ஜெய் பீம் விமர்சனம்

விசாரணை படம் பார்த்துவிட்டு வெளியே வந்த போது காவல்துறையை கண்டு ஏற்பட்ட ஒரு வித பயம் ஏனோ ஜெய் பீம் படம் பார்த்த பொழுது ஏற்படவில்லை, மேலும் இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை முடிக்க முடியாமல் இருக்கும் சிறு திருட்டு வழக்குகளை முடிக்க ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை மட்டும் காவல் துறை வன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது , சமீபத்தில் சூர்யா அவர்களின் சகோதரர் நடித்த படம் தீரன் அதிகாரம் அதில் உண்மையான ஒரு சம்பவத்தை எடுத்து கூறி காவல் துறை மீதான மதிப்பு உயரும் படி எடுக்கப் பட்டிருக்கிறது ஆனால் சூர்யாவோ வெறும் வியாபாரத்திற்காக காவல் துறையை மிகவும் கேவலமாக சித்தரித்து கூறுகிறோம், மேலும் ஜெய் பீம் என்று தலைப்பு வைத்துவிட்டு வேறு ஏதாவது சமுதாயத்தை கூறியிருந்தால் நிச்சயமாக எதிர்மறை விமர்சனம் வரும் என்று குறவர் சமுதாயத்தை வைத்து படம் பணம் எடுத்து இருக்கிறார், ஆனால் எதை கண்டு பயந்தாரோ தெரியவில்லை ஓடிடி யில் படத்தை வெளியிட்டு விட்டார்