ஆணவம் என பல்வேறு நடிப்பு பரிமாணத்தில் நிற்கிறார்.
கூல்பாணை அம்பேத்குமாராக சசிகுமார். அந்த கதாபாத்திரமாக மாற அவர் முயற்ச்சி செய்திருந்தாலும் படத்தில் ஒட்டாமலே இருக்கிறது. நடிப்பு மிகையாக தெரிகிறது. அவருடைய கதாபாத்திரம் அறிவாளியாக இல்லாமலும், முட்டாளாக காட்ட முடியாமலும் தினறுகிறார் இயக்குநர். சசிகுமார் தன் நடிப்பை மெருகேற்ற வேண்டும். கூல் பாணை மனைவியாக ஸ்ருதி பெரியசாமி நடிப்பு ஓகே ரகம். சிலகாட்சிகளில் அதிக நடிப்பும், சிலகாட்சிகளில் அளவான நடிப்பும் தந்திருக்கார்.
படத்தில் வரும் ஒரு மாப்பிள்ளை கேரக்டர் கத்திகத்தி பேசுகிறது.
இரா சரவணன் ,, பொது தொகுதி தனி தொகுதியாக மாறிஅங்கு வரும் தலித் தலைவர்களை மற்ற சாதியினர் படுத்தும் அவமானத்தை மையப்படுத்தி எடுத்திருக்கும் கதை களம் நிச்சயம் புரட்சி வெடித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அமைத்திருக்கும் திரைகதையில் ஒரு சுனக்கம் ஏற்படுகிறது. தலித் மக்களை காட்டினால் அவர்களை கருப்பாகவும், குளிக்கதவர்களாகவும் தான் காட்ட வேண்டும் என்பது கட்டாயமில்லை.

BDO அதிகாரியாக வரும் சமுத்திரகனி, ஊனமுற்ற அதிகாரிகள் தான் நேர்மையாக இருப்பார்கள் என்று காட்டி இருப்பது ஏன்.?


ஜிப்ரானின் இசை படத்திற்கு சற்றே பலம்.


மக்களிடம் சாதி ஒழிந்தாலும் அரசியல் தலைவர்கள் நிச்சயம் அதை ஒழிக்க விடமாட்டார்கள், எத்தனை திரைப்படம் வந்தாலும் மாறாது அதிகாரமும், அரசியலும்.

நந்தன் பெருக்கேற்ற வீரியம் அதிகமாக இருந்திருக்கலாம்.

G.0.A.T. திரைப்பட விமர்சனம்.

தந்தைக்கு வில்லனாகும் மகன், மகனை வென்று (கொன்று) ஜெய்ப்பாரா, ஜெய்க்கிறாரா?

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந், பிரபுதேவா, அஜ்மல் , மைக்மோகன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் G.O.A.T.

இந்தியாவின் ரகசிய உளவாளிகளாக ஜெயராமிற்கு கீழ் வேலை செய்யும் விஜய், பிரசாந், பிரபுதேவா, அஜ்மல் நால்வரும்(முக்கிய விஷயம் இவர்கள் வேலை செய்வது கட்டின பொண்டாகளுக்கே தெரியாதாம் இதை நம்ப வேண்டும்). ஒரு ரகசிய வேலையாக ஒரு தீவிரவாதியை பிடிக்க வெளிநாடு போகிறார்கள். அங்கு தீவிரவாதிகளின் தலைவன் மைக்மோகனை கொன்று நாடுதிரும்புகிறார்கள். அடுத்த வேலைக்காக பாங்காக் செல்ல முடிவெடுக்கும் போது விஜயின் மனைவி சினேகா தொல்லை தாங்க முடியாமல் அவர்களையும் அங்கு அழைத்து செல்ல, அங்கு ஏற்படும் தீவிரவாதிகள் தாக்குதலில் மகனை எதிர்பார்த்தபடியே இழந்து விடுகிறார். அதே நேரத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. இந்தியா உளவுத்துறை வேண்டாம் என்று இந்தியன் எம்பசியில் வேலைக்கு சேர்கிறார். கிட்டத்தட்ட 20 வருடம் கழித்து எம்பசி வேலையாக  ரஷ்யா செல்ல அங்கு பாங்காக்கில் தொலைத்த தன் மகனை காண்கிறார். பிரசாந்த் உதவியுடன்இந்திய அழைத்து வந்து குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார்.

ஒரு நாள்ஜெயராமை சந்திக்க செல்ல நினைக்கும் போது அவரை ஒருவன் கொலை செய்ய அவனை பிடிக்க முடியாமல் மீண்டு உளவு வேலைக்கு சேர்கிறார்.

விஜக்கு மற்றும் அவரது டீமிற்கு தான் சஸ்பென்ஸ்., நமக்கு அது விஜயின்  மகன் இன்னொரு விஜய் என்று தெரிந்த உடன் படமே முடிந்து விடுகிறது. இவ்வளவு கதையும் முதல் ஒன்னரைமணி நேரத்தில் முடிந்துவிடுகிறது.. அதுவும் அந்த மகனை பாங்காக்கில் மைக்மோகன் திருடி சென்று வளர்த்து அப்பாவுக்கு எதிராக வளர்த்து பழிவாங்க வருகிறார் என்று தெரிந்தவுடன் எப்படியும் அப்பா மகனை கொன்று ஜெய்ப்பார் என்று தெரிந்து விடுகிறது. அப்புறம் எதற்கு அடுத்த ஒன்னரை மணி நேரம் எடுத்தார்கள் என்று தெரியவில்லை.

போன படத்தில் மகனுக்கு அப்பா வில்லனாக இருந்தார். இந்த படத்தில் அப்பாவுக்கு மகன் வில்லன். தன் மகன் மேல் என்ன பகையோ தெரியவில்லை மகன் பேர் சஞ்சய். நல்ல வேளை மனைவிக்கு சங்கீதா என்று வைக்கவில்லை. அப்பா விஜயின் நடிப்பு ஒரு இடத்தில் பல வருடங்கள் கழித்து மகனை பார்க்கும் இடத்தில் மட்டுமே ரசிக்கும்படி இருக்கிறது. மகன் விஜய் வில்லன். AI டெக்னாலஜி மூலம் சிறு வயதாக காட்டுகிறார். பார்க்க பொம்மை போல் உள்ளது. உதட்டசைவு ஒட்டவே இல்லை, அப்பா மகன் இருவரது ஹேர்ஸ்டைல் மின்சாரம் பாய்ந்த பொமேரியன் நாய் முடி போல் சிலிர்த்து கொண்டு இருக்கிறது.

AI மூலம் விஜய்காந்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பாவம் இறந்த பிறகு அசிங்கப்படுத்தி இருக்க வேண்டாம்.

பிரசாந்த் நீண்ட நாட்கள் கழித்து எண்ட்ரி அவருக்கு தான் எமோஷனல் நடிப்பு வராது என்று தெரியாதா? அவரின் மகளை கொன்று பிரசாந்தை உருண்டு புரண்டு அழவிட்டு பார்க்கபாவமாக  இருக்கிறது.

அஜ்மல் பலி கொடுப்பதற்காக வளர்க்கப்பட்ட ஆடு,

நான்கு பேர் ஒன்றாக இருந்தால் அதில் ஒரு வில்லன் வேண்டுமல்லவா அது பிரபுதேவா.

மைக் மோகன் பேசாமல் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம். அதை கொண்டு வந்து பிரித்து போட்டு நாசம் செய்திருக்கிறார்கள். சினேகா வருகிறார் அழுகிறார் போகிறார். லைலா இரண்டு சீனில் அழகாக சிரிக்கிறார்.

பிரசாந்தின மகளாக வரும் மீனாட்சி நடிக்க முயற்சிக்கிறார். ஆனால் மனதில் பதியவில்லை.

மேலும் வெங்கட்பிரபு கூட்டம் படத்தில் ஆங்காங்கே வருகிறது ஒடுகிறது.

படத்தின் ஒளிபதிவு பரவாயில்லை.

இசை யுவனிறகு விஜய் மேல் கோபமா இல்லை, வெங்கட்பிரபு மேல் கோபமா என்று தெரியவில்லை படத்திற்கு இசை அமையவே இல்லை நமக்கெல்லாம் வில்லனாகி விட்டார் யுவன்.

வெங்கட்பிரபு முதல் பாதியிலேயே படத்தை முடித்து விட்டு இரண்டாம் பாதியில் என்ன செய்வது என்று தெரியாமல் , விஜக்கு படத்தின் பட்ஜெட்டில் பாதியை சம்பளமாக தந்ததால் அவரை மட்டுமே சுற்றி ஓடி இருக்கிறார் அவரும் கிளைமாக்ஸ் சண்டையின் நேரத்தை குறைத்து ஏதாவது கதை சொல்லியிருந்தால் பராவாயில்லை.வெறும் விஜய் புராணமாக உள்ளது. இரண்டு மணி நேர படத்திற்கு எக்ஸ்ட்ரா ஒரு மணி நேரம் வேஸ்ட். கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் அல்ல, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம் ஒர்ஸ்ட் ஆக ஆனது.

மொத்தத்தில் GOAT என்னும் AGS , வெங்கட்பிரபு என்னும் கசாப் கடை கரானிடம் மாட்டிய பலி ஆடு

“சாலா” திரைவிமர்சனம்

சிறுவயதில் தீரன் ஏரியாவில் தாதாவாக இருக்கும் அருள்தாஸின் உயிரை ஒரு மோதலில் போது காப்பாற்றுகிறார்.உடனே தாதா அருள்தாஸ் தன் வாரிசாக கதாநாயகன் தீரனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அருள்தாஸின் எதிரி தாதாவான சார்லஸ் வினோத் ஏலத்தில் அருள்தாஸ் நடத்தும் பார்வதி பார் உரிமையை ஏலத்தில் கைப்பற்றுகிறார். இழந்த பார்வதி பாரை மீட்டெடுப்பதே அருள்தாஸின் லட்சியமாக வாழ்ந்து வருகிறார்.கதாநாயகன் தீரன் வளர்ந்து தனது குருவிற்காக அந்த பார்வதி பாரை மீட்டெடுப்பதில் உறுதுணையாக நிற்கிறார்.பலநூறு பார்களை நடத்த வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கும் கதாநாயகன் தீரன்.
மதுபான கடைகளையும் பார்களையும் மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தும் நாயகி ரேஷ்மாவுக்கும் தீரனுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட, எதிரும் புதிருமாக இருக்கும் இருவருக்கும் நடக்கும் மோதல் காதலாக மாறுகிறது.இதற்கிடையே இந்த பார்வதி பாரை ஏலம் எடுப்பதில் நாயகன் தரப்புக்கும், வில்லன் தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
பார்வதி பாரை ஏலம் எடுத்தார்களா? எடுக்கவில்லையா?ரேஷ்மாவுக்கும் தீரனுக்கும் காதல் என்ன ஆனது ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் இந்த சாலா திரைப்படத்தின் மீதிக்கதை.

சாலா திரைப்படத்தில் அறிமுக நாயகனாக தீரன் அறிமுகமாகியிருக்கிறார். ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு என்று முரட்டுத்தனமாக இருந்தாலும் அப்பாவித்தனமான தனது நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.தன் காதலி கதாநாயகி ரேஷ்மா பாதிப்புக்கு ஆளாகும்போது பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் வரவேற்புப் பெறுகிறார்.
நாயகியாக ரேஷ்மா வெங்கடேஷுக்கு புரட்சிகரமான கதாபாத்திரம், அதை புரிந்து நடித்திருக்கிறார்.
சார்லஸ் வினோத் மற்றும் அருள்தாஸ் வழக்கமான நடிப்பு கொடுத்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார்கள்..
நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீநாத் , சம்பத் ராம், யோகிராம், பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குருவின் அற்புதமாகவும் காட்சிப்படுத்துள்ளார்.
இசையமைப்பாளர் தீசன் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறார்.
மதுப்பழக்கத்திற்கு மக்கள் எப்படியெல்லாம் அடிமையாகி இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் இயக்குநர் மணிபால் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

“போகுமிடம் வெகு தூரம் இல்லை” திரை விமர்சனம்….

விமல் கருணாஸ் மற்றும் பல நடிப்பில் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் போகுமிடம் வெகு தூரம் இல்லை

அமரர் ஊர்தி ஓட்டுனரான விமல், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனது தாத்தாவை துணைக்கு வைத்து விட்டு மருத்துவ செலவிற்காக -சென்னையில் இறந்தவரின் சடலத்தை ஏற்றுக் கொண்டு திருநெல்வேலிக்கு பயணிக்கிறார்.வழியில் கூத்து கலைஞர் கருணாஸ் தன்னை செல்லும் வழியில் இறங்கி விடுமாறு கேட்க, மனதளவில் பிடிக்காமல் துணைக்காக ஏற்றுக்கொள்கிறார்.
இருவரும் பயணிக்க வழியில் ஒரு காதல் ஜோடியும் வண்டியை நிறுத்தி ஏறிக்கொள்ள இந்த இருவர் மற்றும் கருணாஸ்னால் பல விதத்தில் பல பிரச்சனைகள் கதாநாயகன் விமலுக்கு வருகிறது.
இந்த காதல் ஜோடிகளால் வந்த பிரச்சனை என்ன? அமரர் ஊர்தியில் உள்ள சடலத்தை ஒப்படைத்தாரா? ஒப்படைக்கவில்லையா? என்பதுதான் போகுமிடம் வெகு தூரம் இல்லை திரைப்படத்தின் மீதிக்கதை.
அமரர் ஊர்தி ஓட்டுனர் குமார் கதாபாத்திரத்தில் மிகவும் கனத்த முகத்துடனும் தன்னுடன் பயணித்த கருணாஸ் இறந்த பிறகு மிகவும் நினைத்து வேதனைப்படும் காட்சிகளிலும் அருமையாக தன்னை மறந்து நடித்துள்ளார்.எப்பொழுதும் பார்க்கும் விமலாக இல்லாமல் புது மாதிரியான விமலாக நடித்திருக்கிறார்.
மற்றொரு கதையின் நாயகனாக கருணாஸ் நடித்துள்ளார்.
கூத்துக் கலைஞர் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாகவும் கூத்துக் கலைஞரின் நடை உடை பாவனை அனைத்தையும் ஏற்று கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அற்புதமாக நடித்து இருக்கிறார்.
நம்மளால் ஏற்பட்ட தவறுக்கு நாம் தான் பரிகாரம் செய்ய வேண்டும் என கருணாஸ் எடுக்க முடிவு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை தூக்கி வாரி போட்டு விட்டது.
விமல் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மேரி ரிக்கெட்ஸ், அருமையாக நடித்துள்ளார்.
தீபா சங்கர், ஆடுகளம் நரேன், பவன், சார்லஸ் வினோத், அருள்தாஸ், வேல ராமமூர்த்தி, மனோஜ்குமார் அனைத்து கதாபாத்திரங்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் டெமில் சேவியர் எட்வர்ட்ஸ். மிகச்சிறந்த ஒளிப்பதிவை கொடுத்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இசை உயிரோட்டமாக உள்ளது.
ஒரு அமரர் ஊர்தி ஓட்டுனரின் ஒரு நாள் வாழ்க்கையை வைத்து, அதை சுற்றிய பல சுவாரஸ்யமான காட்சிகளும் அந்த ஒரு நாள் வாழ்க்கையின் அனுபவங்களையும் படமாக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மைக்கேல் கே ராஜா. இந்த அமரர் ஊர்தியில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களை மையமாக வைத்து யோசித்த கதை அருமை, அதன் திரை கதையை இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு சுவாரஸ்யமாக அமைத்திருந்தால், அந்த மனிதர்களின் வாழ்க்கையை சுவாரசியமாக கொடுத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
மொத்தத்தில் போகும் இடம் வெகு தூரம் இல்லை விமலின் திரை வாழ்க்கைக்கு நிச்சயம் ஒரு மயில் கல்லாக இருக்கும்

“தங்கலான்” திரை விமர்சனம்

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடித்து இருக்கும் திரைப்படம் “தங்கலான்”விக்ரமின் நடிப்பை மட்டுமே நம்பி…………..

கதை சுருக்கம்,
வடாற்காடு மாவட்டம் வேப்பூர் கிராமத்தில் வசிக்கும் அடிமை மக்களை சுற்றி கதை ஆரம்பித்து அவர்கள் தங்க சுரங்கத்தை தேடிச் செல்லும் ஆங்கிலேயர்கள் காலத்து கதைக்களத்தை கையில் எடுத்து இருக்கிறார் இயக்குனர்.
வடாற்காடு மாவட்டம் வேப்பூர் என்னும் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அந்த ஊரில் உள்ள ஒரு ஜமீன்தாருக்கு அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர், அவர்களது நிலங்களை எல்லாம் அந்த ஜமீன்தார் அபகரித்து அவர்களை அடிமையாக வைத்திருக்கிறார். ஆனால் அதே ஊரில் வசிக்கும் விக்ரம் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார், இவ்வாறு வாழ்ந்து வரும் விக்ரமுக்கு ஒரு கனவு வந்து செல்கிறது, அந்த கனவில் அவர் ஒரு தங்க சுரங்கத்தை தேடிச் செல்வதாகவும், அந்த தங்க சுரங்கத்தை ஒரு சூனியக்காரி பாதுகாத்து வருவதாகவும், அந்த சூனியக்காரியை கொன்று அந்த தங்கத்தை எடுத்து, அதன் மூலம் நிலத்தை தன் முன்னோர்கள் வாங்கியதாக அவருக்கு அடிக்கடி கனவு வருகிறது.

இந்நிலையில் விவசாயம் முடிந்து அறுவடை செய்து வைத்திருக்கும் நெல்களை ஜமீன்தார் ஆட்கள் கொளுத்தி விட, அதனால் அவரால் வெள்ளையர்களுக்கு வரி கட்ட முடியாமல் போகிறது. அந்த வரியை ஜமீன்தார் கட்டி விக்ரமையும் அடிமைப்படுத்திக் கொள்கிறார்.இந்த நேரத்தில் அந்த ஊருக்கு வரும் ஒரு ஆங்கிலேயர் இவர்களைக் கொண்டு ஒரு தங்கச் சுரங்கத்தை கண்டுபிடிக்க, விக்ரம் மற்றும் அந்த மக்களை அழைத்துச் செல்கிறார் .அவ்வாறு செல்லும் விக்ரக்கு நம் கனவில் வரும் அந்த இடம் தான் தங்கச் சுரங்கம் என்று கூறி அழைத்துச் செல்கிறார்.

அந்த இடத்தில் உண்மையிலேயே தங்கச்சுரகம் இருந்ததா?

அந்த இடத்தை அந்த சூனியக்காரி தான் காவல் காத்து வருகிறாரா?

அந்த சூனியக்காரிடமிருந்து தங்கத்தை எடுக்கிறார்களா?

என்பதை சுற்றி திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் முதன்மை பாத்திரத்தில் விக்ரம் தங்கலானாக தன் உடலை வருத்தி நடித்திருக்கிறார்.இந்த தங்கலானுக்கு படத்தில் கிட்டத்தட்ட 13 கெட்டப்புகள் ,இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக விக்ரமின் நடிப்பு மட்டுமே.
விக்ரமின் மனைவியாக வரும் பார்வதி மூன்று பிள்ளைகளுக்கு தாயாக வாழ்ந்திருக்கிறார், பசுபதியின் கதாபாத்திரம் சிறப்பாக நடித்திருந்தாலும் அது திரைக்கதையில் திணித்தது போல் இருக்கிறது அவரது கதாபாத்திரம்.
மாளவிகாவின் கேரக்டர் படம் முழுவதும் கத்திக்கொண்டே இருக்கிறது. அவளை சூனியக்காரியாக காட்ட அவ்வாறு கத்த வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.
படத்தில் வில்லனாக வரும் ஆங்கிலேய நடிகர் தன் வில்லன் கதாபாத்திரத்தை தந்திருக்கிறார்.
இந்தப் படத்தை இயக்கியிருக்கும் ரஞ்சித் அவர்கள் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். இந்த படத்தில் விக்ரம் மட்டுமே மிகவும் மெனக்கட்டு தன் உடம்பை வருத்தி சிக்ஸ் பேக் எல்லாம் வைத்துக் இருப்பது போல் கதாபாத்திரத்தை வடிவமைத்துவிட்டு மற்றவர்களை அனைவரும் தொந்தியும் தொப்பையுமாக இருப்பது போல் வடிவமைத்திருக்கிறார் இது விக்ரமிற்கு இடைஞ்சலாக தான் உள்ளது அதை கவனித்திருக்கலாம். மேலும் இயக்குனர் தனக்கே உரிய குறியீடுகளை ஆங்காங்கே திணித்திருக்கிறார் ராமானுஜர், திப்பு சுல்தான், ஆங்கிலேயர்கள், பண்ணையார்கள் என்று பலரை திரைக்கதை வம்படியாக புகுத்தியிருக்கிறார்.ஒருவேளை கோலார் தங்க சுரங்கத்தில் சிக்கி பலர் உயிரிழந்த, அதை தோண்டி எடுக்க அவர்கள் பட்ட அவஸ்தையை ஆராய்ந்து எடுத்து அதை அப்படியே திரைக்கதை அமைத்திருந்தால் படம் நிச்சயமாக ரசிக்கும்படி இருந்திருக்கலாம்.
படத்தின் இரண்டாவது மிகப் பெரிய பலம் ஜிவி பிரகாஷ் இசை
படத்தின் மிகப்பெரிய மைனஸ் படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் கிராபிக்ஸ் டெக்னாலஜிகள் எவ்வளவோ வளர்ந்து இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 10,15 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது போல் உள்ளது.

தங்கலான் தூக்கம் வரவிடாமல் தவிர்த்திருக்கலாம்!!!!!

“டிமான்டி காலனி 2” திரைவிமர்சனம்…..

அஜய் ஞானமுத்து இயக்கத்தின் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் மற்றும் பலர் நடித்த திரைப்படம் டிமான்டி காலனி 2.

பிரியா பவானி சங்கரின் கணவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைக்கும் நிலையில்,திடீர் என்று மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.அவருடைய ஆத்மா, பிரியா பவானி சங்கரிடம் எதோ சொல்ல வருவதாக மனதளவில் உணர்கிறார். அதற்காக புத்த துறவிகள் உதவியை நாடி அவர்கள் மூலமாக கணவர் மரணத்தில் இருக்கும் பின்னணியை அறிய முயற்சி செய்கிறார்.அது ஒரு பக்கம் இருக்க ஐதராபாத்தில் வசிக்கும் அண்ணன் கதாநாயகன் அருள்நிதி தனது தந்தையின் சொத்தை அடைய முயற்சி செய்கிறார்.ஆனால், அதில் தம்பி அருள்நிதி சென்னையில் இருப்பதாகவும் அவருடைய கையெழுத்தை பெற நினைக்க தேடி சென்னைக்கு வருகிறார்முதல் பாகத்தில் இறந்துப் போன தம்பிதான் அருள்நிதி’ ஆனால் சாகவில்லை கோமாவில் தான் இருக்கிறார்.தன் தம்பி அருள்நீதியை கொல்வ போகும் போதுதான், தம்பி இறந்தால் தானும் இறந்துவிடுவோம் என்ற உண்மையை புரிந்துக் கொள்கிறார்.பிரியா பவானி சங்கர், தன்னுடைய கணவன், இறப்பிற்கும், அருள்நிதி சாவின் விழிம்பில் இருப்பதற்கும் டிமான்ட்டி காலனிக்கும் உள்ள தொடர்பை கண்டுப் பிடிக்கிறார்.6 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த சம்பவம், சாத்தானுக்கு மனிதர்களை பலியிடும் வழக்கத்தை ஒரு குழு வைத்துள்ளனர்.இந்த முறை இந்த பலிக்கு ஆளாக போவது அருள்நிதி மற்றும் கதாநாயகி பிரியா பவானி சங்கர் இருவரும், சாத்தானின் பிடியில் இருந்து தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா? என்பதுதான் டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் மீதிக்கதை.

அருள்நிதி இந்த கதைக்கு எந்த அளவிற்கு நடிப்பை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு மிக அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.திகில் காட்சிகளில் நடிப்பின் மூலம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம்.

பிரியா பவானி சங்கர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.அமானுஷ்யத்திற்கு பயப்படும் காட்சிகளிலும், தனது காதல் கணவனை இழந்த துக்கத்திலும் பரிதவிக்கும் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அர்ச்சனா ஒரு சில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிந்துவிடுகிறார்.

அட்வகேட் கதாபாத்திரத்தில் வரும் முத்துக்குமார் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவின் மூலம் ரசிகர்களை திகிலடைய செய்ய முயற்சி செய்துள்ளார்.

இசையமைப்பாளர் சாம் சி. எஸின் பின்னணி இசை திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

வழக்கமான ஹாரர் திரைப்படத்தில் வரும் சம்பவங்கள் இல்லாமல்,  இந்த கதைக்கு தேவை இல்லாத பாடல்கள், , பேய்க்கு பிளாஷ்பேக் இல்லாமல் இருப்பது மிகச் சிறப்பு.

கதையின் முதல் பாதியில் திரைக்கதை மிகச்சிறப்பாக அமைந்தாலும், இரண்டாம்  பாதியில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் நிரைப்படம் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கும்.

“ரகு தாத்தா” திரைவிமர்சனம்…..

சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் எம் எஸ் பாஸ்கர் ரவீந்திர விஜய் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் “ரகு தாத்தா”

1960 காலகட்டத்தில் வள்ளுவன் பேட்டை என்னும் கிராமத்தில் கீர்த்தி சுரேஷ் தாத்தா எம்எஸ் பாஸ்கர் மற்றும் அண்ணன் தாய் ஐயருடன் வசித்து கீர்த்தி சுரேஷ் அந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார். கதாநாயகி கீர்த்தி சுரேஷ் அந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் அந்த கிராமத்தில் உள்ள ஹிந்தி பிரச்சார சபாவை எதிர்த்து போராட்டம் செய்து, அந்த ஆசிரியரையும் சபாவையும் மூடுகின்றனர்.மேலும் கீர்த்தி சுரேஷ் க. பா. என்ற புனை பெயரில் பத்திரிகைகளில் பெண்ணியம் சார்ந்த கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். ரவீந்தர் விஜய், கீர்த்தி சுரேஷை ஒருதலையாக காதலித்து,முற்போக்கு சிந்தனையாளராக தன்னை சித்தரித்து கொள்கிறார். இந்நிலையில் தாத்தா எம்எஸ் பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருமணமே வேண்டாம் என்று இருக்கும் கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்.

இந்நிலையில் தனக்கு நீண்ட நாள் பழக்கமான ரவீந்திர விஜய் என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ஒத்துக் கொள்கிறார். ஆனால் திருமணத்திற்கு முன்பே தனக்கு வரப்போகும் கணவர் முற்போக்கு சிந்தனைவாதி இல்லை, அவன் ஆணாதிக்க சிந்தனை கொண்டவன் என்றும், பெண்களை மதிக்காதவன் என்றும் தெரிய வருகிறது. இதை தெரிந்து கீர்த்தி சுரேஷ் தான் ஒத்துக்கொண்ட திருமணத்தை நிறுத்த எடுக்கும் முயற்சிகளும் அதை சுற்றி நடக்கும் சம்பவங்களுமாக திரைக்கதை நகர்கிறது.

கீர்த்தி சுரேஷ் ஹிந்தி கற்று ப்ரோமோஷன் வாங்கிக்கொண்டு கல்கத்தாவில் உள்ள வங்கி கிளைக்கு சென்று விட்டால், நடக்கவிருக்கும் இந்த திருமணம் நின்று போகும் என்ற எண்ணத்தில் ஹிந்தி கற்று கொள்ள ஆரம்பிக்கிறார்.கீர்த்தி சுரேஷ் ஹிந்தியை எதிர்ப்பவர் ஹிந்தி கற்றுக்கொண்டு கல்கத்தாவில் உள்ள வங்கி கிளைக்கு சென்றாரா? செல்லவில்லையா?
அவர் நினைத்தது போல் திருமணம் நின்றதா? என்பதுதான் ‘ ரகு தாத்தா திரைப்படத்தின் மீதிக்கதை.

ரவீந்திர விஜய் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் பெண்ணியம் பேசும் கதாபாத்திரத்தில் நடிப்பை துறுதுறுவெனவும் அதே சமயம் தன்னம்பிக்கையுடன் நடித்து இருக்கிறார்.

தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ் பாஸ்கர் அவரின் நடிப்பை சற்று வீணடித்து இருப்பது போல் இருக்கிறது. அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.அண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கும் இஸ்மத் பானு ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளார்.

மாமி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் தேவதர்ஷினி மிகவும் அளவான நகைச்சுவையை வெளிப்படுத்தியுள்ளார். வங்கி மேலாளரின் நடிப்பு, ஹிந்தி வாத்தியாரின் நடிப்பு மற்றும் பலரின் நடிப்பு செயற்கை தனமாகவே இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் யாமினி யாக்னாமூர்த்தியின் ஒளிப்பதிவு 60களில் காலகட்டத்திற்கு நம்மை இழுக்கவில்லை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை ஏனோ மனதை வருடவில்லை  

ஹிந்தி எதிர்ப்பையும் ஹிந்தி திணைப்பையும் வைத்து இயக்கி இருக்கும் இந்த படத்தின் திரைக்கதையை இன்னும் ஆழமாக அமைத்திருந்தால் படம் நிச்சயம் நம்மை கவர்ந்திருக்கும்.

படத்தின் மிகப்பெரிய பலம் இரட்டை அர்த்தங்கள் இல்லாமல் கவர்ச்சிகள் இல்லாமல் படமாக்கி இருப்பது.

 ரகு தாத்தா திரைக்கதை ஓட்டத்தில் ஓய்ந்து போன தாத்தா!!!!!!!!

இந்தியன் || திரைவிமர்சனம்

ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் , சித்தார்த் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் இந்தியன் ||

சென்னையில் சித்தார்த் மற்றும் நண்பர்கள் இணைந்து பார்கிங் டாக் என்னும் யூடியூப் சேனலை நடத்தி அதன் மூலம் நாட்டில் நடக்கும் ஊழல் குற்றங்களை மக்களுக்கு நையாண்டி தனமாக எடுத்து கூறி நாட்டை திருத்த பார்க்கிறார்கள் ஆனால் இவர்களால் மாட்டும் குற்றவாளிகள் தண்டனை அடையாமல் ஊழல் மூலமாக நாட்டில் சுதந்திரமாக இருக்கிறார்கள் இதனை கண்ட வெகுண்டெழும் சித்தர்த் குரூப், பல ஆண்டுகளுக்கு முன்பு ஊழலை ஒழிக்க போராடி பெற்ற மகனையே கொன்றுவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்ற இந்தியன் தாத்தாவை திரும்ப அழைக்க முடிவெடுத்து கம்பேக் இந்தியன் என்னும் ஹாஸ்டேக் உருவாக்கி அதை வைரல் ஆக்குகிறார்கள் அதை பார்த்து இந்தியன் தாத்தா வந்து நாட்டை காப்பாற்றுவர்கள் என்று நினைக்கிறார்கள், அவர்கள் நினைத்த மாதிரியே தாய் பே என்னும் நாட்டில் அமைதியாக வாழ்ந்து வரும் இந்தியன் தாத்தா பொங்கி எழுந்து அங்கு வரும் ஒரு ஊழல் பெருச்சாளியை கொன்று தன் கணக்கை துவக்கி இந்தியா வருகிறார்.

இங்கே இவரை பிடிக்கும் காவல் அதிகாரியாக பாபி சிம்ஹா தாத்தாவை விமான நிலையத்தில் கைது செய்ய சென்று அவரை பிடித்து கைது செய்ய சொன்னால் வயதான தன் அப்பாவை கூட்டி சென்று இந்தியன் தாத்தாவிடம் அடகு வைத்து தப்பிக்க விடும் காமடி காவல் அதிகாரியாக வருகிறார் அங்கிருந்து தப்பி செல்லும் தாத்தா கத்தியை தூக்கு வார் என்று எதிர்பார்த்தால் பேஸ்புக் லைவில் வந்து ஊழலை ஒழிக்க வேண்டுமானால் முதலில் வீட்டை திருத்த வேண்டும் எனவே வீட்டில் யாராவது ஊழல் செய்தால் அவர்களை வீட்டில் உள்ளவர்களே அரசிடம் காட்டி தர வேண்டும் என்று கூற, அதை கேட்கும் சித்தார்த் அண்ட் கோ அவர் அவர் வீட்டில் இருக்கும் ஊழல்வாதிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள். இதற்கிடையே இந்தியன் தாத்தா இந்தியா முதுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தன் களை எடுக்கும் பணியை செய்கிறார். இப்படி சீரியசாக எடுக்க வேண்டிய படத்தை படுகாடுமடியாக, அபத்தமாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.
இது ஷங்கர் படமா என்று சந்தேகமாக இருக்குமளவிற்கு இருக்கிறது.

இந்தியன் முதல் பாகத்தில் தாத்தா கெட்டப் எவ்வளவு கம்பீரமாக இருந்தது. ஆனால் இதில் நேபாளி படத்தில் வரும் நாயகனை போல் மேக்கப்பில் சொதப்பி இருக்கிறார்கள். சும்மா கிடந்த தாத்தாவை கூட்டி வந்து ஓடவிட்டு அடிக்கிறார்கள். அவரும் வடிவேலு ஒரு படத்தில் தாவுடா செவல தாவுடா என்று கூறிகொண்டு ஓடுவதை போல் தாத்தாவையும் ஒடவிட்டிருக்கிறார்கள்.
சித்தார்த்தை சொஞ்சம் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
படத்தில் ஊழல் அதிகாரிகளை பார்த்தால் வெறுப்புதான் வர வேண்டும் ஆனால் இங்கு சிரிப்பு தான் வருகிறது.

இசை என்னத்த சொல்ல இந்தியன் வெற்றிக்கு முக்கிய கரணம் AR ரஹமான் இசை, ஆனால் இந்த படத்தின் முதல் எதிரி இசைதான். பல எமோஷனலான காட்சிக்கு இசையமைக்கு சொன்னால் கருமம் என்னத்தையோ வாசித்து இருக்கிறார் . தாத்தாவை வரவேற்க பாடலை போட சொன்னால் தாத்தவராரு கலக்க போறாருன்னு பிக்காலி பசங்க பாட்டா போட்டிருக்காங்க.இசை வரவில்லை. என்றால் வேறு வேலைபார்க்கலாமே
படத்தின் இரண்டு நல்ல விஷயம் ஒளிபதிவு, செட் அமைப்பு.

ஷங்கர் தன் தன் பிரம்மாண்ட எண்ணத்தை வேண்டும். அதேபோல் தன் கதைவிவாத குழுவையும் மாற்ற வேண்டும்

இந்தியன் || தாத்தாவிற்கு ஓய்வுதந்திருக்கலாம்

’கல்கி 2898 கி.பி’ திரைவிமர்சனம்

மகாபாரத குருசேத்திர போர் நடந்து முடிந்து 6000 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் கல்கியின் கதையை திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

உலகம் பலவிதமான அழிவுகளுக்கு பிறகு கலிகாலம் தொடங்கி உலகம் முற்றிலும் அழிந்துவிட்டது.கடைசியாக காசி என்ற ஒரு நகரம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது.மிச்சம் இருக்கும் உயிர்களை சுப்ரீம் என அழைக்கப்படும் கமல்ஹாசன் மட்டும் அனைவரையும் கொடுங்கோள் ஆட்சி நடத்தி வாழ்ந்து வருகிறார்.

மறுபக்கம் பணம் மற்றும் வசதி படைத்த மக்கள் மட்டும் செல்வ செழிப்பான எல்லா வசதிகளும் உடைய `காம்பிளக்ஸ்’ என்ற தனி உலகில் வாழ்ந்து வருகின்றனர்.இந்த உலகில் பணம் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிரபாஸ், காசியில் வாழ்ந்து வரும் நிலையில் தன் எப்படியாவது அதிகளவில் பணத்தை சேர்த்து எப்படியாவது காம்பிளக்ஸ் உலகில் நுழைந்து விடவேண்டும் என கனவுடன் வாழ்ந்து வருகிறார்.இதற்காக எந்த ஒரு எல்லைக்கும் சென்று பணம் சம்பாதிப்பதற்கு தயாராக இருக்கிறார்.

இதற்கிடையே காம்பிளக்ஸ் உலகில் தன்னிடம் அடிமையாக உள்ள பெண்களின் கருவில் தொடர்புகளை சுமக்க வைத்து அந்தக் கருவில் இருக்கும் சீரத்தை சுப்ரீம் கமல்ஹாசன் 150 நாட்களுக்கு மேல் கருவில் இருக்கும் சீரத்தை தேடி வருகிறார். கமல்ஹாசன் தேடும் சீரம் கதாநாயகி தீபிகா படுகோனேவின் கருவில் இருப்பதை அறியும் அந்த சீரத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள்.அந்த நிலையில் தீபிகா படுகோனே தப்பித்து விடுகிறார்.

தீபிகா படுகோனை எப்படியாவது கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு காம்ப்ளெக்ஸ் சுப்ரீம் கமல்ஹாசன் மிகப்பெரிய தொகைத்தரப்படும் என அறிவிக்க, பிரபாஸ் கதாநாயகி தீபிகா படுகோனை தேடி கண்டுபிடித்து சுப்ரீமிடம் ஒப்படைத்து அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய தொகையை பெற்றுக்கொண்டு காம்ப்ளக்ஸில் நுழைய வேண்டும் என்ற அவருடைய நீண்ட நாள் கனவை அடைய நினைக்கிறார்.

கதாநாயகி தீபிகா படுகோனேவை பிடித்து கொடுத்து காம்ப்ளக்ஸ் என்ற உலகத்திற்கு கதாநாயகன் பிரபாஸ் நுழைந்தாரா? நுழையவில்லையா? கதாநாயகி தீபிகா படுகோனேவின் கருவில் இருக்கும் சீரத்தை சுப்ரீம் உலக நாயகன் கமலஹாசன் அடைய நினைக்க காரணம் என்ன? என்பதுதான் இந்த கல்கி 2898 AD திரைப்படத்தின் மீதிக்கதை.

கல்கி 2898 AD திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் நடித்திருக்கிறார்கள்.

இந்த வயதிலும் அமிதாப் பச்சனின் நடிப்பு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்கள்.

கதாநாயகி தீபிகா படுகோன் அடிமைத்தனமாக வாழும் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியுள்ளார்.

தன் கருவில் இருக்கும் தனது குழந்தைக்கு ஏன் இவ்வளவு ஆபத்து என்று தெரியாமல் பதறும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், ராஜமௌலி ராமகோபால் வர்மா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் கவுரவ தோற்றத்தில் ஓரிரு காட்சிகளில் வருகின்றனர்.

ஒளிப்பதிவாளர் டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு முலம் மிகப்பெரிய அளவில் அசத்தியிருக்கிறார்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறார்.

மகாபாரதம் கதைகளுக்குள் இதிகாசக் கதையை சைன்ஸ் ஃபிக்‌ஷன் காட்சி அமைப்புகளோடு இணைத்து நம்பவே முடியாத அளவிற்கு ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின்.

மேட்மேக்ஸ், பிளாக் பாந்தர் போன்ற ஹாலிவுட் திரைப்படத்தின் இருந்து சாயல்களை இந்தத் திரைப்படத்திலும் அதிகளவில் காணமுடிகிறது.

இந்த திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள், பிரமிக்க வைக்கும் அளவிற்கு ஒரு நகரத்தை வடிவமைப்பு மக்களை ஆச்சரியப்படும் வகையில் அமைந்திருப்பதற்கு இந்த திரைப்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு மிகப்பெரிய அளவில் அமைந்திருக்கிறது.

ஒரு நல்ல திரைப்படத்திற்கு மிக மிக முக்கியம் ஒரு நல்ல கதை அதன்பிறகு அந்த கதையில் உள்ள கதாபாத்திரங்களை வாழவைப்பதற்கு நடிகர்கள் அந்த நடிகர்களுக்கு கதையில் உருவாக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களின் தோற்றங்கள் மற்றும் உடைகள் இது மிக மிக முக்கியமானது.

இந்த கல்கி 2898 கிபி திரைப்படத்தில் 6000 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையில் கதாநாயகன் மற்றும் நடிகர்கள் அனைவருமே தற்போது உள்ள காலகட்டங்கள் போல் இருக்கிறார்கள் இது இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.

“பயமறிய பிரம்மை” திரைவிமர்சனம்

சிறை சாலையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொலை குற்றவாளியான ஜே.டி. ஜெகதீஷ் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதுவதற்காக பத்திரிக்கையாளர் வினோத் சாகர் அவரை சந்தித்து அவருடைய வாழ்க்கையைப் பற்றி உரையாடுகிறார்.இருவருக்குமான உரையாடலின் போது, “புத்தகங்கள் மனிதர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” வினோத் சாகர் கூறுகிறார்.

அது எப்படி நடக்கும்? என கொலை குற்றவாளியான கதாநாயகன் ஜே.டி. ஜெகதீஷ் கேட்க கேள்விக்கான பதிலாக, அவரது வாழ்க்கையையே புத்தக வாசகர்களின் கண்ணோட்டத்தில் திரையில் காட்சிகளாக மாறி இருப்பது ‘பயமறியா பிரம்மை’ திரைப்படத்தின் மீதி கதை.

இந்த திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஜே.டி.ஜெகதீஷ் ,மற்றும் குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகிய ஆறு பேர் ஜே.டி ஜெகதீஷ் கதாபாத்திரமாக உருமாறி நடித்திருக்கிறார்கள்.

மாறன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய் மற்றும் ஏ.கே, எழுத்தாளர் கபிலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினோத் சாகர், ஜே.டி.ஜெகதீஷின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திவ்யா கணேஷ் என இந்த பயமறியா பிரம்மை திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் தங்களது வேலை மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் பிரவின் மற்றும் நந்தா ஒளிப்பதிவின் மூலம் இந்தத் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கே -வின் இசையும் பாடல்களும் பிண்ணனி இசையும் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.

ஒரு கதையை புத்தகமாக பதிவு செய்வார்கள் ஆனால் இந்த திரைப்படத்தில் ஒரு புத்தகத்தை கதையாக வித்தியாசமான திரைக்கதையை அமைத்து, வித்தியாசமான முறையில் கதை சொல்கிறேன் என்ற பெயரில், கொலையை கலையாக சித்தரித்து அதிர வைத்தவர் அதை புரியும் படியாக பதிவு செய்திருக்கலாம் இயக்குனர் ராகுல் கபாலி .

மொத்தத்தில் பயமறியா பிரம்மை—– பயமும் கம்மி, பிரம்மையும் கம்மி…………