December 2024

4 Warm Winter Drinks to Pair with Choco Pie for a Sweet Winter Treat


Whether you’re longing for a timeless classic or eager to explore an inventive new blend, the
perfect hot beverage has the power to soothe your body and uplift your spirits.
There’s something truly magical about a chilly winter day spent curled up with a warm drink
and a sweet indulgence like Choco Pie. Its soft marshmallow centre and rich chocolate
coating make it the perfect treat to enjoy alongside your favourite cozy beverage.
Irrespective of your mood, time or day, Lotte Choco Pie hits the spot every time. We crave
for a hot drink during winter as the temperature drops. There is no greater pleasure than
wrapping your hands around a steaming mug. Here’s a curated selection of winter drinks
that pair perfectly with your favourite Choco Pie, elevating seasonal experiences even
further.

  1. Spiced Chai Tea
    The bold, aromatic spices of chai—like cinnamon, cardamom, and cloves—complement the
    sweetness of a Choco Pie perfectly. The creamy texture of the tea balances the rich
    chocolate, while the warm spices enhance the marshmallow filling. Serve it with a touch of
    honey for extra warmth and sweetness.
    Pairing Tip: Add a pinch of nutmeg to your chai for a festive twist.
  2. Classic Hot Chocolate
    When it comes to hot chocolate. its velvety texture and deep cocoa flavour harmonize
    perfectly with the chocolatey goodness of Choco Pie. For the ultimate indulgence, top your
    hot chocolate with whipped cream or marshmallows.
    Pairing Tip: opt for dark hot chocolate for a sophisticated flavour contrast or white-hot
    chocolate for extra sweetness.
  3. Peppermint Mocha
    This winter favourite combines the richness of coffee and chocolate with a refreshing hint of
    peppermint. The cooling mint complements the marshmallow filling in the Choco Pie, while
    the mocha base enhances its chocolaty flavour.
    Pairing Tip: Sprinkle crushed candy canes or peppermint flakes on top for a festive touch.
  4. Golden Turmeric Latte
    For a unique and healthful option, try a golden turmeric latte. Its earthy flavour, combined
    with hints of ginger, cinnamon, and honey, pairs surprisingly well with the Choco Pie’s sweet
    and creamy indulgence. The latte’s bright golden hue also adds a touch of cheer to your
    winter table.
    Pairing Tip: Add a dash of black pepper to the latte to enhance the absorption of turmeric’s
    benefits.
    Winter is the perfect season to indulge in delightful pairings of warm beverages and sweet
    treats. Each of these drinks brings out a unique aspect of the Choco Pie’s Flavors, from the
    spiced warmth of chai to the indulgent richness of hot chocolate. Whether you’re hosting a
    holiday gathering or enjoying a quiet evening by the fire, these pairings will make every
    moment a cozy and memorable experience. Cheers to a warm and sweet winter!

Chennai Legends Crowned Winners of the 3rd Edition of Ability Sports League

The event witnessed the Chennai Legends triumphing over the Bengaluru Eagles

Chennai, 16th December 2024: Cycle Pure Agarbathi, India’s leading agarbathi manufacturer and title sponsors for Ability Sports League T20, concluded the final match, held on 16th December at Alur KSCA Ground, Dasanapura, Bengaluru. In a thrilling final match of the 3rd edition of the league, Chennai Legends emerged victorious, defeating Bengaluru Eagles by 53 runs. The match showcased the exceptional skills and abilities of wheelchair athletes from across the region. The event was graced by the presence of Spandan Kaniyar, Sports Head & Deputy News Editor, Kannada Prabha, Mukund Shetty, Sports Head, Samyuktha Karnataka, and Krishnappa Gowtham, Indian all-rounder who represents Karnataka in domestic cricket.

Chennai Legends showcased a sensational performance, led by Suresh Selvam’s explosive innings of 111 runs off just 43 balls. Despite a resilient effort from Saliesh Yadav of Bengaluru Eagles, who scored 42 runs off 28 balls, the match belonged to the Legends. Jenish Anto’s outstanding bowling spell, taking 4 wickets for 24 runs in 4 overs, played a pivotal role in securing a memorable victory for the Chennai Legends.

Mr. Arjun Ranga, CEO of Cycle Pure Agarbathi, said, “We congratulate the Chennai Legends for their brilliant performance, and all the participants for their dedication and spirit. The Ability Sports League T20 celebrates the abilities of athletes beyond physical challenges, and fosters a spirit of inclusivity, courage, and perseverance in everyone, which we hope to continue to bring to other sporting leagues.”

Cycle Pure Agarbathi has made significant strides in fostering a vibrant sports culture. By supporting events including the Tiger Cup and the victorious Mysore Warriors in the 2024 Maharaja Trophy, the organization has positively impacted the local community and inspired aspiring athletes.

Chennai Legends vs Bengaluru Eagles

Chennai legends scored 203/2 in 20 overs

Bengaluru Eagles scored 150 all out in 18.4overs

Chennai legends won the final by 53 runs!

Suresh selvam (Chennai Legends) scored 111* runs /43 balls

Saliesh yadav (Bengaluru Eagles) scored 42 runs / 28 balls

Jenish anto (Chennai Legends) 4-24-4

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் 150 வது பிரமாண்ட திரைப்படம் “தி ஸ்மைல் மேன்”

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது “தி ஸ்மைல் மேன்” (The Smile Man)திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான, மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், எட்டு தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் – பிரவீன் வெற்றிக்கூட்டணி இப்படத்தை உருவாக்கியுள்ளது.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மெமரீஸ் படப்புகழ் ஶ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

எட்டு தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் – பிரவீன் வெற்றிக்கூட்டணி இப்படத்தை இயக்கி இருக்கின்றனர். திரைக்கதை வசனத்தை ஆனந்த் எழுதுகிறார். ஶ்ரீ சரவணன் ஒளிப்பத்திவு செய்ய, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ‘க்’ படப்புகழ் கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கலை இயக்கத்தை அய்னா. J. ஜெய்காந்த் கவனிக்க, உடை வடிவமைப்பை M. முகம்மது சுபையர் செய்கிறார், மேக்கப் பணிகளை வினோத் சுகுமாறன் செய்ய, புரொடக்சன் மேனேஜராக முகேஷ் சர்மா பணியாற்றுகிறார். ஒலி வடிவமைப்பை ஸிங்க் சினிமா (SYNC CINEMA) செய்ய, மக்கள் தொடர்பு பணிகளை சதீஷ் AIM குழுவினர் செய்கின்றனர். விளம்பர டிசைன் பணிகளை அதின் ஒல்லூர் செய்கிறார். தீபா சலீல் இணை தயாரிப்பு செய்கிறார். மேக்னம் மூவிஸ் சார்பில் சலீல் தாஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.

படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் மிகத்தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் டிரெய்லர், இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், ராம்சரண் – சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் !

குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன், கேம் சேஞ்சர் படத்திற்காக முதல்முறையாக இணைந்துள்ளார். இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் 21ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த முன் வெளியீட்டு நிகழ்ச்சியில், மாஸ்டர் ஃபிலிமேக்கர் சுகுமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சுகுமார் மற்றும் ராம் சரண் கூட்டணி கடந்த காலத்தில் “ரங்கஸ்தலம்” எனும் கிளாசிக் பிளாக்பஸ்டரை வழங்கினார்கள். கிராமப் பின்னணியில் உருவாகியிருந்த, இந்த ஆக்சன் படம், அனைத்து தரப்பிலும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்தக் கூட்டணி விரைவில் தங்கள் இரண்டாவது படமான RC 17 க்காக இணையவுள்ளனர். இப்போதே இது இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகியுள்ளது.

“கேம் சேஞ்சர்” அமெரிக்காவில் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வைக் நடத்தும் முதல் இந்தியத் திரைப்படமாகும். இந்த முன் வெளியீட்டு நிகழ்வில் ஏராளமான ரசிகர்களுடன், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கேம் சேஞ்சர் அரசியல் பின்னணியை மையமாகக் கொண்ட அதிரடி ஆக்சன் திரைப்படமாகும். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு பாத்திரத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், மற்றொன்றில் சமூக அக்கறைகொண்ட இளைஞனாகவும் தோன்றுகிறார்.

இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயராம், நவீன் சந்திரா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

முன்னணி இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், தில் ராஜு புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் இப்படத்தை தயாரித்துள்ளனர். கேம் சேஞ்சரின் ஆடியோவை சரிகமா நிறுவனம் வெளியிடுகிறது.

கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10, 2025 அன்று தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் எஸ்.வி.சி மற்றும் ஆதித்யராம் மூவீஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஏஏ பிலிம்ஸ் இந்தியில் வெளியிடவுள்ளது. வட அமெரிக்காவில், ஷ்லோகா என்டர்டெயின்மென்ட்ஸ் மூலம் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெளியிடப்படவுள்ளது.

நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும் “மாமன்”

Lark Studios சார்பில் K. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தை, விலங்கு வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு “மாமன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று , படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள மிகக் கோலகலமாக பூஜையுடன், படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, Lark Studios தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்குகிறார்.

தொழில் நுட்ப குழு விபரம்

எழுத்து, இயக்கம் – பிரசாந்த் பாண்டியராஜ்
தயாரிப்பு – K. குமார்
தயாரிப்பு நிறுவனம் – Lark Studios
இசை – ஹேசம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன்
கலை இயக்கம் – G துரை ராஜ்
படத்தொகுப்பு – கணேஷ் சிவா
சண்டைப்பயிற்சி – மகேஷ் மேத்யூ
மக்கள் தொடர்பு – யுவராஜ்.

Blue Dart’s ‘Merry Express’ Delivers Festive Cheer with Special Discounts on Domestic and International Shipments

➢ Offer valid from 15 December 2024 to 15 January 2025.

Mumbai, 13th December 2024: Blue Dart Express Limited, South Asia’s premier express-air, integrated transportation, and distribution logistics company, is ushering in the holiday season with its “Merry Express” offer. Available from 15th December 2024to 15th January 2025, this festive offer provides customers with discounted rates on domestic and international shipments, ensuring gifts reach loved ones in time for the holidays.

Customers can avail themselves of a up to 40% off on domestic shipments weighing between 2-10 kg, and up to 50% off on international shipments with specific weights ranging from 3-25 kgacross India. The offer applies to both domestic priority and international shipments, with terms and conditions. As a customer-centric company, Blue Dart is committed to continuously enhancing its products and services, providing customers with added value during this festive season. With the ‘Merry Express’ offer, customers can send festive gifts to over 56,000 locations across India and 220 countries and territories worldwide. The company leverages advanced technology and automation to ensure the speedsafety, and reliability of each delivery, consistently providing excellence at every touchpoint.

“We are excited to offer this special promotion as part of our ongoing commitment to delivering joy and ensuring seamless experiences for our customers during the festive season,” said Dipanjan BanerjeeChief Commercial Officer, Blue Dart. “Our Merry Express offer embodies our dedication to providing innovative solutions, speed, and reliability, making it easier for our customers to share their festive cheer with loved ones across the globe.”

This limited-time offer is available at all Blue Dart retail stores and extends to home bookings with doorstep pickup at no additional cost. Customers can contact Blue Dart’s Customer Care at 1860 233 1234 or email customerservice@bluedart.com. For more information or to book shipments, visit www.bluedart.com.

’சூது கவ்வும் 2’ திரை விமர்சனம்….

நாயகன் சிவா, மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து ஆள் கடத்தல் செய்து பணம் சம்பாதித்து எந்த நேரமும் சரக்கு அடித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.தமிழக நிதி அமைச்சர் கருணாகரன், தமிழகத்தில் உள்ள ஊழல் அமைச்சர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதோடு, மட்டுமல்லாமல் தன் கட்சிக்கு ஏராளமான நிதிகளை பெற்றுக்கொடுப்பதிலும்  முதலிடத்தில் இருந்து வருகிறார்.அதே சமயம் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரன் 60000 ஆயிரம் கோடி பணத்தை வரும் தேர்தலில் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டும் என திட்டம் போடுகிறார்.அதனால் தமிழகத்தில் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரன் என்ன தவறு செய்தாலும் கண்டுக்கொள்ளாத முதல்வர், ராதாரவி மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பொறுப்பை கருணாகரனிடம் ஒப்படைக்கிறார்.அதன்படி, வங்கியில் இருந்து கொடுக்கப்பட்ட டிவைஸ் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கு பணத்தை கொடுக்க திட்டம் போடுகிறார்.தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகம் செய்ய திட்டமிடும் கருணாகரன் அதற்காக ரூ.60000 ஆயிரம் கோடியை வெளிநாட்டு வங்கியில் டெபாசிட் செய்து, அந்த பணத்தை உடனடியாக மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஒரு கருவியை வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்.

முதல் பாகத்தில் வரும் தாஸ் கதாபாத்திரம் போல், கற்பனை காதலியுடன், கடத்தல் தொழில் செய்து வரும் கதாநாயகன் சிவா, தமிழகத்தில் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரனை கடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.வங்கியில் இருக்கும் பணத்தை முதல்வரிடம் கொடுக்க செல்லும் போது நாயகன் சிவா தமிழகத்தில் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரனை கடத்தி விடுகிறார்.அதனால் கருணாகரனின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுகிறது.

தமிழகத்தில் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரனுக்கு ஏற்ப்பட்ட மாற்றம் என்ன? என்பதுதான் இந்த ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார்.

 ‘சூது கவ்வும்’ முதல் பாகத்தில் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி என்ன செய்தாரோ அதையே தான் இந்த சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் சிவா குருநாத் என்ற கதாபாத்திரத்தில் செய்திருக்கிறார்.

சூது கவ்வும் கதையின் மையப்புள்ளியான அருமை பிரகாசம் கதாபாத்திரத்தில் கருணாகரன், ஆளும் கட்சி முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராதாரவி, வாகை சந்திரசேகர், அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரது அரசியல் மோதல்கள் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்துள்ளார்கள்.

அருள்தாஸ், கல்கி, கவி, யோக் ஜேபி, கராத்தே கார்த்தி, கற்பனை பெண்ணாக நடித்திருக்கும் ஹரிஷா ஜஸ்டின் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே.தில்லை, ஒளிப்பதிவு மூலம் முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், முதல் பாகத்தை மனதில் வைத்தே காட்சிகளை மிக அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஷ்வநாத்தின் இசையில் பாடல்களும், ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப மிகவும் அருமையாக பயணித்து
இருக்கிறார்.

மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ‘சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை, அதன் முந்தைய தொடர்ச்சியாக இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் எழுதியிருக்கும் கதையில், அரசியல் சம்பவங்கள் சுவாரஸ்யம் மிக்கதாக உள்ளது.

ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்சிக்யூட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமார் வித்தியாசமாக தோன்றுவதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் ‘7 ஜி ரெயின்போ காலனி ‘, ‘ஆடவரி மாதலக்கு அர்த்தலே வெருள’ ( தமிழில் – ‘யாரடி நீ மோகினி’) ஆகிய காதல் படைப்புகளுக்கு பிறகு மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் காதல் திரைப்படமாக ‘மெண்டல் மனதில்’ உருவாகிறது என்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே அழுத்தமான படைப்புகளை வழங்கி ரசிகர்களிடத்தில் நன்மதிப்பை பெற்றிருக்கும் இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் முதன்முறையாக ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பதால்.. ‘மெண்டல் மனதில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான தருணத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்சரண் வெளியிட்ட மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘எஸ் ஒய் ஜி’ ( சம்பராலா ஏடி கட்டு) பட டீசர்

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ்- ரோகித் கேபி – கே. நிரஞ்சன் ரெட்டி- சைதன்யா ரெட்டி – பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் – கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘எஸ் ஒய் ஜி’ (சம்பராலா ஏடி கட்டு) எனும் திரைப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் தனது கடைசி படங்களில் (‘விருபாஷா ‘ மற்றும் ‘BRO ‘ ) இரண்டு வித்தியாசமான வேடங்களில் தோன்றினார். அறிமுக இயக்குநர் ரோகித் கேபி இயக்கத்தில் உருவாகும், அவருடைய பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் லட்சிய படைப்பான #SDT18 எனும் திரைப்படத்தில் முற்றிலும் புதிய மற்றும் அதிரடியான ஆக்சன் நிரம்பிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் தயாரிக்கிறார்கள். இவர்களின் தயாரிப்பில் இதற்கு முன் வெளியான ‘ஹனுமான்’ எனும் திரைப்படம் இந்தியா முழுவதும் பிளாக் பஸ்டர் ஹிட் ஆக அமைந்தது. இதன் காரணமாக இவர்களின் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த தருணத்தில் இன்று ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் ‘கார்னேஜ் ‘எனும் பெயரில் இப்படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார். இந்த டீசர்- சாய் துர்கா தேஜ் நடிப்பிற்கு வித்தியாசமான கண்ணோட்டத்தை அளிக்கிறது.

எஸ் ஒய் ஜி (சம்பராலா ஏடி கட்டு ) என இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது. இது கார்னேஜ் என வெளியிடப்பட்டிருக்கும் இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வீடியோவில் சக்திமிக்க.. தனித்துவமான குரல் வழியாக கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அவை ஒவ்வொன்றும் கதாநாயகனின் மர்மம் மற்றும் தோற்றத்தை காண்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்கிறது. மேலும் அந்த குரல்கள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி, சாய் துர்கா தேஜின் அறிமுகத்திற்கான வலுவான களத்தையும் அமைக்கின்றன. அவர் ஒரு மரத் துண்டின் மீது அமர்ந்து மறக்க இயலாத வகையில் அறிமுகமாகிறார். மேலும் அந்த அற்புதமான காட்சியில் அவருடைய முதுகிலிருந்து ரத்தம் தோய்ந்த ஒரு சிறிய கத்தியை அகற்றி.. எதிரி மீது வீசி, தன் கோபத்தை கட்டவிழ்த்து விடுகிறார். இந்த டீசர் டீசரில் சாய் துர்கா தேஜின் சக்தி வாய்ந்த வசனங்கள்.. உச்சத்தை தொடுகிறது. மேலும் அவரது கடுமையான வாழ்க்கையை விட பெரிய இருப்பிற்கான எதிர்பார்ப்பை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்துகிறது.

இந்த கதாபாத்திரத்திற்காக சாய் துர்கா தேஜ் தன்னுடைய உடல் அமைப்பை அர்ப்பணிப்புடன் செயல்பட்டு மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார். போர்வீரன் போன்ற உடலமைப்பை அடைவதற்கான அவரின் கடுமையான முயற்சியையும் வெளிப்படுத்துகிறது. அத்துடன் அவர் பேசும் மொழி கூட ராயலசீமா பகுதியில் பேசும் மொழி நடையை கொண்டிருப்பதால் அவருடைய வசன உச்சரிப்பு தொடர்பான ஆளுமையையும் வெளிப்படுகிறது. மேலும் இது கதாபாத்திரத்தின் நம்பகத் தன்மையையும் ஏற்படுத்துகிறது.

அறிமுக இயக்குநர் ரோகித் கேபி, சாய் துர்கா தேஜின் கதாபாத்திரத்தை வாழ்க்கையைக் காட்டிலும் ஒரு பிடிவாதமான பார்வையுடன் வடிவமைத்துள்ளார். உரையாடல்கள் கூர்மையாகவும், ஆற்றல் மிக்கதாகவும் இருக்கிறது. மேலும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டமான தயாரிப்பின் அளவும், தரமும் பிரதிபலிக்கிறது. ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் பழனிச்சாமி பார்வையாளர்கள் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளை கதையின் தன்மைக்காக படம் பிடித்திருக்கிறார். இசையமைப்பாளர் பி. அஜ்னீஷ் லோக்நாத்தின் துடிப்பான இசை.. கதையை ஒரு புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. படத் தொகுப்பம் நவீன பாணியில் அமைந்திருக்கிறது.

‘எஸ் ஒய் ஜி ‘(சாம்பராலா ஏடி கட்டு) பட கார்னேஜ் வீடியோ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் இதனை திரையில் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

நடிகர்கள் : சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெகபதி பாபு ,சாய் குமார் , ஸ்ரீகாந்த் , அனன்யா நாகல்லா ..

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : ரோகித் கேபி
தயாரிப்பாளர்கள் : கே. நிரஞ்சன் ரெட்டி – சைதன்யா ரெட்டி
தயாரிப்பு நிறுவனம் : பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட்
ஒளிப்பதிவு : வெற்றிவேல் பழனிச்சாமி
இசை : பி அஜ்னீஷ் லோகநாத்
படத்தொகுப்பு : நவீன் விஜய கிருஷ்ணா
தயாரிப்பு வடிவமைப்பாளர் : காந்தி நதிகுடிகர்
ஆடை வடிவமைப்பாளர் : ஆயிஷா மரியம்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹேஷ்டாக் மீடியா

மோகன்லாலின் ” பரோஸ்” திரைப்படம், டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகிறது !

மோகன்லாலின் ” பரோஸ்” திரைப்படத்தின் தமிழ் டிரெயலர் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது !

Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான
” பரோஸ்” , வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

பரோஸ் எனும் பூதத்திற்கும், ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸி கலந்து, அனைவரும் ரசிக்கும் வகையில், பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன்லால்.

மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இதுவரையிலும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் திரை வாழ்க்கையில் முதன்முறையாக இயக்கியுள்ள படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர், மோகன்லால் கூட்டணியில் இதுவரை 28 படங்களுக்கு மேல் வெளியாகி அனைத்தும் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இவர்கள் கூட்டணியில் மீண்டும் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாக, முற்றிலும் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகியுள்ளது என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

‘டீப் ப்ளூ சீ 3’, ‘ஐ இன் தி ஸ்கை’ மற்றும் ‘பிட்ச் பெர்பெக்ட்’ ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். இளம் வயதிலேயே உலகப் புகழ்பெற்ற, லிடியன் நாதஸ்வரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்குச் சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது எனும் அறிவிப்பு, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.