Breaking
Thu. Apr 18th, 2024

விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஹார்ட் பீட் சீரிஸ் !!

உண்மையை உடைத்த ரீனா! ரதியின் பதில் என்ன?

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில் 4 புதிய எபிசோடுகள்!

‘ஹார்ட் பீட்’ சீரிஸ் ஒரு மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, இதயத்தை வருடும் பொழுதுபோக்கு சீரிஸாக, ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கி வருகிறது.

மருத்துவமனையில் ரதி என்னும் மருத்துவருக்கு கீழ், புதிதாக வேலைக்குச் சேரும் ரீனா, தாந்தான் மருத்துவர் ரதியின் மகள் எனும் உண்மையை உடைக்கிறாள்.

இந்த சூழ் நிலையில் ரீனாவின் கேள்விக்கு ரதியின் பதில் என்ன?

ஏன் ரீனாவை பிறந்தவுடன் தன்னுடன் வளர்க்காமல் குழந்தைகள்
காப்பகத்தில் விட்டுச் சென்றாள்?

ரீனாவை மகளாக ஏற்றுகொண்டு தன் குடும்பத்தில் இணைத்துக் கொள்வாரா?

மேலான கேள்விகளுக்கு ரீனாவைப் போன்று ரசிகர்களும் பதிலை எதிர்பார்த்துள்ளனர். இந்த ஆச்சரியமான டிவிஸ்ட், அடுத்த வார எபிஸோடை நோக்கி, ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

மேலும் பல திருப்பங்களுடன் , ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று ” ஹார்ட் பீட்” சீரிஸின் 4 புதிய எபிசோட்களை , டிஸ்னி+ ஹாட் ஸ்டார் தளத்தில் தவறாமல் பாருங்கள்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் !!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது ( VVVSI ) வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் மூலம் வேலை வாய்ப்பு, சுயதொழில் வழிகாட்டுதல், கல்வி உதவி, மருத்துவ உதவி, கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல், பேரிடர் உதவிகளை கடந்த 8 ஆண்டுகளாக செய்து வருவது நீங்கள் அறிந்தது. இப்போது மக்கள் செல்வன்
விஜய்சேதுபதியின் மருத்துவ உதவி திட்டத்தின் கீழ் விஜய்சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், NURSING STATION HOME NURSING PRIVATE LIMITED மற்றும் AMPHENOL OMNICONNECT INDIA PVT LTD இணைந்து 20-மார்ச் மற்றும் 21- மார்ச் ஆகிய இரண்டு நாட்கள் மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர்பகுதியில் நடைபெற்றது.

இந்த முகாம் மூலம் 1800 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது , 200 க்கும் மேற்பட்ட நபர்கள் இரத்த தானம் வழங்கினர்.

மேலும் இந்த முகாமில் சென்னை இந்திராகாந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனை மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை இரத்த வங்கிகளும் பங்கு பெற்றது , அதன் மூலம் இரத்ததான உதவியானது பொது மக்கள் பயன் பெரும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த முகாமில் பங்கு பெற்று தன்னை இணைத்து கொண்டு குருதி கொடை அளித்த கொடையாளர்கள் , தன்னார்வலர்களுக்கும் & மற்ற உதவியை செய்தவர்களுக்கும் விஜய்சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், AMPHENOL OMNICONNECT INDIA PVT LTD மற்றும் NURSING STATION HOME NURSING PRIVATE LIMITED ஆகியோர் இணைந்து நன்றியை தெரிவித்து கொண்டனர்…

Lotte India Introduces a Refreshing Delight – Lotte Choco Pie Real Orange

• A zesty twist to the classic Choco Pie blending the true essence of orange and sparking a sensory delight.

Chennai, March 21st 2024: Embracing the citrusy flavour to the fullest, Lotte Indiaa leading player in the Indian confectionery space has launched Lotte Choco Pie Real Orange. Combining the sumptuousness of chocolate with the tangy freshness of the orange, the impeccable fusion is tailored to provide a refreshing take on the citrous flavour, highlighting the authentic essence of the tropical fruit. Each pack upon opening promises a sensory journey with its fresh burst of flavourful orange, making it a treat that truly wows the senses. These delectable treats can be bought at pocket-friendly prices starting at just Rs.10/- per piece from neighbourhood retail shops.

Lotte Choco Pie Real Orange boasts a one-of-a-kind harmony of tastes and sensations crafted with meticulous care. Encased within delicate layers of soft, orange flavoured biscuit enrobed in decadent rich Choco, rests a fluffy marshmallow layer, a signature treats of the Choco Pie. Each bite offers a symphony of textures and flavours, culminating in the vibrant explosion of real orange jam filling at the centre leaving the consumers wanting for more. 

Mr. Milan Wahi, Managing Director of Lotte India “We at Lotte India, are thrilled to introduce Lotte Choco Pie Real Orange, a refreshing fusion that embodies the season made with delightful rich chocolate and tangy orange. With each bite, our customers will embark on a sensory rollercoaster that elevates their snacking experiences to newer heights. We’re always excited to offer innovative offerings, constantly taking Lotte Choco Pie lovers on new adventures.”

Lotte Choco Pie draws its inspiration from the universal affection for a beloved dessert snack amongst all age groups in families and to cater to the convenience of Choco Pie enthusiasts.  It is also available in 6 & 12 packs priced at Rs.90 and Rs.180 respectively and available at your nearest convenience store, supermarkets and Kirana stores.  

Whether savoured as a midday snack, a sweet reward after a long day, or shared among loved ones during gatherings, Lotte Choco Pie Real Orange promises to further brighten any occasion with its irresistible combination of flavours and textures.

Transforming Healthcare: Kauvery Hospital launches Quaternary care excellence at Arcot Road, Vadapalani.

Chennai , 20th March 2024 : Marking a significant milestone in healthcare advancement in Chennai, Kauvery Hospital proudly unveiled its latest quaternary facility at Arcot Road, Vadapalani . The inauguration ceremony was graced by distinguished Chief Guest, Thiru Rajinikanth, acclaimed Indian Cine Actor, alongside our esteemed luminaries including Dr. S. Chandrakumar, Founder and Executive Chairman of Kauvery Group of Hospitals, Dr. S. ManivannanSelvaraj, Founder and Managing Director, and Dr. AravindanSelvaraj, Co-founder and Executive Director of KauveryGroup of Hospitals. Alongside this grand launch, we introduced 9 Centres of Excellence, further elevating our commitment to delivering unparalleled healthcare excellence. 

Quaternary care, epitomized by Kauvery Hospital, Vadapalani, represents the highest level of specialized medical care, encompassing advanced treatments and innovative procedures aimed at addressing complex health conditions with precision and compassion.

The new Kauvery Hospital Vadapalani stands as a cornerstone of advanced medical care, symbolising the institution’s unwavering dedication to providing the highest quality healthcare possible. Featuring a meticulously crafted 250-bedded hospital, the facility also features a 75-bedded Critical Care Unit, a 30-bedded Transplant ICU and 6 modular Operation Theatre with laminar flow.

“With specialized centers of excellence in Heart and Lung Transplants, Orthopaedics and Spine Surgery, Kidney and Liver Transplants, Cardiac Sciences, Neurosciences, Fertility Treatments, Diagnostic & Interventional Radiology and Emergency Care, we stand prepared to address the most complex medical challenges with precision, expertise and compassion”, affirms Dr S Aravindan Selvaraj, Co-founder and Executive Director of Kauvery Group of Hospitals. 

“Highlighting Kauvery Hospital Vadapalani’s role as a quaternary care provider underscores its dedication to delivering advanced medical services at the highest level, emphasized Thiru Rajinikanth, Indian Cine Actor and Chief Guest at the Inauguration. “Its commitment to excellence in specialized treatment and cutting-edge healthcare solutions solidifies its position as a beacon of innovative care,” he added. 

In our commitment to delivering affordable healthcare that is accessible to all, we strive to provide unparalleled medical care with compassion and integrity. With trust at our core, we are committed to provide compassionate, high-quality care to all, regardless of circumstances. Together, we are reshaping healthcare, embodying the essence of a quaternary care institution, and making a tangible difference in people’s lives.

Samsung to Consolidate Leadership in Mid-Premium Segment with Launch of Galaxy A55 5G, Galaxy A35 in India

CHENNAI – March 20, 2024 – Samsung, India’s largest consumer electronics brand, today announced the launch of Galaxy A55 5G and Galaxy A35 5G with awesome innovations. The new A series devices have multiple flagship-like features including Gorilla Glass Victus+ protection, camera features enhanced by AI, and a tamper-resistant security solution, the Samsung Knox Vault, amongst many other new features.

“Galaxy A series has been the highest-selling smartphone series in India for the last two years, showcasing its immense popularity among India’s MZ consumers. The launch of Galaxy A55 5G & A35 5G reinforces our commitment to make flagship-like innovations accessible to all. Galaxy A55 5G & A35 5G will help us consolidate our leadership in the 5G smartphone segment and the fastest-growing mid-premium (INR 30,000-INR 50,000) segment in the country,” said Akshay Rao, General Manager, MX Business, Samsung India.

Flagship like Design and Durability: For the first time, Galaxy A55 5G gets a metal frame and Galaxy A35 5G gets a premium glass back. These phones are available in three trendy colours – Awesome Lilac, Awesome Ice blue and Awesome Navy, and are rated IP67, which means they can withstand up to 30 minutes in 1 meter of fresh water. They are also built to resist dust and sand.

With a 6.6-inch FHD+ Super AMOLED Display and minimized bezels, the 120Hz refresh rate provides extremely smooth performance. These smartphones come with Flagship like durability with Corning Gorilla Glass Victus+ protection on the front and back
Flagship like Camera Innovations: These new A series smartphones come with multiple innovative AI-enhanced camera features to take the user’s content game to the next level. These features include Photo Remaster, Image Clipper and Object Eraser among many others. Galaxy A55 5G and A35 5G come with a 50 MP Triple camera with Nightography enhanced by AI Image Signal Processing (ISP) which produces stunning low-light images never seen before on A-Series.

Flagship level Security: Samsung Knox Vault Security comes for the first time in A-Series making Flagship level Security accessible to more people. The hardware-based security system offers comprehensive protection against both hardware and software attacks. It can help protect the most critical data on a device, including lock screen credentials, such as PIN codes, passwords and patterns.

Best ever Performance: The all-new Exynos 1480 processor built on 4nm process technology powers the Galaxy A55 5G while the Galaxy A35 5G has been upgraded to the Exynos 1380 processor built on 5nm process technology. These power-packed phones come with several NPU, GPU and CPU upgrades along with a 70%+ larger cooling chamber that ensures a smooth output whether you game or multi-task.

All these awesome enhancements coupled with the introduction of the 12GB RAM in Galaxy A55 5G, truly make this device a game changer in this price segment.


Awesome Experiences: Galaxy A55 5G and Galaxy A35 5G buyers will get access to Samsung Wallet, which is a mobile wallet solution that lets you carry your essentials conveniently and securely in your Galaxy device. Add your payment cards, digital ID, travel tickets and more. These devices also have the hugely popular Voice Focus feature that lets users make and receive calls without worrying about ambient noise.

With Galaxy A55 5G and Galaxy A35 5G, Samsung will provide up to four generations of Android OS upgrades and five years of security updates, optimizing the lifecycle of the devices by keeping them equipped with all the latest Galaxy and Android features.

Memory Variants, Price, Availability and Offers

ProductStorage VariantPrice*
Galaxy A55 5G8GB+128GBINR 36999
8GB+256GBINR 39999
12GB+256GBINR 42999
Galaxy A35 5G8GB+128GBINR 27999
8GB+256GBINR 30999

*All prices inclusive of Bank cashback of INR 3000 on HDFC, OneCard, IDFC First Bank cards along with 6 months No Cost EMI Option.  Alternatively, customers can own the Galaxy A55 5G at just INR 1792 per month and the Galaxy A35 at just INR 1723 per month through Samsung Finance+ and all leading NBFC partners.

Other Offers:

  • Samsung Wallet: Get an amazon voucher worth INR 250 on the 1st successful Tap & Pay transaction
  • YouTube Premium: 2 Months Free (until April 1, 2025)
  • Microsoft 365: Microsoft 365 Basic + 6 months of Cloud storage (up to 100GB, offer redemption to be done before June 30, 2024)

Galaxy A55 5G and Galaxy A35 5G are available for purchase across Samsung exclusive and partner stores, Samsung.com and other online platforms.

ராம் சரணின் ‘RC 16’ படத்தின் தொடக்க விழா,

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரணின் ‘RC 16’ படத்தின் தொடக்க விழா, சர்வதேச அளவில் பாராட்டினைப் பெற்ற தொழில்நுட்ப குழுவுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.

இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் காவியப்படைப்பான ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க நடிப்பிற்குப் பிறகு, உலகளாவிய நட்சத்திர நடிகரான ராம் சரணின் ரசிகர்கள் பட்டாளமும், நட்சத்திர அந்தஸ்தும் உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது. இவர் தற்போது பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அரசியல் திரில்லர் திரைப்படமான ‘கேம் சேஞ்சர்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

ராம்சரண் – இப்படத்தை தொடர்ந்து நட்சத்திர இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் ‘RC16’ எனும் திரைப்படத்தில் இணைகிறார் என்பது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு சர்வதேச தரத்தில் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது. விருத்தி இன்ஃப்ரா எனும் நிறுவனத்தின் உரிமையாளரான வெங்கட சதீஷ் கிலாறு திரைப்படங்கள் மீதான அவரது பிரத்யேகமான ஆர்வத்திற்காக நன்கு அறியப்பட்டவர்.‌ மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் நெருங்கி பழகிய பிறகு, அவர் ஒரு உயரிய தயாரிப்பு தரத்துடன் திரைப்பட தயாரிப்பில் களமிறங்கும் தனித்துவமிக்க முடிவை மேற்கொண்டார்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ராம் சரணின் அடுத்த படமான ‘RC 16’ படத்தின் முக்கிய நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற தொழில்நுட்ப குழுவினரும் இணைந்தனர்.‌ தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் முன்னிலை வகித்தனர்.

இப்படத்தை தனது முதல் திரைப்படமான ‘உப்பென்னா’ படத்திற்காக தேசிய விருதை வென்ற இயக்குநரும், பிரபல இயக்குநர் சுகுமாரின் உதவியாளருமான புச்சி பாபு சனா இயக்குகிறார்.‌

‘RC16’ – கிராமப்புற பின்னணியில் உணர்ச்சிகரமான.. உணர்வுபூர்வமான..
பயணத்திற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளிக்கிறது.

மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், ராம்சரணின் தந்தை ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் ஸ்ரீதேவி ஆகியோருக்கு இடையேயான வெற்றிகரமான கூட்டணிக்கான ஏக்கத்தை தூண்டும் வகையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

‘RC16’ படத்தின் தொடக்க விழாவில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி, நட்சத்திர இயக்குநர் ஷங்கர், பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான சுகுமார், பிரபல தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், தில் ராஜு, சிரீஷ், போனி கபூர், சாஹூ கராபதி, ராம் அச்சந்தா, எம்எல்ஏ ரவி கோட்டிபட்டி, சித்தாரா நிறுவனத்தின் வம்சி, யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் வம்சி கிருஷ்ண ரெட்டி மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

காலை 10 :10 மணிக்கு பிரம்மாண்டமான முறையில் பாரம்பரிய பூஜையுடன் விழா தொடங்கியது. பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் படத்தின் ஸ்கிரிப்டை இயக்குநர் புச்சி பாபு சனாவிடம் ஒப்படைத்தார். ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கும் நட்சத்திர இயக்குநர் ஷங்கர் முதல் காட்சியை இயக்க, போனி கபூர் மற்றும் அன்மோல் சர்மா கேமிராவை சுவிட்ச் ஆன் செய்ய, மெகா ஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடிக்க, ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடித்தனர்.

இயக்குநர் புச்சி பாபு சனா பேசுகையில், ” மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இவ்விழாவிற்கு வருகை தந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். மதிப்புக்குரிய விருந்தினர்கள் மற்றும் எனது மரியாதைக்குரிய வழிகாட்டிகளால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். எனது இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அதன் போது ராம்சரணின் அறிமுகமும், நட்பும், அன்பும் கிடைத்தது. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக ராம்சரணுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்துவதில் உறுதியாக இருக்கிறேன்.

ரூபன் போன்ற புகழ்பெற்ற திறமையாளர்கள் என்னுடன் இணைந்துள்ளனர். ஆஸ்கார் விருது பெற்ற ஏ. ஆர். ரஹ்மான் என்னுடைய இரண்டாவது படத்திற்கு இசையமைக்கிறார். இதன் மூலம் என்னுடைய ஒரு கனவு நனவானது. ராம் சரண், சுகுமார், நவீன் மற்றும் சதீஷ் ஆகியோருக்கும் நன்றி. மேலும் இந்த திரைப்படத்தில் நாயகியாக ஜான்வியை கற்பனை செய்ததும், அதை நிறைவேற்றியதற்காக என்னுடைய குரு சுகுமாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநரும், தயாரிப்பாளருமான சுகுமார் பேசுகையில், ” புச்சி பாபுவின் இலட்சியத்தையும், உறுதியையும் பாராட்டுகிறேன். விஜய் சேதுபதியை நடிக்க வைப்பதிலும், ராம்சரண் மற்றும் ஏ ஆர் ஆர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதிலும், அவருடைய துணிச்சலான முடிவுகளை பாராட்டுகிறேன். சில கணக்குகளை சொல்லிக் கொடுத்ததால் நான் குருவானேன் என்று நான் அடிக்கடி கேலி செய்திருக்கிறேன். ஆனால் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால்.. புச்சி பாபு என்னிடம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. அவர் திறமையுடனும் எப்போதும் பணிவுடனும் பணியாற்றுபவர். புச்சி பாபுவின் ஸ்கிரிப்ட் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அவரது விடாமுயற்சியையும் பாராட்டுகிறேன்” என்றார்.

ஏ. ஆர். ரஹ்மான் பேசுகையில், ”புச்சி பாபுவின் சினிமா ஆர்வத்தை பாராட்டுகிறேன். இந்த திரைப்படத்தில் பாடல்களுக்கான சூழலை அவர் விளக்கிய விதம் உற்சாகமாக இருந்தது. மேலும் இப்படத்தில் பணியாற்றும் அனைவருக்கும், ராம் சரணுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

ராம் சரண் பேசுகையில், புச்சி பாபுவின் சினிமா மீதான அதீத காதலை பாராட்டி அவருடனும்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடனும் இணைந்து பணிபுரிவது, தனக்கு கிடைத்த பெருமை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல் முறையாக ஜான்வி கபூருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ராம் சரண், அவரது தந்தை சிரஞ்சீவியும், ஜான்வி கபூரின் தாயார் ஶ்ரீதேவியும் இணைந்து நடித்த “ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி”
படத்தினை நினைவு கூர்ந்தது, நானும் ஜான்வி கபூரும் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினார்கள் இப்போது அது நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.

ஜான்வி கபூர் பேசுகையில், ” இந்தத் திரைப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தில் நடிப்பதற்காக என்னை அணுகிய இயக்குநர் புச்சிபாபுவிற்கு நன்றி தெரிவிக்கிறேன். பட குழுவினரின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் போனி கபூர் பேசுகையில், ” ராம் சரண் கொடுத்த வாய்ப்பின் மூலம் தெலுங்கு படங்களை தயாரிக்கும் ஆர்வத்தை பெற்றிருக்கிறேன். புச்சிபாபுவின் ‘உப்பென்னா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்புகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் நவீன் பேசுகையில், ” இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கு நன்றி. இயக்குநர் புச்சி பாபுவின் கதை சொல்லும் திறனால் இப்படம் வெற்றி பெறும் என்ன உறுதியாக சொல்லலாம்” என்றார்.

‘RC 16’ படம் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற தொழில்நுட்ப குழுவினரை கொண்டுள்ளது. இரண்டு ஆஸ்கார் விருது பெற்ற ஏ. ஆர். ரஹ்மான், இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு இப்படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படத்திற்கு மீண்டும் இசையமைக்கிறார். விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ‘ரங்கஸ்தலம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ராம்சரணுடன் இணைந்திருக்கிறார்.

அகாடமி விருதுகள், விமர்சகர்களின் சாய்ஸ் திரைப்பட விருது, கோல்டன் குளோப் விருது, தேசிய திரைப்பட விருது, நந்தி விருது உட்பட்ட ஏராளமான விருதுகளை பெற்ற பாடலாசிரியர் சந்திரபோஸ் இப்படத்தின் பாடல்களை எழுதுகிறார். படத்தொகுப்பில் மேஸ்ட்ரோவாக திகழும் ஆண்டனி ரூபன் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். அதிரடி சண்டை பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் இப்படத்திற்கு ஆக்சன் காட்சிகளை அமைக்கிறார்.

கலை இயக்குநர் அவினாஷ் கொல்லாவின் பிரத்யேகமான அரங்க அமைப்பு… காட்சியின் பிரம்மாண்டத்தை அதிகரிக்கும். இந்தியாவின் சிறந்த ஆடை வடிவமைப்பாளரான தீபாலி நூர் இப்படத்தின் தொழில்நுட்ப குழுவில் இணைந்திருக்கிறார். தீபாலி நூரின் டிசைன்கள்- நடிகர்களின் உடையில் தனித்துவமான மற்றும் நாகரீகமான தோற்றத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது. இந்தத் திரைப்படத்தின் விளம்பர வடிவமைப்பை பிரபல விளம்பர வடிவமைப்பாளரான கபிலன் மேற்கொள்கிறார்.

‘ரங்கஸ்தலம்’, ‘புஷ்பா’ படங்களில் பணியாற்றியதற்காக புகழ்பெற்ற நட்சத்திர இயக்குநர் சுகுமார்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சுகுமார் ரைட்டிங்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் ‘RC 16’ என்ற படத்தை வழங்குகிறார். விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் வெங்கட சதீஷ் கிலாறு இப்படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தின் தயாரிப்பு தரம் சர்வதேச அளவிலானது. மேலும் இப்படத்தைப் பற்றிய புதிய அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருங்கள்.

பிரைம் வீடியோ இன்றைய தேதி வரையிலான அதன் அனைத்து மொழிகள் மற்றும் பிரிவுகள் முழுவதுமாக கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பரந்த அளவிலான மிகப்பெரிய பட்டியலை வெளியிட்டது.

ப்ரைம் வீடியோ, 2023- ஆண்டை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு இந்தியனாலும் மிகவும் விரும்பப்படும் முன்னணி பொழுதுபோக்கு தளமாக விளங்குவதற்கான தனது உத்திரவாதத்தை மீண்டும் வலியுறுத்தும் விதமாக அனைத்து மொழிகளின் உள்ளடக்கங்களில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் .
பல்வேறு வகையான புதிய தொடர்கள், மனதைக் கவர்ந்த மீண்டும் திரையிடப்படவிருக்கும் நிகழ்ச்சிகள், இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள், ஒரிஜினல் திரைப்படங்கள், இணைத் தயாரிப்புகள், திரையரங்கு வெளியீட்டிற்குப் பின்னர் வெளியிடப்படும் திரைப்படங்களின் வரிசையை வெளிவரவிருக்கும் அதன் நிகழ்ச்சிகளின் பட்டியலில் இடம்பெறச்செய்திருக்கிறது

வெளியிடப்படவிருக்கும் நிகழ்ச்சிகளின் தலைப்புக்கள் குறித்த விவரங்கள் பின் இணைப்பில் தனியே .கொடுக்கப்பட்டுள்ளது. டைட்டில்ஸ், கிரடிட்ஸ், கீ ஆர்ட்ஸ் மற்றும் நிகழ்வுகளின் புகைப்படங்களின் பட்டியலை அணுக இங்கே கிளிக் செய்யுங்கள்.

YT – https://youtu.be/6UH2bOLorWQ
X – https://x.com/primevideoin/status/1770096959799587197?s=46&t=j1_icXuHEka-TZ4MNka2ug
IG – https://www.instagram.com/reel/C4sw2TWN_0T/?igsh=ZDZnNzF6anh2bDhi
FB – https://www.facebook.com/share/r/EJHMThAt7Lx3b9MX/?mibextid=QwDbR1

மும்பை, இந்தியா—மார்ச் 19, 2024— இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு மையமாக திகழும் பிரைம் வீடியோ, பிரைம் வீடியோ பிரெஸெண்ட்ஸ் இந்தியா இரண்டாவது காட்சித் தொகுப்பில் இன்றைய தேதி வரையிலான தனது மிகவும் பேரார்வமிக்க பல்வேறு வகை உள்ளடக்கங்கள் கொண்ட கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது அவற்றில் பெரும்பாலானவை அடுத்த 2 ஆண்டுகளில் இந்த சேவையில் வெளியிடப்படும். 40 ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 29 திரைப்படங்களுடன் கூடிய இந்தப், புதிய பட்டியல் இந்தியாவின் தலைசிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கு உத்திரவாதமளிக்கிறது. .

எதிர் வரவிருக்கும் பிரைம் வீடியோவின் ஒரிஜினல்கள், குடும்பத்திலுள்ள அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு பரந்த அளவிலான பிரிவு வகைகளின் உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு விரிவான எண்ணிக்கையிலான தொடர்கள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. விரிவான நீண்ட பட்டியலை வழங்குகிறது. விறுவிறுப்பான த்ரில்லர்கள் மற்றும் மனதை ஆழ்ந்து போகச்செய்யும் டிராமா, விலா எலும்பை நோகச்செய்யும் நகைச்சுவை தொடர்கள், மற்றும் முதுகெலும்பை சில்லிடச்செய்யும் திகில் படங்கள், முதல் ஆவலைத் தூண்டும் புதிரான கற்பனை கலவாத நிகழ்ச்சிகள், வயது வந்த இளைஞர்களுக்கான கவர்ச்சிகரமான கதைகள், அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த, மற்றும் மனதைக் கவரும் இசையுடன் கூடிய டிராமாக்கள் போன்ற பலதரப்பட்ட வகையிலான இந்தப் பட்டியல் மிகச்சிறந்த உள்ளூர் கதைகளை திரைக்கு கொண்டுவருகிறது. இந்தியாவின் மிகவும் மதிப்பு வாய்ந்த சில திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களால் திரையரங்குகளில் வெளியிடபட்ட பிறகு இந்தச் சேவை மூலமாக அனைத்து மொழிகளிலும் வழங்கப்படும் திரைப்படங்களுக்கும் கூடுதலாக வழங்கப்படுபவை இவை.

“பிரைம் வீடியோவில், எங்கள் கவனம் முழுவதும், ஒரு முழுமையான மிகச்சிறந்த பல்வேறு வடிவத்திலான பொழுதுப்போக்கு அம்சங்களை வழங்கி இந்திய வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த சேவையை அளிப்பதில் நிலைகொண்டுள்ளது. சீரற்றவைகளை முறியடித்து ஒதுக்கித் தள்ளும் ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள், நேரடி சேவை வெளியீடுகள் தொடங்கி அனைத்து மொழிகளிலும் மிகச்சிறந்த மாபெரும் வெற்றி பெற்ற சில திரைப்படங்களின் திரையரங்கு வெளியீட்டுக்கு பிறகான வெளியீடுகள் வரை, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொழுதுபோக்கிற்கான முதல் தேர்வாக நாங்கள் திகழவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்,” என்று, பிரைம் வீடியோ,இந்தியாவிற்கான நிர்வாக இயக்குநர் சுஷாந்த் ஸ்ரீராம் கூறினார். “2023 ஆம் ஆண்டில் நாங்கள் வழங்கிய உள்ளடக்கங்கள் சர்வதேச அமைவிடங்களில் புதிய வாடிக்கையாளர் களை ஏற்றுக்கொள்வதிலும் பிரைம் உறுப்பினர் ஈடுபாடுகளிலும் இந்தியாவை முன்னணியில் திகழச்செய்யும் வகையில் புதிய பாதைகளை வகுத்தமைத்தது. எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது காட்டிய அன்பு எங்களை மேலும் பணிவுறச் செய்தது, மேலும் எங்கள் சேவையில் வழங்கப்படும் ஒவ்வொரு கதையும் யாராவது ஒருவரின் மனதுக்கு விருப்பமான நிகழ்ச்சியாக அல்லது திரைப்படமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதனுடன் ஒத்திசைந்து செயல்படும் வகையில், இன்று வரையிலான எங்களின் மிகப்பெரிய, மிகவும் பல்வேறு வகைப்பட்ட பட்டியலை வெளியிடுவதில் நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம், மற்றும் நாங்கள் வெளியிடவிருக்கும் தொடர்களும் திரைப்படங்களும் இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை தொடர்ந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.”

“பிரைம் வீடியோவில், மொழியியல் மற்றும் புவியியல் எல்லைகளுக்கும் அப்பால் பயணிக்கும், ஒரு மாறுபட்ட, உண்மையான மற்றும் இந்தியாவில் வேரூன்றிய கதைகளை காட்சிப்படுத்துவதற்கான உலகளாவிய மையமாக இருப்பதே எங்களின் தொடர்ந்த இயக்கச் செயல்பாடாக இருக்கிறது” என்று பிரைம் வீடியோ, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் ஹெட் ஆப் ஒரிஜினல்ஸ், அபர்ணா புரோஹித் கூறினார். “2023 ஆம் ஆண்டில் மட்டும் மொத்த 52 வாரங்களில் 43 வாரங்களில், எந்தவொரு வார காலத்திலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் எங்கள் நிகழ்ச்சிகளின் உள்ளடக்கம் கண்டு களிக்கப்பட்டு உலகளவில் பிரைம் வீடியோவில் முதல் 10 இடங்களைப் பெற்று பிரபலமடைந்தது., தேசிய மற்றும் உலகளவில் எங்கள் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை காண்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் இந்திய உள்ளடக்கத்தை உலக அரங்கில் வெற்றி வாகைசூடச் செய்ய எங்களுக்கு மென்மேலும் உத்வேகம் அளிக்கிறது. கதாசிரியர்கள் மற்றும் திறமையாளர்களுக்கான ஒரு இல்லமாக, இந்திய பொழுதுபோக்குத் துறையைச் சார்ந்த சில சிறந்த திறமையாளர்களின் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளோம் மற்றும் புத்தம் புதிய, வலிமையான, மன எழுச்சியை அளிக்கவல்ல மற்றும் பொழுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதைகளை படைப்பதற்கான ஒரு ஆற்றல்மிக்க, புதிய கருத்துக்களுக்கு அதிகாரமளிக்கிறோம் எதிர் வரவிருக்கும் எங்களின் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் இந்தியாவில் இருந்து அழுத்தமான கதைகள் மென் மேலும் அதிகமான எண்ணிக்கையில் வெளிவர வழி வகுக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”

அனைத்து டைட்டில்ஸ், கிரடிட்ஸ், புகைபடங்களின் பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள். – https://drive.google.com/drive/folders/1UAYiybPbQRpE81427ENuJyK2ji2NCsPd

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோர், ஃபஹத் பாசிலுடன் 2 சுவாரஸ்யமான திரைப்படங்களில் இணைந்துள்ளனர்

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோர், ஃபஹத் பாசிலுடன் இணைந்து இரண்டு புதிய திரைப்படங்களை தயாரிக்கவுள்ளனர்

முன்னணி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா, மலையாளப் படமான பிரேமலு படத்தினை தெலுங்கு ரசிகர்களுக்கு தெலுங்கு மொழியில் வெளியிட்டதன் மூலம் திரைப்பட விநியோகத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். தெலுங்கில் ஷோயிங் பிசினஸ் (Showing Business) பேனரின் கீழ் இப்படத்தை விநியோகித்தார். எஸ்.எஸ்.கார்த்திகேயாவின் முதல் வெளியீடே தெலுங்கு பதிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் திரையரங்குகளில் மக்கள் பேராதாரவுடன் ஒவ்வொரு நாளும் பெரும் வசூலை குவித்து வருகிறது.

பிரேமலுவின் பிளாக்பஸ்டர் வெற்றியால் பெற்ற நம்பிக்கையால் உற்சாகமடைந்துள்ள எஸ்.எஸ்.கார்த்திகேயா அடுத்ததாக படத் தயாரிப்பில் இறங்குகிறார், மேலும் இந்தியாவின் பெருமைமிக்க, புகழ்பெற்ற தயாரிப்பாளர்களான பாகுபலி பட நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸுடன் இணைந்து, தான் அடுத்ததாக தயாரிக்கவுள்ள அடுத்த இரண்டு திரைப்படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அற்புதமான திரைப்படங்களைத் தயாரிக்க, பிரமாதமான தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா எஸ்.எஸ்.கார்த்திகேயாவுடன் கைகோர்க்கிறார், உலகப்புகழ் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இந்தப் படங்களை வழங்குகிறார்.

பிரேமலுவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான பன்முக நடிகர் ஃபஹத் பாசில் இரண்டு படங்களிலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவற்றில் ஒன்றை, “ஆக்சிஜன்” என்ற தலைப்பில், ஒரு ஊக்கமளிக்கும் நட்பைப் பற்றிய கதையில், அறிமுக இயக்குநர் சித்தார்த் நாதெல்லா இயக்குகிறார். மற்றொன்று, “டோண்ட் டிரபிள் த டிரபிள்” என்ற தலைப்பில் ஒரு பரபரப்பான ஃபேண்டஸி கதையை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்குகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் தனித்துவமான மற்றும் உள்ளடக்கத்தில் சிறந்த படங்களாக இருக்கும்.

‘பாகுபலி’ உலக அரங்கில் புகழ் பெறுவதற்கு முன்னதாகவே , பேனரை பிரபலப்படுத்துவதற்கு முன்னதாகவே, ‘வேதம்’, ‘மர்யதா ரமணா’, ‘அனகனா ஒக தீருடு’ மற்றும் பஞ்சா உள்ளிட்ட பல்வேறு ஜானர்களில் தனித்துவமான படங்களை ஆர்கா மீடியா நிறுவனம் வழங்கியுள்ளது.

பிரேமலுவை பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்கியதற்காக தெலுங்கு பார்வையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்த போது, எஸ்.எஸ்.கார்த்திகேயா தனது தயாரிப்பில் உருவாகவுள்ள படங்கள் குறித்த அறிவிப்பை, வெளியிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்.. “பிரேமலு! மூலம், என் முதல் அவதாரமான விநியோகஸ்தர் பயணத்திற்கு, நீங்கள் அனைவரும் அளித்திருக்கும் அளவில்லாத அன்பிற்கு நன்றி!! இந்த வெற்றி நல்ல சினிமாவுக்கு மொழித் தடைகள் எதுவும் தெரியாது என்கிற எனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியது! இந்தப் படத்தை விநியோகிக்கும் போது அதன் ஒவ்வொரு அம்சத்தையும் ரசித்தேன். , ஒவ்வொரு டிக்கெட்டின் விற்பனையையும், ஹவுஸ் ஃபுல் தியேட்டர் போன்ற உணர்வாக கொண்டாடுகிறேன். கடந்த ஆண்டு இதே நேரத்தில் ஆஸ்கார் விருதுகளின் போது நான் அனுபவித்த மகிழ்ச்சிக்கு நிகரானது இது.”

மேலும் அவர் கூறுகையில்.., “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அறிமுக நடிகர் சித்தார்த் நாதெல்லாவுடன் ஒரு ஊக்கமளிக்கும் நட்பு பற்றிய கதையின் விவாதத்தின் போது, அறிமுகமான ஷஷாங்க் யெலேட்டியிடம் இருந்து மற்றொரு சிலிர்ப்பான ஃபேண்டஸி கதை எங்கள் முன்னால் வந்தது, இது எங்களை பெருமளவில் உற்சாகப்படுத்தியது. இருப்பினும், இரு கதைகளும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இரண்டு திரைக்கதைகளுக்கும் ஒரே நடிகர் என்பதையும், முதல் கதையின்போதே அவர் அதை ஒப்புக்கொள்வார் என்பதையும் நம்பவில்லை.இவ்வளவு காலம் நான் நேசித்த மனிதர், பன்முகத் திறமையின் உருவகம், ஈடு இணையற்ற மனிதர் ஃபஹத் ஃபாசில். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் சார். இது உங்களுக்கு எங்கள் #பிரேமலு. இந்த பயணத்தில் என்னுடன் கைகோர்த்ததற்கும், ஊக்குவித்ததற்கும் நன்றி ஷோபு அவர்களே.” என தெரிவித்துள்ளார்.

அஜித், சூர்யா, தனுஷ், விஷால், அல்லு அர்ஜுன் என ஐந்து முன்னணி நடிகர்களின் படங்களோடு அகில இந்திய திரையுலகையே தன் இசையால் கலக்கும் தேவி ஶ்ரீ பிரசாத்

டிஎஸ்பி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், தனது அதிரடி மற்றும் ஆத்மார்த்த இசையால் தென்னிந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே ஈர்த்து வருகிறார்.

தேவி ஶ்ரீ பிரசாத்தின் அதிரடி இசையில் உருவான ‘புஷ்பா’ திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் முதல் முறையாக ஒரே சமயத்தில் 5 மொழிகளில் ஹிட் அடித்தது இவரது முக்கிய மைல்கற்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களாலும் இவரது இசை ரசிக்கப்படுகிறது. வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் இவர் புகழ் பெற்றிருப்பதே இதற்கு சான்று.

இந்நிலையில், 5 முன்னணி நட்சத்திரங்களில் திரைப்படங்களுக்கு இவர் தற்போது இசையமைத்து வருகிறார். அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’, சூர்யா நடிக்கும் ‘கங்குவா’, தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘குபேரா’, விஷால் நடிக்கும் ‘ரத்னம்’, மற்றும் ‘புஷ்பா’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடிக்கும் ‘புஷ்பா 2’ என்று தேவி ஶ்ரீ பிரசாத்தின் இசை ஆதிக்கம் நீண்டு கொண்டே செல்கிறது.

மேற்கண்ட ஐந்து திரைப்படங்களும் பிரபல இயக்குநர்களால் (குட் பேட் அக்லி – ஆதிக் ரவிச்சந்திரன், கங்குவா – சிவா, குபேரா – சேகர் கம்முலா, ரத்னம் – ஹரி, புஷ்பா 2 – சுகுமார்) இயக்கப்பட்டு, முன்னணி தயாரிப்பு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன. வித்தியாசமான கதைக் களங்களோடு பன்மொழிகளில் பிரம்மாண்ட படைப்புகளாக இவை தயாராகி வருகின்றன. இவற்றின் தேவைகளுக்கு ஏற்ப பிரத்யேக இசையை தேவி ஶ்ரீ பிரசாத் வழங்கி வருகிறார்.

இந்து ஐந்து படங்களை தவிர பவன் கல்யாண் நடிப்பில் ‘ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ‘உஸ்தாத் பகத்சிங்’, நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ‘தாண்டேல்’, புதுமுகங்கள் நடிக்கும் ‘ஜூனியர்’ உள்ளிட்ட மேலும் பல திரைப்படங்களுக்கும் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். திரைப்படங்களுக்கு இசையமைப்பதோடு நின்று விடாமல் மக்கள் பெருமளவில் திரளும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பாடி தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை இவர் உற்சாகப்படுத்தி வருவதும் அனைவரும் அறிந்ததே.

இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜாவின் அதி தீவிர பக்தரான தேவி ஶ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவிற்கே இளையராஜா சமீபத்தில் நேரில் சென்று வாழ்த்தியது தேவி ஶ்ரீ பிரசாத்தை அளவில்லாத மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

“என்னுடைய இசைப் பயணத்தில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு மனமார்ந்த நன்றி. ஐந்து முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இந்த பெருமையான தருணத்தில் ரசிகர்கள் விரும்பும் இசையை தொடர்ந்து வழங்கி அவர்களை மகிழ்விப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன்,” என்று தேவி ஶ்ரீ பிரசாத் கூறினார்.

‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் ஷாஹித் கபூர்

நவீன உலகில் பண்டைய போர்வீரன் – பூஜா என்டர்டெயின்மென்ட்டின் பிரம்மாண்ட பன்மொழி பான்-இந்தியா படைப்பான ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் ஷாஹித் கபூர்

புராண பாத்திர‌மும் நவீன உலகும் ஒரே நேர் கோட்டில் சந்தித்தால் என்ன ஆகும் என்பதை விவரிக்கும் பரபரப்பான பயணத்திற்கு ரசிகர்களை அழைத்துச் செல்ல ஷாஹித் கபூர் மற்றும் இயக்குநர் சச்சின் ரவி உடன் பூஜா என்டர்டெயின்மென்ட் கைகோர்த்துள்ளது. இவர்கள் இணையும் ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ பிரம்மாண்ட திரைப்படத்தில் அஸ்வத்தாமனாக தோன்றுகிறார் ஷாஹித் கபூர்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ள பான்-இந்தியா படைப்பான இது, இன்றும் நம்மிடையே நடமாடுவதாக நம்பப்படும் மகாபாரதத்தில் வரும் அழியாப் போர்வீரர் அஸ்வத்தாமனின் கதையை ஆராய்கிறது.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் மனிதகுலத்தின் அசாத்திய வளர்ச்சி நிறைந்த‌ தற்போதைய காலகட்டத்தில் அஸ்வத்தாமன் நவீன சவால்களையும் வலிமைமிக்க எதிரிகளையும் எதிர்கொள்கிறார். இதை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை அதிரடி காட்சிகள் மற்றும் திருப்பங்கள் நிறைந்த‌ கதையில் திரையில் காணலாம்.

படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கடந்த காலமும் நிகழ் காலமும் மோதும் பிரம்மாண்ட களத்தை கண் முன்னே கொண்டு வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இப்படம் அமையுமென்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் ஜக்கி பக்னானி, “எங்கள் திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமின்றி, மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கி அவர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. ‘படே மியான் சோட்டே மியான்’ படத்திற்குப் பிறகு, யாரும் எதிர்பாராத திரைப்ப‌படம் ஒன்றை தயாரிக்க விரும்பினேன், அதன் விளைவாக உருவாகி வருவது தான் ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’. அனைத்து தரப்பு ரசிகர்களையும் இது மகிழ்விக்கும் என நான் நம்புகிறேன்,” என்றார்.

இயக்குநர் சச்சின் ரவி கூறுகையில், “மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமான், இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படும் ஒரு மாவீரர். அமரத்துவம் கொண்ட அவரது வரலாற்றை இப்படம் ஆராய்கிறது, இன்றைய உலகில் அவர் எதிர்கொள்ளும் விஷயங்களை விறுவிறுப்பாக விவரிக்கிறது. ஒரு ஆக்‌ஷன் படத்தின் பிரமாண்டத்திற்குள் அவருடைய கதையை முன்வைக்க முயன்றுள்ளோம்,” என்றார்.

பூஜா என்டர்டெயின்மென்ட் பேனரில் வாசு பாக்னானி, ஜக்கி பாக்னானி மற்றும் தீப்ஷிகா தேஷ்முக் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு, ஷாஹித் கபூர் நடிப்பில் சச்சின் ரவி இயக்கும் ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’, உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.