Breaking
September 29, 2024

தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்து ஒரு சிறு அறிக்கை

அனைவருக்கும் வணக்கம், என் பெயர் ஆனந்த் கோபாலன், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் சார்பாக நான் ஆஜராகிறேன். இன்று, என்னுடைய வாடிக்கையாளரான சாம்சங் இந்தியாவின் சென்னை தொழிற்சாலையில் நடைபெற்று வரும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்து ஒரு சிறு அறிக்கையை வெளியிட இங்கு வந்துள்ளேன். சாம்சங் இந்தியா அனைத்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கும் இணங்க செயல்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அனைத்து சட்டப்பூர்வமான பலன்களும் கிடைக்கின்றன, மேலும் அவர்களின் ஊதியம் அரசாங்கம் மின்னணு தொழில்துறைக்கு நிர்ணயித்ததை விட மிக அதிகமாகவே வழங்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன், ஏனெனில், தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பான சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தொழிலாளர்களின் சங்கம் இன்றுவரை பதிவு செய்யப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது சாம்சங் இந்தியா நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுப்பது நியாயமானது. இருப்பினும், சாம்சங் இந்தியா நிர்வாகம் பொறுமையாக இருந்து, பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காண தொழிலாளர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது. சாம்சங் இந்தியா நிர்வாகம், தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில் தொழிலாளர்களுடன் அமர்ந்து பேச தயாராக உள்ளது. மேலும், தொழிலாளர்களுடன் ஓர் நீண்ட கால ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் நிர்வாகம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. இருப்பினும், சாம்சங் இந்தியா நிர்வாகம் நமது தொழிலாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தும், மூன்றாம் தரப்புடன் அல்ல. சாம்சங் இந்தியா நிர்வாகத்தின் சார்பாக, சட்டவிரோத வேலைநிறுத்தத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பி, அனைத்து கருத்து வேறுபாடுகளையும் விரைவில் சுமூகமாக தீர்க்கும் நோக்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று தொழிலாளர்களிடம் இதன் மூலம் நான் கேட்டுக்கொள்கிறேன்்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *