
அரவிந்தன் இயக்கத்தில் பிரித்திவிராஜ் ராமலிங்கம், மைனா நந்தினி, காளி வெங்கட் ,மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் குட் டே.
திருப்பூரில் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை செய்யும் நாயகன், அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை அந்த கம்பெனியின் மேனேஜர் தொல்லை செய்ய அதை தட்டி கேட்கிறார். அந்த மேனேஜரோ அந்த கம்பெனி ஓனருக்கு மச்சான் இருவரும் சேர்ந்து நாயகனுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிக்கிறார்கள். நாயகனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் சம்பளம் இல்லாமல் டென்ஷனில் இருக்கும் அவனிடம் மனைவி பணம் கேட்டு நச்சரிக்க, அந்த டென்ஷனில் வீட்டுக்கு வரும் நாயகன் நன்றாக குடிக்கிறான் .குடித்துவிட்டு போதையில் இருக்கும் பொழுது அந்த வீட்டின் ஓனரோ வந்து வாடகையுடன் வீட்டுக்கு முறை வாசல் செய்ய 300 ரூபாய் கேட்டு வருகிறார்,அவரிடம் உங்கள் வீட்டில் கோலம் போட நான் எதற்கு 300 ரூபாய் தர வேண்டும் என்று போதையில் தகராறு செய்து அவரது தலையை உடைத்து, அங்கிருந்து போதையில் வெளியில் வந்து அடுத்தடுத்து பல குற்ற செயல்களில் ஈடுபடுகிறார். பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளர் அறையில் தகராறு, தன்னுடன் கல்லூரியில் படித்த பெண்ணிற்கு தற்பொழுது கல்யாணம் செய்து குடும்பத்துடன் வாழும் பெண்ணிற்கு ஃபோன் செய்து அவரை தொந்தரவு செய்து குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுகிறார், மேலும் காளி வெங்கட்டின் ஆட்டோவில் ஏறி அவரை அடிக்கிறார் அவருடன் வம்பு வளர்க்கிறார். இப்படி போகின்ற வழி எல்லாம் வம்பு வளர்க்கும் இவரை காவல்துறை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வருகிறது .
அங்கும் அவர் போதையில் இன்ஸ்பெக்டரின் சட்டையையும், வாக்கி டாக்கியையும் எடுத்துக் கொண்டு தப்பித்து ஓடுகிறார். அவரை இரவு முழுவதும் காவல்துறை தேட இதே நேரத்தில் திருப்பூரில் ஒரு குழந்தை கடத்தல் நடைபெறுகிறது அதை த் தேடும் காவல்துறை இவரையும் ஒரு பக்கம் தேடுகிறது. ஒரு கட்டத்தில் அதிகாலையில் நாயகனுக்கு போதை தெளிய, அந்த குழந்தையை கடத்தலை இவர் இவர் கண்டுபிடித்து காவல்துறைக்கு தர, இரவு முழுவதும் போதையில் செய்த தவறுகள் அனைத்தும் அந்த ஒரு நல்ல காரியத்தால் மறைந்து போகிறது அவரை காவல்துறை விட்டு விடுகிறது இதுதான் இந்த திரைப்படத்தின் கதை.
இந்த திரைப்படத்தின் நாயகனாக பிரிதிவராஜு ராமலிங்கம் இரவு முழுதும் குடிகாரனாக அவர் செய்ய அலப்பறைகள் நமக்கே ஒரு கட்டத்தில் எரிச்சல் ஊட்டுகிறது என்னடா இப்படி போதையில் ஓவர் அலப்பறை செய்கிறானே என்று.
மேலும் இந்த படத்தில் நடித்திருக்கும் மைனா நந்தினி ஒரு காமெடி கலந்த, தன் கணவரிடமும் தன்னை ஒரு தலையை காதலித்த நாயகனிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது, கோபம் உள்ளது என்று ரசிக்கும் படியாக செய்துள்ளார் மைனா நந்தினி .
மேலும் இந்த படத்தில் காளி வெங்கட்,ஆடுகளம் முருகதாஸ்,பகவதி பெருமாள் (பக்ஸ்),வேல ராமமூர்த்தி,போஸ் வெங்கட்இப்படி பலர் வந்து போகிறார்கள் அவர் அவர்களுக்கு ஒரு ஒரு சீன் அவர்களும் அவர்களுக்கு தந்த வேலையை சிறப்பாக செய்கிறார்கள் .
இயக்குனர் அரவிந்தன் இந்த படத்தின் திரைக்கதையை எழுதும்போது இன்னும் சிறப்பாக ஒரு இரவில் அந்த திருப்பூரில் நடக்கும் அந்த குழந்தை கடத்தல் மையப்படுத்தி எழுதி இருக்கும்போது இன்னும் விறுவிறுப்பாக காட்டி இருக்கலாம், படம் பார்ப்பதற்கு நன்றாக இருந்திருக்கும் விறுவிறுப்பாகவும் இருந்திருக்கும்
ஒளிப்பதிவு திருப்பூரின் இரவு அழகை அழகாக காட்டுகிறது என்று கூறலாம்
இசை கோவிந்த் வசந்தா
குட் டே படத்தின் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாகி இன்னும் சிறப்பாக செய்திருந்தால் கண்டிப்பாக படம் பார்ப்பவர்களுக்கு படம் எடுத்தவர்களுக்கும் அந்த டே டுடேவாக இருந்திருக்கும்

