December 2024

பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘கரவாலி’ படத்தின் டீசர் ……..

கௌரவத்தின் சின்னமாக கவனம் ஈர்க்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜின் ‘கரவாலி’ பட டீசர்

‘அது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம்’ எனும் பின்னணி குரலுடன் வெளியாகி இருக்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘ கரவாலி ‘ படத்தின் டீசர் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.‌

இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ‘கரவாலி’. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தருணத்தில் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அதிரடியான புதிய டீசரை வெளியிட்டு, சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளனர். குரு தத் கனிகா இயக்கத்தில் ‘டைனமிக் பிரின்ஸ்’ பிரஜ்வல் தேவராஜ் நடித்துள்ள ‘கரவாலி’ படத்தின் தனித்துவமான டீசர்.. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

பொதுவாக டீசரில் கதாநாயகன்- கதாநாயகி அல்லது முன்னணி கதாபாத்திரத்தின் மீது கவனம் செலுத்துவார்கள். ஆனால் ‘கரவாலி’ படத்தின் அண்மைய டீசரில் கௌரவம் என்ற அடையாளப் பொருளை சுற்றி வருவது கவனத்தை கவர்ந்திருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட புதிய டீசர் – முக்கியத்துவம் வாய்ந்த நாற்காலியை முதன்மைப்படுத்துகிறது. ‘இது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம் ‘ என்ற பின்னணி குரலுடன் டீசர் தொடங்குகிறது. நடிகர் மித்ராவின் குரலில் வெளியாகி இருக்கும் இந்த டீசரில், ‘இந்த கௌரவம் மிக்க நாற்காலியை உரிமை கொண்டாட துணிபவர்கள் தப்ப மாட்டார்கள்’ என்பதையும் வலியுறுத்துகிறது. டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் மற்றும் உரையாடல்கள் ஒரு சிலிர்ப்பான அனுபவத்தையும், அற்புதமான தோற்றத்தையும் பார்வையாளர்களிடத்தில் உருவாக்குகிறது.

‘கரவாலி’ என்பது கம்பளா உலகத்தை (பாரம்பரிய எருது விடும் பந்தயம்) மையமாகக் கொண்ட திரைப்படம். இதற்கு முன் வெளியான டீசரில் ..ஒரு குழந்தை பிறக்கும் போது கன்று ஒன்று பிறந்ததை உருவகப்படுத்தியது. இந்த புதிய டீசரில் அதன் தொடர்ச்சி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு சிறுவன் வளர்ந்து கௌரவத்தின் நாற்காலியை பார்த்துக் கொண்டிருப்பதை காண்பிக்கிறது. மேலும் அது பலரின் ஆசைக்கும் ஆளாகிறது. டீசரில் மித்ராவின் கட்டளையிடும் குரலுடன் கூடிய தோற்றம்.. ரமேஷ் சந்திராவின் அச்சுறுத்தும் தோற்றம்.. மற்றும் இறுதி காட்சியில் ‘டைனமிக் பிரின்ஸ்’ பிரஜ்வல் தேவராஜின் கூர்மையான பார்வை ஆகியவை இடம் பிடித்திருக்கிறது.

பிரஜ்வல் தேவராஜின் மூன்று விதமான தோற்றங்களும் போஸ்டர்களாக இதற்கு முன் வெளியாகி இருக்கிறது. இதில் யக்ஷகானா – கம்பளா மற்றும் மகிஷாசுரன் -என ஈர்க்கப்பட்ட அவதாரங்களை கொண்டிருந்தது. இந்த வித்தியாசமான தோற்றம் பிரஜ்வல் தேவராஜ் ஒரு யக்ஷகானா கலைஞராக நடிக்கிறாரா ? அல்லது கம்பளா பந்தய வீரராக நடிக்கிறாரா? அல்லது ‘டைனமிக் பிரின்ஸ்’ ஆக அதாவது அவரது கதாபாத்திரத்தை சுற்றியுள்ள சூழ்ச்சியை மையப்படுத்தியதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

நடிகர்கள்
‘டைனமிக் பிரின்ஸ்’ பிரஜ்வல் தேவராஜ் , சம்பதா , ரமேஷ் இந்திரா , கே கே மாதா, மித்ரா மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் : குரு தத் கனிகா
தயாரிப்பு நிறுவனம் : குருதத் கனிகா பிலிம்ஸ்
இணை தயாரிப்பாளர்கள் : வினோத்குமார் – ஷிதில் ஜி. பூஜாரி – சதீஷ்குமார் ராஜி – பிரசன்னா குமார்- மனிஷ் தினகரன் .
கதை : சந்திரசேகர் பாண்டியப்பா
ஒளிப்பதிவு : அபிமன்யு சதானந்தன்
இசை & பின்னணி இசை : சச்சின் பஸ்ரூர்
படத்தொகுப்பு : பிரவீன் கல்
கலை இயக்குநர் : குணா
மக்கள் தொடர்பு : யுவராஜ்

‘ஐயையோ’ பாடலை இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ளார் சாமுவேல் நிக்கோலஸ்

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை பின்பற்றி அவரது மகன் சாமுவேல் நிக்கோலசும் இசை உலகத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.

சாமுவேல் நிக்கோலஸ் இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ள இளமைத் துள்ளும் ‘ஐயையோ’ பாடலை முன்னணி இசை நிறுவனமான திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது. இப்பாடல் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இக்கால இளைஞர்களின் கொண்டாட்டத்தை உற்சாகம் மற்றும் குதூகலம் குன்றாமல் பதிவு செய்யும் பாடலான ‘ஐயையோ’ மாறுபட்ட குணாம்சங்கள் கொண்ட பெண்களை பற்றியதாகும். ஒரு புதுமுகம் போன்று இல்லாமல் இசையிலும், பாடுவதிலும், நடிப்பிலும் தனது முத்திரையை பதித்துள்ளார் சாமுவேல் நிக்கோலஸ்.

பாடலைப் பற்றி பேசிய சாமுவேல் நிக்கோலஸ், “ஏழாம் அறிவு படத்தில் கோரஸ் பாடகராக இசைப் பயணத்தை தொடங்கிய நான், எனது தந்தையாரின் இசை நிகழ்ச்சிகளில் கித்தார் கலைஞராகவும் பாடகராகவும் பங்காற்றி இருக்கிறேன். ‘தேவ்’ திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு பாடலையும் பாடியுள்ளேன். தற்போது ‘ஐயையோ’ பாடல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவது மிக்க மகிழ்ச்சி,” என்றார். தனது நான்காம் வயது முதல் டிரினிட்டி இசைப் பள்ளியின் பாடத்திட்டத்தின் படி சாமுவேல் நிக்கோலஸ் இசையை கற்று வருவது குறிப்பிடத்தக்கது.

‘ஐயையோ’ பாடலை மோகன்ராஜ் மற்றும் சாமுவேல் நிக்கோலஸ் இணைந்து எழுத சனா மரியம் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு: ஜாயித் தன்வீர்; நடனம்: ஆலிஷா அஜித்; உடைகள்: ஹர்ஷினி ரவிச்சந்தர்: கலை இயக்கம்: பிரதீப் ராஜ்; எடிட்/வி எஃப் எக்ஸ்: கிரியேட்டிவ் கிரவுட், சிவசுந்தர், சாய் முத்துராமன்; ஒலி வடிவமைப்பு: ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி; கலரிஸ்ட்: மனோஜ் ஹேமச்சந்தர்.

நடிகர் சூர்யா நடிக்கும் ‘ ரெட்ரோ ‘ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ‘சூர்யா 44’ படத்திற்கு ‘ ரெட்ரோ’ என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஜாக்கி மற்றும் மாய பாண்டி ஆகிய இருவரும் இணைந்து கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி மேற்கொண்டிருக்கிறார். லவ் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகியிருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் ,ஊட்டி, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான டீசர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடிகர் சூர்யாவின் தோற்றம் வித்தியாசமாக இருப்பதாலும், காட்சிகள் விறுவிறுப்பாகவும் இருப்பதாலும், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

“தி ஸ்மைல் மேன்” திரை விமர்சனம்

பலபடங்களில்பார்த்த
சைக்கோ கொலைக்காரன் கதைதான். தொடர் கொலைகளை செய்து உடலை சிட்டியில் அங்கங்கே போடுகிறான் சைக்கோ கொலைக்காரன். கொன்றுவிட்டு வாயை கிழித்து சிரிப்பது போல மாற்றி உடல்கள் போடப்படுகிறது. யார் இந்த கொலைகளை செய்கிறார்? என கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணற இது போன்ற கொலைகள் தொடர்பாக ஏற்கனவே விசாரணை செய்த ஒரு போலீஸ் அதிகாரியை தேடிப்பிடியுங்கள் என உயர் அதிகாரிகள் சொல்ல சரத்குமாரை காட்டுகிறார்கள். அவர் ஒரு புத்தகம் எழுதுகிறார். அதன்பின்னரே கொலைகள் நடப்பதாக காட்டப்படுகிறது.- எனவே, சரத்குமாருக்கும் அந்த கொலைகாரனுக்கும் பல வருடங்களுக்கு முன்பே தொடர்பு
அது என்ன தொடர்பு? கொலை காரனுக்கும் சரத்குமாருக்கும் நடக்கும் யுத்தம் என்ன?

அதேபோல், விபத்தில் சிக்கி ஒரு வருடத்தில் மொத்த ஞாபகங்களையும் மறந்துவிடும் நிலையில் இருக்கும் சரத்குமார் எப்படி அந்த சைக்கோ கொலைகாரனை பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஒருபக்கம், சிஜா ரோஸும் சைக்கோ கொலை காரன் பற்றி விசாரணை நடத்துகிறார்.

ஸ்ரீ குமாரும் சரத்குமாரை பின்தொடர்ந்து கண்டுபிடிக்கிறார்

யார் அந்த கொலைகாரன் என்று தெரிய வரும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது படம் பார்ப்பவர்களுக்கு தெளிவான கதை, சீரான இயக்கம், வித்தியாசமான சிந்தனை ,படத்தின் வெற்றிக்கு அழைத்து செல்கிறது

கம்பீரமான போலீஸ் அதிகாரியாக ஃபிளாஷ் பேக்கில் இவரை காட்டும் பொழுது ரசிக்க வைக்கிறது அதே சமயம் மறதி நோயால் அவதிப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கும் பொழுது பரிதாபம் ஏற்படுகிறது இரண்டு மாறுபட்ட வேடங்களில் சிதம்பரம் நெடுமாறனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

கீர்த்தனாவாக,சிஜா ரோஸ்,நர்ஸ் சித்ராவாக இனியா ,அரவிந்தாக
ஸ்ரீகுமார்,

வெங்கடேசன்ஆகசுரேஷ்மேனன்,மற்றும்நடராஜன்,
ராஜ்குமார்,மலைராஜன், ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்

பேபி ஆலியா, கலையரசன், ஆகியோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்

அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக தங்கள் பங்குக்குஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார்கள் .

தி ஸ்மைல் மேன் என்ற புத்தகத்தில் சரத்குமார் எழுதியதற்கு பிறகு சைக்கோ கொலைகாரன் ஏன் கொலை செய்கிறான் அவன் யார்?

சரத்குமாரை குறி வைத்து அவன் நடத்தும் அந்த யுத்தம் எதற்காக ?

சரத்குமார் இறுதியில் அந்த கொலைகாரனை கண்டுபிடித்தாரா? என்ற பாணியில் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்கப்படும்

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை, ஆர்ட் டைரக்டரின் கைவண்ணம், காஸ்ட்யூமரின் பங்கு,
நேர்த்தியான திரைக்கதை,
தெளிவான இயக்கம்
என எல்லாம் அம்சமாக பொருந்தி இருக்கும் இப்படம் வெற்றி பட்டியலில் சேரும்

‘திரு.மாணிக்கம்’ திரைப்பட விமர்சனம்

கேரள மாநிலத்தில் உள்ள, குமுளி என்ற ஊரில் சிறிய அளவில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யும் கடை நடத்தும் சமுத்திரக்கனி, மனைவி, அனன்யா இரண்டு பெண் பிள்ளைகளோடு ஏழ்மையுடன், வாழ்ந்தாலும், தன்னிடம் பழகும் அனைவரிடத்திலும் அன்பாக பழகுகிறார்.சமுத்திரகனி இடம் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கும் பாரதிராஜா, பணம் காணாமல் போய்விட்டதால், வாங்கிய லாட்டரி டிக்கெட்டுகளை பணம் கொடுத்துவிட்டு வாங்கி கொள்கிறேன், என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.பாரதிராஜா வாங்கிய லாட்டரி டிக்கெட்டுகளில் ஒரு லாட்டரி டிக்கெட்டுக்கு மட்டும் ரூபாய்.1 கோடியே. 50 லட்சம் முதல் பரிசு விழுந்துவிட, பாரதிராஜாவிடம் பரிசு விழுந்த பணத்தை ஒப்படைக்க கதாநாயகன் சமுத்திரக்கனி தேடி கண்டுபிடித்து எப்படியாவது ஒப்படைத்து விட வேண்டும் என முடிவெடுக்கிறார்.

இந்த நிலையில் பாரதிராஜா யார்?, எந்த ஊர்? உள்ளிட்ட எந்த விபரமும் தெரியாமல் பாரதிராஜா கொண்டு வந்த மஞ்சள் பையில் இருந்த ஊர் பேரை வைத்துக்கொண்டு, அவரை கண்டுபிடித்து பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை அவரிடம் ஒப்படைக்க கதாநாயகன் சமுத்திரக்கனி அலைந்து கொண்டிருக்கிறார்.விஷயம்  கேள்விப்பட்ட அவருடைய மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், கதாநாயகன் சமுத்திரக்கனி யின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அவரை தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.

சொந்த பந்தங்களுக்கு எடுக்கும் முயற்சியால் கதாநாயகன் சமுத்திரக்கனியை சில ஆபத்துகளும் துரத்த, லாட்டரி டிக்கெட் வாங்கிய பாரதராஜாவிடம் லாட்டரி டிக்கெட்டை ஒப்படைத்தாரா?,ஒப்படைக்கவில்லையா?,என்பதுதான்‘திரு.மாணிக்ம்’ படத்தின் மீதிக்கதை.

கதாநாயகன் சமுத்திரகனி மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில், எளிமை, அனைவரிடத்திலும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட, தெளிவான சிந்தனை, நேர்மையான வாழ்க்கை என மிக அருமையான நடிப்பை கொடுத்து மாணிக்கமாகவே வாழ்ந்திருக்கிறார்.

மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனன்யா, கல்லூரி, காதல் என்று இளம் வயது கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவராக இருந்தாலும், மனைவி, இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், குடும்ப கஷ்டம் தீர்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும், கணவரின் நேர்மையால் அந்த குடும்ப கஷ்டம் முடியாமல் போகும்போது, உள்ளுக்குள் எழும் கோபத்தை தனது நடிப்பின் மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி சிறந்த நடிகை என முத்திரை பதித்திருக்கிறார்.

முதியவர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கும் பாரதிராஜா, வழக்கும் போல் எதார்த்தமாக நடித்திருக்கும் இளவரசு, சில காட்சிகளில் வந்தாலும் நினைவில் நிற்கும் ரசிகர்கள் மனதில் தங்கிவிடும் கதாபாத்திரங்களில் நாசர், வடிவுக்கரசி, தேவாலய பாதிரியராக நடித்து பாதிரியார்களை கலாய்த்த சின்னி ஜெயந்த், கருணாகரன், சாம்ஸ், ஸ்ரீமன் லண்டன் ரிட்டர்னாக தம்பி ராமையா, என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தாங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் அளவான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பக்கபலமாக அனைத்து கதாபாத்திரங்களும் அமைந்திருக்கிறது

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் கேமரா கேரள பகுதிகளை பசுமையாகவும் அழகாகவும் காட்சிப்படுத்தியிருப்பதோடு, மட்டுமல்லாமல் எளிமையானவர்களின் சோகம் மற்றும் கண்ணீரை திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் இடம் நேர்த்தியான ஒளிப்பதிவின் மூலம் கடத்திச் சென்று இருக்கிறார்.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்

சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘பயாஸ்கோப்’

சினிமா குறித்து எந்த அறிமுகமும் இல்லாத கிராமத்து மக்கள் எப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்கினார்கள் என்பதை கலகலப்பாக சொல்லும் உண்மைக் கதை

ஜனவரி 3 அன்று ‘பயாஸ்கோப்’ வெளியாகிறது

டீசரை ஆர்யா, சசிகுமார் வெளியிட்டனர்

Teaser: https://youtu.be/N553oI40RYg

பெரிதும் பாராட்டப்பட்ட ‘வெங்காயம்’ திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள படம் ‘பயாஸ்கோப்’. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 3 அன்று வெளியாகிறது. டீசரை நடிகர்கள் ஆர்யா மற்றும் சசிகுமார் வெளியிட்டனர்.

சினிமா குறித்து எதுவும் தெரியாத கிராமத்து மக்கள் திரைப்படம் எடுக்கும் கலகலப்பான உண்மைக் கதையை திரையில் சொல்லும் ‘பயாஸ்கோப்’ திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மேலும், இந்த உண்மைக் கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘பயாஸ்கோப்’ குறித்து பேசிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், “ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து நான் ‘வெங்காயம்’ திரைப்படத்தை எப்படி எடுத்தேன், அதில் சந்தித்த சவால்கள் என்ன, அந்த திரைப்படம் ஏற்படுத்திய தாக்கங்கள் எத்தகையவை என்பதை வெளிப்படுத்தும் படம் தான் ‘பயாஸ்கோப்’. ‘வெங்காயம்’ திரைப்படம் உருவான கதையை ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்று இயக்குநர் மிஸ்கின் உள்ளிட்ட பலர் தெரிவித்திருந்தனர். அதன் விளைவாக ‘பயாஸ்கோப்’ திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்,” என்றார்.

தொடர்ந்து பேசிய சங்ககிரி ராஜ்குமார், “பயாஸ்கோப் திரைப்படம் ரசிகர்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது. சினிமாவைப் பற்றி எந்த அறிமுகமும் இல்லாமல் கிராமத்து மக்கள் எப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்கினார்கள் என்பதை கலகலப்பாகவும் படம் முழுக்க நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம். இப்படத்தை எடுத்த அனுபவம் அலாதியானது,” என்றார்.

‘பயாஸ்கோப்’ திரைப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைக்க, முரளி கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டுக்காக புரொடியூசர் பஜார் நிறுவனத்துடன் சங்ககிரி ராஜ்குமார் கைகோர்த்துள்ளார். படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை ஆஹா பெற்றுள்ளது.

Samsung Announces Exciting Christmas Offers on Galaxy Wearables in India

  • Galaxy Watch Ultra, powered by Galaxy AI, will be available with a massive INR 12000 discount
  • Galaxy Buds3 Pro will be up for grabs at just INR 14999 for a limited period
  • Customers purchasing Galaxy Ring during “Samsung Live” event on Samsung.com between December 20 and December 22 will get a free Samsung 45W Travel Adapter

CHENNAI – December 20, 2024 – Samsung, India’s largest consumer electronics brand, today announced exciting offers on its latest Galaxy wearables line-up ahead of Christmas.

Starting December 20, Galaxy Watch Ultra will be available with a discount of up to INR 12000. The special price includes an instant cash back of INR 12000 or an upgrade bonus of INR 10000. Similarly, consumers looking to purchase Galaxy Buds3 Pro will get an instant cash back or an upgrade bonus of INR 5000. Additionally, consumers seeking enhanced affordability can take advantage of no-cost EMI for up to 24 months.

Customers looking to purchase latest Galaxy S and Z Series smartphones can avail multi-buy offers worth up to INR 18000 on Samsung’s latest wearables. Furthermore, customers purchasing Galaxy Ring during “Samsung Live” event on Samsung.com between December 20 and December 22 will receive a Samsung 45W Travel Adapter as a gift.

Designed for 24/7 health monitoring, Galaxy Ring offers a simple approach to everyday wellness. Blending timeless style with revolutionary functionality, Galaxy Ring is ultra-lightweight, making it ideal for all-day wear. Despite its size, the device offers up to 7 days of battery life encased in a specially designed charging case that features aesthetic LED lighting to indicate charging status.  

Powered by Samsung’s proprietary “Health AI”, Galaxy Ring delivers real-time insights intuitively, so that users can simply wear it and let the AI-driven insights work in the background, providing personalized recommendations and wellness tips. All data and insights are integrated into Samsung Health for seamless access within one cohesive platform without a subscription. Starting with sleep, Galaxy Ring features Samsung’s best-in-class sleep analysis and a powerful sleep AI algorithm. Along with Sleep Score and snoring analysis, new sleep metrics such as movement during sleep, sleep latency, heart and respiratory rate provide a detailed and accurate analysis of sleep quality.

Galaxy Watch Ultra — the newest and most powerful addition to the Galaxy Watch portfolio is designed for sports and fitness enthusiasts seeking ultimate performance. With an enhanced durability that comes with the Titanium Grade 4 frame and sapphire glass display, Galaxy Watch Ultra is equipped with 10ATM water resistance, IP68 rating for water and dust resistance, as well as MIL-STD-810H military-grade certification. Galaxy Watch Ultra offers up to 100 hours runtime in Power Saving mode.

Galaxy Watch Ultra also helps users better understand their cardiovascular health using Samsung’s new BioActive Sensor, enabling the on-demand ECG recording and HR Alert function that detects abnormally high or low heart rates. Samsung has recently rolled out Irregular Heart Rhythm Notification (IHRN) feature on the Samsung Health Monitor app for Galaxy Watches. Combined with the app’s Blood Pressure and Electrocardiogram (ECG) monitoring, the IHRN feature detects heart rhythms suggestive of atrial fibrillation (AFib), aiding users to monitor their heart health more comprehensively.

Galaxy Buds3 Pro – offers the highest standard of Hi-Fi sound quality to its users, and comes with a revolutionary new “Blade” design that delivers unrivaled sound experience with all-day comfort and presents significant audio enhancement to achieve studio-quality sound performance. Galaxy Buds3 Pro comes equipped with enhanced 2-way speakers with planar tweeter for sophisticated, precise high range sound production, and Dual Amplifiers. Powered by Galaxy AI, Galaxy Buds3 Pro enables users to listen to real-time translation when connected to Galaxy Smartphones with Galaxy AI. Galaxy Buds3 Pro also offer Adaptive EQ and Adaptive ANC features that adjust sound based on the wearing condition and environment.

As part of ‘Christmas Sales’ offers, Samsung is also offering discounts on Galaxy Watch7, Galaxy Buds3 and Galaxy Buds FE.

Offer Details:

S. No.Model  Event Offer
1Galaxy Watch UltraINR 12000 Cashback or INR 10000 Upgrade + Up to 24M No Cost EMI
2Galaxy Watch7INR 8000 Cashback or Upgrade + Up to 24M No Cost EMI
3Galaxy Buds3 ProINR 5000 Cashback or Upgrade + Up to 24M No Cost EMI
4Galaxy Buds3INR 4000 Cashback or Upgrade + Up to 24M No Cost EMI
5Galaxy Buds FEINR 4000 Cashback or Upgrade

Samsung India Announces Holiday Sale on Flagship Smartphones

CHENNAI, India – December 20, 2024: Samsung, India’s largest consumer electronics brand, has announced exciting limited period offers on its flagship smartphones as part of its holiday sale.

Under the offer, Galaxy Z Fold6 will be available starting INR 144999 along with a 24-month no-cost EMI offer. Similarly, consumers can get Galaxy Z Flip6 at just INR 89999 with 24 months no-cost EMI, as part of the limited period offer. Galaxy Z Fold6 was originally priced at INR 164999 and Galaxy Z Flip6 was originally priced at INR 109999 for the base variants. Consumers can choose convenient EMI options starting from INR 2500 for Galaxy Z Flip6 and INR 4028 for Galaxy Z Fold6.

Apart from the latest foldables, Samsung’s flagship Galaxy S24 Ultra (256GB) will be available for just INR 109999. The special price includes an instant cash back of INR 8000 along with an additional upgrade bonus of INR 12000. Alternatively, consumers can also avail a bank cashback of INR 12000 on the device.

Meanwhile, Galaxy S24 (128GB) will be available at INR 62999 with easy EMI options starting at just INR 2625. The aforementioned price includes an instant cash back of INR 12000.

The Galaxy S24 FE (256 GB) will now be available at a special price of INR 60999 against its launch price of INR 65999. The special price includes an instant cashback of INR 5000. Consumers can also avail the convenience of zero down payment and 24-month no-cost EMI options starting INR 2542.

Similarly, Samsung Galaxy S24+ (256 GB) will be available at INR 64999 and Galaxy S23 Ultra (256 GB) will be available at an amazing deal price of INR 72999.

In addition, Galaxy S23 (128 GB) & Galaxy S23 FE (128 GB) will be available at just INR 38999 and INR 29999 respectively.

Device NameBest Buy Price
Galaxy Z Fold6INR 164999 144999
Galaxy Z Flip6INR 109999 89999
Galaxy S24 UltraINR 129999 109999
Galaxy S24+INR 99999 64999
Galaxy S24INR 74999 62999
Galaxy S24 FEINR 65999 60999
Galaxy S23 UltraINR 109999 72999
Galaxy S23INR 64999 38999
Galaxy S23 FEINR 54999 29999

செல்வராகவன் இயக்கத்தில் ஜீ.வி .பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த ‘இசை அசுரன் ‘ ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

காதல் படைப்புகளை உருவாக்குவதில் தனித்துவமான முத்திரை பதித்த படைப்பாளியான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும்’ மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஆர். கே. விஜய் முருகன் கவனிக்க, பட தொகுப்பு பணிகளை பாலாஜி மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. வண்ணத்துப்பூச்சி பின்னணியில் கதையின் நாயகனான ஜீ.வி. பியின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ‘ 7 ஜி ரெயின்போ காலனி ‘, ‘ஆடவரி மாதலக்கு அர்த்தலே வெருள’ ( தமிழில் யாரடி நீ மோகினி) ஆகிய காதலை மையப்படுத்திய படைப்புகளைத் தொடர்ந்து காதலை உரக்க பேசும் ‘மெண்டல் மனதில்’ படத்தில் இயக்குநர் செல்வராகவனும், ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமாரும் இணைந்திருப்பதால்..’ இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மோகன்லாலின் ” பரோஸ்” திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி…

Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான ” பரோஸ்”, திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.,

இந்நிகழ்வினில்…

வசனகர்த்தா ஆர் பி பாலா பேசியதாவது…
மோகன்லால் சாருடன் புலிமுருகன் பணியாற்றினேன் பின்னர் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன். 3 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இப்படம் ஆரம்பித்தது. நான் இதுவரை 2டியில் தான் பார்த்திருக்கிறேன். இன்று தான் இங்கு டிரெய்லர் 3 டியில் பார்த்தேன். இந்தளவு நேர்த்தியாக ஒரு திரைப்படம் இந்திய சினிமாவில் வந்ததில்லை. டெக்னீசியன்ஸ் எல்லோருமே மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளனர். இந்தப்படத்தில் பணியாற்றியது மிகப்பெரிய பாக்கியம். மோகன்லால் சாருடன் பணிபுரிந்த பிறகு தான், எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. எனது வாழ்க்கையைப் புலி முருகனுக்கு முன்னால், பின்னால் என்றே சொல்லலாம். அவரில்லாமல் நான் இல்லை. எனக்கு இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம். பரோஸ் என்னுடைய அறிமுகத் திரைப்படம், இது மோகன்லால் சாரின் முதல் படைப்பு. அவர் இயக்கும் முதல் படத்தில் நான் இசையமைப்பாளராக அறிமுகமாவது மகிழ்ச்சி. பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார் வாழ்த்துகள். 2019ல் அமெரிக்காவில் ஒரு போட்டியில் வெற்றிபெற்று வந்த பிறகு, முதல் ஆளாக மோகன்லால் சார் தான் வாழ்த்தினார். பின்னர் இந்தப்படம் பற்றிச் சொல்லி, இசையமைக்க வேண்டும் என்றார். மிகப்பெரிய சந்தோசம். கோவிட் வந்தது, அந்த தடைகளைத் தாண்டி, இப்போது படம் வருகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நானும் நிறைய இசை கற்றுக்கொண்டுள்ளேன். எனக்கு முழு ஆதரவாக இருந்த மோகன்லால் சாருக்கு நன்றி. இப்படத்தில் பணியாற்றியுள்ள இசைக் கலைஞர்கள், பாடகர்கள் அனைவருக்கும் நன்றி. கண்டிப்பாக இப்படம் உங்களை ஆச்சரியப்படுத்தும் அனைவருக்கும் நன்றி.

கிரியேடிவ் ஹெட் ராஜிவ் குமார் பேசியதாவது…
நான் இந்தப் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து வேலை பார்த்தது ஏதேச்சையான ஒரு அதிசயம். இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றினேன். இத்தனை வருடங்கள் கழித்து, முழுமையான 3டி படத்தில் மோகன்லாலுடன் இணைந்து வேலை பார்த்தது மகிழ்ச்சி. அவர் எப்போதும் எனக்கு இனிய நண்பராக இருந்து வருகிறார். அவருடைய கற்பனையை உருவாக்கும் இந்தப் படத்தில் பணிபுரிந்தது, நல்ல அனுபவமாக இருந்தது. மோகன்லால் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் கலக்கியிருக்கிறார். முக்கியமாக டெக்னாலஜுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். படத்தில் நிறைய டெக்னாலஜு இருக்கிறது, ஆனால் அதைத்தாண்டி நடிகர்களின் நடிப்பு தான் உங்களைக் கவரும். இந்தப்படம் பார்க்கும் போது நீங்கள் 3டி என்பதை மறந்து விடுவீர்கள். மோகன்லால் மிகச்சிறந்த நடிகர், அவர் உருவாக்கிய ஃபேண்டஸி கதாப்பாத்திரங்களுடன் அவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். லிடியன் இத்தனை இளம் வயதில் முதிர்ச்சியான இசையைத் தந்துள்ளார். பாலா மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். பல மொழிகளில் அவர் தான் டயலாக் தந்துள்ளார். இப்படம் மிக அர்ப்பணிப்புடன் மிகப்பெரிய உழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது, கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் கவரும் நன்றி.

நடிகர், இயக்குநர் மோகன்லால் பேசியதாவது…
47 வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன். இயக்குநராக என் முதல் படம். எப்படி இது நடந்தது? என எல்லோரும் கேட்டார்கள், இது அதுவாகவே நடந்தது, அவ்வளவு தான். இது ஒரு ஃபேண்டஸி, அட்வென்சர் படம். முழுக்க 3டியில், இரண்டு கண்களில் பார்ப்பது போல, இரண்டு கேமராவை வைத்து, படம்பிடித்துள்ளோம். அதை எடிட் செய்து நீங்கள் பார்க்கும் போது, புது அனுபவமாக இருக்கும். இப்படத்தில் மிக முக்கியமான திறமையான கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் இப்படத்தில் பணியாற்றியுள்ளார். ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். மிகச்சிறந்த கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். லிடியன் முதன் முதலில் எங்களைப் பார்க்க வந்த போது 13 வயது தான், மிகச்சிறந்த இசையைத் தந்துள்ளார். 2 நடிகர்கள் தான் இந்தியா, மற்றவர்கள் எல்லோரும் போர்ச்சுகல், ஸ்பெயின், க்ரீஸ், ரஷ்யா என நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர். பிரிடிஷ் குழந்தை தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. படத்தின் கதைப்படி ஒரு இன்னொசன்ஸான இளமையான இசை வேண்டும் என்பதால் தான், லிடியனை அழைத்தேன். அவரும் மிகச்சிறப்பான இசையைத் தந்துள்ளார். இப்படத்தில் பெரும் துணையாக இருந்த ராஜிவ் குமாருக்கு நன்றி. இப்போது கூட வேலை நடந்து வருகிறது. படத்தில் ஒரு அனிமேடட் கேரக்டர் வருகிறது. இங்குள்ள ஒருவரை நடிக்க வைத்து, அதைத் தாய்லாந்து கலைஞர்கள் வைத்து, அனிமேடட் கேரக்டராக மாற்றியுள்ளோம். மிகப்பெரிய உழைப்பு. பாலா, அவரும் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். நன்றி. ஒரு மேஜிக் உலகிற்கு இப்படம் உங்களை அழைத்துச் செல்லும். உங்களுக்குள் இருக்கும் குழந்தை மனதை, இப்படம் எழுப்பி விடும். அனைவரும் ரசிப்பீர்கள். இப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

பரோஸ் எனும் பூதத்திற்கும், ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸி கலந்து, அனைவரும் ரசிக்கும் வகையில், பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன்லால்.

‘டீப் ப்ளூ சீ 3’, ‘ஐ இன் தி ஸ்கை’ மற்றும் ‘பிட்ச் பெர்பெக்ட்’ ஆகிய படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். இளம் வயதிலேயே உலகப் புகழ்பெற்ற, லிடியன் நாதஸ்வரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்குச் சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.