January 2025

Financial Results for the Quarter/Nine Month ended 31 st December 2024Bank’s Global Business is at ₹12.61 lakh Cr, up by 8% YoY

. Net Profit up by 35% YoY at ₹2852 Cr in Dec’24 from ₹2119 Cr in Dec’23
. Operating Profit improved by 16% YoY to ₹4749 Cr in Dec’24 from ₹4097 Cr in Dec’23
. Net Interest Income increased by 10% YoY to ₹6415 Cr in Dec’24 from ₹5815 Cr in
Dec’23
. Fee based income grew by 9% YoY to ₹931 Cr in Dec’24 from ₹852 Cr in Dec’23
. Return on Assets (RoA) up by 28 bps to 1.39% in Dec’24 from 1.11% in Dec’23
. Return on Equity (RoE) increased by 108 bps to 21.00% in Dec’24 from 19.92% in
Dec’23
. Yield on Advances (YoA) up by 14 bps to 8.92% in Dec’24 from 8.78% in Dec’23
. Yield on Investments (YoI) increased by 32 bps to 7.12% in Dec’24 from 6.80% in
Dec’23
. Cost-to-Income Ratio reduced by 234 bps to 44.56% in Dec’24 from 46.90% in Dec’23
. Gross Advances increased by 10% YoY to ₹559199 Cr in Dec’24 from ₹509800 Cr in
Dec’23
. RAM (Retail, Agriculture & MSME) advances grew by 13% YoY to ₹334739 Cr in Dec’24
from ₹296845 Cr in Dec’23
. RAM contribution to gross domestic advances stood at 64.35%. Retail, Agri & MSME
advances grew by 16%, 13.5% and 8% YoY respectively. Home Loan (including
mortgage) grew by 12% YoY in Dec’24
. Priority sector advances as a percentage of ANBC stood at 43.85% (₹192761 Cr) in
Dec’24 as against the regulatory requirement of 40%
. Total Deposits increased by 7% YoY and reached to ₹702282 Cr in Dec’24 as against
₹654154 Cr in Dec’23. Current, Savings & CASA deposits grew by 5%, 3.5%, and 4%
YoY respectively
. Domestic CASA ratio stood at 40% as on 31 st Dec’24
.CD ratio stood at 79.63% as on 31 st Dec’24
. GNPA% decreased by 121 bps YoY to 3.26% in Dec’24 from 4.47% in Dec’23, NNPA%
reduced by 32 bps to 0.21% in Dec’24 from 0.53% in Dec’23
. Provision Coverage Ratio (PCR, including TWO) improved by 219 bps YoY to 98.09%
in Dec’24 from 95.90% in Dec’23
. Slippage Ratio improved by 50 bps to 0.78% in Dec’24 from1.28% in Dec’23
. Capital Adequacy Ratio improved by 34 bps to 15.92%. CET-I improved by 91 bps YoY
to 13.27%, Tier I Capital improved by 89 bps YoY to 13.77% in Dec’24
.Earnings Per Share (EPS) increased by 26% to ₹84.70 in Dec’24 from ₹67.12 in Dec’23

. Net Profit up by 5% QoQ to ₹2852 Cr in Dec’24 from ₹2707 Cr in Sep’24
. Return on Assets (RoA) improved by 6 bps to 1.39% in Dec’24 from 1.33% in Sep’24
. Yield on Advances (YoA) improved by 15 bps to 8.92% in Dec’24 from 8.77% in Sep’24
. NIM (Domestic) increased by 8 bps to 3.57% in Dec’24 from 3.49% in Sep’24
. GNPA decreased by 22 bps to 3.26% in Dec’24 from 3.48% in Sep’24, NNPA reduced by
6 bps to 0.21% in Dec’24 from 0.27% in Sep’24
. Slippage ratio decreased to 0.78% in Dec’24 from 1.06% in
Sep’24.

Key Highlights (Quarter ended Dec’24 over Dec’23)

Key Highlights (Quarter ended Dec’24 over Sep’24)

. Credit Cost decreased by 18 bps to
0.47% in Dec’24 from 0.65% in Sep’24

. Net Profit up by 37% YoY to ₹7962 Cr in 9MFY25 from ₹5816 Cr in 9MFY24
. Operating Profit increased by 11.5% YoY to ₹13980 Cr in 9MFY25 from ₹12535 Cr in
9MFY24
. Net Interest Income grew by 9% YoY to ₹18787 Cr in 9MFY25 from ₹17258 Cr in
9MFY24
. Net Interest Margin (NIM) Domestic stood at 3.53% in 9MFY25
. Return on Assets (RoA) improved by 27 bps to 1.31% in 9MFY25 from 1.04% in
9MFY24
. Return on Equity (RoE) increased by 137 bps to 20.62% in 9MFY25 from 19.25% in
9MFY24
. Cost-to-Income Ratio reduced by 50 bps to 44.67% in 9MFY25 from 45.17% in
9MFY24
Network:
. The Bank has 5877 domestic branches (including 3 DBUs), out of which 1987 are
Rural, 1543 are Semi-Urban, 1179 are Urban & 1168 are in Metro category. The Bank
has 3 overseas branches & 1 IBU (Gift City Branch).
 The Bank has 5224 ATMs & BNAs and 13292 number of Business Correspondents
(BCs).
Digital Banking:
. Business of ₹1,18,981 Cr has been generated through Digital Channels in 9MFY25. A
total of 117 Digital Journeys, Utilities and Processes have been launched so far.
. Number of Mobile Banking users has grown by 18% year over year, reaching 1.86 Cr.
. UPI users and Net Banking Users have seen a 24% & 9% YoY increase respectively,
reaching 2.04 Cr and 1.12 Cr respectively.
. The Credit Card users increased by 52% YoY to 2.83 lakh. The transactions in Point of
Sale (PoS) terminals has increased by 23% YoY, reaching to 35 lakh.
Awards & Accolades:
. The Bank received prestigious SKOCH Award for “Project WAVE”, an Indian Bank’s
digital transformation journey and for “SMA Collection Proclivity Predictor”- a
model built to predict the probability of default for Special Mention Accounts (SMA)
and reduce risks by outlining a targeted collection journey.
. The Bank was honoured with the “Best Public Sector Bank” award in the
organisational category and the MD & CEO of the Bank

Key Highlights (Nine Months ended Dec’24 over Dec’23)

received “CEO of the Year” award at Tamil
Nadu Leadership Awards 2024.
.The Vertical Head of CMS/SCF conferred with PT100 Leadership Award as an
“Innovator & Disruptor in Asia Pacific” at the Payments Transformers conference in
Singapore.
. In the 9 th Banking Leadership Summit 2024 of Indian Investors Federation, the Bank
received award for “Best Infrastructure & Ambience in UP”, “Best Marketing
Strategies for business in the year 2024 in UP” and runner up for “Banker of the
Year 2024”.
.In the IBA Annual Banking Technology Conference, 2024 – Special Mention under
Large Bank segment, the Bank received award for “Best Digital Sales, Payments &
Engagement”, “Best Tech Talent & Org., “Best AI and ML Adoption” and “Best FI”.
.During the 5 th Annual BFSI Technology Excellence Awards 2024, the Bank was
awarded “Best Cloud Initiative of the Year” – ET Edge recognition 2024 and “Best
Team Project in Cloud Implementation (PSB)”.
Our Focus
Our focus is to deliver value-added, innovative and tailored solutions to the customers
through omni-channel experience and with dedicated and skilled workforce. We will
focus on achieving compliant, sustainable and inclusive growth, with a clear emphasis
on customer service, CASA, MSME, and continued digital transformation.
We aim to become preferred choice of customer for catering to all financial & banking
needs.

இ லவுன்ஜ் மற்றும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் இணைந்து வழங்கும் பிரபல பாடகி சித்ரா பங்குபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

சென்னை நந்தனம் ஒ ய்எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 8 அன்று ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி சித்ரா. “சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா” பாடல் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற நிலையில், இவர் சின்னக்குயில் சித்ரா என்றே மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் முதன் முறையாகத் தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில், இந்த இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த பத்திரிக்கை சந்திப்பு நிகழ்வினில்….

E Lounge Events சார்பில் வெங்கட் பேசியதாவது…

இந்த ஆண்டில் வரும் பிப்ரவரி 8ம் தேதி சென்னை YMCA நந்தனம் மைதானத்தில், இந்த லைவ் இன் கான்சர்ட் நடக்கவுள்ளது. இது இன்னிசை நிகழ்ச்சி அல்ல, நம் அனைவருக்கும் பிடித்த சித்ரா அம்மாவைக் கொண்டாடும் ஒரு விழா. 47 வருடங்களைக் கடந்து, உலகளவில் நம் அனைவரையும் அசத்தி வரும் அவரைக் கொண்டாடும் வகையில், இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். எந்த ஒரு பாடலையும் உடனடியாக ஸ்வரம் எழுதிப் பாடும் திறமை கொண்ட கலைஞர் சித்ரா அம்மா. அவர் இந்த தமிழ் மண்ணில் தான் தொடர்ந்து பாடி வருகிறார். அதனால் இந்த விழாவைச் சென்னையில், இங்கு நடத்துவது தான் சிறப்பாக இருக்கும். அவர் இந்த விழாவிற்கு ஒப்புக்கொண்டது எங்களுக்குப் பெருமை. இந்த நிகழ்ச்சியை நடத்த உதவிய கனரா வங்கிக்கு நன்றி. இந்த செய்தியை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்குமாறு ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

கனரா வங்கி சார்பில் ஐசக் ஜானி பேசியதாவது….

சித்ரா அம்மா பெயரைச் சொன்னால் தெரியாதவர்கள் யாருமே இல்லை, இது வெறும் இசை நிகழ்ச்சி அல்ல, சித்ரா அம்மாவைக் கொண்டாடும் ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வை எங்களது கனரா வங்கி ஸ்பான்சர் செய்வது எங்களுக்குப் பெருமை. இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. கனரா வங்கி சார்பில், உலகமெங்கும் உள்ள ரசிகர்களை இந்நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன்.

Noise & Grains சார்பில் மஹாவீர் பேசியதாவது….

எங்களது எல்லா நிகழ்ச்சிகளிலும், நீங்கள் எல்லோரும் எப்போதும் துணை நிற்கிறீர்கள் நன்றி. நானும் கார்த்தியும் எப்போதும் அவரை சித்ரா அம்மா என்றே அழைப்போம். அது அன்பால் நிகழ்ந்தது. சிங்கப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் எஸ் பி பி சார் இருந்த போது ஒரு நிகழ்வு நடந்தது, எப்போதும் ஒரு சிலர் தான் நம்மைக் கவனித்து, தட்டிக்கொடுத்து, நீ சரியாகச் செய்து விடுவாய் என ஊக்கம் தருவார்கள், அதைப் புன்னகையுடன் எஸ் பி பி சார் செய்வார். அதன்பிறகு அதைச் செய்வது சித்ரா அம்மா தான். எப்போதும் பாஸிடிவிடி தருவார். நம் தமிழக மக்கள் போல இசை நிகழ்வை ரசிப்பது யாருமில்லை. எல்லாவிதமான இசையையும் ரசிப்பார்கள், அப்பா அம்மா எமோஷனல் கனக்ட்டும் இந்த ஊரில் இருக்கிறது. என் அப்பா அம்மவை அனுப்பி வைக்க வேண்டும் எனப் பலர் இந்நிகழ்ச்சிக்கு டிக்கெட் கேட்டார்கள், அது எங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதம் தான். எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சித்ரா அம்மாவிற்கு நன்றி. E Lounge Events மற்றும் கனரா வங்கிக்கும் நன்றி. அனைவரும் காலத்தைத் திருப்பித் தரும், இந்நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டாடுங்கள் நன்றி.

பாடகி சின்னக்குயில் சித்ரா பேசியதாவது…

அனைவரும் வந்தது மிகுந்த மகிழ்ச்சி. நான் இதை எதிர்பார்க்கவில்லை, இதுவரை நான் பல இசை நிகழ்ச்சிக்குச் சென்று பாடியுள்ளேன், ஆனால் இந்த நிகழ்ச்சியை என்னைக் கொண்டாடும் நிகழ்வாக ஒருங்கிணைத்துள்ளார்கள். 3 மணி நேரம், மது பாலகிருஷ்ணன், சத்ய பிரகாஷ், திஷா பிரகாஷ், ருபா ரேவதி என நான்கு பாடகர்கள் என்னுடன் இணைந்து பாடவுள்ளனர். பாப்புலரான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடவுள்ளோம். எனக்கு இத்தனை வருடங்கள் தந்து வரும் ஆதரவிற்கு நன்றி. இந்த நிகழ்ச்சிக்கும் ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி.

உலகளவில் பல நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கிணைத்து வழங்குவதில் புகழ்பெற்ற, ஐக்கிய அரபு எமிரேட், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், கத்தார், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் செஷில்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாராட்டு பெற்ற நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்திய E Lounge Events நிறுவனமும், திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள Noise & Grains நிறுவனமும் இணைந்து, கனரா வங்கி ஆதரவுடன் இந்த இசைக்கச்சேரி நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

‘டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப்டைம்: கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள‌ ஒ ய் எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 8 சனிக்கிழமை மாலை ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது, இதற்கான நுழைவுச் சீட்டுகள் இன்ஸைடர்.இன் மற்றும் புக் மை ஷோ இணையதளங்கள் மற்றும் செயலிகளில் கிடைக்கும்.

ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள “தருணம்” படம், ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது !!

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ரொமாண்டிக் திரில்லர் “தருணம்” படம், ஜனவரி 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது !!

ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள “தருணம்” திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

தேஜாவு திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ஒரு அருமையான காதல் கதை மூலம் மகிழ்விக்கவுள்ளார்.

வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால், ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

தமிழ்த்திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன், பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயர்தரமான படைப்பாகத் தயாரித்துள்ளனர்.

ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, உலகமெங்கும் எண்ணற்ற திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில் நுட்ப கலைஞர்கள்

எழுத்து, இயக்கம் – அரவிந்த் ஶ்ரீநிவாசன்
ஒளிப்பதிவாளர் – ராஜா பட்டாசார்ஜி
இசை – தர்புகா சிவா
பின்னணி இசை – அஸ்வின் ஹேமந்த்
படத்தொகுப்பு – அருள் E சித்தார்த்
கலை இயக்குனர் – வர்ணாலயா ஜெகதீசன்
சண்டைப்பயிற்சி – Stunner சாம்
தயாரிப்பாளர் – புகழ் A, ஈடன் (ZHEN STUDIOS )
மக்கள் தொடர்பு – சதீஸ், சிவா (AIM)

“தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள், ZEE5 ல் ஸ்ட்ரீமாகவுள்ளது !!

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, “சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தினை, பார்வையாளர்கள் எளிதாக ரசிக்கும் வகையில், அவர்களின் உள்ளூர் மொழியில் கொண்டு வருகிறது. இயக்குநர் தீரஜ் சர்னா இயக்கத்தில், விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா மற்றும் ரித்தி டோக்ரா ஆகியோரின் நடிப்பில், 24 ஜனவரி 2025 அன்று திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம், இந்தியாவின் மிகவும் வேதனையான மற்றும் சர்ச்சைக்குரிய சோகங்களில் ஒன்றான 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை, பின் களமாகக் கொண்ட அரசியல் டிராமா திரைப்படமாகும். நீதியின் உண்மை முகத்தை, ஊடகங்களின் பார்வையை, உண்மையின் விலையை அழுத்தமாகப் பேசும், இந்தத் திரைப்படம் நாடு முழுதும் சிறப்பான பாராட்டுக்களைப் பெற்றது. குடியரசு தினத்தன்று “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தை ZEE5 பார்வையாளர்களுக்குத் தெலுங்கு மற்றும் தமிழில் வழங்குகிறது.

59 அப்பாவி பயணிகளின் உயிரைக் கொன்ற 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக்கொணரும் ஆர்வமுள்ள பத்திரிகையாளர் சமர் குமாரை (விக்ராந்த் மாஸ்ஸி) சபர்மதி ரிப்போர்ட்ஸ் படம் பின்தொடர்கிறது. சமர் ஆழமாக ஆராயும்போது, ​​உண்மையை மறைக்க ஊடக விவரிப்புகளைக் கையாளும், சக்திவாய்ந்த அரசியல் பிரமுகர்களை உள்ளடக்கிய ஒரு ஆபத்தான சதியை அவர் கண்டுபிடிக்கிறார். அவரது கண்டுபிடிப்புகள் அவரது ஆசிரியரான மணிகா ராஜ்புரோஹித் (ரித்தி டோக்ரா) மூலம் முடக்கப்படும்போது, ​​சமரின் வாழ்க்கை அழிக்கப்பட்டு, அவர் தெளிவற்ற ஒரு நிலைக்குத் தள்ளப்படுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நிருபர் அம்ரிதா கில் (ராஷி கண்ணா) சமரின் மறைக்கப்பட்ட அறிக்கையின் மீது ஈர்க்கப்பட்டு, உண்மையான கதையை அம்பலப்படுத்த அவருடன் இணைந்து கொள்கிறார். ஒன்றாக, ஊழல், வஞ்சகம் மற்றும் துரோகம் ஆகியவற்றின் வலையை அவிழ்க்க அவர்கள் பணியாற்றும்போது பெருகிவரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள், நீதியை வெளிச்சத்திற்குக் கொண்டுவர எல்லாவற்றையும் பணயம் வைக்கிறார்கள். இந்த அதிரடியான உண்மைகளை விவரிக்கிறது “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படம்.

விக்ராந்த் மாஸ்ஸி கூறுகையில்..,
“தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” மூலம், தற்போதைய நிலைக்கு எதிரான, சங்கடமான உண்மைகளை எதிர்கொள்ளத் தூண்டும் ஒரு கதையை நாங்கள் சொல்கிறோம். இது பத்திரிகையின் சக்தியையும், எவ்வளவு இழந்தாலும் நீதிக்காக நிற்பதன் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுகிறது. இந்த படம் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் ஆழமாக எதிரொலித்தது, ஊடக மாஃபியா மற்றும் உண்மையைப் பின்தொடர்வது பற்றிய முக்கியமான உரையாடல்களைத் தூண்டியது. இந்தக் கதை தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களை அவர்களின் உள்ளூர் மொழியில் சென்றடைவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் ஈர்க்கும் என நம்புகிறேன்.”

நடிகை ராஷி கண்ணா கூறுகையில்..,
“அம்ரிதா கில் ஒரு உறுதியான மற்றும் அச்சமற்ற பத்திரிகையாளர், தனிப்பட்ட இழப்பைப் பொருட்படுத்தாமல் உண்மையை வெளிக்கொணர வேண்டும் என நினைப்பவர். இந்த பாத்திரத்தில் நடித்ததன் மூலம், அடக்குமுறை நிறைந்த உலகில் எது சரியானது என்பதற்கு ஆதரவாக நிற்க எடுக்கும் தைரியத்தை ஆராய என்னை அனுமதித்தது. நீதியை நம்பும் எவருக்கும் இது மிக முக்கியமான பாத்திரம். இப்படம் இப்போது இந்தியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கிலும் ரசிகர்களுக்குக் கிடைக்கும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ரிதி டோக்ரா கூறுகையில்..,
“தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பார்வையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் சொந்த மொழியில் கிடைக்கும். நான் குறிப்பாக ஆர்வமாக இருந்தது உண்மையைச் சுற்றி நடக்கும் நாடகம் மீதானது தான். உண்மை எப்போதும் நிலையானது வலுவானது. பரப்பப்படும் செய்திகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதையும், எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு பெரிய நிறுவனம் எவ்வாறு உள்ளது என்பதையும் பார்வையாளர்கள் அறிந்து கொள்வதும் முக்கியம். எப்போதும் ஒரு செய்தி மக்களுக்குத் தீனியாக்கப்படுகிறது.

இப்படத்தில், மாணிக்கா ராஜ்புரோஹித் தீவிரமான ஒரு வேலையைச் செய்கிறார், பல தடைகளைத் தாண்டி, மிகப்பெரிய சதி வலையின் உண்மைகளை, வெளியே கொண்டுவரப் போராடுகிறார். நடிகர்களாக இல்லாமல், உண்மையான மனிதர்களைத் திரையில் கொண்டு வருவது, எனக்கு மிகச் சுவாரஸ்யமாக இருந்தது. உற்சாகமாகவும் இருந்தது” ஒரு நடிகராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

உண்மை மற்றும் நீதியின் பின்னணியிலான அழுத்தமான இந்தக் கதையைத் தவறவிடாதீர்கள் – ZEE5 இல் தமிழ் மற்றும் தெலுங்கில் திரையிடப்படும் “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தை ட்யூன் செய்யுங்கள்!

“அகத்தியா” படத்தின் 3 வது சிங்கிள் “செம்மண்ணு தானே” கல்ச்சுரல் பாடல் வெளியானது. !!


 
பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் ஃபேன்டஸி-ஹாரர்- திரில்லர் படமான “அகத்தியா” படத்தின் மூன்றாவது சிங்கிள், “செம்மண்ணு தானே”, பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. புகழ்மிகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் பாடல், நம் மண்ணின் கலாச்சாரம் மற்றும் மருத்துவ செழுமையைக் கொண்டாடும் தலைசிறந்த படைப்பாக, ரசிகர்களையும், விமர்சகர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. பாடலின் ஆழமான வேரூன்றிய கருப்பொருள்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன், இந்தப் பாடல் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான “அகத்தியா” படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. பான்-இந்திய பிரம்மாண்ட படைப்பான “அகத்தியா” படம், பிப்ரவரி 28, 2025 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியிடப்படுகிறது.

“செம்மண்ணு தானே” என்பது வெறும் மெல்லிசை பாடல் மட்டும் அல்ல; இது நமது நிலத்தின் பாரம்பரியத்திற்கான ஒரு ஆத்மார்த்தமான பயணம். எண்ணற்ற நோய்களைக் குணப்படுத்த மண்ணிலிருந்து மூலிகைகள் மற்றும் இயற்கை வளங்களைப் பயன்படுத்திய முனிவர்கள் மற்றும் இயற்கை மருத்துவர்களின் நம்பமுடியாத பங்களிப்பை இந்தப் பாடல் அழகாக சித்தரிக்கிறது – அவற்றில் சிலவற்றை நவீன மருத்துவம் இன்னுமே தீர்க்கப் போராடுகிறது. யுவனின் அற்புதமான இசையில், நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உணர்வுப்பூர்வமான மெல்லிசையாக இப்பாடல் நம் மனதை ஆட்கொள்கிறது.

தீபக் குமார் பதியின் அசத்தலான ஒளிப்பதிவு பாடலின் தரத்தை உயர்த்துகிறது, இப்பாடல் கேட்க மட்டுமல்ல, காட்சி விருந்தாகவும் அமைந்துள்ளது. படத்தின் கதையுடன் கலாச்சார அம்சங்களைத் தடையின்றி கலந்திருக்கும், பா.விஜய் எழுதியுள்ள இதயப்பூர்வமான வரிகளால், பாடலின் சாராம்சம் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது.

 
இயக்குநர் பா விஜய் கூறியதாவது…
இந்தப் பாடல் வெறும் இசையல்ல, இது நமது நிலத்தின் ஆழமான வேரூன்றிய கலாச்சார பாரம்பரியத்தின் வழியாக ஒரு பயணம். எண்ணற்ற நோய்களைக் குணப்படுத்தும் அபாரமான மருத்துவ மூலிகைகளை நமக்குத் தந்த, நம் மண்ணின் சாரத்தை வெளிப்படுத்த விரும்பினேன். இது குறித்து நான் யுவனுடன் பகிர்ந்து கொண்டேன், அவர் அதை கமர்ஷியலாகவும், கலாச்சார ரீதியாகவும் குறிப்பிடத்தக்க ஒரு மெல்லிசையாக உருவாக்கித் தந்தார். நமது மண்ணின் ஆற்றலால் மனித குலத்திற்குப் பங்காற்றிய ஞானிகளுக்கும், குணப்படுத்துபவர்களுக்கும் இப்பாடல் காணிக்கையாகும்.

“பா.விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதுமே மிக இனிமையான அனுபவம். நம் மண்ணின் அசாத்தியமான மருத்துவ மற்றும் பண்பாட்டு மதிப்பைப் பற்றிய கதைகளை அவர் பகிர்ந்துகொண்டபோது, எனக்கு ஆழ்ந்த பொறுப்புணர்ச்சி ஏற்பட்டது. ‘செம்மண்ணு தானே’ தடைகளைத் தாண்டிய, ஒரு மெல்லிசை. நம் முன்னோர்களின் ஆத்மா மற்றும் அவர்களின் பங்களிப்புகளால் வழிநடத்தப்படுவது போல், இந்த இசை சிரமமின்றி மிக எளிமையாக வந்தது. இது எனது சிறந்த இசையமைப்பில் ஒன்று என்று நான் நம்புகிறேன், பார்வையாளர்கள் இப்பாடலைக் காண பெரும் ஆவலுடன் உள்ளேன்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் கூறியதாவது…

“அகத்தியா மிக முக்கியமான லட்சிய திரைப்படம், இந்தப் படத்தின் ஒவ்வொரு அம்சமும் உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை அளிக்கும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘செம்மண்ணு தானே’ இந்தத் திரைப்படத்தின் மையம், கதையின் கலாச்சார சாரத்தை அழகாகப் பொதித்து வைத்திருக்கும் பாடல். தனிப்பட்ட முறையில், இந்தப் பாடல் நம் மண்ணின் அபாரமான பங்களிப்பை எடுத்துரைப்பதோடு, எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றிய குணப்படுத்துபவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். நமக்கு பலவற்றைக் கொடுத்த மண்ணுக்கு இப்பாடல் சமர்ப்பணம்.”

 வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வாமிண்டியா (வைட் ஆங்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட்) இணைந்து தயாரித்துள்ள “அகத்தியா” திரைப்படம் இதுவரையில்லாத வகையிலான புதுமையான சினிமா அனுபவத்தை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பா.விஜய் இயக்கத்தில் இப்படம், கற்பனை, திகில் மற்றும் மாயங்கள் கலந்து, தேவதைகள் மற்றும் பிசாசுகளின் போரில் பார்வையாளர்களை மயக்கும் பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

டீசர் மற்றும் முந்தைய சிங்கிள்கள் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பைப் ஏற்படுத்தியுள்ளது, தற்போது “செம்மண்ணு தானே” பாடல் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 28 ஆம் தேதி திரையில் அகத்தியா படத்தை கண்டுகளியுங்கள் !!

S3 இன்டர்நேஷனல் வழங்கும் கிட்ஸ் அண்ட் டீன் ஃபேஷன் ஷோ

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள த சவேரா ஓட்டலில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. ஐந்து முதல் 18 வயதிற்குட்பட்டோருக்கு S3 இன்டர்நேஷனல் கிட்ஸ் அண்ட் டீன் பேஷன் ஷோ நிறுவனர் டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி தலைமையில் இப்போட்டியின் முதல் சுற்று போட்டிகள் டிசம்பர் 7ம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றன. இரண்டாம் சுற்று போட்டி ஜனவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.

பிக் பாஸ் பிரபலம் ஜனனி, நடிகை சஞ்சனா சிங், எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு, உஷோதயா சிஎஸ்பி கார்டன்ஸ் சிஇஓ கல்யாணி, அமிழ்தம் உணவகம் சிஇஓ உமா சுப்ரமணியன், கார்டு அறக்கட்டளை மருத்துவர் கிரிதரன், ஜீவன் மித்ரா Fertility மருத்துவமனை நிறுவனர்களான டாக்டர் ரம்யா ராமலிங்கம், மலர்கொடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதேபோல், MSME சென்னை மாவட்ட டைரக்டர் உதய், ஆராய்ச்சியாளர் பாரதி நடராஜன் உள்ளிட்ட பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இப்போட்டியில் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக சிலம்பாட்டம், பாட்டு, நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறுதிச்சுற்றில் 5-9 வயது சுற்றில் 11 சுட்டி குட்டீஸ்களும், 9-12 வயதிலான 11 சிறுவர், சிறுமிகளும், 13 முதல் 18 வயதிலான 9 சிறுவர் சிறுமிகளும் பங்கேற்றனர். அதில் 5-9 வயது சிறுவர்கள் பிரிவில் ட்ரெண்ட்ஸ் ஜூனியர்ஸ் மற்றும் சிட்னியின் டிசைனர் உடையில் ஓபனர்களாக களமிறங்கிய பாண்டிச்சேரியைச் சேர்ந்த பிரஜீத் மற்றும் சர்வேஷ் குழந்தை மாடல்கள் நிகழ்ச்சியின் டாப் மாடல்களாக கலக்கினார்கள்.

10-13 வயது சிறுவர்கள் பிரிவில் சென்னையைச் சேர்ந்த ஹரிஷ், ஆரவ் ஓபனர்களாகவும் மற்றும் ஆல்ஃபா ஸ்டாப்பராகவும் பங்கேற்றனர்.

14-19 வயது சிறுவர்கள் பிரிவில் கிருஷ்ணா, ஜார்ஜ் இன்பான்ட் ஆகியோர் நிகழ்ச்சியின் தொடக்க மாடல்களாகவும் , சென்னையைச் சேர்ந்த ஆஷிஷ் ராம் ஷோவின் ஸ்டப்பராகவும் பங்கேற்றனர்.

5-9 வயது சிறுமிகள் பிரிவில்

அன்தாரா, ஷாம்ருதா மற்றும் முஸ்கன் பாத்திமா ஆகியோர் நிகழ்ச்சியின் ஓபனர்களாக இருந்தனர்.

10-13 வயது சிறுமிகள் பிரிவில்

மதுரையைச் சேர்ந்த லுக்ஷரா மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த எபின் ஜோவிதா ஆகியோர் நிகழ்ச்சியின் ஓபனர்களாக இருந்தனர்.

13-19 வயது சிறுவர்கள் பிரிவில்
சென்னையிலிருந்து நிகழ்ச்சியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேஷ்னா, அனன்யா விஸ்வேஷ் மற்றும் ஜெசிகா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இஷா, வேதா மற்றும் நான்சி ஆகியோர் நிகழ்ச்சியின் ஸ்டாப்பர்களாக
பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியை ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ், ஜூனியர், மெக்கென்சிஸ், ஜேடன் ப்ரொடக்ஷன்ஸ், ஸ்போட்ரிக்ஸ்ரேயாஸ் குளோபல் அகாடமி, கார்டு டிரஸ்ட், நேச்சுரல்ஸ், லிட்டில் மில்லேனியம், குளோபல் ஆர்ட், அப்பல்லோ ஸ்பெக்ட்ரா, கோஸ்கி, ட்ரூலி ஹெர்பிவோர், சிக்ஸ் க்யூப் மீடியா, ஈகைஇனிது, பிக்சல் பஸ்ஸ், உஷோதயா சிஎஸ்பி கார்டன், ஐயனார் குரூப்ஸ், ட்ரூலி ஹெர்பிவோர், சுயம் மைண்ட் கிளீனிக் அண்ட் வேல்னஸ் சென்டர், குளோ காலேஜ்,ஃபேஷன் டிராக்ட், கார்லிஷெர்மன், TIGP, டான்ஸ் அண்ட் டான்ஸ் அகடாமி, கோகோன், டாலின் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஸ்பான்சர்களாக இணைந்தனர்.

பிரபல காஸ்ட்யூம் டிசைனர் சிட்னி சிலேடன் இந்த நிகழ்ச்சிக்கான ஆடைகளை வடிவமைத்துள்ளார்.

இது வெறும் குழந்தைகளுக்கான கண்கவர் ஃபேஷன் ஷோவாக மட்டுமின்றி, சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான சிறப்பு ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஃபேஷன் ஷோவில் சிஷி பவன், டோர்காஸ் ஹோம் உள்ளிட்ட அறக்கட்டளைகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மற்றும் மன வளர்ச்சி குன்றிய 8 குழந்தைகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 50 சிறுவர், சிறுமிகளும் சென்னையில் நடைபெறவுள்ள மாரத்தான் போட்டியில் எஸ்3 இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக் சார்பில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையை சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி, அவரது மகள் சரிஹா செளத்ரியும் அழகு துறையில் அடுத்தடுத்து சாதனை படைத்து வருகின்றனர். அமெரிக்காவில் நடந்த போட்டியில் பங்கேற்ற பிளாரன்ஸ் 2021-ம் ஆண்டுக்கான ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ பட்டத்தை பெற்றார். மீண்டும் அடுத்த ஆண்டே அமெரிக்காவில் நடைபெற்ற திருமதிகளுக்கான அழகி போட்டியில் “Ms International world people’s Choice winner 2022” என்ற பட்டத்தை வென்றார். சமீபத்தில் கூட பிளாரன்ஸ் ஹெலன் நளினி, “மிஸ் ஸ்பிரிட் ஆப் வோல்டு யுனிவர்ஸ் அன் மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு பீப்பிள்” என்ற பட்டத்தையும், அவரது மகள் சரிஹா சௌவுத்ரி “மிஸ் வேர்ல்ட் யுனிவர்சல் 2024” என்ற பட்டத்தை வென்றுள்ளனர்.

இப்படி பல்வேறு அழகி போட்டிகளில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு அம்மாவும், மகளும் தற்போது இளம் பெண்களுக்கு அழகி போட்டிகளில் பங்கேற்பதற்கான ஸ்டார்ட்டிங் டு எண்ட் பயிற்சிகளை வழங்குவது, பயிற்சியாளராக செயல்படுவது என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

Athulya Senior Care Leads the Way with Beach Cleaning Drive as National Cleanliness Day 2025 Approaches

• Athulya felicitated by recognizing 98-year-old Civic Activist Kamakshi Subramanian (Kamakshi Patti ) for her contribution towards the environment awareness

• Over 200 volunteers collected about one ton of waste and debris

Chennai, 25th January 2025 – In anticipation of National Cleanliness Day on January 30, 2025, Athulya Senior Care, under its flagship initiative, #CaringForASenior, organized a major community-driven beach cleaning event at Besant Nagar Beach. The initiative, held in collaboration with Urbaser Sumeet and the Madras School of Social Work, is part of Athulya’s promise to environmental sustainability, senior well-being, and social responsibility.

With a strong focus on both environmental care and elder advocacy, this prelude to National Cleanliness Day brought together over 200 volunteers, including Athulya’s dedicated staff, students, environmentalists, and local residents, united by a common cause: cleaning up Chennai’s iconic Besant Nagar Beach. The volunteers worked tirelessly for two hours, removing significant amounts of waste, leaving the beach cleaner and more beautiful for the community to enjoy.

Athulya’s Founder and CEO, Mr. Srinivasan G., emphasized the importance of bringing about a cleaner and more inclusive environment for all generations. “At Athulya, we believe that a clean and safe environment is a fundamental component of our senior citizens’ health and happiness,” said Mr. Srinivasan. “Through our #CaringForASenior initiative, we aim to encourage a culture of respect and care for elders, while simultaneously promoting sustainability and environmental stewardship. This beach cleaning activity is a prime example of how collaboration and community action can lead to meaningful change.”

The event also highlighted the growing impact of the #CaringForASenior initiative, which has become a catalyst for important social conversations about elder care, inclusivity, and community involvement. Athulya has spearheaded a variety of social projects aimed at improving the quality of life for senior citizens, including improving temple accessibility, organizing walkathons to promote active aging, and donating ambulances to Kaval Karangal to provide elder-friendly emergency care.

As part of the lead-up to National Cleanliness Day, the beach cleaning drive served as a demonstration of how collective action can create a tangible impact on both the environment and the lives of seniors. Through initiatives like these, Athulya Senior Care is redefining how elder care intersects with more social issues, making it clear that care for seniors extends far beyond the walls of assisted living facilities.

The efforts of the event leading up to National Cleanliness Day 2025 are a reminder of the power of community-led initiatives in driving positive change and creating a cleaner, greener, and more inclusive society.

Athulya Senior Care is a leading provider of assisted living services for senior citizens in South India, dedicated to providing compassionate care and support in a comfortable and dignified environment. Through its #CaringForASenior initiative, Athulya is redefines the quality of life for seniors and driving social change in the areas of health, wellness, and community care.

’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ பட விமர்சனம்

அயோத்தியின் மன்னனாக பதவி ஏற்க இருக்கும் நிலையில் ராமர், பலவிதமான சூழ்ச்சியின் காரணத்தால் 14 ஆண்டுகள் காட்டுக்கு (வனவாசம்) அனுப்பப் படுகிறார்.
ராவணன் ராமரின் மனைவி சீதாயை கடத்துகிறார்.
கடத்தப்பட்ட சீதையை தேடிச் செல்லும் ராமர், அனுமான் படைகளின் உதவியுடன் இலங்கையில் உள்ள ராவணனை வீழ்த்தி, அங்கு இருக்கும் சீனாவையும் மீட்டதோடு, அங்கு மாட்டிக் கொண்டிருக்கும் அடிமைகளையும் மீட்டது, என ராமாயணத்தின் கதையை அனிமேஷன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும்படியாக ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மன்னன் ராவணனின் தம்பி கும்பகர்ணனின் பிரமாண்ட உருவம், வடிவமைப்பு சீதையை ராவணன் கடத்திச் செல்லும் போது அவரை காப்பாற்ற முயற்சிக்கும் ஜடாயு பறவை, பிரம்மாண்டமாகவும் மூலிகைக்காக மலையையே எடுத்து வரும் ஹனுமானின் சாகசங்கள் என ராமாயணத்தின் முக்கிய அம்சங்களை அனிமேஷன் மூலம் மிக அருமையாகவும் மிக நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
ராமர் கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் செந்தில் குமார், சீதா கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் டி.மகேஷ்வரி, ராவணனுக்கு கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் பிரவீன் குமார், லக்ஷ்மனனுக்கு கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் தியாகராஜன், ஹனுமானுக்கு கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் லோகேஷ் மற்றும் ராமாயண கதையை வாய்ஸ் ஓவர் ரவூரி ஹரிதா என அனைவரும் தங்களது பணியை மிகவும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார்கள்.
சிறுவர்களுக்கு பிடித்த 2டி அனிமேஷன் மூலம் போர் நடக்கும் காட்சிகள் மற்றும் அதில் ஈடுபடும் வானரப் படைகளின் செயல்கள் கண்டிப்பாக சிறுவர்களை மகிழ்விக்கும் என்பது உறுதி.
குறிப்பாக, கும்பகர்ணனிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் வானரப் படைகளின் காட்சிகள் சிறுவர்களை திரைப்படத்தை கண்டிப்பாக திரும்ப திரும்ப அனைவரையும் பார்க்க வைக்கும்
இந்திரஜித் மற்றும் லக்ஷ்மன் இடையே நடக்கும் வான் சண்டையும், ராவணனின் புஷ்பக விமானம், கோட்டை என அனைத்துமே அனிமேஷன் மூலம் மிக நேர்த்தியாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒலி வடிவமைப்பும் அனிமேஷன் தொழில்நுட்பங்கள் மற்றும் அதில் பயன்படுத்தியிருக்கும் கலர்கள் காட்சி அமைப்பு அனைத்தும் சிறுவர்கள் மட்டுமல்லாமல் அதையும் தாண்டி பெரியவர்களையும் கண்டிப்பாக ரசிக்க வைக்கும் படியாக அமைந்துள்ளது.

’குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ திரை விமர்சனம்

அரசியல்வாதியாக இருக்கும் யோகி பாபுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் போது, வீட்டில் வேலை பார்க்க வந்த வடமாநில பெண்ணுடன் கள்ள உறவு வைத்துக் கொள்கிறார்.இதனால் வடமாநில பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க அந்த வடமாநில பெண்ணை யோகி பாபு மனைவி வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார் .
யோகி பாபுவின் மகன் இமயவர்மன் தன் தந்தையைப் போல் தானும் அரசியல்வாதியாகி ஆட்சி அதிகாரத்தில் உட்கார வேண்டும். என்ற ஆசையோடு வளர்ந்து வருகிறான்.கள்ள உறவில் உள்ள மனைவியின் மகனும் அரசியல்வாதியாகி தந்தையை விட பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறான்
யோகி பாபுவின் இரண்டு மகன்களும் ஒரே பள்ளியில் படிக்க, பள்ளிக் காலம் முதலே, தலைவர், விளம்பரம், தேர்தல், சதி என்று அரசியல்வாதிகளுக்கான அனைத்து அம்சங்களுடன் வளர்ந்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் நினைத்தது போல் இவர்களது எதிர்காலம் அமைந்ததா?, அமையவில்லையா? என்பதுதான் இந்த‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்தக் குழந்தைகள் முன்னேற்ற கழகம் திரைப்படத்தில் கதாநாயகனாக இமய வர்மன் நடித்திருக்கிறார்.யோகி பாபு கதாநாயகனாக நடித்திருந்தாலும், திரைப்படத்தின் சில காட்சிகளில் திடீர் திடீரென்று தலைக்காட்டி விட்டு மறைந்து விடுகிறார்.யோகி பாபு வழக்கம் போல், உடல் கேலி செய்து சிரிக்க வைக்க முயற்சித்து சில காட்சிகளில், பல இடங்களில் அவரது காமெடிக் காட்சிகள் கடியாக மாறி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வலியை ஏற்படுத்துகிறது.
நகைச்சுவை நடிகர் செந்தில், அரசியல் கட்சித் தலைவராக நடிப்பில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
அத்வைத் ஜெய் மஸ்தான் இருவரும் கேமரா பயம் இல்லாமல் மிக தைரியமாக நடித்திருக்கிறார்கள்.
சிறுமி ஹரிகா பெடடாவின் திரை இருப்பும், நடிப்பும் திரைப்படத்திற்கு கூடுதலாக பலம் சேர்த்திருக்கிறது.
சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, சரவணன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவின் மூலம் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார்
இசையமைப்பாளர் சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.
தமிழக போட்டி அரசியல் மற்றும் குடும்ப அரசியலை, சிறுவர்கள் எதிர்காலம் ஆகியவற்றை நகைச்சுவையாக சொல்லி பார்வையாளர்களை சிரிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் என்.சங்கர் தயாள்.

‘வல்லான்’ திரை விமர்சனம்

தொழிலதிபர் கமல் காமராஜ், கொடூரமாக மர்மமான முறையில் கொலை செய்து விடுகிறார்கள்.கொலை வழக்கை பற்றி விசாரிக்கும் காவல்துறையினர் தடையங்கள் கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர் சுந்தர்.சி அவர்களிடம் காவல்துறை உயர் அதிகாரி தொழிலதிபர் கமல் காமராஜ், கொலை வழக்கை பற்றி விசாரிப்பதற்காக ஒப்படைக்கிறார்.
சுந்தர்.சி பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தாலும், கொலை வழக்கின் பற்றிய பின்னணியில், தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கலாம் என்ற நோக்கத்தில் விசாரணை மேற்கொள்ளும் சுந்தர்.சி, அடுத்தடுத்த நடக்கும் கொலைகளால் மேலும் பல மர்மங்கள் சுந்தர்.சியை சூழ தொடர்கிறது.
கமல் காமராஜ்யிடம் இருக்கும் ஏதோ ஒரு விஷயத்திற்காக அரசியல்வாதி, மற்றும் சில காவல்துறை அதிகாரிகளும் சதி திட்டம் தீட்ட, அவைகள் அனைத்தையும் முறியடித்து அந்த கொலையாளியை கண்டு பிடித்தாரா ?என்பதுதான் ‘வல்லான்’ திரைப்படத்தின் கதை.
இந்த வல்லான் திரைப்படத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுந்தர்.சி, ஆக்ஷன் காட்சிகளிலும், கொலை வழக்கை விசாரிக்கும் காட்சிகளிலும் நேர்த்தியாக நடித்திருந்தாலும், தனது வருங்கால மனைவியின் கொடூர கொலையை பார்த்து கதறும் காட்சியில் நடிப்பின் மூலம் சற்று தடுமாறியிருக்கிறார்.
திரைப்படத்தில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்திருக்கிறார்.காட்சிகள் மிக குறைவு என்றாலும் அதை மிக நிறைவாக நடித்திருக்கிறார்.
ஹெபா பட்டேல், கவர்ச்சிக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.
தொழிலதிபராக நடித்திருக்கும் கமல் காமராஜ், அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிராமி வெங்கடாச்சலம், மற்றும் சாந்தினி தமிழரசன், அருள் டி.சங்கர், கோச்சிருக்கதா பத்திரத்தில் தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப் பெரிய அளவில் பங்கு வகித்திருக்கிறார்கள்.
கதைக்கான திரைக்கதையை பல திருப்பங்களுடன், கொலையை சுற்றி நடக்கும் சன்பென்ஸ் திரில்லர் ஜானரை மிக தெளிவாக புரியும்படி
எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் வி.ஆர்.மணி சேயோன்,