“பரமசிவன் பாத்திமா” திரைவிமர்சனம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மலை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் மதம் மாற்றம் காரணமாக மூன்று பிரிவுகளாக பிரிந்து இந்து கிறிஸ்தவர், இஸ்லாமியர், என மூன்று கிராமங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கிறிஸ்தவர்கள் வாழும் கிராமத்திற்கும், இந்துக்கள் வாழும் கிராமத்திற்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.இதற்கிடையே, இந்த இரண்டு கிராமங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு திருமணம் நடந்தால் மாப்பிள்ளை மட்டும் கடத்திச் சென்று கதாநாயகன் விமல் மற்றும் கதாநாயகி சாயாதேவி இணைந்து கொலை செய்வதோடு, மட்டுமல்லாமல் மேலும் சிலரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.

இந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறையினர் கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் கிளறிக் கொண்டிருக்கிறார்கள்.மறுபக்கம் இரண்டு கிராமங்களுக்கு இடையே நடக்கும் மோதல் தொடர்கிறது.கதாநாயகன் விமல் மற்றும் கதாநாயகி சாயாதேவியும் திருமணம் நடக்க இருக்கும் இளைஞர்களை கடத்தி எதற்காக கொலை செய்கிறார்கள்? கொலை செய்யப்பட்டவர்களுக்கும் கதாநாயகன் விமல் மற்றும் கதாநாயகி சாயாதேவியும் என்ன தொடர்பு? என்பதுதான் இந்த ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த பரமசிவன் பாத்திமா திரைப்படத்தில் கதாநாயகனாக விமல் நடித்திருக்கிறார்.வாத்தியார் கதாப்பத்திரத்தில் நடிப்பின் மூலம் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சாயாதேவி நடித்திருக்கிறார் ‌ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாயாதேவியும் கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார்.

கிறிஸ்தவ தேவாலய பாதிரியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் இருவரும் வெட்டித்தனமாக அதிகளவில் வசனங்களை பேசிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் பேசும் வசனங்கள் மூலம் திரைப்படத்திற்கு என்ன சொல்ல முயற்சிக்கிறார்கள், என்பது தான் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு எதுவுமே புரியாமல் இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், நடிப்பு வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஒரு முகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நடிப்பின் மூலம் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் துபாய் மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கூல் சுரேஷ், கதாநாயகி சாயாதேவியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மனோஜ்குமார், கதாநாயகி சாயாதேவியின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதிரா, சேஷ்விதா, ஸ்ரீரஞ்சனி, வி.ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் சுகுமார், ஆறு பாலா, ஊருக்குள் குடிகாரனாக சுற்றுத் திரியும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வீரசமர், களவாணி கலை உள்ளிட்ட அனைவரும் கொடுத்த வேலையை எந்த விதமான குறையும் இல்லாமல் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் இந்த பரமசிவன் பாத்திமா திரைப்படத்தில் ஒளிப்பதிவு தனது உதவியாளரிடம் கேமராவை ஒப்படைத்ததால் ஒளிப்பதிவில் பெரிய வேலை கொடுக்கவில்லை என நினைக்கத் தோன்றுகிறது.

இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்களும், மற்றும் பின்னணி இசை சொல்லும் அளவுக்கு இல்லை இந்த திரைப்படத்திற்கு இசை மட்டுமே சிறப்பு சேர்த்திருக்கிறது.

இந்து மதம் மட்டுமே உயர்ந்த மதம், என்ற கொள்கையை கூறுவதும் மற்ற மதங்கள் அனைத்தும் பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி மதமாற்றம் செய்து தங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதையும், அப்படி இழுக்கப்பட்ட மக்கள் பலர் தங்களுடைய அடையாளமான பெயர் அளவில் மட்டுமே மதம் மாறியிருக்கிறார்களே தவிர மனதளவில் மாறவில்லை என்பதையும் பிரச்சார பாணியில் இது பிரச்சார படமாக மட்டுமே இயக்கி இருக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *