Breaking
September 30, 2024

June 2024

Launch of VS Wellness on Wheels – Free Cancer Screening Bus

Chennai, 19th June 2024:  The VS Medical Trust, in partnership with the Rotary Club of Madras, proudly announced the successful launch and commencement of medical services of the VS Wellness on Wheels bus today. The launch event was held at the official residence of Thiru Ma. Subramanian, Hon’ble Minister for Health and Family Welfare, Government of Tamil Nadu, marks a significant step towards accessible and comprehensive healthcare for underserved communities.  VS Wellness on Wheels will be used for conducting cancer awareness and screening camps for the underprivileged free of cost.

Thiru Ma. Subramanian inaugurated the event with a heartfelt note, highlighting the critical need for such initiatives. “The VS Wellness on Wheels project is a testament to our collective commitment to enhancing healthcare accessibility and quality for the people of Tamil Nadu. This initiative, spearheaded by VS Medical Trust and supported by the Rotary Club of Madras, embodies the spirit of community and compassion, offering crucial cancer screenings and health services to those who need them the most,” said the Hon’ble Minister.

The launch was attended by eminent personalities, including Prof. Dr. Subramanian, Senior Medical Oncologist, Founder Chairman, and Managing Director of VS Group of Hospitals, Rtn. Ravi Sundaresan, President Rotary Club of Madras, Rotary International District 3232  and other dignitaries from the club, Prof. Dr. S. Sundar, Medical Director and Senior Joint Replacement and Tumour Surgeon at VS Group of Hospitals, Mr. Muthu Subramanian, Executive Director of VS Group of Hospitals and the donors of the bus – Sri. Jain, Founder Chairman, Access Healthcare Sri. EMC Palaniappan, MD, Chona Financial Services Limited and Sri. Vinod Saraogi, Chairman, Go Colors also graced the occasion.

Prof. Dr. Subramanian underscored the escalating crisis of cancer in his address, stating, “With breast and cervical cancers on the rise, early detection is more critical than ever. The VS Wellness on Wheels bus will serve as a mobile health unit, providing life-saving screenings and health services across North Chennai and beyond, especially in areas where healthcare facilities are lacking.”

The VS Wellness on Wheels Bus, equipped with state-of-the-art medical technology, will provide mammograms and other cancer screenings to suburban and rural communities throughout Tamil Nadu. This project aims to offer early diagnosis opportunities and enhance the overall health and well-being of the population.

Rtn Ravi Sundaresan highlighted the importance of this initiative, noting, “The launch of this mobile unit marks the beginning of a new era in healthcare delivery. By bringing advanced medical services directly to the community, we are breaking down barriers to healthcare access and ensuring that even the most remote areas receive the care they deserve.”

He added, “The support from our magnanimous donors and the dedication of the VS Medical Trust and VS Hospitals teams are the driving forces behind this initiative. We are committed to extending the reach of quality healthcare to every corner of Tamil Nadu. We look forward to esteemed corporates, institutions, and industries coming forward to support this wonderful initiative. Including this in your Corporate Social Responsibility (CSR) activities can play a pivotal role in conducting health camps in rural areas in Tamil Nadu and beyond.”

Meril Announces Prestigious LANCET Publication for Landmark RCT of the MYVAL THV Series, Researched and Developed by INDIA

~ Meril Life Sciences is proud to announce that its LANDMARK randomized controlled trial (RCT) for the MYVAL THV series has been published in the prestigious medical journal The Lancet ~

~ This recognition underscores the significance and impact of the MYVAL THV series, a pioneering medical device researched and developed entirely in India ~

Chennai, June 19th, 2024: Meril Life Sciences, an India-based global medical device company, recently conducted a trial study titled ‘Comparison of Early Outcomes of Newer-Generation Myval Transcatheter Heart Valve Series with Contemporary Valves (Sapien and Evolut) THV Series in Real-World Individuals with Severe Symptomatic Native Aortic Stenosis: A Randomised Non-Inferiority Trial’. The LANDMARK randomized controlled trial for the MYVAL THV series has been published in The Lancet, a prestigious medical journal.

Sharing details about the same, Prof. Andreas Baumbach, Global Principal Investigator said, “The Landmark trial showed that the Myval THV series performed as safely and effectively as contemporary THV series. It is a valve made for everyday clinical practice and an all-comers population. The special feature of intermediate diameters allows for more accurate sizing, which has the potential to translate into improved long-term outcomes. Our patients will be followed up for 10 years and it will be interesting to see the long-term results in the three treatment arms.”

This pivotal research compares early outcomes of the new-generation Myval THV series with contemporary (Sapien and Evolut) THV series in real-world patients suffering from severe symptomatic native aortic stenosis (AS). The findings highlight that the Myval THV series is non-inferior to global giants.

On the milestone achievement Interventional cardiologist Dr G.Sengottuvelu,  said,We are elated and proud at being the first medical device company in India to research and develop MYVAL THV series. Being featured in Lancet underscores the significance and impact of the MYVAL THV series. Also, this has proved India’s capability to set new standards in cardiovascular care, revolutionising heart valve treatment worldwide. This trial also reiterates the success of the ‘Make in India’ initiative.” 

Explaining the importance of THV series, Dr John Jose E, Interventional cardiologist said, The LANDMARK Trial is a well-designed multi-center international study that has established comparable safety and effectiveness of made-in-India Myval trans-catheter heart valve with contemporary western manufactured ones. The results of the study and features of this valve have been well-received by the global interventional Cardiology community. As one of the leading trans-catheter aortic valve implanters’ (TAVI operator) in the country, I am not at all surprised by the results of the study. The study findings align with our clinical experiences in a multinational randomized control trial environment. A considerable number of our Indian patients have surpassed the five-year follow-up mark, and the long-term outcomes appear promising.

The release of this research is a significant milestone, not just for the Indian device sector, but also for the global aortic stenosis patient-population as a whole. The availability of an affordable, safe

and efficacious valve for trans-catheter aortic valve implantation (TAVI- a non-surgical alternative treatment) would greatly benefit patients in emerging nations like India, as well as in advanced countries around the globe.

Dr. Thomas Alexander, Consultant and Interventional Cardiologist and Head of Division of Cardiology at Kovai Medical Center and Hospital, Coimbatore said that MYVAL THV series is a novel THV that comes in various size options compared to currently available THVs, making it easier to find the right fit for different patients.

The Myval THV series is available in a wide range of sizes, including traditional sizes (20 mm, 23 mm, 26 mm, and 29 mm), intermediate sizes (21.5 mm, 24.5 mm, and 27.5 mm), and larger sizes (30.5 mm and 32 mm). This extensive range ensures that more patients receive a valve that closely matches their anatomical needs, potentially improving outcomes and making advanced heart valve treatment more accessible to a broader population.

பிருத்வி அம்பர்- ‘ரதாவரா’ இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா கூட்டணியில் ‘சௌகிதார்’

‘தியா’ புகழ் நடிகர் பிருத்வி அம்பர்- ‘ரதாவரா’ இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா கூட்டணியில் ‘சௌகிதார்’ எனும் புதிய திரைப்படம் தயாராகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ‘ரோரிங் ஸ்டார்’ ஸ்ரீ முரளி வெளியிட்டார்.

‘தியா’ புகழ் நடிகர் பிருத்வி அம்பர் மற்றும் ‘ரதாவரா’ படத்தின் இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ஆகிய இருவரும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘சௌகிதார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிருத்வி அம்பர் ‘சௌகிதார்’ வேடத்தில் நடிக்கிறார். ‘சௌகிதார்’ எனும் படத்தின் தலைப்பை சிவப்பு வண்ண எழுத்துகளில் படக்குழுவினர் வெளியிட்டனர். ‘ரோரிங் ஸ்டார்’ ஸ்ரீ முரளி – இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பாவின் ஆறாவது படைப்பான ‘சௌகிதார்’ படத்தின் தலைப்பை வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். ‘சௌகிதார்’ – ஒரு பன்மொழி திரைப்படம். கன்னடத்தில் y மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் இந்த திரைப்படம் தயாராகிறது.

‘சௌகிதார்’ எனும் தலைப்பை வைத்து இந்த திரைப்படம் மாஸான படம் என நினைத்து விடாதீர்கள். உண்மையில் இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் புதிய கதையுடன் களம் காண்கிறார். ‘அனே பாடகி ‘ படத்தில் நகைச்சுவை, ‘ரதாவரா’ படத்தில் வழிப்பாட்டு கருப்பொருள், ‘தாரகாசுர’ திரைப்படத்தில் தனித்துவமான கதை களம், ‘ரெட் காலர்’ எனும் திரைப்படத்தில் க்ரைம் திரில்லர், ‘கௌஸ்தி’ திரைப்படத்தில் கடலோர பின்னணி.. என வித்தியாசமாக வடிவமைத்து ரசிகர்களிடம் பிரபலமானவர்.

பிருத்வி அம்பர் மற்றும் சந்திரசேகர் பாண்டியப்பா கூட்டணியில் தயாராகும் இந்த திரைப்படத்தை வித்யா சேகர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கல்லஹள்ளி சந்திரசேகர் தயாரிக்கிறார்.‌ இந்த திரைப்படத்திற்கு சச்சின் பஸ்ரூர் இசையமைக்க, பாடலாசிரியர்கள் வி. நாகேந்திர பிரசாத் மற்றும் பிரமோத் மறவந்தே ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள்.‌ படத்தில் இடம்பெறும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை விரைவில் படக் குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

‘அனே பாடகி’ படத்தின் மூலம் சாண்டல்வுட்டில் அறிமுகமான இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ‘ரதாவரா’ படத்தின் மூலம் புகழ்பெற்றார். இந்த வெற்றிகளை தொடர்ந்து அவர் பாலிவுட்டிலும் அறிமுகமானார். கிஷோர் நடித்த ‘ரெட் காலர்’ எனும் அதிரடி திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை நிறைவு செய்ததும் குருதத் கனிகா இயக்கிய ‘கரவாளி’ எனும் திரைப்படத்திற்கும் சந்திரசேகர் பாண்டியப்பா கதை எழுதியிருக்கிறார்.

“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தின் “பைரவா ஆன்தம்”

இந்தியாவின், இந்த ஆண்டின் மிகப் பெரிய படத்தின் எதிர்பார்ப்புமிக்க பாடல் – பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் இணைந்து கலக்கும் “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தின் “பைரவா ஆன்தம்”

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில், பெரும் காத்திருப்பிற்கு பிறகு “கல்கி 2898 கி.பி.” படத்திலிருந்து, தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக, “பைரவா ஆன்தம்” பாடலை வெளியிட்டுள்ளனர்.

உலகளாவிய பிரபலங்களாக திகழும் பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் இணைந்து கலக்கும் இந்தப் பாடல், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கல்கி 2898 கிபி திரைப்படம், திரையுலகின் மாயாஜாலம் எனலாம், இது இந்திய நாட்டின் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், காமிக்-கான் சான் டியாகோவில் முத்திரை பதித்த முதல் இந்தியத் திரைப்படமாகும், இது அனிமேஷன் முறையில் முன்னுரை வீடியோ தொகுப்பு கொண்ட முதல் இந்தியத் திரைப்படம் மற்றும் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் 4 டன் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’யையும் காட்சிப்படுத்தி இதுவரையிலான திரை வரலாற்றில், பல புதுமைகளை நிகழ்த்திய படைப்பாக திகழ்கிறது இப்படம்.

எதிர்கால உலகில், காசியின் இருண்ட பக்கத்தில் அமைக்கப்பட்ட மியூசிக் வீடியோ ஒரு காட்சி அற்புதமாக அமைந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், குமாரின் பாடல் வரிகளில், தில்ஜித் டோசன்ஜ் மற்றும் விஜய்நரேன் பாடிய இப்பாடல், படத்தில் பிரபாஸின் பைரவா கதாபாத்திரத்தின் சரியான அறிமுகமாக அமைந்துள்ளது. போனி வர்மாவின் நடன அமைப்பில், தில்ஜித் மற்றும் பிரபாஸின் தனித்துவமான நடன அசைவுகளும், அற்புதமான காட்சியமைப்புகளும் கலந்து ரசிகர்களை மெய்மறக்க செய்கிறது!!

வீடியோ பாடலைக் காண. – https://www.youtube.com/watch?v=5UfGZFrXKig

கல்கி 2898 கிபி படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உட்பட இந்தியாவின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ள இப்படம் 2024 ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

நடிகை ப்ரீத்தி முகுந்தன் அறிமுகப்படுத்திய “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0”

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தென்னிந்தியாவின் முன்னணி ஜூவல்லரி நிறுவனங்களில் ஒன்றாக ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் ஜூவல்லரி “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகை டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிகழிச்சியில் கலந்து கொண்ட நடிகை ப்ரீத்தி முகுந்தன் “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகைகள் அறிமுகம் செய்தார். இவ்விழா சென்னை அண்ணா நகரில் உள்ள ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் ஜூவல்லரியில் கோலாகலமாக நடைபெற்றது.

நகை அறிமுகம்குறித்து இயக்குனர் திரு AVR சித்தாந்த் கூறியதாவது:-

எங்களின் முந்தய குமரி கண்டம் கலெக்ஷனை பெரும் வெற்றியாக்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி. அதன் தொடர்ச்சியாகப் புதியதோர் உலகிற்கு நாங்கள் உங்களை அழைத்துச்செல்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். குமரிக்கண்டம் என்றாலே, தொன்மையான, அழியாத ஒரு பாரம்பரியத்தைக் குறிக்கும். அதனை மையமாகக் கொண்டு, “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகைகள், நம் முன்னோர்களின் கலைநுணுக்கத்தை, நவீன சாயலில் வழங்கும் ஒரு முயற்சியாகும். ஒவ்வொரு நகையும், அந்தத் தொன்மையான பரம்பரை மாறாமல், புதியதோர் அழகில் உருவாக்கப்பட்டுள்ளது.

நம் பாரம்பரியம் போற்றும் வகையில் அற்புத கலைநுணுக்கங்களோடு, உங்கள் வீட்டு இளவரசிக்கான, திருமண வைபவத்திற்கு ஏற்ற ஆயிரக்கணக்கான நகைகள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது! கற்பனையை மிஞ்சிய குமரிக்கண்டத்து பொற் சிற்பி நெய்த திருவாபரணங்கள் இங்குக் கிடைக்கும்.

இந்தக் குமரிக்கண்டம் கலெக்ஷனின் சிறப்பு என்னவெனில், இது முந்தைய கலெக்ஷனைவிட அதிக பரிசோதனைகளை எதிர்கொண்டு, அவற்றில் தோன்றிய பல புதுமைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இவை, உங்கள் பார்வைக்கு மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கை முறைமைகளில் ஒரு முக்கியமான பங்காக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.மேலும் சிறப்பம்சமாக எங்களது அனைத்து ஷோரூம்களிலும் குமரிக்கண்டத்து உலகின் வழி எம்பெருமானின் வைபவத்துடன் கூடிய உற்சவ தரிசனம் நடைபெறுகிறது. அதனையும் வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம் என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய நடிகை ப்ரீத்தி முகுந்தன்:-

ஏ.வி.ஆர்.ஸ்வர்ண மஹாலுடன் இரண்டாண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளேன் “குமரிக்கண்டம் கலெக்ஷன் 1.0” நகைகளை நான் தான் அறிமுகம் செய்தேன், நமது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் நகைகள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் அருமையான விஷயம் “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” அறிமுகப்படுத்துவதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.இந்த அழகிய கலெக்ஷனை உங்கள் கண்களால் பார்க்க, உங்கள் இதயத்தில் உணர, ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் ஜூவெல்லருக்கு வருகை தாருங்கள்.

ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் குறித்து

ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் ஜூவல்லரி சேலத்தில் ஸ்வர்ணபுரி, கடைவீதி – 2 கிளைகள், சென்னை, புதுச்சேரி, தாரமங்கலம், மேட்டூர், ஈரோடு, ராசிபுரம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, அரூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர்-ஜெயநகர், டிக்கென்சன் ரோடு மற்றும் மல்லேஸ்வரம் ஆகிய இடங்களில் பரிசுத்தமே எங்கள் பாரம்பரியம் என்ற கொள்கையோடு செயல்பட்டு வருகின்றன.

பெரும் சதிகளுக்குப் பின்னால், மறுக்கப்படும் காதல் கதை “பருவு” இப்போது உங்கள் ZEE5 தளத்தில் !!

~ ZEE5 ஒரிஜினல் தெலுங்கு சீரிஸான ​​”பருவு” தற்போது ZEE5 இல் ஸ்ட்ரீமாகிறது. மேலும் இந்த சீரிஸ் தமிழ் மொழியிலும் ஸ்ட்ரீமாகிறது ~

சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த சீரிஸை, சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ளார். பவன் சதினேனி ஷோ ரன்னராக பணியாற்றியுள்ளார். பருவு சீரிஸில் நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா பட்நாயக் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ZEE5 ஒரிஜினல் தெலுங்கு க்ரைம் த்ரில்லர் சீரிஸான ​​”பருவு” சீரிஸை பெருமையுடன் அறிவித்துள்ளது. ஷோ ரன்னராக பவன் சதினேனி பணியாற்ற, நம்பிக்கைக்குரிய அறிமுக இயக்குநர்களான சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இந்த சீரிஸை இயக்கியுள்ளனர். சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ள இந்த சீரிஸை, தலைசிறந்த எழுத்தாளரான சித்தார்த் நாயுடு எழுதியுள்ளார். இந்த பரபரப்பான திரில்லர் சீரிஸில் நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா பட்நாயக் ஆகியோர் நடித்துள்ளனர். கவுரவக் கொலைகளுக்குப் பலியாகிவிடுமோ என்ற அச்சத்தில், ஒரு தம்பதியினர் தங்களையும் தங்கள் காதலையும் காத்துக் கொள்ளப் போராடுகிறார்கள், சதிகளைத் தாண்டி அவர்கள் வெற்றி பெறுவார்களா, அல்லது சாதி வேறுபாடுகள் அவர்களைப் பிரிக்குமா? பாரம்பரியத்தைக் கடக்கும் உலகில், குடும்பங்கள் தங்கள் ஜாதியைக் காப்பாற்ற முனைந்தால் என்னவாகும் என்பது தான் இந்த சீரிஸின் கதை . ZEE5 இல் “பருவு” பிரத்தியேகமாகத் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் ஸ்ட்ரீமாகிறது. அன்பு, விசுவாசம் மற்றும் மரியாதையைப் பாதுகாக்க ஒருவர் எவ்வளவு தூரத்துக்குச் செல்வார்கள் என்பதைப் பற்றியும், மனிதர்களின் தெரியாத பக்கங்களை இந்த சீரிஸ் வெளிச்சமிட்டுக் காட்டும். ZEE5 இல் முதல் எபிஸோடை இலவசமாகப் பாருங்கள்.

காட்டுத்தனமான சாதி அரசியலால் ஆளப்படும் உலகில், சண்டையிடும் சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வதன் மூலம் சமூக விதிமுறைகளை மீறத் துணியும் ஒரு ஜோடியின் கதையைச் சொல்கிறது பருவு. அவர்களது குடும்பத்தினரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த ஜோடி, குடும்பத்தில் ஏற்படும் ஒரு மரணம் காரணமாக ஒரு நாள் தங்கள் ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களைப் பிரிக்கும் நோக்கில் ஒரு மோசமான திட்டம் தீட்டப்பட்டுள்ளதை அறியும் இந்த ஜோடி, உயிர்வாழ்வதற்கான போராட்டத்தில், அந்த திட்டத்தைத் தோற்கடிக்க நினைக்கும்போது, அவர்கள் வேட்டையாடப்படும் ஒரு நரகத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். பாரம்பரியம், கலாச்சாரம், ஜாதிய அடுக்குகள், குடும்ப மரியாதை என சமூகத்தின் பல அடுக்குகளைத் தாண்டி, தங்களின் காதலில் அவர்கள் வெற்றி பெற முடிந்ததா? என்பதை, இந்த சீரிஸ் பல பரபரப்பான திருப்பங்களுடன், பார்வையாளர்களைக் கவரும் வகையில் சொல்கிறது.

ZEE5 இல் “பருவு” இன்றிலிருந்து தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாகிறது. ZEE5 இல் முதல் எபிஸோடை இலவசமாகப் பார்க்கலாம்.

டிரெய்லர் லிங்க் : https://www.zee5.com/tv-shows/details/paruvu/0-6-4z5570736/paruvu-trailer/0-1-6z5570738

ZEE5 ஒரிஜினல் சீரிஸான ​​‘பருவு’ தெலுங்கு மற்றும் தமிழில் ZEE5 இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள்!

First Galaxy Watch FE Empowers Even More Users With Samsung’s Advanced Health Monitoring Technology

Galaxy Watch FE offers holistic health insights and connected Samsung Galaxy experiences with stylish design

Chennai, India – June 13, 2024: Samsung Electronics today announced the release of Galaxy Watch FE, a new addition to the Samsung smartwatch lineup designed to extend Samsung’s advanced and holistic wellness experience to even more users. Incorporating the groundbreaking hardware performance and advanced health and fitness monitoring features of Galaxy Watch, the Galaxy Watch FE features a stylish design and durable design. This new smartwatch is ideal for those looking to begin their journey to improve their overall wellness with comprehensive insights.

“At Samsung, we strive to bring health and fitness monitoring capabilities to as many people around the world as possible, helping them to make the changes needed to improve their wellness daily and help them reach their goals,” said Junho Park, VP and Head of the Galaxy Ecosystem Product Planning Team, Mobile eXperience Business at Samsung Electronics. “We’re excited to add the new Galaxy Watch FE to our wearables portfolio, offering more people access to personalized health insights that empower them to be motivated and stay healthier day and night.”

Style and Durability That Powers Everyday Wellness

The Galaxy Watch FE, available in a size of 40mm, offers a refreshed look and feel based on the iconic design of the Galaxy Watch series. It comes in three colors — Black, Pink Gold and Silver — with new watch bands featuring distinct blue and orange stitching, enhancing the design and providing a stylish device that complements any look. In addition, Galaxy Watch FE offers a variety of new watch faces that allow users to customize their watch, while the one-click band also makes it easy to switch the band to mix and match to meet their style. Galaxy Watch FE features a Sapphire Crystal glass offering superior durability, which provides users with protection against scratches during day-to-day use.

Making Every Day Healthier and More Motivated

Equipped with Samsung’s advanced BioActive Sensor, Galaxy Watch FE provides an array of powerful fitness and wellness functions that deliver personalized and actionable tips around the clock. To support better sleep for a good start to each day, Galaxy Watch FE offers a variety of advanced sleep features, from monitoring sleep patterns to sleep coaching and helping to create a sleep-friendly environment. Plus, users can monitor their holistic heart health with a pack of heart health monitoring features. Galaxy Watch FE offers HR Alert to detect abnormally high or low heart rates and the Irregular Heart Rhythm Notification (IHRN) feature to proactively monitor heart rhythms suggestive of atrial fibrillation (Afib). In addition, users can get a deeper understanding of their heart health by monitoring Blood Pressure and ECG.
Users can track more than 100 different workouts along with their progress right from their wrist. For runners, advanced running analysis helps users not only analyze overall performance to maximize efficiency but can also provide insights and guidance to help prevent injury so they can keep moving toward their goals. For a more optimal running experience, Personalized Heart Rate Zone helps users set their own goals based on their physical capabilities.

Galaxy Watch FE helps users achieve their health goals and stay motivated. Body Composition provides comprehensive body and fitness data as indicators to track progress. In addition, users can receive motivational messages throughout their wellness journey to keep improving.

Experiences Powered by the Galaxy Ecosystem

As with every Galaxy Watch series, the FE offers seamless connected experiences between Samsung Galaxy devices. Users can quickly and easily locate their phone when disconnected from their Watch with Find My Phone. Remotely control your connected Samsung smartphone camera with Camera Controller to switch mode, change angle or zoom right from the wrist. Galaxy Watch FE supports Samsung Wallet, meaning users can pay for purchases as well as access identification cards such as their driver’s license or student ID on their smartwatch for a truly all-in-one digital wallet.

Availability

Galaxy Watch FE will be available globally this summer. To learn more about Galaxy Watch FE, please visit: www.samsungmobilepress.com, news.samsung.com/global or www.samsung.com/galaxy-watch.

CELEBRITY CHEF SARAH TODD UNVEILS PHOENIX SHOPPING FESTIVAL 2024

Culinary Master Class by Sarah Todd focussed on Pasta and Indian dishes.

Chennai, June 15th, 2024Celebrity Chef Sarah Todd unveiled the Phoenix Shopping Festival 2024 today amid much fanfare. She conducted an exclusive two-hour MasterClass in Lower Ground Floor Palladium, Chennai focussing on pasta and Indian dishes, which saw the participation of 200+ enthusiastic women. 

The Australian celebrity chef, model, restaurateur, and cookbook author cooked three signature dishes – Prawn Farce with spice, confit prawns with chat masala salsa and spiced prawn blanc during the Master Class and also interacted with the guests during the ‘Meet and Greet’ event.  Her charismaand extraordinary culinary skill kept the participants engaged through the session. 

Sharing her thoughts about the event, Sarah Todd said, “It is heart-warming to see so many participants attend my Master Class.  My association with India has immensely influenced my cooking style. I use the best of both cuisines – Indian and French – and what comes out is a beautiful fusion. I have a deep connect with India and that reflects in my cooking.” 

Sarah Todd unveiled mind-blowing deals and wins, as well. During the shopping festival, which is on till end of August, customers who shop for Rs 25,000 or above, stand a chance to win big prizes. There is a grand prize – Kawasaki Ninja 600 – which is waiting to be won by the lucky one. A range of daily, weekly, and monthly prizes like domestic holiday staycationvouchers, jewellery, TVs, ACs, refrigerators, luxury watches, luxury mobile phones, home decors and more.

Speaking on the occasion, Mr. Sabari Nair, Centre Director at Phoenix Marketcity and Palladium Chennai, said, “We are elated to have Sarah Todd inaugurate the Phoenix Shopping Festival 2024. The Master Class by Sarah Todd was interactive and was well-received. The dishes she cooked along with an Indian twist appealed to the participants and audience alike. The unique session with an accomplished chef like Sarah Todd served as an opportunity for participants to hone their cooking skills.”  

”சிவபெருமானின் உத்தரவினால் தான் ‘கண்ணப்பா’ திரைப்படத்தை எடுத்தோம்” – டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர் மோகன் பாபு பேச்சு

”‘கண்ணப்பா’ காவியம் உருவாவதற்கு காரணம் சிவபெருமான் தான்” – டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர்.மோகன் பாபு நெகிழ்ச்சி

விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான ‘கண்ணப்பா’ படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான டாக்டர்.மோகன் பாபு தயாரிக்க, முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகனான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடிக்க, மோகன் லால், பிரபாஷ், அக்‌ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (ஜூன் 14) பிரமாண்டமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் டாக்டர்.மோகன் பாபு பேசுகையில், “’கண்ணப்பா’ எந்த தலைமுறையினருக்கும் புதியவர். மகா கவி துர்ஜதி இதை எப்படி பக்தி சிரத்தையுடன் எழுதினார்?, ஸ்ரீகாளஹஸ்தியின் முக்கியத்துவம் என்ன? என்பதை இந்த படத்தில் காட்டியுள்ளோம். மிகுந்த முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்திய சினிமாவின் மிகப்பெரிய காவியமாக உருவாகியுள்ள இப்படத்தில் இந்தியாவின் நான்கு மூலைகளிலிருந்தும் பெரிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பரமேஸ்வராவின் கட்டளையின் பேரில், கண்ணப்பாவிற்காக நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். மேலும் பிரபாஸுக்காக எழுதப்பட்ட கதையாகவும் இதை கிருஷ்ணம் ராஜு கொடுத்திருக்கிறார். இந்த மாபெரும் காவிய படைப்பின் தயாரிப்பாளராக நான் இருந்தாலும், இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் ‘கண்ணப்பா’-வின் காவியத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நாயகன் விஷ்ணு மஞ்சு பேசுகையில், “’கண்ணப்பா’ படம் முதல் நாளிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ரசிகர்களின் தோளிலும் படமாகி வருகிறது. சமூக வலைதளங்களில் ரசிகர்களின் ஆதரவைப் பார்த்தேன். அதனால் தான் அவர்களில் சிலரை இங்கு அழைத்தேன். 2014 ஆம் ஆண்டு கண்ணப்பாவின் பயணம் தொடங்கியது. 2015-ல் நான் கண்ணப்பாவை தொடங்கும் போது, ​​என் கடவுள், என் அப்பா மோகன்பாபு, வின்னி, அண்ணன் வினய் ஆகியோர் கொடுத்த ஊக்கத்தால் தான் என்னை முழுவதுமாக நம்பி கண்ணப்பாவை திரைக்குக் கொண்டு வர முடிந்தது.

படம் தொடங்க நினைத்த போது அதற்கான சரியான குழு எனக்கு அமையவில்லை என்றாலும், சிவபெருமான் அனுமதி அளித்ததால் படத்தை தொடங்குவதற்கான அனைத்தையும் நான் தயார் செய்தேன், அதற்கு காரணம் கண்ணப்பாவின் ஆசீர்வாதமும் கூட. இதை ஒரு புராணக்கதை என்று மட்டுமே பார்க்க கூடாது. 14 ஆம் நூற்றாண்டில் நாயனார்களைப் பற்றி கவிஞர் துர்ஜதி எழுதினார். கண்ணப்பா ஒன்பாதவது நாயனார். இது 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
அந்த புத்தகத்தை பிகானர் பல்கலைக்கழகத்தில் கண்டோம். அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு, அதை மிகவும் கவனமாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு பயணிக்கிறேன். கண்ணப்பா என் குழந்தை மாதிரி. ஏன் இத்தனை கலைஞர்களை இந்தப் படத்துக்குத் தேர்வு செய்தார்கள் என்பது படத்தை பார்த்த பிறகுதான் அனைவருக்கும் புரியும். இனிமேல், ஜூலை முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கண்ணப்பாவிடம் இருந்து அப்டேட்கள் வரும். இது என் பார்வையில் எழுதப்பட்ட ‘கண்ணப்பா’, அதனால் தான் கண்ணப்ப உலகத்துக்கு எல்லாரையும் அழைத்தோம். நான் இரண்டாம் நூற்றாண்டின் கதையைச் சொல்கிறேன், அந்தக் காலகட்டத்திற்கு ஏற்றவாறு படத்தை நியூசிலாந்தில் படமாக்கினோம். பட்ஜெட் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை, வரலாற்றில் இடம்பிடிக்கும் ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கையுடன் படத்தை தயாரித்து வருகிறோம். ப்ரீத்தி முகுந்தன் நெமாலியாக நடிக்கிறார். கண்ணப்பாவை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஹர ஹர மகாதேவ்.” என்றார்.

இயக்குநர் முகேஷ் குமார் சிங் பேசுகையில், ”கண்ணப்பா படத்தில் எனது பலம் எனது கலைஞர்களிடம் உள்ளது. விஷ்ணுவின் நடிப்பு மற்றும் அவர் பட்ட கஷ்டங்கள் பற்றி அதிகம் சொல்ல முடியாது. கடும் குளிரிலும் ஒட்டுமொத்த குழுவும் கடுமையாக உழைத்தோம். விஷ்ணு சார், சரத்குமார். அய்யா மோகன்பாபு சார் மிகவும் பிரமாதமாக செயல்பட்டார்கள். நான் எதிர்பார்த்ததை விட படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதற்கு காரணம் கடவுளிடம் நான் பிரார்த்தனை செய்ததாக இருந்தாலும், கண்ணப்பா எதையும் கேட்காமல் கடவுளுக்காக தன்னை எப்படி அர்ப்பணித்தார் என்பதை இந்த படத்தில் மிக பிரமாண்டமான முறையில் சொல்லியிருக்கிறோம்.” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், “’கண்ணப்பா’ வெறும் திரைப்படம் அல்ல, இது நமது வரலாறு. ஒவ்வொருவரும் அவரவர் வேடங்களில் வாழ்ந்தனர். இப்போதும் அந்த வேடங்களில் நாங்கள் இருக்கிறோம். அனைவரும் வரலாற்றை மறந்து விடுகிறார்கள். நம் வரலாற்றை நாம் சொல்ல வேண்டும். அனைவரும் கண்ணப்பாவைப் பார்க்க வேண்டும்.” என்றார்.

நடிகை மதுபாலா பேசுகையில், “கண்ணப்பா போன்ற படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். எனக்கு இதுபோன்ற நல்ல வாய்ப்பை வழங்கிய மோகன் பாபுவுக்கும், விஷ்ணுவுக்கும் நன்றி. விஷ்ணு மஞ்சுவுக்கு படத் தயாரிப்பில் அறிவு அதிகம். விஷ்ணு போன்ற ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு பிரமாண்டமான காவியத் திரைப்படத்தை எடுக்க முடியும். ஒரு பெரிய யாகத்தில் பங்கேற்பது போல் உணர்ந்தேன்.” என்றார்.

நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில், “’கண்ணப்பா’ படத்தில் வாய்ப்பு கொடுத்த மோகன் பாபு, விஷ்ணு, முகேஷ் சிங் ஆகியோருக்கு நன்றி. இந்தப் படத்திற்காக அனைவரும் தங்களால் இயன்றதை கொடுத்துள்ளனர். படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

‘பயமறியா பிரம்மை’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் பாடலாசிரியர் வெரோனிகா, ஒளிப்பதிவாளர்கள் நந்தா & பிரவீன், இசையமைப்பாளர் கே, நடிகர்கள் ஜாக் ராபின்சன், வினோத் சாகர், ஜேடி , குரு சோமசுந்தரம், நடிகை சாய் பிரியங்கா ரூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாடலாசிரியர் வெரோனிகா பேசுகையில், ” இந்த திரைப்படத்தில் தான் முதன்முதலாக திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகிறேன்.‌ கவிதாயினியாக கவிதைகளை எழுதி இருக்கிறேன். அதிலும் குறிப்பாக சர்ரியலிசம் மற்றும் இருள் முகத்தைப் பற்றிய நிறைய கவிதைகளை எழுதி இருக்கிறேன். இதைப்போல் திரைப்படத்தில் பாடல்களை எழுதுவதற்கு வாய்ப்புகள் வந்ததில்லை. இதுதான் முதல் முறை. இயக்குநர் ராகுல் கபாலி மூலமாக இந்த வாய்ப்பு கிடைத்தது. இயக்குநருடனான முதல் சந்திப்பில்… ஒரு கொலை குற்றவாளி கதாபாத்திரம் கொலையை கலையாகப் பார்க்கிறது. இதன் பின்னணியில் ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டார்.

ஊரில் என்னுடைய உறவினர் ஒருவர் ரவுடி. தற்போது அவர் உயிருடன் இல்லை. அவரை கொலை செய்து விட்டார்கள். என்னுடைய சிறிய வயதில் நடந்த இந்த சம்பவம் எனக்கு மனதில் ஆழமாக பதிந்தது. இந்த சம்பவத்தால் பெண்கள் எத்தகைய பாதிப்பை எதிர்கொண்டார்கள் என்று யோசித்தேன் அங்கிருந்து ஏதேனும் பாடல் வரிகள் கிடைக்கிறதா..! என யோசிக்கத் தொடங்கினேன். அதிலிருந்து கிடைத்த பாடல் தான் இந்தப் பாடல். இசையமைப்பாளர் கே உடன் பணியாற்றுவது எனக்கு சவுகரியமாக இருந்தது. மேலும் இந்த குழுவுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி” என்றார்.

ஒளிப்பதிவாளர் நந்தா பேசுகையில், ” இந்தப் படத்தின் இயக்குநர் ராகுலும் , நானும் பால்ய கால நண்பர்கள். இந்தப் படத்திற்கான விஷுவல் எப்படி இருக்க வேண்டும் என்பதனை திரைக்கதை எழுதும் போதே வடிவமைத்தோம். விண்டேஜ் லுக் வேண்டும் என்றால் அதற்கேற்ற வகையில் லென்ஸ், கேமரா போன்றவற்றை தேர்ந்தெடுத்தோம். திரைக்கதைக்கு என்ன தேவையோ.. அதை மட்டுமே திரையில் காட்சிப்படுத்த திட்டமிட்டோம். அதை மட்டுமே திரையில் காட்சிப்படுத்த முயற்சித்திருக்கிறோம்.‌ ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இந்த படைப்பு பிடிக்கும் என்று நம்புகிறோம். ஆதரவு தாருங்கள்.” என்றார்.

ஒளிப்பதிவாளர் பிரவீண் பேசுகையில், ” நானும், இயக்குநரும் பால்ய கால சிநேகிதர்கள். பட்ஜெட்டை நிர்ணயித்து விட்டு, அதன் பிறகு திரைக்கதை எழுத சொன்னாலும் இயக்குநர் ராகுல் கபாலி அதைவிட அதிகமாகவே எழுதுவார். பயமறியா பிரம்மை படைப்பு சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.‌ இயக்குநர் ராகுல் கபாலி சிறந்த இயக்குநராக வருவார் என வாழ்த்துகிறேன். ” என்றார்.

நடிகர் ஜாக் ராபின்சன் பேசுகையில், ” இந்தப் படத்தைப் பற்றி நிறைய விசயங்களை சொல்லலாம். 2022 ஆம் ஆண்டில் இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது. இந்த படக் குழுவினருடன் பணியாற்றிய அனுபவம் வித்தியாசமாகவும், புதிதாகவும் இருந்தது. இயக்குநர் கதை சொல்லும் விதமே புதிதாக இருக்கும். அதை கேட்டு நடிக்கும்போது சற்று பதட்டமும் இருக்கும். இயக்குநரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நம்மால் நடிக்க முடியுமா..! என தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. இதை கவனித்த இயக்குநர் உன்னால் முடியும் என உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். படப்பிடிப்பு தளத்தில் என்னை ஒரு சகோதரரை போல கொண்டாடினார்கள்.‌

இந்தப் படத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரத்தை பார்த்து.. எப்படி இவரால் நடிக்க முடிகிறது என்று வியந்திருக்கிறேன். ‘மின்னல் முரளி’ படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து, நம்மால் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா? என ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவரைப் பார்த்து நடிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன் ” என்றார்.

இசையமைப்பாளர் கே பேசுகையில், ” இந்தப் படத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டதற்கு இப்படத்தின் கதை தான் காரணம். இதனை இப்படத்தில் பாடல்கள், டீசர் ஆகியவற்றை காணும் போது உணர்ந்திருப்பீர்கள். வழக்கமான படங்களிலிருந்து இந்த திரைப்படம் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. இதுபோன்ற பரிசோதனை முயற்சிகளை நாம் ஆதரிக்க வேண்டும். இந்தப் படத்தில் புதிய புதிய பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பினை வழங்கியது.‌ இதற்காக இயக்குநரும், படக் குழுவினரும் எனக்கு முழு சுதந்திரத்தை வழங்கினார்கள். இயக்குநர் ராகுல் கபாலி அடிப்படையில் ஒரு ஓவியக் கலைஞர். அவருடைய ஓவிய அனுபவத்தை இத்திரைப்படத்தில் காட்சிகளாக செதுக்கியிருக்கிறார். இந்த படைப்பு அவரின் நேர்மையான.. உண்மையான.. முயற்சி.‌

இந்தப் படத்திற்கான இசை கோர்ப்பு பணிகளை இன்று காலையில் தான் நிறைவு செய்தேன். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. என்னுடைய பணியை ரசித்து செய்திருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றிய வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் ராகுல் கபாலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ நான் தற்போது வேறு மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறேன். ” என்றார்.

நடிகர் விஸ்வாந்த் பேசுகையில், ” கபாலி படம் பார்த்துவிட்டு இந்தப் படத்திற்காக முதன் முதலில் அழைத்தவர் இயக்குநர் ராகுல் கபாலி. தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். அவருடைய அலுவலகத்திற்கு சென்றேன். அவர் அடிப்படையில் ஒரு சர்வதேச அளவிலான ஓவியக் கலைஞர். அவருடைய அலுவலகம் முழுவதும் ஓவியங்களால் வண்ணமயமாக நிறைந்திருந்தது. படத்தின் திரைக்கதையை வாசிக்க கொடுத்தார்கள். வாசிக்கும்போதே இது ஒரு வழக்கமான தமிழ் படம் அல்ல என்பது தெரிந்தது. வாசித்து முடித்தவுடன் சின்னதாக டெஸ்ட் ஷூட் எடுத்தார்கள்.‌ அதை நான் இயல்பாக செய்தேன். உடனே இயக்குநர் ராகுல் கபாலி.. கபாலி படத்தில் உங்களது நடிப்பை பார்த்து தான் உங்களுக்கு அழைப்பு விடுத்தேன். அந்தப் படத்தில் தலைவருடன் கலகலப்பாக நடித்திருப்பீர்கள். அதேபோன்றதொரு நடிப்பு இந்த கதாபாத்திரத்திற்கும் அவசியமாக தேவைப்படுகிறது என்றார்.

இந்தப் படத்தில் ஜெகதீஷ் என்ற முதன்மையான கதாபாத்திரத்துடன் என்னுடைய கதாபாத்திரம் இணைந்து பயணிக்கிறது. ஜெகதீஷ் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள்? என கேட்டேன். அவர் ஒரு திறமையான நடிகர் என சொன்னார். படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகுதான்.. அந்த திறமையான நடிகர் குரு சோமசுந்தரம் என தெரிய வந்தது. அவரைப் போன்ற ஒரு நடிப்பு ஜாம்பவானுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்.

நான் பெரும்பாலும் நடிக்கும் காட்சிகளை முதல் அல்லது இரண்டாவது டேக்கில் ஓகே செய்து விடுவேன். இந்தப் படத்திற்காக பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது.‌ முதல் ஷாட்டில் நடிக்கும்போது ஐந்தரை நிமிடத்திற்கு பிறகு இயக்குநர் கட் சொன்னார். அதன் பிறகு இந்த ஷாட் ஓகே என்று நினைத்தேன். குரு சோமசுந்தரம் மீண்டும் அந்த காட்சியை படமாக்கலாம் என்றார். அடுத்த டேக் ஆறரை நிமிடம் வரை சென்றது.‌ அதுவும் திருப்தி இல்லை. மீண்டும் அடுத்த டேக்.. இந்த முறை எட்டு நிமிடம் வரை சென்றது. திருப்தியில்லை. அடுத்த டேக்கும் ஒன்பதரை நிமிடம் வரை நீடித்தது. அதிலும் திருப்தியில்லை.‌ அதன் பிறகு அன்று மாலையில் தொடர்ச்சியாக பதினைந்து நிமிடம் வரை அந்த டேக் சென்றது. அதுதான் இயக்குநருக்கு திருப்தி அளித்தது. சிங்கிள் டேக்கில் நானும் குரு சோமசுந்தரமும் நடித்திருக்கிறோம். இதற்காக இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அளவிற்கு காட்சிகளை தெளிவாக திட்டமிட்டு இயக்குநர் உருவாக்கி இருக்கிறார். இதனை நீங்கள் திரையில் பார்க்கும்போது தமிழ் சினிமாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத புதிய முயற்சியாக இருக்கும். சர்வதேச தரத்திலான இந்த முயற்சியை படக்குழுவினர் மேற்கொண்டு இருக்கிறார்கள்.‌

இயக்குநர் ராகுல் கபாலியை பற்றி ஒரு சுவாரசியமான விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். அவர் இதுவரை பதினேழு நாடுகளுக்கு டூவீலரில் பயணித்திருக்கிறார்.‌ உலகம் முழுவதும் சுற்றி கிடைத்த அனுபவத்தை கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். ஓவியத்தைப் போல நேர்த்தியாக உருவாக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். ” என்றார்.

நடிகை சாய் பிரியங்கா ரூத் பேசுகையில், ” ஒன்றரை வருடத்திற்கு பிறகு மீண்டும் திரையரங்கில் வெளியாகும் ‘பயமறியா பிரம்மை’ எனும் படத்தில் நடித்திருக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் டிஜிட்டல் தளங்களில் வெளியான படங்களில் நடித்திருக்கிறேன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தத் திரைப்படம் எனக்கு மறக்க இயலாத அனுபவம். இந்தப் படத்தின் கதையைப் பற்றியும் கதாபாத்திரத்தை பற்றியும் முதல் நாள் விரிவாக விவரித்தார்கள். அடுத்த நாள் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடித்துவிட்டு வந்து விட்டேன். ஆனால் பட குழுவினர் அனைவரும் பெருந்தன்மையுடன் பழகினர். இது போன்ற புதிய முயற்சிகளை பல தடைகளை கடந்து போராடி இப்படத்தை வெளியிடுகிறார்கள். இது போன்ற புதிய முயற்சிகளை இந்த படக்குழு தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அதிலும் எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். ” என்றார்.

நடிகர் வினோத் சாகர் பேசுகையில், ” பயமறியா பிரம்மை படத்தைப் பொறுத்தவரை நான் திடீர் மாப்பிள்ளை.‌ ஒரு நாள் இரவு பதினோரு மணி அளவில் ‘ராட்சசன்’ படத்தில் பணியாற்றய கீர்த்தி வாசன் எனும் நண்பர் போன் செய்து, இயக்குநர் ராகுல் கபாலி உன்னிடம் பேச வேண்டும் எனச் சொன்னார். இயக்குநர் ராகுல் கபாலி பேசிவிட்டு, நாளை காலையில் படப்பிடிப்பு. படப்பிடிப்பு தளத்திற்கு நேராக வந்து விடுங்கள் என்றார். நானும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இயக்குநரை சந்தித்து அவர் அளித்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள். திறமையான தொழில்நுட்ப குழுவினர் இதில் பணியாற்றியிருக்கிறார்கள். நீளமான காட்சிகள் அதிகம் இருக்கிறது. இதில் நடிகர்கள் பயிற்சி பெற்று நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும்” என்றார்.

நாயகன் ஜேடி பேசுகையில், ” இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் ஓராண்டாக இதற்கான முன் தயாரிப்புகளில் நானும், இயக்குநர் ராகுலும் ஈடுபட்டோம். அதற்கு முன்னதாக ஒரு குறும்படத்தை உருவாக்கினோம். அதுவும் பரிசோதனை முயற்சி தான். அதில் தான் நானும், ராகுலும் அறிமுகமாகி நண்பர்களானோம். அதன் பிறகு கதைகளைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினோம். அதன் பிறகு ‘பயமறியா பிரம்மை’ படத்தை பற்றி பேசி பேசி இன்று படத்தை நிறைவு செய்து இருக்கிறோம். படத்தை விரைவில் வெளியிடுகிறோம். ஊடகம் மற்றும் பார்வையாளர்களின் ஆதரவையும் வரவேற்பையும் பொறுத்துதான் எங்களது அடுத்த கட்ட முயற்சி இருக்கும். நன்றி ” என்றார்.

இயக்குநர் ராகுல் கபாலி பேசுகையில், ” இது என்னுடைய முதல் படம். இந்தக் கதையைத்தான் படமாக்க வேண்டும் .. இப்படித்தான் படமாக்க வேண்டும் என்ற எந்த சிந்தனையுடனும் செயல்பட்டதில்லை. குழுவாக இணைந்து எங்களால் என்ன செய்ய முடியும் என்பதனை சிந்தித்து..‌ எங்களுடைய தகுதியும், திறமையும் என்ன என்பதனையும் யோசித்து.. ஒரு கதைக்குள் எங்களால் என்னென்ன செய்ய முடியும் என நினைத்து தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். அதனால் இந்த படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவினர் அனைவரையும் உணர்வு ரீதியாக பெரிய அளவில் தொல்லைக் கொடுத்திருக்கிறேன். இருந்தாலும் அனைவரும் ஆர்வத்துடன் பணியாற்றினார்கள்.

இந்தத் திரைப்படம் இனிமையான சுவாரசியமான அனுபவத்தை உங்களுக்கு தரும். வெளியாகும் படங்களில் இந்த திரைப்படம்.. எங்களின் புதிய முயற்சியை உங்களுக்கு உணர்த்தும். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து, பிடித்திருந்தால்… ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.