
தனியார் டிவி நிருபரான ஷரத்தா ஸ்ரீநாத் தொகுத்து வழங்கும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பார்வையாளர்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் செல்வராகவன், திடீரென்று எழுந்து துப்பாக்கி முனையில் அனைவரையும் பிணைக் கைதிகளாக்கி அதிரடியாக அதிர்ச்சியளிக்கிறார்.அவருக்கு என்ன வேண்டும் ? என்று அவரிடம் கேட்டால்,அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று ஐந்து பேரை கொலை செய்யப் போகிறேன்,என்றும் முடிந்தால் என்னை தடுத்துக் கொள்ளுங்கள், என்று தைரியமா சொல்கிறார்.பிணைக் கைதிகளை காப்பாற்றி விட்டு, செல்வராகவன் மிரட்டல் குறித்து விசாரிக்கும்காவல்துறை, தொடர் கொலைகளை தடுக்க விஷ்ணு விஷால்தலைமையில் குழு ஒன்றை அமைக்கப் படுகிறது. அந்த கொலையாளி செல்வராகவனை பிடிப்பதை விட்டுவிட்டு, அவர்செய்ய இருக்கும் கொலைகளை தடுக்க விஷ்ணு விஷால் முயற்சிக்கிறார். அது
ஏன் ? என்பதை இதுவரை சொல்லப்படாத கோணம் தான் ‘ இந்த ஆரியன்’.திரைப்படக்
கதைக்களம்.
காவல்துறை சீருடையில் மிடுக்கான தோற்றத்துடன் விஷ்ணு விஷால், முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்திருக்
கிறார்
செல்வராகவன், சைக்கோ கொலையாளியாக பயமுறுத்தவில்லை. தொலைக்காட்சி நிருபராக நடித்துள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், விஷ்ணு விஷாலின் மனைவியாக நடித்திருக்கும் மானசா செளத்ரி, கருணாகரன், அவினாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்
இயக்குநர் பிரவீன்.கே, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, என அனைவரும்
பார்க்க கூடிய ஒரு சைக்கோ திரில்லர் படமாகவும் நமக்கு கொடுத்திருக்கிறார்.
RATTING——-3/5

