Breaking
October 16, 2024

October 2024

ஸ்கிரீன் சீன் மீடியா சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘ஜெயம் ரவி 34’

‘இருட்டு’, ‘தாராள பிரபு’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘இடியட்’, ‘சாணி காயிதம்’, ‘அகிலன்’ உள்ளிட்ட வெற்றி படங்களையும் ‘மத்தகம்’ இணைய தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம், வெற்றிப்பட இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் ‘பிரதர்’ திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது.

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி அன்று உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில் ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைகிறது.

ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘ஜெ ஆர் 34’ என்று அழைக்கப்படும் ஜெயம் ரவியின் 34-வது படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளது. ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஜெயம் ரவி உடன் ஸ்கிரீன் சீன் நிறுவனம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘பிரதர்’ திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் ‘ஜெ ஆர் 34’ திரைப்படத்திற்காக ஸ்கிரீன் சீன் மீடியா மற்றும் ஜெயம் ரவியுடன் ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் கைகோர்க்கிறார்.

டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இதில் நடிக்க உள்ள முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் விரைவில் அறிவிக்கும்.

“நீல நிற சூரியன்” திரை விமர்சனம்

சம்யுக்தா விஜயன் இயக்கம் மற்றும் நடிப்பில் கிட்டி, கஜராஜ், கீதா கைலாசம் மற்றும் பல நடிப்பிற்கும் திரைப்படம் நீல நிற சூரியன்


ஆணாகப் பிறந்து ஹார்மோன் பாதிப்பால் பெண்ணாக மாறுபவர்களையும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறுபவர்களையும் அவர்கள் எந்த பாலினமாக மாறினாலும் இந்த சமுதாயத்தால் அவர்கள் திருநங்கைகளாகவே பார்க்கப்படுகிறார்கள் அவர்களை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை இப்படி இருக்கும் இந்த சூழலை கதை கருவாக கொண்டு அரவிந்தாக இருந்து பானுவாக மாறும் ஒருவருடைய வாழ்க்கையை திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்
நிச்சயம் இதுபோன்ற கதைகளை டாக்குமென்ட்ரி ஆகவோ அல்லது அவாடிற்காக எடுக்கப்பட்ட படமாகவா தான் நாம் பார்த்திருக்கும் அதை சற்று மாற்றி கமர்சியல் ஆகவும் ஜனரஞ்சகமாகவும் திரைப்படமாக எடுக்க எடுக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சம்யுக்தா விஜயன் இவர் உண்மையில் ஆணாகப் பிறந்த பெண்ணாக மாறிய ஒருவர்
ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் அரவிந்த் இவருக்கு சிறுவயதில் இருந்து ஆணாகப் பிறந்தாலும் பெண்ணாக மாறும் ஆசை அவரது ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படுகிறது அவ்வாறு அவர் மாற முயற்சிக்கும் பொழுது இந்த சமுதாயம் அவரை எப்படி நோக்குகிறது தன்னுடைய தாய் தந்தையர் அந்த மாற்றத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் அவர்களுடைய நண்பர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் திரைக்கதையாக எடுத்துக் காட்டியிருக்கிறார் சம்யுக்தா விஜயன்
இந்த திரைப்படத்தில் அரவிந்தாக சமைத்த விஜயனை நடித்திருக்கிறார் தான்பெண்ணாக மாறும் காட்சியில் அவருடைய மன உளைச்சலை இந்த சமுதாயம் தன்னை எப்படி பார்க்குமோ ஏற்றுக்கொள்ளுமோ என்னும் ஒரு நெருடலை தவிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் இவரது தந்தையாக நினைக்கிறவன் கஜராஜ் தாயாக நடித்திருக்கும் கீதா கைலாசம் இருவரும் மிகவும் அருமையான பாசமான பெற்றோராக மகன் இப்படி மாறிவிட்டானே என்று கவலையை என்ற அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்
மனநல மருத்துவராக கிட்டி மிகவும் பொருத்தமான கதாபாத்திரம்
மேலும் இந்த படத்தில் அமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் அவரவர்கள் இடங்களை மிக அருமையாக நிரப்புகிறது அரவிந்தின் தோழியாக வரும் ஒரு டீச்சர் அவருடைய வழிகளை புரிந்து கொள்ளும் தோழியாக அருமையாக நடித்திருக்கிறார்

இந்த மாதிரி ஹார்மோன் குறைபாட்டினால் எதிர்பாலினமாக மாறும் மாறும் பொழுது அவர்களை இந்த சமுதாயம் எப்படி பார்க்கிறது இந்த சமுதாயத்தில் அவர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சமித்தா விஜயன் அதற்கான திரைக்கதை மற்றும் காட்சிகள் எந்தவித நெருடல் இல்லாமலும் அழகாக படமாக்கி இருக்கிறார்

இந்த நீல நிறச் சூரியன் நிச்சயம் அவர்களுக்கு வாழ்க்கையில் வெளிச்சம் அளிக்கும்

செல்ல குட்டி திரை விமர்சனம்

 மகேஷ் மற்றும் டாக்டர் டிட்டோ, மற்றும் தீபிக்‌ஷா 1990- காலகட்டங்களில் ஒரே பள்ளியில் 12ஆம் வகுப்பு பிடித்து வருகிறார்கள்.மகேஷ் அப்பா அம்மா இல்லாத காரணத்தால், அவர் மீது தீபிக்‌ஷாவிற்க்கு இரக்கம் காட்டுவதால், தன்னை காதலிக்கிறார் என நினைத்துக் கொண்டு ஒருதலையாக காதலித்து வருகிறார்.

ஆனால், தீபிக்‌ஷா டிட்டோவை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருக்கிறார். மகேஷ் தீபிக்‌ஷாவிடம் உன்னை காதலிக்கிறேன் என கூற தீபிக்‌ஷா நிராகரித்து விடுகிறார். காதலை மட்டுமே நினைத்துக் கொண்டு ,மகேஷ் 12ம் தேர்வில் தோல்வியடைந்து விடுகிறார்.மகேஷ்டன் படித்த அனைவரும் வாழ்க்கையில் முன்னேறி விடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் டிட்டோ விற்கும் சுபிக்ஷாவிற்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகிறது ஆனால் தன் நண்பன் காதலித்த பெண் என்பதால் அந்த திருமணத்தை டிட்டோ நிராகரித்து விடுகிறார்

அதன் பிறகு இவர்களது வாழ்க்கை என்ன ஆனது? என்பதுதான் இந்த செல்ல குட்டி திரைப்படத்தின் கதை.

கதாநாயகர்களாக நடித்திருக்கும் புதுமுக நடிகர்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் இருவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக கதாபாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகியாக நடித்திருக்கும் தீபிக்‌ஷா குடும்பத்து அழகிய முகத்தோடு, அளவான நடிப்பை கொடுத்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ஈர்க்கிறார்.

மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் சிம்ரன்

கல்லூரி முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மதுமிதாவும், ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்..

ஒளிப்பதிவாளர் பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பனின் ஒளிப்பதிவு முலம் கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் டி.எஸ். முரளிதரன்

இசையமைப்பாளர் சிற்பியின் பின்னணி இசை கதை  ஓட்டத்திற்கு பயணிக்கிறது.

“டிமான்டி காலனி 2” ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது !!




இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல், சமீபத்தில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான, “டிமான்டி காலனி 2” திரைப்படம், வெளியான வேகத்தில், 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது. ரசிகர்களின் பெரும் வரவேற்பில், டிஜிட்டல் பிரீமியரில் இப்படம் பல புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியாகி பெரும் வெற்றி பெற்ற, இதன் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இந்த இரண்டாம் பாகம், ஹாரர் அனுபவத்தின் புதிய கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. மிகச்சிறந்த படைப்பாளி அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்டி காலனி 2’ முதல் படம் விட்ட இடத்திலேயே தொடங்குகிறது. ரசிகர்களைத் திகிலின் உச்சத்திற்குக் கூட்டிச் செல்லும் இப்படத்தை, இப்போது உங்கள் வீட்டுத் திரைகளில், பரவசத்துடன் ZEE5 இல் கண்டுகளியுங்கள்.

முதல் பாகத்தின் கதைக்களம், ஸ்ரீனிவாசன், விமல், ராகவன் மற்றும் சஜித் ஆகிய நான்கு நண்பர்களைச் சுற்றி வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில் பணக்கார போர்த்துகீசிய தொழிலதிபர் ஜான் டிமான்டி என்பவருக்குச் சொந்தமான ஒரு வீடு, அவர் அனுபவித்த தனிப்பட்ட சோகங்களிலிருந்து உருவாகும் சாபங்கள் மற்றும் அமானுஷ்யங்களால் புனைவுகள் சூழ்ந்த திகில் ஸ்தலமாக இருக்கிறது. இப்படம் பேய் நம்பிக்கையைத் தாண்டி, இயற்கைக்கு அப்பாற்பட்ட பழிவாங்கும் ஒரு கதைக்களத்திற்குள் நம்மை ஆழமாக இழுத்துச் செல்கிறது, தங்களின் சாபத்திலிருந்து தப்பிக்க நண்பர்கள் ஒரு வழியைத் தீவிரமாகத் தேடுகிறார்கள் – அவர்கள் அறியாமல் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அழைத்த சாபத்தைத் தவிர்க்க முடியாதது என்பதை உணர மட்டுமே முடிகிறது. இந்த இரண்டாம் பாகம் அந்த உலகிற்குள் நம்மை இன்னும் இன்னும் ஆழமாக இழுத்துச் செல்கிறது.

“டிமான்டி காலனி 2” படத்தின் இந்த வெற்றி குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறுகையில்..,
“ ZEE5 இல் உலக டிஜிட்டல் பிரீமியரில் டிமான்டி காலனி 2க்கு கிடைத்த அபாரமான வரவேற்பைக் கண்டு மெய்சிலிர்த்துவிட்டேன்! வெளியான வேகத்தில் இப்படம் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது, அருள்நிதி மற்றும் ப்ரியா பவானி சங்கரின் மிகச்சிறப்பான நடிப்பு கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் உழைப்பு இப்போது கொண்டாடப்படுவது மகிழ்ச்சி. இது வெறும் ஆரம்பம் தான், ரசிகர்களின் உற்சாக வரவேற்பில் இன்னும் பல சாதனைகளை படைப்பதைக் காண ஆவலோடு உள்ளேன்.

நடிகர் அருள்நிதி கூறுகையில்,
“ஒரு அற்புதமான திரையரங்க வெற்றிக்குப் பிறகு, டிமான்டி காலனி 2 அதன் உலக டிஜிட்டல் பிரீமியர் மூலம், இன்னும் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இப்போது ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்த அபாரமான பயணத்தில் எங்களுடன் இணைந்து உழைத்த அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன். எங்கள் படம் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை எப்படிக் கவருகிறது, என்பதைப் பார்க்க ஆவலோடு உள்ளேன், ரசிகர்களிடமிருந்து கிடைத்து வரும் அதீத அன்பும், வாழ்த்துக்களும் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி தருகிறது. அனைவருக்கும் நன்றி.

அசத்தலான ஹாரர் திரில்லர் அனுபவமான ‘டிமான்டி காலனி 2’ திரைப்படத்தை, ZEE5 இல் தவறவிடாதீர்கள் !!

ZEE5 பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்குப் பன்மொழியில் கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்திலிருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள் கொண்ட ஒரு பெரும் திரை நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்க்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5 வழங்குகிறது.

மேலும் சமூகவலைதளங்களில் ZEE5 ஐ தொடர :
Facebook – https://www.facebook.com/ZEE5
Twitter – https://twitter.com/ZEE5India
Instagram – https://www.instagram.com/zee5/

Northern Uni Set To Launch End-to-End Student-Led Satellite Project

  1. The soon to be launched Satellite will carry an array of sophisticated instruments designed to
    study the Space atmosphere and demonstrate communication technologies.
  2. This also marks the first student-led Satellite Technology project for the Government School

students of Jaffna region in Sri Lanka.

Chennai, 3rd October 2024: In commemoration of World Space Week, Northern Uni today signed a
strategic MoU with Space Kidz India to launch a collaborative student-led satellite project, marking a
monumental step in space education for the northern region of Sri Lanka. The MoU was signed in the
city in the presence of Dr. Prafulla Kumar Jain, Director – InSpace Ahmedabad, Mr. Indy
Pathmanathan, Chairman – SLIIT Northern Uni, Dr. Srimathy Kesan, Founder & CEO – SpaceKidz India,
Ms. Alma Okpalefe, Executive Director – World Space Week Association and Dr. Saranya Jaikumar,
Educational Psychologist, symbolizing the region’s first foray into space technology. This ambitious
project will bring together students from both Northern Uni and Government schools in Jaffna, along
with students from India, to jointly design, develop, and launch a satellite. The satellite will carry
sophisticated instruments aimed at studying the space atmosphere and demonstrating cutting-edge
communication technologies.
This collaborative effort helmed by Northern Uni is expected to yield invaluable data for scientific
research while showcasing the technological prowess of student innovators from both nations. This
project also offers students a firsthand exposure to satellite technology and also the chance to
participate in groundbreaking research that has the potential to contribute innovative solutions to
global challenges. The initiative will equip students with essential skills in satellite development, data
analysis, and communication technologies, preparing them for future careers in the STEM (Science,
Technology, Engineering, and Mathematics) fields. By engaging in this landmark project, students from
both countries will play a role in advancing space research and promoting technological innovation that
benefits society.
Commenting on the occasion, Mr. Indy Pathmanathan, Chairman SLIIT Northern Uni, said, “This
initiative is a giant leap for both Sri Lanka and India in cultivating a culture of scientific collaboration and
mutual innovation. Our students, the future citizens of both nations, will gain unparalleled exposure to
the intricacies of satellite technology. What excites me most is the way this project fosters cross-border
collaboration among students from different backgrounds, cultures, and educational systems. They will
not only develop advanced skills in science and engineering but also learn the value of teamwork and
shared goals. Through this project, we are building not just a satellite, but a future where innovation
knows no borders.”
Adding to this Dr. Srimathy Kesan, Founder and CEO of Space Kidz India, said, “This project represents a
shared vision for both India and Sri Lanka—one that sees education, technology, and space exploration
as tools for uniting people and pushing the boundaries of what’s possible. By engaging students from

both countries, we are planting the seeds of a future generation that will work collaboratively on global
challenges. These young minds will become the torchbearers of scientific progress, and their
participation in building and launching this satellite is just the beginning. Space technology is an
incredibly powerful platform, and through this project, we aim to inspire students to look beyond
geographical boundaries and become true innovators and leaders in space science.”
The project is structured into two key phases. Phase 1 will focus on training students in space science
and technology, with 50 school students from Sri Lanka, 10 school students from India, and 50 college
students undergoing comprehensive training. This phase is designed to give participants a foundational
understanding of satellite development and space missions, offering a rich educational experience that
combines theoretical knowledge with practical insights.
Phase 2 will involve 30 college students from Sri Lanka who will be directly engaged in building,
integrating, and preparing the satellite for its eventual launch. The collaborative process will allow them
to work alongside Indian experts and their peers, gaining hands-on experience in satellite construction.
Furthermore, 15 college students and 50 school students from Sri Lanka will travel to India to witness
the satellite launch, creating a powerful learning opportunity that will inspire future generations to
pursue careers in space science and technology.

பிரம்மாண்ட தயாரிப்பில் வெகு விரைவில் வெளிவர உள்ளது படை தலைவன்

சிபி ராஜ் நடித்த வால்டர் படத்தை வெற்றிகரமாக இயக்கிய  இயக்குனர் அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிப்பில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் படைதலைவன் படம் வெகு விரைவில் வெளிவர உள்ளது.

வி ஜே கம்பைன்ஸ் சார்பில் பரமசிவம் அவர்கள் தயாரிப்பில், ராஜு காளிதாஸ் அவர்களின் இணை தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம், படை தலைவன். இப்படத்தில் ஆக்சன் அதிரடியில் சண்முகபாண்டியன் விஜயகாந்த்  வெறித்தனமாக பெரும் மெனக் கெடல் எடுத்து நடித்துள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி படத்தின் வெளியீட்டு வேலைகள் துவங்கி உள்ளன.  இசைஞானி இளையராஜா அவர்களின் அற்புதமான இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. கஸ்தூரி ராஜா அவர்கள் முக்கிய கதா பாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்துள்ளார். படை தலைவன் படத்தை ஓப்பன் தியேட்டர் நிறுவனம் சார்பில் ஏ. செந்தில் குமார் வெளியிட உள்ளார். இசை வெளியீடு,  படம் வெளியிடும் தேதி குறித்து  விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

DMY கிரியேஷன் நிறுவனர் மகனின் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி !!

திரையுலக முன்னணி பிரபலங்கள் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும், DMY கிரியேஷன் நிறுவனர் மகனின் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி !!

மலேசியா இதுவரை காணாத அளவில், பிரம்மாண்டமான நட்சத்திர திருமண விழா நடைபெற உள்ளது. இரண்டு நாடுகளை ஒன்றாக இணைக்கவுள்ள இவ்விழாவில், மலேசிய என்டர்டெயிண்ட்மென்ட் உலக பிரபலங்களும், தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்கவுள்ளனர்.

அக்டோபர் 12 அன்று, DMY கிரியேஷன் நிறுவனர் மற்றும் (மேலும் DMY என அறியப்படும்), தலைவர் டத்தோ முஹம்மது யூசாஃப், தனது மகன் ஃபஜ்ருல் ரஹ்மானுக்கு, செட்டியா நகரில் அமைந்துள்ள கன்வென்சன் சென்டரில், பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். தம்பதிகளின் திருமணத்தைக் குறிக்கும் நிக்கா விழா, அங்கு அரங்கேறுகிறது. நண்பர்கள், விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இரு காதல் மனங்களின் ஒருங்கிணைவு கொண்டாடப்படவுள்ளது.

இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டத்தில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும், கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கவுள்ளனர். மினுமினுக்கும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் இவ்விழா பெரும் கவர்ச்சியுடன் கலாச்சார அடையாளமாகவும் நிகழவுள்ளது.

பழம்பெரும் ஆளுமைமிக்க நடிகர்கள் உட்பட, கோலிவுட் சூப்பர்ஸ்டார்கள் என கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள இந்நிகழ்வில்,
உலகநாயகன் கமல்ஹாசன், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது திறமையான மகன் ஏ.ஆர்.அமீன், அதே போல் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான சிவகார்த்திகேயன், பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் இணையவுள்ளார்கள். இவர்களுடன் உள்ளூர் மலேசியப் பிரபலங்களும், அரசியல்வாதிகளும் இந்த கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

உலகின் தலைசிறந்த வடிவமைப்பாளர்கள் இந்தியாவின் மிகவும் பிரபலமான பேஷன் மேஸ்ட்ரோக்கள் – மனீஷ் மல்ஹோத்ரா மற்றும் சப்யாசாச்சி வடிவமைத்த புதுவிதமான ஆடை அணிகலன்களை, மணமகனும், மணமகளும் அணிய இருக்கிறார்கள்.

“இந்தத் திருமணம் இரு நபர்களுக்கு இடையேயான அன்பின் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஒன்று கூடும் இரண்டு துடிப்பான கலாச்சாரங்கள், வேற்றுமையில் ஒற்றுமையின் அழகை வெளிப்படுத்துகின்றன.

“இந்த சிறப்புத் தருணத்தை உலகம் முழுவதும் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். மலேசியப் பொழுதுபோக்கு திரை பிரபலங்கள் மற்றும் தமிழ்நாட்டு சினிமா பிரபலங்கள் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை அடைவதைக் காண ஆவலாக இருக்கிறேன் என்று முகமது யூசாஃப் கூறினார்.

DMY ஈவன்ட்ஸ் குரூப் மிக உயர்ந்த தரத்தில் உலகம் வியக்கும் வகையிலான பிரம்மாண்ட திருமண வரவேற்பை உருவாக்கவுள்ளது.
இந்த கலாச்சார நிகழ்வு பாலிவுட் மற்றும் கோலிவுட்டின் அடையாளங்களை ஒருங்கிணைக்கும் அதே வேளையில், செழுமையான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாக இருக்கும்.

முன்னணி நட்சத்திரங்களான விஜய், கார்த்தி போன்றோருடன் பணிபுரிந்த பிரபல சமையல்காரர் மாதம்பட்டி ரங்கராஜ், தலைமையில் விருந்தினர்களுக்கு 77 உணவுகள் கொண்ட விருந்து அளிக்கப்படும், பாரம்பரிய தானியங்கள் மற்றும் தினை, என ஒரு தனித்துவமான மற்றும் மறக்க முடியாத சமையல் அனுபவத்தை இந்த விருந்து உங்களுக்குத் தர இருக்கிறது.

உணவை ருசித்து ரிவ்யூ தரும் இர்ஃபான் வியூ சேனலின் பிரபலமான யூடியூபர் முகமது இர்ஃபான், இந்நிகழ்வில் கலந்துகொண்டு, விருந்தின் சுவைகளை எடுத்துரைத்து, இந்த இரவை இனிமையாக்க இருக்கிறார்கள்.

இவருடன் இணையும் பிரபல ஆர்.ஜே. பிராவோ, வாழ்க்கை முறை மற்றும் பயண வீடியோக்களுக்காக கொண்டாடப்பட்ட டிஜிட்டல் கிரியேட்டர் சிந்துஜா ஹரி, மற்றும் சமூக வலைதள பிரபலமான சஞ்சனா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.

ஷியாமக் தாவர் போன்ற மற்றும் பிரபு தேவா, ஜாம்பவான்களால் பாராட்டப்பட்ட சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற நடன அமைப்பாளர் ஜான் பிரிட்டோவின் குழு இவ்விழாவை நடனங்களால் சிறப்பிக்கவுள்ளது.

புகழ்பெற்ற வயலின் கலைஞர் மனோஜ் குமாரும் தனது மயக்கும் நிகழ்ச்சிகளால் மேடையை அலங்கரிக்கவுள்ளார்.
பாரம்பரிய மற்றும் சமகால பாணிகளைக் கலக்கும் அவரது திறன் ஒரு மாயாஜால சூழலை உருவாக்கும், விருந்தினர்கள் உண்மையிலேயே மறக்கமுடியாத இன்னிசை அனுபவத்தைப் பெறுவார்கள்.

மதிப்பிற்குரிய ஊடக அதிபரும் சன் பிக்சர்ஸ் தலைவருமான கலாநிதி மாறன், ஆந்திராவின் ஏபி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சஞ்சய், வி கிரியேஷன்ஸின் கலைப்புலி எஸ். தாணு, ஏ&பி குரூப்ஸின் அருண் பாண்டியன், வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸின் சுரேஷ் காமாட்சி மற்றும் ஐங்கரன் கருணா உட்பட, கோலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

இவர்கள் அனைவரின் பங்கேற்பு பண்டிகை சூழ்நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கோலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே நட்புறவையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறது. இது இந்த திருமணத்தை ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாற்றுகிறது.

இந்த திருமணமானது இரு தனிமனிதர்களின் சங்கமத்தைக் கொண்டாடுவது மட்டுமின்றி, காதல், ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தின் கலாச்சார பின்னணிகள் என வித்தியாசமான நிகழ்வாக அரங்கேறவுள்ளது, விருந்தினர் பட்டியல், பிரமிக்க வைக்கும் அலங்காரம், மற்றும் அசத்தலான சமையல் என, இந்த நிகழ்வு மிகவும் சிறப்புமிக்க நிகழ்வாக நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வாக இந்நிகழ்வு இருக்கும்.

இத்திருமண விழாவில் பங்கேற்பாளர்களுடன் முக்கியமாக இடம்பெறும் பிரபலங்கள், இந்த பிரமாண்டமான கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியான தருணங்களை, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, சமூக ஊடகங்களில், #DMYVEETUKALYANAM என்ற அதிகாரப்பூர்வ ஹேஷ்டேக்கைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

திரு டத்தோ முஹம்மது யூசாஃப் நிறுவிய DMY கிரியேஷன், பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட விநியோகத் துறையில், மலேசியாவில் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாகத் தமிழ் மற்றும் பாலிவுட் படங்களைக் கொண்டு வருவதில் பெயர் பெற்றவர். ராயன், தங்கலான், மற்றும் சலார் போன்ற படங்களை மலேசியப் பார்வையாளர்களுக்கு இந்நிறுவனம் தந்துள்ளது.

DMY கிரியேஷன் தொடர்ந்து கலாச்சாரங்களை இணைப்பதில் கவனம் செலுத்துகிறது, மலேசியாவின் வளமான பன்முக கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் உள்ளடக்கத்துடன், இந்திய கலாச்சாரத்தை ஒருங்கிணைக்கும் கருவியாகச் செயல்படுகிறது.

                                                                                                      #DMYVEETUKALYANAM

உலகசுற்றுலாதினத்தன்று, பிஸ்லேரிஇன்டர்நேஷனல்ஊட்டியில் ‘மாற்றத்திற்கானபாட்டில்கள்’திட்டத்தைஅறிமுகப்படுத்துகிறது

பயன்படுத்திய பிளாஸ்டிக் சேகரிப்பு வங்கிகள் மற்றும் மலைகளில்காடுகளை சுத்தப்படுத்தும் இயக்கங்கள் ஆகியவை நிலையானசுற்றுலாவை நோக்கிய ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கும்வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஊட்டி, 27 செப்டம்பர் 2024: உலக சுற்றுலா தினத்தில், பிஸ்லேரிஇன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட். லிமிடெட், நீலகிரி மாவட்டநிர்வாகம் மற்றும் ஊட்டி வளாகத்தில் உள்ள ஜேஎஸ்எஸ் அகாடமிஆஃப் ஹையர் எஜுகேஷன் & ரிசர்ச் நிறுவனத்துடன் இணைந்துஊட்டியின் தொட்டபெட்டா சிகரத்திற்கு அதன் முதன்மைமுயற்சியான ‘பாட்டில்கள் மாற்றத்தை’ பெருமையுடன்விரிவுபடுத்துகிறது. நமது இயற்கை நிலப்பரப்புகளின் அழகியஅழகைப் பாதுகாப்பதிலும், நிலையான எதிர்காலத்தை உறுதிசெய்வதிலும் பிளாஸ்டிக் மறுசுழற்சியின் முக்கிய பங்கைவலியுறுத்தும் வகையில், ‘மாற்றத்திற்கான பாட்டில்கள்’ முன்முயற்சி மலைப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்படுவதுஇதுவே முதல்முறையாகும்.

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டபெஞ்சுகளை நிறுவுதல் மற்றும் முக்கிய இடங்களில் பயன்படுத்தியபிளாஸ்டிக்கிற்கான சேகரிப்பு வங்கிகளை பொறுப்பாகஅகற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்வதை ஊக்குவிப்பது ஆகியவைதிட்டத்தின் சிறப்பம்சங்கள். கூடுதலாக, தொட்டபெட்டா, பைன்காடுகள் மற்றும் சனிடல்லா பேக் வாட்டர் உள்ளிட்ட பலஇடங்களில் காடுகளை சுத்தம் செய்யும் இயக்கங்கள்நடத்தப்பட்டன, இது சுற்றுச்சூழல் தூய்மையைமேம்படுத்துவதையும் இந்த இயற்கை இடங்களைப் பாதுகாப்பதன்முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும்நோக்கமாகக் கொண்டது.

பிஸ்லேரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகஅதிகாரி திரு. ஏஞ்சலோ ஜார்ஜ் பேசுகையில், “பிஸ்லேரியில்நாங்கள் பிளாஸ்டிக்-நடுநிலை மற்றும் நீர்-நேர்மறை நிறுவனமாகஇருக்க உறுதிபூண்டுள்ளோம். நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும்JSS அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் & ரிசர்ச்ஆகியவற்றுடனான எங்கள் ஒத்துழைப்பு, தமிழகத்தில்நேர்மறையான மாற்றத்தை வளர்ப்பதற்கும், நிலைத்தன்மையைமேம்படுத்துவதற்கும் எங்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இந்த முயற்சி குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இதுஒரு மலைப்பகுதிக்கான எங்கள் முதல் பயணத்தை குறிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், சுற்றுலாப் பயணிகளுக்கு கல்விகற்பித்தல், உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துதல் மற்றும்பிளாஸ்டிக் மறுசுழற்சி முயற்சிகளில் மாணவர்கள் மற்றும் அரசுஅமைப்புகளை ஈடுபடுத்துதல், இவை அனைத்தும் மிகவும்நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் உள்ளது.

‘மாற்றத்திற்கான பாட்டில்கள்’ முன்முயற்சிக்கு நீலகிரி மாவட்டவருவாய் அலுவலரால் முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் தூய்மைப்படுத்துதல்இயக்கம் மற்றும் அடிப்படை மதிப்பீட்டு கணக்கெடுப்பு ஆகியவைதிட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கத்திற்கான அடித்தளத்தைஅமைப்பதற்காக நடத்தப்பட்டன.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர்திரு.எம்.நாராயணன் கூறியதாவது: மலைப்பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பிளாஸ்டிக்கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து, சுற்றுச்சூழல் மாசுபடுவதில்குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது சுற்றுலாத்துறையில் நிலையான நடைமுறைகளை வளர்ப்பது அவசியம், ஏனெனில் இது நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எதிர்காலத்தலைவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. பிஸ்லேரிஇன்டர்நேஷனலின் ‘மாற்றத்திற்கான பாட்டில்கள்’ முயற்சியுடன்ஒத்துழைக்க தமிழ்நாடு சுற்றுலாத் துறை உற்சாகமாக உள்ளது. இது நமது இயற்கை எழில்மிகு நிலப்பரப்புகளில் நிலைத்திருக்கஒரு அளவுகோலை அமைக்கும் மற்றும் வரும் தலைமுறைகளுக்குதூய்மையான, பசுமையான எதிர்காலத்தை உறுதி செய்யும்.

நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, டாக்டர்எம்.ஜே.என். ஊட்டி வளாகத்தில் உள்ள ஜேஎஸ்எஸ் அகாடமி ஆஃப்ஹையர் எஜுகேஷன் & ரிசர்ச் தலைவர் சந்திரசேகர் பேசுகையில், “ஜேஎஸ்எஸ் கல்வி நிறுவனத்தில், நிலைத்தன்மைக்கு முன்னுரிமைஅளிக்கும் பொறுப்புள்ள இளைஞர்களை வளர்ப்பதில் நாங்கள்நம்பிக்கை கொண்டுள்ளோம். பிஸ்லேரி இன்டர்நேஷனலின்’மாற்றத்திற்கான பாட்டில்கள்’ முன்முயற்சியுடன் எங்களின்தொடர்பு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான எங்கள் கூட்டுஅர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது, இது குடிமக்களை பிளாஸ்டிக்மறுசுழற்சிக்கான தீவிர வக்கீல்களாக ஆக்குவதற்கும், கிரகத்திற்குபயனளிக்கும் சுற்றுச்சூழல் உணர்வுப் பழக்கங்களைஏற்படுத்துவதற்கும் ஊக்குவிக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிஸ்லேரி இன்டர்நேஷனல், மவுத்அண்ட் ஃபுட் பெயிண்டிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் (எம்எஃப்பிஏ) உடன்இணைந்து ‘பெஞ்ச் ஆஃப் ட்ரீம்ஸ்’ திட்டத்தை அறிமுகப்படுத்திஅதன் நிலைத்தன்மை முயற்சிகளை முன்னெடுத்தது. ‘பிஸ்லேரிபசுமையான வாக்குறுதி’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்ததிட்டம் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் மறுசுழற்சிசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட 1,000 பெஞ்சுகளைநிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிஸ்லெரிஇன்டர்நேஷனல் அதன் அனைத்து செயல்பாடுகளிலும்நிலைத்தன்மையை உட்பொதிப்பதில் உறுதியுடன் உள்ளது, பொறுப்பான வணிக நடைமுறைகள் மூலம் வளர்ச்சியைஊக்குவிக்கிறது.

   

மாக்கியவெல்லி காப்பியம்–ஆகோள் என்ற நாவலின் இரண்டாம் பாகம்…..

குற்றப்பரம்பரை அரசியலை மையமாகக் கொண்ட கபிலன்வைரமுத்துவின் மாக்கியவெல்லி காப்பியம் வெளியானது, இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்

2022ஆம் ஆண்டு வெளியான ஆகோள் என்ற நாவலின் இரண்டாம் பாகம்

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியம் என்ற நாவலை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார். இது 2022 ஆம் வெளியான ஆகோள் என்ற நாவலின் இரண்டாம் பாகம். பிரிட்டிஷ் இந்தியாவின் குற்றப் பரம்பரை சட்டத்தையும் அதன் நவீன பரிணாமங்களையும் விவாதிக்கும் முறையில் கபிலன் வைரமுத்து இரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார். முதல் பாகத்தில் பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த மாக்கியவெல்லி இரண்டாம் பாகத்தின் மைய கதாபாத்திரமாக வருகிறான். மதுரை மாவட்டத்துக்குட்பட்ட எட்டு நாடுகள் என்ற பகுதியில் கதை நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 1801 தொடங்கி 2057 வரையிலான காலக்கட்டத்தின் கதையாக இது எழுதப்பட்டிருக்கிறது. பல வரலாற்று தகவல்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை குறித்த இரண்டு ஆண்டுகள் கள ஆய்வுக்கு பின் கபிலன்வைரமுத்து இந்த நாவலை எழுதியிருப்பதாக பதிப்பாளர் வேடியப்பன் குறிப்பிட்டிருக்கிறார். இஸ்ரேல் அரசு இணையவெளியில் மேற்கொண்ட முக்கியமான முன்னெடுப்புதான் இந்த இரண்டாம் பாகத்திற்கான முதல் பொறி என்று கபிலன்வைரமுத்து தன் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நாவலுக்கென்று பிரத்யேகமாக மூல் என்ற கணினி மொழி உருவாக்கப்பட்டிருக்கிறது. மாக்கியவெல்லி காப்பியம் நூலை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் வருகிற அக்டோபர் 06ஆம் தேதி சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் வளாகத்தில் ஆசிரியர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. மாக்கியவெல்லி காப்பியம் கபிலன்வைரமுத்துவின் பன்னிரண்டாவது நூல். ஐந்தாவது நாவல். ஆகோள் முதல் பாகம் ஆங்கிலத்திலும் வெளி வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

CLEF MUSIC AWARDS 2024 – ஆறு விருதுகளை வென்ற ரயில் திரைப்படத்தின் இசையமைப்பாளர், பன்முக இசைக்கலைஞர் எஸ்.ஜே. ஜனனி..

சமீபத்தில் வெளியான RAIL திரைப்படத்தின் இசையமைப்பாளர் S. J. ஜனனி, RAIL திரைப்படப் பாடல்களுக்காக 4 பிரிவுகளில் 4 CLEF இசை விருதுகள் மற்றும் மும்பை 2024 மற்றும் பக்திப் பிரிவுகளுக்கான 2 விருதுகளை வென்றுள்ளார். இந்த திரைப்படத்தை டிஸ்கவரி சினிமாஸ் திரு . வேடியப்பன் தயாரித்தார் மற்றும் திரு. பாஸ்கர் சக்தி இயக்கியுள்ளார்.

விருது விவரங்கள்

Radio & Music 5 CLEF MUSIC AWARDS 2024-இன் 4வது பதிப்பு, செப்டம்பர் 27, 2024 அன்று லீலா ஹோட்டல், இன்டர்நேஷனல் ஏர்போர்ட், மும்பையில் நடைபெற்றது. இந்திய சினிமா பிரிவில் எஸ்.ஜே.ஜனனிக்கு RAIL திரைப்படத்திற்காக 4 விருதுகள் வழங்கப்பட்டன: சிறந்த இசையமைப்பாளர் – பூ பூக்குது (“ரயில்” பாடலுக்காக),
சிறந்த பெண் பின்னணிப் பாடகி, ஏலே செவத்தவனே… (“ரயில்” படத்தில் இருந்து), சிறந்த திரைப்படப் பாடல் – தமிழ் – பூ பூக்குது (“ரயில்” பாடலுக்காக),& எது உன் இடம் (“ரயில்” என்ற பாடலுக்காக சிறந்த இசை கோர்ப்பாளர் மற்றும் ப்ரோகிராமர்).

இத்துடன், ஜனனியின் “சிவனே சிவனே ஓம்” பிரம்மகுமாரிகளின் பாடல், 2024 ஆம் ஆண்டுக்கான 2 CLEF இசை விருதுகளை வென்றது:

பக்தி – சிறந்த இசையமைப்பாளர் & பக்தி-சிறந்த பாடல்/ஆல்பம் தமிழ், “இந்திய தேசிய விருது”, தமிழக அரசின் “கலை மாமணி விருது” & பல உலகளாவிய விருதுகள் பெற்ற எஸ்.ஜே. ஜனனி, அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள சர்வதேச பாடகர்- பாடலாசிரியர்கள் சங்கத்தின் 2024 ஆகஸ்ட் ஆண்டின் சர்வதேச பெண் பாடகருக்கான ISSA விருதை வென்றுள்ளார். இவர் கிராமி வாக்களிக்கும் உறுப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.