Breaking
September 29, 2024

August 2024

புகழ் நடிக்கும் ‘FOUR சிக்னல்’……

R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் தயாரிப்பில் மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் புகழ் நாயகனாக நடிக்கும் ‘FOUR சிக்னல்’

காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது

ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் R.S.மணிகண்டன் மற்றும்
மகேஸ்வரன்கேசவன் இணைந்து தயாரிக்க மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் ‘விஜய் டிவி’ புகழ் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகும் ‘Four சிக்னல்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

அறிமுக இயக்குநரான மகேஸ்வரன்கேசவன், காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான திரைப்படமாக ‘Four சிக்னல்’ படத்தை உருவாக்கி உள்ளார். நகரங்களில் வசிக்கும் வெகு ஜனங்கள் வெகுவாக பயன்படுத்தும் எளிய போக்குவரத்தான ஷேர் ஆட்டோவை சுற்றி இந்த கதை சுழல்கிறது.

சென்னையின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தினமும் ஷேர் ஆட்டோவில் செல்லும் பயணிகளுக்கும் அதன் ஓட்டுநருக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ள ‘Four சிக்னல்’ திரைப்படத்தை வரும் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.

அருவி திருநாவுக்கரசு, கல்லூரி வினோத், லொள்ளு சபா சேஷு, ஷர்மிளா, விஜய் ஆதிராஜ், யூடியூபர் காத்து கருப்பு கலை உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க, A.J அலி மிர்சாக் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மனிதர்களின் அந்தரங்க உணர்வுகளையும் யதார்த்தங்களையும் உள்ளடக்கிய ரொமான்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள ‘Four சிக்னல்’ திரைப்படத்திற்கு பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்ய, பிரியன் எடிட்டிங் செய்துள்ளார்.

படம் குறித்து பேசிய இயக்குநர், “எளிய மக்களின் வாழ்க்கையில் நடக்கும் தினசரி நிகழ்வுகளின் சுவாரஸ்ய தொகுப்பாக ‘Four சிக்னல்’ இருக்கும். தரமான திரைப்படங்களை எப்போதும் ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள் இந்த திரைப்படத்தையும் ஆதரிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்,” என்றார்.

SSN நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் (CSE) முதல் தரவரிசைகளுடன் பிரகாசிக்கிறார்கள்


முன்னாள் மாணவிகளான மாலதி டி, லிந்தியா எல், சிந்து என் ராகவன் மற்றும் சாய்கிரண் எஸ் ஆகியோர் இந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை, ஆகஸ்ட் 27, 2024: ஷிவ் நாடார் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் முதன்மை பொறியியல் நிறுவனமான எஸ்எஸ்என் இன்ஸ்டிடியூஷன்ஸ், இன்ஜினியரிங் பிரிவில் 46வது இடத்தையும், என்ஐஆர்எஃப் 2024 தரவரிசையில் ஒட்டுமொத்தமாக 81வது இடத்தையும் பெற்றுள்ளது. இந்த ஆண்டு மதிப்புமிக்க இந்திய நிர்வாக சேவை (IAS) மற்றும் இந்திய வருவாய் சேவை (IRS) ஆகியவற்றில் பாதுகாப்பான பதவிகள் மற்றும் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற முன்னாள் மாணவர்களின் விவரங்களை அறிவித்தது. யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) 2023 பேட்ச்சில் 1,016 பேரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களில், எஸ்எஸ்என் பெருமையுடன் நான்கு முன்னாள் மாணவர்களை பெருமைப்படுத்துகிறது: மாலதி டி, லிந்தியா எல் மற்றும் சிந்து என் ராகவன், ஐஏஎஸ் பதவிகளைப் பெற்றவர் மற்றும் ஐஆர்எஸ்க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சாய்கிரண் எஸ். அவர்களின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் அவர்களை இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லுக்கு கொண்டு சென்றுள்ளது.

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் பட்டதாரியான மாலதி டி (2010 ஆம் ஆண்டு பேட்ச்), இந்திய கடற்படையில் பணியாற்றிய பிறகு 237 AIR ஐப் பெற்றுள்ளார், இவர் பள்ளி செல்லும் குழந்தையின் தாய் . “எஸ்எஸ்என் கல்வியாளர்களுடன் சேர்ந்து நீங்கள் வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்கிறீர்கள்” என்று முதலிடம் பிடித்தவர் குறிப்பிட்டார். SSN பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த (2020 ஆம் ஆண்டின் பேட்ச் ) சாய்கிரண் எஸ், 712 AIR ஐப் பெற்றார். இவர் நான்கு வருட படிப்புக்கான SSN இன் வாக்-இன் வாக்-அவுட் முழு உதவித்தொகையையும் பெற்றவர் .மேலும் 2016 ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் அகில இந்திய ரேங்க் 7 வது இடத்தைப் பெற்றுள்ளார் . “எனது கல்வியில் நிர்வாகத்தின் அர்ப்பணிப்பு என்னை சிறந்து விளங்குவதற்கு தூண்டியது.” என்று அவர் கூறினார் .

பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்த லிந்தியா எல் (2020 ஆம் ஆண்டு பேட்ச்), SSNCE பட்டதாரிகளின் பன்முகத்தன்மை மற்றும் தகவமைப்புத் திறனை 354 AIR மூலம் எடுத்துக்காட்டுகிறார். 2022 இல் UPSC தேர்வுகளுக்குத் தயாராவதற்காக உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தில் வேலையை விட்டுவிட்டார். “எனது உத்வேகங்களில் ஒன்று திரு. ஷிவ் நாடார் அவர்களின் நேர்காணல், அதில் அவர் இளைஞர்களை பொது சேவையில் ஈடுபட ஊக்குவிக்கிறார்.”என்று அவர் நினைவு கூர்ந்தார்

சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான சிந்து என் ராகவன் (பேட்ச் 2015) 336 AIR ஐப் பெற்றுள்ளார். முன்னதாக, அவர் பட்டப்படிப்பில் இருந்து தனது சிவில் சர்வீசஸ் தயாரிப்பைத் தொடர்ந்தார். அவர் கூறுகையில் “திரு. ஷிவ் நாடாரின் பரோபகார நடவடிக்கைகள் மற்றும் கல்வித் துறையில் சிறந்து விளங்குவதற்கான அவரது வேட்கை உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று கூறினார்.

SSN நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கலா, இந்த சாதனை குறித்து தனது பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். அவர்களின் வெற்றி அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும், மேலும் எதிர்காலத் பேட்ச்களுக்கு ஒரு அளவுகோலை அமைத்துள்ளது, உயர் இலக்கை அடையவும் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கவும் அவர்களை ஊக்குவிக்கிறது. SSN குடும்பம் அவர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பங்களிக்கும் வகையில், சேவைகளில் தங்கள் பயணத்தைத் தொடங்கும்போது, அவர்களின் எதிர்கால முயற்சிகளில் சிறந்து விளங்க வாழ்த்துகிறது.

திறமையை வளர்ப்பதற்கும் கல்வியை மேம்படுத்துவதற்கும் அதன் அர்ப்பணிப்புக்காக அறியப்பட்ட ஷிவ் நாடார் அறக்கட்டளை, இந்த வெற்றியை அதன் மற்றொரு பெருமையாக கொண்டாடுகிறது. ஒரு உகந்த கற்றல் சூழலை வழங்குவதற்கும், சிறந்து விளங்குவதற்கும் அறக்கட்டளையின் தொடர்ச்சியான முயற்சிகள் இந்த சாதனையாளர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் கருவியாக உள்ளன.

“சாலா” திரைவிமர்சனம்

சிறுவயதில் தீரன் ஏரியாவில் தாதாவாக இருக்கும் அருள்தாஸின் உயிரை ஒரு மோதலில் போது காப்பாற்றுகிறார்.உடனே தாதா அருள்தாஸ் தன் வாரிசாக கதாநாயகன் தீரனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அருள்தாஸின் எதிரி தாதாவான சார்லஸ் வினோத் ஏலத்தில் அருள்தாஸ் நடத்தும் பார்வதி பார் உரிமையை ஏலத்தில் கைப்பற்றுகிறார். இழந்த பார்வதி பாரை மீட்டெடுப்பதே அருள்தாஸின் லட்சியமாக வாழ்ந்து வருகிறார்.கதாநாயகன் தீரன் வளர்ந்து தனது குருவிற்காக அந்த பார்வதி பாரை மீட்டெடுப்பதில் உறுதுணையாக நிற்கிறார்.பலநூறு பார்களை நடத்த வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கும் கதாநாயகன் தீரன்.
மதுபான கடைகளையும் பார்களையும் மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தும் நாயகி ரேஷ்மாவுக்கும் தீரனுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட, எதிரும் புதிருமாக இருக்கும் இருவருக்கும் நடக்கும் மோதல் காதலாக மாறுகிறது.இதற்கிடையே இந்த பார்வதி பாரை ஏலம் எடுப்பதில் நாயகன் தரப்புக்கும், வில்லன் தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
பார்வதி பாரை ஏலம் எடுத்தார்களா? எடுக்கவில்லையா?ரேஷ்மாவுக்கும் தீரனுக்கும் காதல் என்ன ஆனது ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் இந்த சாலா திரைப்படத்தின் மீதிக்கதை.

சாலா திரைப்படத்தில் அறிமுக நாயகனாக தீரன் அறிமுகமாகியிருக்கிறார். ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு என்று முரட்டுத்தனமாக இருந்தாலும் அப்பாவித்தனமான தனது நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.தன் காதலி கதாநாயகி ரேஷ்மா பாதிப்புக்கு ஆளாகும்போது பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் வரவேற்புப் பெறுகிறார்.
நாயகியாக ரேஷ்மா வெங்கடேஷுக்கு புரட்சிகரமான கதாபாத்திரம், அதை புரிந்து நடித்திருக்கிறார்.
சார்லஸ் வினோத் மற்றும் அருள்தாஸ் வழக்கமான நடிப்பு கொடுத்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார்கள்..
நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீநாத் , சம்பத் ராம், யோகிராம், பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குருவின் அற்புதமாகவும் காட்சிப்படுத்துள்ளார்.
இசையமைப்பாளர் தீசன் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறார்.
மதுப்பழக்கத்திற்கு மக்கள் எப்படியெல்லாம் அடிமையாகி இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் இயக்குநர் மணிபால் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

சபையர் ஸ்டுடியோஸ் வெளியிடும் பிரபு தேவாவின் ‘பேட்ட ராப்’

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய சபையர் ஸ்டுடியோஸ்

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை சபையர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, கலாபவன் ஷாஜோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி.கே.தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. ஆர். மோகன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் மோசன் போஸ்டர், இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பினை பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறையாக கோயம்புத்தூரில், Return Of The Dragon ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert !!

Torque Entertainment மற்றும் Raj melodies வழங்கும், “Return Of The Dragon” ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert !!

கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இளைஞர்களின் யூத் Icon ஆக கொண்டாடப்படும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “Return Of The Dragon” இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. Torque Entertainment மற்றும் Raj melodies நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் மிகபெரிய கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

தமிழக Independent Music துறையில் ராப் பாடகராக அறிமுகமாகி, தமிழ் திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், நாயகனாகவும் உயர்ந்து, இன்றைய இளைஞர்களின் யூத் Icon ஆக மாறியுள்ளவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக்கச்சேரிக்கு உலகம் முழுதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. “Return Of The Dragon” எனும் பெயரில் லண்டன், மலேசியா என உலக நாடுகளில் வெற்றிகரமாக இசைக்கச்சேரி முடிந்த நிலையில் தற்போது தன் சொந்த ஊரான கோயம்புத்தூரில் Music Concert யை நடத்தவுள்ளார்.

Torque Entertainment மற்றும் Raj melodies நிறுவனங்கள் இணைந்து இந்த Music Concert யை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளன.
இந்த Music Concert ல் கோயம்புத்தூர் ரசிகர்களுக்கென பிரத்தியேகமாக பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றது.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்களுக்கு, இனிப்பான செய்தியாக வந்துள்ள இந்த Music Concert, இப்போதே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது.

இந்த Music Concert ல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் வகையில், முழுப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதற்கு முன்பாக நடைபெற்ற Concert ல் ஏற்பட்ட சிக்கல்கள், எதுவும் இவ்விழாவில் ஏற்படாதவாறு, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை, ஆன்லைனில் Paytm ஆப் மூலம் எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

“போகுமிடம் வெகு தூரம் இல்லை” திரை விமர்சனம்….

விமல் கருணாஸ் மற்றும் பல நடிப்பில் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் போகுமிடம் வெகு தூரம் இல்லை

அமரர் ஊர்தி ஓட்டுனரான விமல், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனது தாத்தாவை துணைக்கு வைத்து விட்டு மருத்துவ செலவிற்காக -சென்னையில் இறந்தவரின் சடலத்தை ஏற்றுக் கொண்டு திருநெல்வேலிக்கு பயணிக்கிறார்.வழியில் கூத்து கலைஞர் கருணாஸ் தன்னை செல்லும் வழியில் இறங்கி விடுமாறு கேட்க, மனதளவில் பிடிக்காமல் துணைக்காக ஏற்றுக்கொள்கிறார்.
இருவரும் பயணிக்க வழியில் ஒரு காதல் ஜோடியும் வண்டியை நிறுத்தி ஏறிக்கொள்ள இந்த இருவர் மற்றும் கருணாஸ்னால் பல விதத்தில் பல பிரச்சனைகள் கதாநாயகன் விமலுக்கு வருகிறது.
இந்த காதல் ஜோடிகளால் வந்த பிரச்சனை என்ன? அமரர் ஊர்தியில் உள்ள சடலத்தை ஒப்படைத்தாரா? ஒப்படைக்கவில்லையா? என்பதுதான் போகுமிடம் வெகு தூரம் இல்லை திரைப்படத்தின் மீதிக்கதை.
அமரர் ஊர்தி ஓட்டுனர் குமார் கதாபாத்திரத்தில் மிகவும் கனத்த முகத்துடனும் தன்னுடன் பயணித்த கருணாஸ் இறந்த பிறகு மிகவும் நினைத்து வேதனைப்படும் காட்சிகளிலும் அருமையாக தன்னை மறந்து நடித்துள்ளார்.எப்பொழுதும் பார்க்கும் விமலாக இல்லாமல் புது மாதிரியான விமலாக நடித்திருக்கிறார்.
மற்றொரு கதையின் நாயகனாக கருணாஸ் நடித்துள்ளார்.
கூத்துக் கலைஞர் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாகவும் கூத்துக் கலைஞரின் நடை உடை பாவனை அனைத்தையும் ஏற்று கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அற்புதமாக நடித்து இருக்கிறார்.
நம்மளால் ஏற்பட்ட தவறுக்கு நாம் தான் பரிகாரம் செய்ய வேண்டும் என கருணாஸ் எடுக்க முடிவு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை தூக்கி வாரி போட்டு விட்டது.
விமல் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மேரி ரிக்கெட்ஸ், அருமையாக நடித்துள்ளார்.
தீபா சங்கர், ஆடுகளம் நரேன், பவன், சார்லஸ் வினோத், அருள்தாஸ், வேல ராமமூர்த்தி, மனோஜ்குமார் அனைத்து கதாபாத்திரங்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் டெமில் சேவியர் எட்வர்ட்ஸ். மிகச்சிறந்த ஒளிப்பதிவை கொடுத்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இசை உயிரோட்டமாக உள்ளது.
ஒரு அமரர் ஊர்தி ஓட்டுனரின் ஒரு நாள் வாழ்க்கையை வைத்து, அதை சுற்றிய பல சுவாரஸ்யமான காட்சிகளும் அந்த ஒரு நாள் வாழ்க்கையின் அனுபவங்களையும் படமாக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மைக்கேல் கே ராஜா. இந்த அமரர் ஊர்தியில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களை மையமாக வைத்து யோசித்த கதை அருமை, அதன் திரை கதையை இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு சுவாரஸ்யமாக அமைத்திருந்தால், அந்த மனிதர்களின் வாழ்க்கையை சுவாரசியமாக கொடுத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
மொத்தத்தில் போகும் இடம் வெகு தூரம் இல்லை விமலின் திரை வாழ்க்கைக்கு நிச்சயம் ஒரு மயில் கல்லாக இருக்கும்

“வரம் ” சினிமாஸ் தயாரிப்பில் நடிகர் ரஞ்சித், மெகாலி மீனாட்சி விட்டல் ராவ்

“வரம் ” சினிமாஸ் தயாரிப்பில் நடிகர் ரஞ்சித், மெகாலி மீனாட்சி விட்டல் ராவ் நடித்துள்ள இறுதி முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது..!!

வரம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இறுதி முயற்சி திரைப்படத்தினை இயக்குனர் நடிகர் திரு ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் உதவியாளர் வெங்கட் ஜனா எழுதி இயக்கி உள்ளார்..

இறுதி முயற்சி திரைப்படம் இனிதே நிறைவு பெற்றதை கொண்டாட படக்குழுவினர் மனநலம் குன்றிய சிறுவர்கள் பள்ளிக்கூடத்திற்க்கு சென்று அங்கு படிக்கும் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி அவர்களை சந்தோஷ படுத்தி அந்த மனநலம் குன்றிய சிறுவர்களின் அன்பையும் ஆசியையும் பெற்று வந்தனர்…

இந்த இறுதி முயற்சி திரைப்படம் சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில் வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்களும் சந்திக்கும் ஒரு பிரச்சினையை நெஞ்சத்தை பதை பதைக்க வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இறுதி முயற்சி திரைப்படம் உருவாகியுள்ளது..

ரஞ்சித் மெகாலி மீனாட்சி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, விட்டல் ராவ் கதிரவன் புதுப்பேட்டை சுரேஷ் இன்னும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளார்…

எழுத்து இயக்கம் வெங்கட் ஜனா, எடிட்டிங் வடிவேல் விமல் ராஜ், ஒளிப்பதிவு சூர்யா காந்தி, இசை சுனில் லாசர், கலை பாபு M பிரபாகர், பாடலாசிரியர் மஷீக் ரஹ்மான், பாடகர் அரவிந்த் கார்ணீஸ் , ஸ்டில்ஸ் மணிவண்ணன், டிசைன் ரெட்டாட் பவன், மக்கள் தொடர்பு வேலு..

இறுதி முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற‌ நிலையில், இறுதி கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வர , விரைவில் படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் வெளியீடு பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது….

DION Electric Vehicles Unveils Two New Two-Wheeler Models

● Thiru. T. M. Anbarasan, Minister of MSME and Tamil Nadu Urban Habitation
Development Board, and Thiru.T. Mano Thangaraj, Minister of Milk & Dairy
Development, Government of Tamil Nadu, launch the vehicles
● Company opens a new showroom at Ramapuram in Chennai for the display
and sale of its two-wheeler and three-wheeler models


Chennai, August, 23 2024
DION Electric Vehicles, a fast-growing smart mobility brand owned by Powertrans
Mobility Ltd, has introduced two new unique e-scooter models: Augusta SP, and Asta
FH. The company has also opened its new showroom in Chennai at Ramapuram.
DION’s product portfolio consists of seven EV models. It has three showrooms and five
service centers. Through a partnership with a service provider, customers can access
vehicle servicing at 256 stations across Tamil Nadu.
Thiru. T. M. Anbarasan, Minister of MSME and Tamil Nadu Urban Habitation
Development Board, and Thiru. Mano Thangaraj, Minister of Milk & Dairy Development,
Government of Tamil Nadu, inaugurated the two-wheeler models and the new
showroom, respectively, in the presence of guests of honour: Chevalier Dr. V. G.
Santhosam, Chairman of VGP Group of Companies; Ms. Rathika Selvi Venkatesh
Pannaiyar, former Member of Parliament and Ex Minister, Govt of India and Mr.
Prashanth Vijayamma, Director of AIOFT Ventures Limited, Bengaluru.
Top management from Power Trans Mobility, including CEO Mr. S. M. Antony Thomas,
Managing Director Ms. A. Anusha Margaret, and directors Ms. A. Ashika Rit and Mr. J.
Vinodh Jeyaraj, took part in the event. Also present were the company’s financial
advisor, Mr. CA A. John Moris, Managing Partner of A John Moris & Co Chartered
Accountants and legal advisor, Mr. P. Jesus Morris Ravi, a senior advocate.
Augusta SP e-scooter offers high performance with a 7.5 KW peak PMSM hub motor,
reaching top speeds of 120 kmph. Safety and comfort are ensured by advanced braking
systems and front telescopic suspension, with Augusta SP featuring rear spring load
hydraulic suspension and Asta FH a rear mono spring load hydraulic setup. Both
models include anti-theft locks, front projector LEDs, and rear LEDs for visibility.

Augusta SP boasts a 4.3 KW lithium-ion traction battery with a range of up to 110
kilometers, while Asta FH is designed for peak performance. Both vehicles charge
efficiently with a 1Kva charger in just 4-5 hours, making them reliable choices for riders
seeking speed and modern technology. Augusta SP has an on-road price of Rs
1,79,750, while Asta FH is priced at Rs 1,29,999. An inaugural offer provides a discount
of up to Rs 22,000/- till 23 rd Sep. starting today.
In his comments, Mr. S. M. Antony Thomas said, “We are thrilled to launch our two
new 2-wheeler models, which are a testament to our commitment to innovation and
excellence. These vehicles are equipped with advanced PMSM motors, cutting-edge
batteries, and the latest electrical and electronic systems tailored to each model’s
needs. Since our inception in 2020, we have introduced two models in both the 3-
wheeler and 2-wheeler segments, and the positive market response to their
performance has been incredibly encouraging. As we continue to grow, we are excited
to expand our reach and establish a pan-India presence, bringing our state-of-the-art
electric vehicles to more customers across the country.”
Powertrans Mobility Ltd manufactures electric vehicles and their components. It also
has plans to install charging and swapping stations. The company currently focuses on
producing electric bikes, e-scooters, and electric loaders. It has a dedicated team for
R&D, design, and manufacturing.
For more details, please visit: www.dionev.com

Action Coach – the World’s largest business coaching organisation now enters TamilNadu

Chennai, 23/08/2024: Action coach – the worlds largest business coaching organisation was formally inaugurated in Tamilnadu. Action coach is a Business Coaching organisation providing business insights and strategies to mentor, strengthen and build businesses in the region.

Action Coach was launched in the presence of Gaurav Maria, Chairman and Founder, Franchisee India group. He was also accompanied by group of Serial entrepreneurs & promoters of Action Coach Tamil Nadu – Sunil Sethia, ⁠Jahangeer Ahamed, ⁠Haffis Basha, ⁠Sunitha Deepak, ⁠Subhash UN & ⁠Raghav Koushik R.

Sunil Sethia, Partner, Action Coach Tamil Nadu said, “Our Vision is the positively impact and create abundance for more than one million business owners through business re-education in Tamil Nadu & Puducherry through a team of 100 plus successful action coach business coaches.”

Action Coach not only helps builds Businesses but also focuses on executive coaching. From businesses and individuals, from start-ups through to executives, their coaching programmes are designed to identify your challenges and to apply practical and results-driven solutions. 

In India, Action Coach is present in 21 States, with 138 Coaches managing 650 clients and business every week. Globally Action Coach is present in 99 countries with over 3000 coaches and manage over 30000 businesses every week.

Action Coach offers one and two-day programmes on specific areas of business building. Prospective business owners can join a variety of programs based on their business goals and objectives. They could opt for a pre-existing business program and have a program tailor made for individual business requirements. In addition to Coaching, the organisation also offers a range is self help products and solutions.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம்

வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

1950கள் முதல் மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித் குமார், தனுஷ் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்த வெற்றி படங்களை தயாரித்துள்ள பாரம்பரியமிக்க இந்த குடும்பம் முதல் முறையாக இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறது. இத்திரைப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்

கதைக்கு முக்கியத்துவம் கொண்ட, ஆறு முதல் அறுபது வரை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கும் வகையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார்.

இந்த திரைப்படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்