“ஆதார்” ஒரு சாமானியன் வாழ்க்கையில் அதிகார வர்க்கத்தின் ஆளுமையை காட்டும் திரைப்படம்

நடிகர் நடிகைகள் :- கருணாஸ், அருண்பாண்டியன், ரித்விகா, இனியா, உமா ரியாஸ் கான், திலீபன், பாகுபலி பிரபாகர்,
மற்றும் பலர்.
எழுத்து: இயக்கம் :- ராம்நாத் பழனிகுமார்.
ஒளிப்பதிவு :- மகேஷ் முத்துசுவாமி.
படத்தொகுப்பு :- R.ராமர்.
இசை :- ஸ்ரீகாந்த் தேவா.
தயாரிப்பு :- வெண்ணிலா கிரியேஷன்ஸ்.
நடிகர் கருணாஸ் நடிப்பில் ‘ஆதார்’ எனற திரைப்படத்தை இயக்கியுள்ளார் நடிகர் கருணாஸ் நடிப்பில் அம்பாசமுத்திரம் அம்பானி’ திரைப்படத்தை இயக்கியதின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ராம்நாத் பழனிகுமார்
சென்னைக்கு பிழைப்புத்தேடி வந்த கதையின் நாயகன் கருணாஸ் மற்றும் தனது நிறை மாதம் கர்ப்பிணியாக இருக்கும் மனைவி ரித்விகாவுடன் கட்டிடம் கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள்.
மனைவி ரித்விகாவுக்கு பிரசவவலி அதிகமானதால் அரசு குழந்தை பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்.
ரித்விகாவுக்கு வேண்டிய உதவிகள் செய்வதற்காக ஒரு பெண் என்பதால் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் இனியா.
தன் மனைவி ரித்விகா அனுமதிக்கப்பட்டிருந்த பிரசவ வார்டில் கருணாஸ் பார்க்கும்போது தன் மனைவி ரித்திகாவை காணவில்லை.ரித்விகா, பாதுகாப்பாக இருந்த இனியாவையும் காணவில்லை
தனக்கு பிறந்த குழந்தை மட்டும் அந்த வார்டில் இருக்கிறது.
இனியா மருத்துவமனையின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் காவல்துறையினர் பிணமாக மீட்டெடுக்கிறார்கள்.
இதனை அடுத்து தனக்கு பிறந்த குழந்தையை தூக்கிக் கொண்டு காவல் நிலையம் தன் மனைவி ரித்விகா காணவில்லை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுக்கிறார் கதையின் நாயகன் கருணாஸ்.
காணாமல் போன ரித்விகாவை காவல் துறையினர் கண்டு பிடித்தார்களா? கண்டு பிடிக்கவில்லையா? காணாமல் போன ரித்விகாவும் கதை நாயகன் கருணாஸ் இருவரும் ஒனறு சேர்ந்தார்களா? சேரவில்லையா? என்பதுதான் ஆதார் திரைப்படத்தில் மீதிக்கதை.
கருணாஸ் பச்சமுத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார். தனது மனைவி ரித்விகாவை கண்டு பிடித்து தருமாறு காவல்துறை அதிகாரிகளிடம் கெஞ்சுவதும் அழுவதும் அவருடைய நடிப்பு மிகவும் பரிதாபமாக இருக்கிறது.
கதையின் நாயகி ரித்விகா குறைவான காட்சிகள் வந்தாலும் மனதில் பதிகிறார்.
முதல் நிலை காவலராக நடித்துள்ள அருண் பாண்டியன் மிகவும் நியாயமாகவும் பொறுமையாகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
காவல்துறையில் நேர்மையான அருண் பாண்டியனை போல் நல்ல காவலராக கண்டிப்பாக வாழ முடியாது என தற்கொலை செய்து கொள்வது காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு இந்த நிலை தான் வருமோ என நினைக்கத் தோன்றுகிறது.
காவல்துறை உயர் அதிகாரியாக நடித்துள்ள உமா ரியாஸ் காவல்துறை அதிகாரிகளுக்கு உள்ள திமிரோடு மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார்.
கருணாஸ் நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்த்து வந்தவர்கள் இனி குணச்சித்திர நடிகராக கருணாஸை திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் பாராட்டுவார்கள்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை மிகவும் அருமையாக கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியின் ஒலிப்பதிவு அருமை.
ஆர் ராமரின் படத்தொகுப்பு திரைப்படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.
ஆட்சியும் அதிகாரமும் பணமும் இருந்தால் நீதி நேர்மையை கூட பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம் என்ற இன்றைய காலகட்டத்தை அற்புதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராம்நாத் பழனிகுமார்.